Tuesday, May 19, 2009

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.

பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.

கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...

27 comments:

  1. Very USEFULL and IMPORTANT article.

    Nathan

    ReplyDelete
  2. The diaspora and tamil nadu tamils should have agitated immediately after the assasination of Tamilselvan. We started the agitation well after the fall of kilinochi. Atleast, now we should focus our efforts in avoiding such delay and stop the sinhala's settling in the tamil home land.

    ReplyDelete
  3. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.//

    சிங்கள குடியேற்றம் விரைவில் நடத்துவார்கள்.இருக்கும் மிச்ச உயிர், உடமை மற்றும் நில அபகரிப்பை தடுக்கும் ஒரு அவசர தீர்வு இப்போதைய தேவை.

    ReplyDelete
  4. Good one. This is the truth.
    Those in Tamilnadu, should also organize. A thousand people protesting, the government won't care. 100,000 people protesting? How will they hide?

    Certainly, Buddha's Graveyard will be coming with begging bowls, using Tamils. Better be aware.

    -kajan
    -kajan

    ReplyDelete
  5. புலத்தில் செய்கிறோம்! செய்வோம்!
    ஆனால் இந்திய வல்லாதிக்கம்???

    ReplyDelete
  6. தமிழர்களின் நிலங்களை ஒட்டு மொத்தமாக பிடுங்கி அரபு நாடுகளுக்கு நீண்ட நாள் குத்தகை விட்டு பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.இதற்கான முயற்சிகள் முன்பே ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது

    http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=268927&version=1&template_id=36&parent_id=16

    ReplyDelete
  7. புலத்தில் செய்கிறோம்! செய்வோம்!
    ஆனால் இந்திய வல்லாதிக்கம்???

    *******

    இந்தியாவை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். இந்தியா மீதான தமிழர்களின் நம்பிக்கையின்மையை நாம் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    தமிழர்களுக்கு இரு எதிரிகள் உள்ளனர். ஒன்று சிறீலங்கா, மற்றொன்று இந்தியா. இதில் எதனை முதலில் எதிர்ப்பது, அடுத்து எதிர்ப்பது போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. இரண்டு எதிரிகளையும் எதிர்த்தே நாம் போராட வேண்டும். நம் போராட்டத்தினை ஒன்றிணைக்க வேண்டும். அரசியல் போராட்டமாக இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.

    தடுப்பு முகாம்களில் இருந்து மக்களுக்கு விடுதலை, மனித உரிமைகள், சிங்கள் குடியேற்றத்தை தடுப்பது போன்றவையே தற்போதைய உடனடி தேவை.

    ReplyDelete
  8. நாங்கள் தமிழர்களடா1:32 AM, May 20, 2009

    தமிழர்களின் மன உறுதியை அழிக்கும் ஒரு பரப்புரை என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இது போருக்கு பின்பு நம்முடைய போராட்ட உறுதியை சீர்குலைக்க சிறீலங்கா, இந்தியா செய்யும் கூட்டு சதி.

    இந்த சதியை முறியடிக்க நம் போராட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டும்

    ReplyDelete
  9. கவனத்தை திசை திருப்பி வன்னியில் இனக் கொலை
    சென்னை: "தமிழகம் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் எந்த சேனலைத் திருப்பினாலும், இணையத்தைத் திறந்தாலும் பிரபாகரன் மரணம் குறித்து, சிங்கள ஆதிக்க வெறியர்கள் தயாரித்துக் கொடுத்த செய்திகளே ஆக்கிரமித்திருக்க, அனைவரது கவனமும் வேடிக்கை மனப்பான்மையில் திளைத்திருக்க, வன்னியிலே ஓசையின்றி ஒரு பெரும் மனித அவலத்தை, இனப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்", என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதிர்ச்சி தகவல் தந்துள்ளன.

    "புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான உறவுகளைக் கொன்று தமிழின சுத்திகரிப்பை நிலை நிறுத்துவதே ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவு நாடுகளின் விருப்பமாக இருந்துள்ளது.

    குறைந்தபட்சம் ஏன் என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல், கொடுக்கிற செய்திகளையெல்லாம் 'ஆ' வென வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டம்தான் தமிழர் கூட்டம் என முடிவுசெய்து, அவர்கள் கதைவிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அரச பயங்கரவாதிகள் வன்னியில் அப்பாவி தமிழர்களை கொன்றழித்து வருவதாக", செவ்வாய் பின்னிரவில் வந்த செய்திகள் கூறுகின்றன.

    மிச்சமிருக்கும் மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுதங்களைக் கீழே போடுவதாக அறிவித்தனர் புலிகள். சமாதானம் பேச வந்த மூத்த புலித் தலைவர்கள் சிலரை நயவஞ்சமாகக் கொன்ற ராணுவத்தினர், இப்போது கேட்க நாதியற்ற தமிழர் கூட்டத்தை புலிகள் என்ற சந்தேகத்தில் சுட்டுக் கொல்கிறார்களாம்.

    போர் நிறுத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் இன்னமும் பல ஆயிரம் மக்கள் பதுங்கு குழிகளுக்கு மேலே வரமுடியாமல் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்களாம். அவர்களில் தப்பி மேலே வருபவர்களை புலி என்ற சந்தேகத்தின்பேரில் கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்கிறார்கள் ராணுவத்தினர்.

    வன்னியில் ராணுவம் போரை நிறுத்திவிட்டது என்பதே மிகப்பெரிய பொய் என்ற அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த இரு தினங்களும் மக்கள் 'பிரபாகரன் மரணத்தில்' மூழ்கிக் கிடக்க, அங்கே கோரத் தாண்டவம் ஆடியுள்ளது இலங்கை ராணுவம்.

    இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை மக்கள் மற்றும் சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டே பிரபாகரன் மரணம், உடல் கண்டெடுப்பு, கருணாவை வைத்து அடையாளம் காட்டல் போன்ற மோசடிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    ReplyDelete
  10. நன்றி சசி,
    இந்த நேரத்துக்கு தேவையான கருத்து.
    என் போன்ற பலர் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளினால் ஒரு விதமான shell-shocked
    மன நிலையில் உள்ளோம்.
    பல ஆயிரம் உயிர்களை இப்படி இழந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.இப்போதும் அங்கு படுகொலைகள் நடந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.ஈழத்தமிழரின் இளைய சமுதாயத்தைச் அழிப்பதன் மூலம் ஒரு தலைமுறையையே அழிக்கத் திட்டம் நடக்கிறது.

    இந்த நேரத்தில்தான் ஈழத்தில் உள்ள மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
    மனத்தை தேற்றிக் கொண்டு நாங்கள் செயல்களில் இறங்க வேண்டும்.
    அவர்கள் அங்கே குரல்கள் நெரிக்கப் பட்டு ,வாய்கள் கட்டப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளார்கள்.
    போர் முடிந்தது என்று அறிவித்தும் கூட இன்னும் அனைத்துலக ஊடகங்களையோ அல்லது மனித நேய அமைப்புக்களையோ சிங்கள அரசு வன்னியின் பக்கம் போர்க்களத்துக்கு போக அனுமதிக்கவில்லை ,போர்க்குற்றம் செய்த சாட்சியங்கள் அழிக்கப் படுகின்றதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
    இப்போதும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் புலிகளுடன் ஒருநாள் தொடர்பு கொண்டிருந்தாலும் கைது செய்யப்பட்டு வேறாக எடுத்துச் செல்லப் படுகிறார்கள் ,குறிப்பாக இளைஞர்களும் இளம்பெண்களும்
    .
    போர்க்களத்தில் மிக அர்ப்பணிப்புடன் துணிச்சலாக செயல்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்கள் ,இப்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.அவர்களும் சிங்கள அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களின் பலம் வாய்ந்த சாட்சியங்களாக கருதப் படுவதால் அவர்களுக்கு ஏதும் சித்திரவதைகள் நடந்திருக்குமோ தெரியவில்லை.

    அங்கு தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் ,அதை விட திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் உள்ள வட,கிழக்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் ,மற்றும் கொழும்பில் உள்ள மக்கள் எல்லோரின் நலனையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.

    இது புலம்பெர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல ,தமிழகத் தமிழர்கள் ,மற்றும் உலகத் தமிழர்களுக்கும் உண்டு.எல்லாப் பிரிவினைகளையும் மறந்து அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது.

    எஞ்சியிருக்கும் எமது மக்களுக்கும் இறந்த எமது பொது மக்கள் ,போராளிகளுக்கும் நீதி கிடைக்க நாங்கள் பாடுபட வேண்டும்.
    எமது போராட்டத்தை தமிழர் அல்லாத மற்றைய இனத்தவருக்கும் எடுத்துச் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான தொலை நோக்கு பார்வையுடனான செயல் திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும் .

    Tim Martin என்ற பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளையர் ஈழத்தமிழருக்கான ஆதரவு கேட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் ஐந்து கோரிக்கைகளை வைத்து நேற்று லண்டனில் உண்ணாவிரதம் ஆரம்பித்து உள்ளார்.
    Kurdish,Punjabi அமைப்புக்களை சேர்ந்த மக்களும் தமது ஆதரவை ஈழத்தமிழருக்கு தெரிவித்து உள்ளனர்.
    இதனை நாம் இன்னும் விரிவு படுத்த வேண்டும்
    ---வானதி ,

    ReplyDelete
  11. //இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை.//

    அவர்கள் அந்த உடலத்தைக் காட்டிய பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது அது நிச்சயம் பிரபாகரனாய் இருக்க முடியாதென...

    //மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...//

    ஆம்.. இனவாத அரசு பரப்பும் ஊடக வதந்திப் போரில் சிக்காமல் யுத்தம் தின்ற பூமியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக செய்யப்பட வேண்டிய உதவிகள் மற்றும் நீண்ட கால நோக்கில் செயல்படுத்த வேண்டிய விசயங்களை உடன் முன்னிறுத்துவோம்...

    ReplyDelete
  12. யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது உறவினர்கள் தொலைபேசியில் உரையாடினார்கள். அங்கே ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ராணுவம் நுழைந்து, பணம் தரும் படி வற்புறுத்தி, பட்டாசுகளைக் கொடுத்து, தெருவுக்கு வந்து அவற்றை வெடிக்கும் படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள் :(

    வன்னி பகுதியிலோ நிர்வாண சோதனை, பெண்கள் காணாமல் போவது என நிலைமை இன்னும் மோசம். இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? :(

    ReplyDelete
  13. //vanathy said...
    .
    .
    Kurdish,Punjabi அமைப்புக்களை சேர்ந்த மக்களும் தமது ஆதரவை ஈழத்தமிழருக்கு தெரிவித்து உள்ளனர்.//

    வானதி,
    இது தொடர்பான இணைய இணைப்புகள் ஏதேனும் இருந்தால் தாருங்கள்....

    ReplyDelete
  14. Pathy,
    members of national congress of Kurdistan in UK attended Tamil protest in front of British parliament and voiced their support for eelam struggle strongly.
    PKK has been supporting Eelam struggle continuously.
    I have put this news story below ,hope it is helpful.
    -vanathy

    Tuesday, May 12, 2009
    PKK calls for ceasefire in Sri Lanka

    Kongra-Gel Head Zübeyir Aydar condemned the ‘massacre against Tamils’ by the government of Sri Lanka and called for a ceasefire. International media reported that several civilians died in the fight between government forces and the LTTE. He also criticized the silence of international community towards Sri Lanka. Aydar called the insurgency by the Tamil Tigers a freedom struggle for independence and said Kurds will support them with protests.

    Earlier before the National Congres of Kurdistan in the UK supported Tamil protests. According to the Turkish private security consultant Ali M. Koknar there are clear relations between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Kurdistan Workers Party (PKK).

    Kurdistan People’s Congress (Kongra-gel) was placed on the US and EU terrorist list in 2004. Kongra-gel was founded by the PKK in October 2003 to campaign for Kurds.
    Posted by Wladimir van Wilgenburg
    Wladimir van Wilgenburg

    Former Turkology and History student. Currently busy with minor Journalism in Leiden and Language Contact: vvanwilgenburg @ gmail.com For questions, invitations or requests for freelance articles/news.

    ReplyDelete
  15. புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பதிவு செய்யவும், அதைப் பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு செய்யவேண்டியவைகள் குறித்த விவாதங்களை தாங்கள் வாழும் நாட்டில் உள்ள (அதிலும் போர்க்குற்றங்கள் பற்றிய விவகாரங்களில் தேர்ந்த வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம்) ஆய்வாளர்கள், வழக்குரைஞர்களை அழைத்து பரவாலான விவாதங்களை ஊடகங்களில் நடத்துவதன் மூலம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். அது தான் இப்போதைய உடனடித்தேவை.

    இந்திய அரசும், ஊடக சதியாளர்களும், வழக்கம் போல புனுகு பூசும் வேலைகளை தொடங்கி, 25 கோடி உதவிப்பணம், இனங்களிடையே ஆன புரிந்துணர்வு, சம உரிமைகளைப் பெற அமைதிவழிப் போராட்டம் என்று இலங்கை அரசைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள். இன்று வேண்டியது சம உரிமை அல்ல; ஒரு போர்க்குற்றவாளி தனது பதிப்புக்குள்ளானவருக்கு அதைத் தரமுடியாது.

    மாறாக இவை இரண்டுமே

    1. காயப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட மக்களை பாதுகாத்து, விரைவில் அவர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசங்களுக்கு அனுப்ப முயற்சி

    2. இலங்கையின் போர்க்குற்றங்களை நேர்மையாக விசாரித்து தண்டனை மற்றும் அதில் பங்கு பெற்ற மற்ற நாடுகளை அம்பலப்படுத்துதல்.

    இதில் முன்னதை அரசு முன்னெடுக்கவிடாமல் மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் வழியாக அய்.நா மற்றும் அரசு சாரா அமைப்புகள் வழியாக உதவி செய்ய வேண்டி போராட்டங்களை நடத்தி உதவிப்பொர்ட்களை அனுப்புவதை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டும்

    இரண்டாவது வேலையான போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்தி அதன் அடிப்படையி குற்றவாளியான இலங்கை அரசுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் தமிழர்களை புணரமைப்பு செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்ற அடிப்படையின் கீழ் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது; அரசு சாரா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளை இப்பணிக்கு ஈடுபடுத்துவது.

    இப்பணிகளே இப்போது தலையானவை

    -தங்கமணி

    ReplyDelete
  16. பாலாஜி-பாரி3:09 PM, May 20, 2009

    பதி,

    பஞ்சாபியர்களின் ஒரு ஆதரவு கடிதம்.
    இதை தமிழிலும் படித்தேன்.

    http://aalamaram.blogspot.com/2009/04/blog-post_28.html

    மேலும் சில பஞ்சாபி நண்பர்களுடன் பேசும் போதும், அவர்களது உணர்வு தமிழர்களுக்கு ஆதரவானதாகவே இருந்தது.

    சசி:
    உங்களது பதிவின் நோக்கம் சார்ந்தே எழுதப்பட்டுள்ள சுந்தரவடிவேலின் பதிவு.
    http://sundaravadivel.blogspot.com/2009/05/blog-post_19.html

    ReplyDelete
  17. Kurdish,Punjabi அமைப்புக்களை சேர்ந்த மக்களும் தமது ஆதரவை ஈழத்தமிழருக்கு தெரிவித்து உள்ளனர்.
    இதனை நாம் இன்னும் விரிவு படுத்த வேண்டும்

    *********

    ஈழம், குர்தீஷ், காஷ்மீர், நாகாலாந்து மற்றும் இந்தியாவின் பிற வட கிழக்கு மாநிலங்கள் ஆகிய அனைத்து தேசிய இனங்களும் இணைந்து தங்களுடைய விடுதலைப் போராட்டத்தினை கூட்டாக முன்னெடுக்க வேண்டும் என ஒரு நண்பர் தெரிவித்து இருந்தார். இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். வல்லாதிக்க நாடுகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொள்ளும் பொழுது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்குள் கூட்டு வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்க முடியாது. தனித்தனியாக விடுதலைப் போராட்டத்தினை நடத்தினாலும் இன்று இந்த அனைத்து தேசிய இனங்களுக்கு பொதுவான எதிரிகளாக இருப்பது குறிப்பிட்ட சில நாடுகள் தானே ?

    இதனை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  18. அனானி பின்னூட்டங்களாக வந்து கொண்டே இருக்கிறது. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

    உருப்படாத உங்களது எந்த பின்னூட்டத்தையும் வெளியிட முடியாது என ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் :)))

    ReplyDelete
  19. To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan...... wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body....big and small.

    Prabhakaran has already been killed several times. Government of Sri Lanka is involved in ugly propaganda through Indian Channels, which are backed by RAW, like Times Now, NDTV, CNN IBN only. Did anybody see a similar tone in BBC ??? Still the BBC website says, with carefully worded sentences, unlike these fascist, nauseatingly stupid Indian channels, "Sri Lankan television stations broadcast footage of a body purported to be that of Prabhakaran"

    Even if Prabhakaran happens to die before attaining Eelam, the death would be like that of Nethaji...No one can prove if he is alive or dead. Nobody can capture any evidence...even ashes....Government of Sri Lanka claims it is end of war. Indeed it is end of Eelam War 1. Eelam War 2 will start and that will be in a new form...unbearable by Sinhala chauvinists. Already when they left Killlinochi, many batches of 400 each, highly trained tigers have either moved out of the country or intruded inside Lanka itself for a future attack.

    Wait and see...Tigers are gonna come alive in a different form. Never in the history a Liberation Struggle has failed. Eelam Struggle too will not.

    Tamizhan endru sollada.

    ReplyDelete
  20. To the eyes of one and all.

    Any self-respecting defence setup of any nation will only release the information that will be true, but the Sri Lankan defence website defence.lk has given a disclaimer like "Indha thiraipadathil varum sambavangal yaavum karpanaiye". Look what the disclaimer they have inserted for pro-Sinhalese articles written by biased, one-sided, fascist, Sinhala writer pigs.

    "-The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site"

    WHAT A SHAME. Poiyyum purattum veliye varum. Poruthu aalvom.

    ReplyDelete
  21. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்கள் ,இப்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.அவர்களும் சிங்கள அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களின் பலம் வாய்ந்த சாட்சியங்களாக கருதப் படுவதால் அவர்களுக்கு ஏதும் சித்திரவதைகள் நடந்திருக்குமோ தெரியவில்லை.//

    வீரம் மிக்க அம் மருத்துவர்களை காக்க கீழுள்ள இனைய தளத்திருக்கு சென்று கையெழுத்து போடுங்களேன் http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

    நன்றி

    ReplyDelete
  22. //அனானி பின்னூட்டங்களாக வந்து கொண்டே இருக்கிறது. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

    உருப்படாத உங்களது எந்த பின்னூட்டத்தையும் வெளியிட முடியாது என ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் :)))//

    நல்ல விடயம்.

    எந்த பதிவுக்கு போனாலும் எரிச்சலாக இருக்கிறது.
    மக்களுக்கு ஏதாவது செய்ய ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால்
    மாறி மாறி அடிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
    உங்களது பதிவில் பயனுள்ள விவாதங்கள் நடைபெறுகிறது.
    நன்றி

    ReplyDelete
  23. நரேன்12:03 PM, May 22, 2009

    நண்பர் சசி அவர்களுக்கு,

    உங்கள் blog- கு பரவலாக தமிழர்கள் வருவதால் !!!!!!!!!!!!! இந்த கருத்துகளை பரப்புவோம்

    இது சரியான நேரம் தமிழர்கள் அனைவரும் !!!!!!!!!!!!!!!! ஈழநாட்டை வென்றெடுக்க வேண்டும். அதன் படி நான் சில கருத்துகளை பகிர்ந்துஉள்ளேன் .நீங்களும் சில கருத்துகளை சேர்த்து உங்களுடைய blog பதிவு செய்யவும்

    1.LTTE யை தமிழர்கள் அனைவரும் ஈழநாட்டு விடுதலை புலிகள் ராணுவம் என்றே அழைப்போம்.

    2.இந்திய சில பாதுகாப்பு காரணங்களுக்காகவே மட்டுமே இலங்கை உதவி செய்கிறது.
    ஆனால் மறைமுகமாக ஈழத்தை ஆதரவு செய்கிறது.
    உதாரணம் : ரகசியமான உத்தரவின் பேரில் LTTE தலைவர்கள் தப்பி செல்லும் போது
    கண்டும் காணமலும் இருக்க வேண்டும் என்று ரோந்து கப்பல்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது(சான்று நக்கிரன் பத்திரிகை ).ஈழத்தை தமிழர்களே வென்று எடுக்க வேண்டும் என்று விரும்புகிறது.
    அதனால் இந்தியாவிடமும் கோரிக்கைகளை வைத்து கொண்டே இருப்போம்

    3. இன்று மக்கள் வெள்ளை மாளிகை முன்பும் ,பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள் ,இதற்கு பதிலாக அனைத்து செய்தி உடகங்கள் அலுவலகத்தின் முன்பு போராடுவோம் !!!!!!!!!!!!! ஈழ பிரச்சனை தானாகவே எல்லா நாட்டிற்கும் சென்று விடும்.

    4.அதேபோல் நாம் எல்லோர் கையிலும் ஈழ விடுதலைக்கு போராடின அனைத்து தலைவர்கள் உருவ படம் ஏந்துவோம்.செல்வநாயகம் ,திலிபன் மற்றும் போராட்ட தியாகிகள் அனைவர் படமும்.

    5.சுதந்திரம் வேண்டும் !!!!!!!!!!!!!! என்று பரப்புவோம்
    6.தமிழ் அன்னையை சங்கிலியால் கட்டியபடி !!!!!!!!!!!!! படங்களை பரப்புவோம் !!!!!!!!!!!!!

    ReplyDelete
  24. //2.இந்திய சில பாதுகாப்பு காரணங்களுக்காகவே மட்டுமே இலங்கை உதவி செய்கிறது.
    ஆனால் மறைமுகமாக ஈழத்தை ஆதரவு செய்கிறது.
    உதாரணம் : ரகசியமான உத்தரவின் பேரில் LTTE தலைவர்கள் தப்பி செல்லும் போது
    கண்டும் காணமலும் இருக்க வேண்டும் என்று ரோந்து கப்பல்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது(சான்று நக்கிரன் பத்திரிகை ).ஈழத்தை தமிழர்களே வென்று எடுக்க வேண்டும் என்று விரும்புகிறது.
    அதனால் இந்தியாவிடமும் கோரிக்கைகளை வைத்து கொண்டே இருப்போம்//

    எவ்வளவு பட்டாலும் உங்களுக்கு புத்திவராதா? இந்த அளவுக்கு நிலமை சென்றதெற்குக் காரணமே உங்களது இந்த இந்திய (தமிழ்நாட்டு) எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தான். இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை சாத்தியமாக அனுமதிக்காது; அரசியல் ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் போராட்டத்தை பரவலாக்கி இந்தியாவின் சதி வேலைகளை முறியடித்துச்செல்லும் வகையில் போராட்டத்தை செலுத்தாமல் இந்தியா உதவும் என்றிருப்பது, முதலையின் மீதேறி ஆற்றைக் கடக்கலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

    மறுபடியும் இந்த முட்டாள் தனத்தைச் செய்யாதீர்கள்!

    ReplyDelete
  25. http://www.puthinam.com/full.php?2b1VoUe0dKcYo0ecKA4A3b4g6DX4d3f1e2cc2AmS2d424OO3a030Mt3e

    //கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சி படையினரிடம் விழுந்த போது போராளிகளோடு போராளிகளாக கிளம்பிப் போனவர்கள் முன்றரை லட்சத்திற்கும் அதிகான மக்கள் என்கிறது தகவல்கள்.

    ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி நாடாளுமன்ற விவாதத்தில் பேசும் போது 70 ஆயிரம் பொதுமக்கள் போர்ப்பகுதிகளில் சிக்கியிருக்கிறார்கள் என்றார்.

    இரண்டு மாதங்கள் கழித்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் மக்கள் போர்ப் பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு வந்தார்கள் என்றது ஐ.நா.வின் அறிக்கை. அதையே ஓபாமாவும் சொன்னார்.

    இப்போது போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து விட்ட சூழலில் 70 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வந்து விட்டதாகச் இலங்கை அரசு சொல்கிறது என்றால் ப்ரணாப் முகர்ஜி சொன்ன 70 ஆயிரம் பேர் என்கிற கணக்கு இந்த நான்கு மாதங்ககளுக்குள் குட்டி போட்டா இத்தனை லட்சமாக ஆனது?

    அது மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் போர்ப் பகுதிக்குள் இருக்க இந்தியாவின் அறிவுரைப்படி வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே உணவை அனுப்பிக் கொண்டிருந்தது இலங்கை அரசு.

    பட்டவர்த்தனமாக இந்த இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி இந்தப் போர் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்.

    கிளிநொச்சியில் இருந்து கிளம்பிப் போன தமிழ் மக்கள் மூன்றரை லட்சம் பேர் எங்கே என்று கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பு இந்திய - இலங்கை அரசுகளுக்கு உண்டு.

    70 ஆயிரம் பேர்தான் போர்ப் பகுதிகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்று ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என்றால் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தில் அவரும் நிறுத்தப்பட வேண்டியவர்தான்.

    ஆனால் சீக்கிய மக்களையும் காஷ்மீரிகளையும் இழிவுபடுத்தியதைப் போல எந்தப் பதிலும் சொல்லாமல் வழக்கம் போல ஏளனத்தை மட்டுமே பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தருவார்கள் என்றால் அதற்கு பழி தீர்க்கும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்று பாதிக்கப்பட்ட தமிழன் நம்பக்கூடும். நம்பிக்கைகள் வலுப்பெறக் கூடும்.//

    ReplyDelete
  26. Pls see the current situation of so called "Liberated Jaffna"

    http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

    ReplyDelete
  27. //http://www.kalachuvadu.com/issue-113/page44.asp//

    இந்த டக்ளஸ் தேவானந்தாதான் இந்து ராம் சொல்லும் தமிழர்களின் தலைவர். இவர்களைப் போன்றவர்களைக் கொல்ல முயன்றதுதான் புலிகளின் பாசிசம்! கருணா ஒருத்தனை கொல்லாமல் விட்டதால் கிட்டத்தட்ட 1 இலட்சம் மக்களும் போராளிகளூம் கொல்லப்பட்டனர்.

    ReplyDelete