tag:blogger.com,1999:blog-6148241.post114206337982713054..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: பத்திரிக்கைகளிடம் "சரக்கு" இல்லைதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6148241.post-1142132783498075582006-03-11T22:06:00.000-05:002006-03-11T22:06:00.000-05:00தங்கமணி,உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு என்னுடைய...தங்கமணி,<BR/><BR/>உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு என்னுடைய நன்றி<BR/><BR/><BR/><BR/>பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பின்னூட்டங்கள் வாதத்தை திசைமாற்றி விடாமல் தடுத்த தருமிக்கும் (:-)) என்னுடைய நன்றிதமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142111980036020072006-03-11T16:19:00.000-05:002006-03-11T16:19:00.000-05:00வாசந்தியை பிரபாகரன் சந்திக்கவிரும்பவில்லை என்ற முட...வாசந்தியை பிரபாகரன் சந்திக்கவிரும்பவில்லை என்ற முடிவுக்கு ஒருவர் வரலாம். அவர் ஆனந்திக்கு அளித்த பேட்டி அடுத்த இருதினங்களில் தினமணியில் வெளியாகியுள்ளது. அதை அவருக்கு ஏற்பட்ட தோல்வி என்பதுபோல வாசந்தி குறிப்பிடுகிறார். ஆனந்திக்கு இதனால் கிடைத்த பட்டம் ஆனந்தி புலிகளுக்கு இணக்கமானவர் என்பதுதான். ஆனந்தி புலிகளுக்கு இணக்கமானவர்; சரி. அனிதா? அவர் 13 தடவைகளுக்கு மேலாக பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார் தனது நேர்காணல்கள், செய்திகளுக்காக. ஒவ்வொருமுறையும் கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகும், பாதுகாப்புச்சோதனைகளுக்கு பிறகும், சாவின் விளிம்பில் நடந்து சென்றும். இந்த 'வாசந்தி' மனப்பான்மை அதற்குச் சொன்ன காரணம் என்னவென்றால் பிரபாகரனுக்கும் அவருக்கும் காதல் என்பதுதான். அத்தனை தடவைகள் அவர் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களையும் சந்தித்திருக்கிறார் என்பதை மறந்து (மறைத்து) விடுகிறார்கள்.புலிகள் தாங்கள் அனிதாவுக்கு பேட்டி அளிப்பதற்குக் காரணமாகக் குறிப்பிட்டது என்னவென்றால் அவர் அதை திரிக்காமல் வெளியிடுகிறார் என்பதுதான். தென்இலங்கை அரசியல்வாதிகள் அனிதாவைச் சந்திப்பதற்குக் காரணமும் அதுதான்.<BR/><BR/>ஒரு செய்தியாளரின் அடிப்படை தகுதி செய்திகளை திரிக்காமல் வெளியிடுவது, செய்திகளின் மறைக்கப்பட்ட பக்கங்களை தேடிச்செல்வது, அதற்காக தமது உயிர் உட்பட அனைத்தையும் பணயம் வைப்பது, கேட்கப்படாத மக்களின் மெல்லிய குரலைக் கேட்பதற்கு வகை செய்வது இவைதான். இதனாலேயே இவர்கள் ஜனநாயகத்துக்கு பெரும்பணி செய்வதாய் மரியாதையைப் பெறுகிறார்கள்; 4வது தூணாகிறார்கள். பிரபாகரனாகட்டும் அல்லது யாராகட்டும் ஊடகங்களில் இருந்து சந்திக்கவிரும்புவது செய்தியாளர்களைத்தான், நீதிபதிகளை அல்ல. ஒவ்வொரு செய்தியாளருக்குள்ளும் ஒரு நீதிபதி, வழக்குரைஞர் இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்தியாளர்கள் அல்ல. செய்தியாளர்களின் வேலையை அவர்கள் செய்யக்கூடாது. அனிதாவுக்குள்ளும் ஒரு சார்புக்கான வழக்குரைஞர் இருக்கிறார். ஒரு முடிவைச் சொல்லுகிற நீதிபதி இருக்கிறார் (அந்தப்புத்தகத்தில் அவர் தீர்ப்புகளைச் சொல்லவும் செய்திருக்கிறார்). அவருடைய நீதிபதிகள்/ வழக்குரைஞர்கள் செய்தியாளர் வேலையைச் செய்யவில்லை என்பதாலேயே பிரபாகரன் அவரிடம் பேசமுடிகிறது; அதனாலேயே அவர் ஒரு நல்ல செய்தியாளராகிறார்; பல இந்திய, வெளிநாட்டு பெரும் ஊடகங்களில் பணியாற்ற முடிந்தது. வாசந்திகளின் நோக்கம் அதுவல்ல. வாசந்தியிடமிருப்பது ஒரு பெரும்பாலான இந்திய ஊடகவியலாளரிடம் இருக்கும் ஒரு வழக்குரைஞர் cum நீதிபதி மனப்பான்மை. அவர் பிரபாகரனிடம் கேள்விகளுடன் செல்கிறார், எதற்காக என்றால் தமது சந்தேகங்களை, முன்முடிவுகளை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள, நிரூபிக்க. ஆனால் செய்தியாளர் ஒரு தரப்பினுடைய நியாயங்களைச் சொல்ல இடமளிக்கும் கேள்விகளுடன் செல்லவேண்டும். எவர் இருதரப்புக்கும் அப்படியான வசதியை அதிகமாக அளிக்கிறாரோ அவரே சிறந்த பத்திரிக்கையாளர்; செய்தியாளர் ஆகிறார். <BR/>இறுதியாகச் சொல்லுவதென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. அனிதாவுக்கு ஒரு நல்ல செய்தியாளராய் செயல்பட வேண்டியது தேவை. ஆனால் வாசந்தியினுடைய தேவை வேறு. <BR/>"சிதம்பரம் ஏமாற்றினார்" என்று "செய்தி" வெளியிடும் நீதிபதி மனப்பான்மை உறுத்தாத அளவுக்கு பழகிப்போன ஜனநாயக பத்திரிக்கை/ வாசகத் தளத்தில் தான் கோபால் ஏன் வீரப்பனைச் சந்திக்கமுடிகிறது அப்போது ஏன் அவர் கைது செய்ய உதவக்கூடாது போன்ற கேள்விகள் சாதரணமாய் பிறக்கின்றன. <BR/>ஓட்டுத்திருவிழாக்களை தவறாமல் கொண்டாடுவதால் நாம் பெரிய ஜனநாயக நாடாகிவிடமுடியாது என்பதை இந்த மனோபாவம் அதனுடுடைய வழியில் காட்டுகிறது.<BR/>வழக்கம் போல நன்றி சசி! :)Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142102539001690842006-03-11T13:42:00.000-05:002006-03-11T13:42:00.000-05:00/*செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிறுவன.../*<BR/><BR/>செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிறுவனத்தார் சார்ந்துள்ள கருத்துக்களை ஒரு அளவிற்காவது ஒட்டி எழுதுவதாக அல்லது அப்படி எழுதெ பணித்துள்ளதாக எனக்கு படுகிறது<BR/><BR/>*/<BR/><BR/>இது உண்மை தான். பத்திரிக்கையாளன் செய்தியை சேகரிக்கும் முறையில் இருக்கும் நோக்கம் தான் அவர்கள் கொடுக்கும் செய்தியை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது அந்தப் பத்திரிக்கையை எப்படி நடந்த வேண்டும் என்று நினைக்கிற அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளரையோ, ஆசிரியரையோச் சார்ந்து தான் இருக்கிறது. தன்னுடைய பணியை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டோ அல்லது தான் கொண்ட கருத்துக்களை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டோ கொடுக்கும் செய்திகள் திரிக்கப்படுகின்றன அல்லது அவர்கள் கருத்துக்கு எதிராக உள்ளவை சொல்லாமல் விடப் படுகின்றன.<BR/><BR/>அதனால் தான் இந்து போன்ற பத்திரிக்கைகளில் இலங்கை, திபெத் போன்ற பிரச்சனைகளை அவர்கள் எழுதும் பொழுது சார்பு நிலை தெரிகிறது. <BR/><BR/>ஆனால் பிறச் செய்திகளைக் கொடுக்கும் பொழுது தெரிவதில்லை.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142099862069771382006-03-11T12:57:00.000-05:002006-03-11T12:57:00.000-05:00"சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும..."சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும் முக்கிய விஷயங்கள் பின்னூட்டங்களால் எங்கோ திசை திரும்பி விடுகின்றன; திருப்பி விடப் படுகின்றன.டோண்டுவின் பின்னூட்டம் இதைத்தான் இங்கு செய்கிறது."<BR/><BR/>சசி சொல்ல வந்தது பத்திரிக்கைகள் எப்படி செய்திகளைத் தரவேண்டுமென்ற அவர் கருத்தை. அதற்கு இரு பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் எதற்கு வாஸந்தியைத் தனிப்பட்ட முறையில் டோண்டு ஏற்றிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை."<BR/><BR/>வாஸந்தியை உதாரணமாக எடுத்துக் காட்டியது சசி அவர்களே. அதில் அவர் கூறியதில் உள்ள குறைபாட்டைத்தான் கூறினேன். இதில் திசை திருப்பல் எங்கு வந்தது? மேலும் பிரபாகரன் வாசந்தி அவர்களை சந்திக்கத் தயங்கியிருக்கிறார் என்பதும் நிஜமே. பெல்ட் பாம் பற்றிக் குறிப்பிட்டதும் புலிகள் செய்யும் அராஜகத்தை எடுத்துக்கட்டி, வாசந்தி அவர்கள் தான் வந்த முடிவுகள் குறித்துஎழுதியதில் தவறு இல்லை என்றுதான் கூற முயற்சி செய்தேன். மற்றப்படி அவரை தூக்கிப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை.<BR/><BR/>"இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளது பத்திரிக்கைகள் மற்றும் செய்தியாளர்களின் போக்கு குறித்து தான். அதைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும்."<BR/>அதைதான் நானும் விவாதித்தேன். அதற்காக நீங்கள் சுட்டிய கட்டுரையை முழுக்கப் படித்து அதிலிருந்தே மேற்கோள் காட்டினேன். உங்களுக்கு அனிதா செய்தது சரியென்றுபட்டிருக்கிறது. அதைக்கூறப் புகுந்த நீங்கள் இன்னொரு பத்திரிகையாளர் செய்தது சரியில்லை என்று கூறினீர்கள். சரியாகத்தான் எனக்குப் படுகிறது என்று நான் கூறினேன். நீங்களும் விவாததினுள்ளேயே இருங்கள் என்றுதான் நானும் கூறுகிறேன்.<BR/><BR/>இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142097221485953562006-03-11T12:13:00.000-05:002006-03-11T12:13:00.000-05:00சசி: செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிற...சசி: செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிறுவனத்தார் சார்ந்துள்ள கருத்துக்களை ஒரு அளவிற்காவது ஒட்டி எழுதுவதாக அல்லது அப்படி எழுதெ பணித்துள்ளதாக எனக்கு படுகிறது. தொலைகாட்சிகளும் அப்படியே, இது அமெரிக்காவானாலும் ஆண்டிப்பட்டி ஆனாலும் முக்கியத்துவம் தருவதன் விகிதம் மாறுபடுகிறது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142096613447327592006-03-11T12:03:00.000-05:002006-03-11T12:03:00.000-05:00சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும்...சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும் முக்கிய விஷயங்கள் பின்னூட்டங்களால் எங்கோ திசை திரும்பி விடுகின்றன; திருப்பி விடப் படுகின்றன.டோண்டுவின் பின்னூட்டம் இதைத்தான் இங்கு செய்கிறது.<BR/><BR/>சசி சொல்ல வந்தது பத்திரிக்கைகள் எப்படி செய்திகளைத் தரவேண்டுமென்ற அவர் கருத்தை. அதற்கு இரு பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் எதற்கு வாஸந்தியைத் தனிப்பட்ட முறையில் டோண்டு ஏற்றிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>"டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது:பிரபாகரன் அவரை சந்திக்க பயந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது." டோண்டின் இந்த 'லாஜிக்'கும்,முடிபும் ரொம்ப தமாஷா இருக்கு. பேஷ்..பேஷ்...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142096482523742682006-03-11T12:01:00.000-05:002006-03-11T12:01:00.000-05:00நான் செய்திகள் மூலமே உண்மைகளை உணர்த்துவது பற்றி சொ...நான் செய்திகள் மூலமே உண்மைகளை உணர்த்துவது பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>வாஸந்தி அவ்வாறு சொல்லாமல் தனிப்பட்ட தன்னுடைய கருத்துகளை நிலை நிறுத்த முனைந்துக் கொண்டிருக்கிறார்.<BR/><BR/>ஒரு பயணக்கட்டுரை செய்திகளின் மூலமே சொல்லப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.<BR/><BR/>ஒரு உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் பெண் புலிகளுடன் தான் பேசியது பிரபாகரனுக்காகத் தான் என்ற தனது யூகங்களை இங்கே நிலை நிறுத்துகிறார். அதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா ?<BR/><BR/>புலிகள் தங்களுடைய ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணப்படுத்தவே செய்கின்றனர். இதனை அனிதா அவருடைய புத்தகத்தில் உணர்த்தியிருக்கிறார்.<BR/><BR/>***<BR/><BR/>நான் ஒரு செய்தியாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அது பற்றி மட்டும் விவாதிக்கலாம்<BR/><BR/>தனிப்பட்ட பேட்டிகளை குறித்து நான் எதுவும் சொல்ல அல்ல. <BR/><BR/>பேட்டி எடுப்பதும், செய்தி சேகரிப்பதும் பத்திரிக்கை துறையில் வேறு வேறானவை என்றே நான் நினைக்கிறேன்.<BR/><BR/>பேட்டி எடுப்பதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். <BR/><BR/>எதிராளியை மடக்குவதற்காக பேட்டி எடுப்பது ஒரு ரகம். இது பேட்டி எடுப்பவரின் திறமையை பறைச்சாற்றும். ஆனால் எதற்கு பேட்டி எடுக்கிறோமோ அந்த நோக்கத்தைச் சிதைத்து விடும்.<BR/><BR/>மற்றொறு வகை, பேட்டி எடுக்கப்படுபவரை பேசவிடுவது. அதன் மூலம் அவர்களின் எண்ணங்களை வெளிக்கொணருவது. <BR/><BR/>என்னைப் பொறுத்தவரையில் இரண்டாம் வகை தான் முக்கியமானது என்று நினைக்கிறேன். அது தான் ஒரு பத்திரிக்கையாளனின் செய்தி சேகரிப்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.<BR/><BR/>****<BR/><BR/>அனிதா இந்தியாவின் தலைச்சிறந்த செய்தியாளர்களில் ஒருவர். அவர் பிரபாகரனை பல முறை சந்தித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடும் பொழுது வாஸந்தி ஒன்றும் பெரிய பத்திரிக்கையாளர் அல்ல.<BR/><BR/>அது போல அனிதா பெற்ற வெற்றிகளையும் வாஸந்தி பெறவில்லை. எதனால் என்று நோக்கும் பொழுது அவர்கள் இருவருக்கும் (career wise)இருக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.<BR/><BR/>இதுவே ஒரு பத்திரிக்கையாளரின் திறமையை உணர்த்துகிறது.<BR/><BR/>****<BR/><BR/>இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளது பத்திரிக்கைகள் மற்றும் செய்தியாளர்களின் போக்கு குறித்து தான். அதைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும். <BR/><BR/>பிரபாகரன் தன் பிள்ளைகளை எங்கு வைத்திருக்கிறார் என்பன போன்ற விவாதங்களை அவ்வாறு எழுதப்படும் பதிவுகளில் சென்று நடத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142093646756259462006-03-11T11:14:00.000-05:002006-03-11T11:14:00.000-05:00வாஸந்தி அவர்கள் எழுதியதை உங்கள் பதிவு சரியாக பிரதி...வாஸந்தி அவர்கள் எழுதியதை உங்கள் பதிவு சரியாக பிரதிபலிக்கவில்லை. நீங்கள் சுட்டிய வாஸந்தி அவர்கள் கட்டுரையிலிருந்து:<BR/>"எத்தகைய நியாயமான போராட்டமாக இருந்தாலும் வன்முறையை நான் எதிர்ப்பவள். அதனால் ரணம் தான் மிஞ்சுமே தவிர சாதகம் இல்லை என்று நினைப்பவள். சொந்த இனத்தவரையும் ஒழிக்க முற்படும் சகிப்புத்தன்மையற்ற போக்கு, மானுடத்துக்கு எதிரான அசுரத்தனம் என்று நம்புபவள். இந்த எனது நம்பிக்கையே எனது நாவலில் புலிகளைப்பற்றின விமர்சனமாகப் பிரதிபலித்தது. தமிழ்ச்செல்வனே தனது கருத்தை விளக்கட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன். 'தியாகி கிட்டு மற்றும் தியாகி திலீபன் மரணங்களை நீங்கள் மிகவும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள். எங்கள் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டீர்கள்' என்றார். 'என் கருத்து தவறாக இருந்தால் அடுத்த புத்தகத்தில் திருத்தி எழுதி விடுகிறேன்' என்றேன் சிரித்தபடி. 'திறந்த மனத்துடன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறேன்; உங்கள் தலைவரை நேரில் காணும் எதிர்பார்ப்புடன். அவரையும் உங்கள் இயக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆவலுடன்' என்றேன். அதைத் தொடர்ந்து, ஆன்டன் பாலசிங்கம் கிட்டத்தட்ட அரைமணிநேரம் இந்திய அரசும் தமிழகமும் இந்தியப் பத்திரிகைகளும் தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும், தங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதாகவும், அது தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் சொன்னார். 'இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள்தான் இங்கு மக்களுடைய போராட்ட சக்தி. இந்தப் பிரதேசமே எங்க கட்டுப்பாட்டிலே இருக்கு' என்றார் காட்டமாக.<BR/><BR/>அதைப் பற்றி எனக்கு சந்தேகமிருக்கவில்லை. 'ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த இந்திய மக்களை உலுக்கிவிட்டது. இந்திய நிலைப்பாட்டிற்கு அதுதான் காரணம்' என்று என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.<BR/><BR/>'எந்த அரசியல் கொலை நடந்திருந்தாலும் எங்களை சம்பந்தப்படுத்துகிறார்கள். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்திய ராணுவம் இங்க செஞ்ச அட்டூழியத்தின் எதிர் விளைவா சிலது நடந்திருக்கலாம்' என்றார் பாலசிங்கம்.<BR/><BR/>காதில் பூ சுத்துவதுபோல் இருந்தது எனக்கு. 'உங்களுக்கு அதில் சம்பந்தமில்லையா?' என்றேன். ஒலிநாடா ஓடிக்கொண்டிருந்தது. பாலசிங்கம் இல்லை என்னும் பொருள்பட தலையை மட்டும் அசைத்தார்."<BR/><BR/>டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஒரு கூடை பூ அல்லவா சுற்றுகிறார் பாலசிங்கம்!<BR/><BR/>'பிரபாகரன் ஏன் வெளியில் வருவதில்லை?'<BR/><BR/>'அவர் அரசியல்வாதி இல்லே. மக்களுக்காக ஓய்வில்லாமல் செயல்படுபவர். அதற்கு விளம்பரம் தேவையில்லை'.<BR/><BR/>'அவரை நான் சந்திக்கணும். இளைஞர்களிடம் அவருடைய வசீகரம் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியமானது. நேரில் காண ஆசைப்படுகிறேன்.' <BR/><BR/>பாலசிங்கம் மழுப்பலாகச் சிரித்தார். 'அவரை நேரில் கண்டா ஒரு ப்ராஸிக்யூஷன் வக்கீலைப் போல் கேள்வி கேட்பீர்களே?' <BR/><BR/>எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'உங்கள் நாவலைப் படித்ததில் அவருக்கு நிரம்ப வருத்தம்' என்றார் தமிழ்ச் செல்வன்.<BR/><BR/>'நேரில் சந்தித்தால் என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்' என்றேன்.<BR/><BR/>'நீங்கள் இந்தியா திரும்பிய பிறகு எங்களைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் அது.' அதே சிரிப்புடன் வந்தது பதில்.<BR/><BR/>'உங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கிறோம். சம்மதித்தால் சொல்லி அனுப்புவோம்' என்றார் பாலசிங்கம். <BR/><BR/>இரண்டுநாள் கழித்து, 'பிரபாகரனுக்கு என்னை சந்திக்க நேரமில்லை' என்ற தகவல் வந்தபோது எனக்கு வியப்பேற்படவில்லை. <BR/><BR/>"யாழ்ப்பாணத்தில் நான் கால் வைத்த அடுத்த இருதினங்களில் பிபிஸி ஆனந்தி வந்து சேர்ந்திருந்தார். புலிகளுக்கு இணக்கமான அவருக்கு பிரபாகரன் விரிவான ஒரு பேட்டி அளித்தார். நான் இந்தியா திரும்புகையில் அது தினமணியில் ஏக விளம்பரத்துடன் பிரசுரமாயிற்று."<BR/><BR/>டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஆக, பிரபாகரனை சந்திக்க முழு முயற்சியும் மேற்கொண்டார் வாஸந்தி அவர்கள் என்பது வெள்ளிடைமலை. பிரபாகரன் அவரை சந்திக்க பயந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.<BR/><BR/>"எனது தோல்வியைச் சுட்டிக்காட்டுவதுபோல. பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின."<BR/><BR/>டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது:<BR/>தன்னுடைய முடிவுகளுக்கு காரணம்தான் கீழே கொடுக்கிறாரே வாஸந்தி அவர்கள்.<BR/><BR/>"புலிகளின் பார்வையும் செவியும் எங்கும் வியாபித்தன. அவர்களுடைய அனுமதியில்லாமல் யாரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற முடியாது. பலரின் வீடுகள், நிலங்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டில் குடியேற நினைத்தவர்கள், பல லட்சங்கள் இயக்கத்துக்குக் கொடுத்தால்தான் செல்ல முடியும். கொழும்பில் பாதிக் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் பாதிக் குடும்பமுமாக அல்லல்பட்டவர்கள் ஏராளம். இரவோடு இரவாகப் பல முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பல தமிழர்களால் ஏற்க முடியவில்லை. பீதியுடன் அக்கம் பக்கம் பார்த்து ஒருவர் சொன்னார். "இவங்களை விட்டா இப்ப எங்களுக்கு வேற வழியில்லே என்கிற காரணத்தாலே பேசாம இருக்கோம்."<BR/><BR/>"கொழும்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி காலை உணவிற்கு என்னை அழைத்து உபசரித்தது நேற்று போல் இருக்கிறது. 'சமாதானம் வருவதில் நிறைய சிரமங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்' என்றார் சிவத்தம்பி. 'நீண்ட காலமாக நடந்த போரில் இலக்கு புலிகள் என்றாலும் அடிபட்டது பொதுமக்கள். சமாதானப் பேச்சில் புலிகளுக்கு என்ன வேண்டும் என்பது பிரச்னையில்லை. இந்த நாட்டின் அரசியல் சட்ட சாஸனத்தில் தமிழர்களின் நிலை என்ன என்பதுதான் கேள்வி.' <BR/><BR/>உள்ளத்தில் எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கலக்கம் இருந்தாலும், அவரும் அவரது மனைவியும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் ஆயுளுக்கும் மறக்காது. நான் கிளம்பும்போது அவரது மனைவி மாடியிலிருந்து என்னுடன் கீழ் இறங்கினார். என் கைகளைப் பற்றி பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார். 'யாழ்ப்பாணத்துக்குப் போக இயலாது. வயசுப் பெண்ணையோ மகனையோ அங்க அனுப்ப இயலாது. ஏனெண்டா அங்கு போனா அவன்களாலெ திரும்பி வர இயலாது. விடிவு காலம் எப்ப வருமோ ஈசுவரா எண்டு இருக்கு.' எனக்கு அடிவயிற்றைக் கலக்கிற்று. யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத தன் துயரத்தை என்னிடம் இறக்கிவிட்ட நிம்மதியில் அவர் எனக்கு விடைகொடுத்த காட்சி, இன்னும் கனமாக இதயத்துள் அமர்ந்திருக்கிறது."<BR/><BR/>டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: தன் பிள்ளைகளை பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு ஊரார் பிள்ளைகளுக்கு பெல்ட்பாம் கட்டும் இயக்கத்தின் தலைவனை கண்டு அவ்வளவு பயம் பொது மக்களுக்கு.<BR/><BR/>இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-1142088438866681392006-03-11T09:47:00.000-05:002006-03-11T09:47:00.000-05:00சசி,மிக நல்ல பதிவு (இதைக்கேட்டுக்கேட்டு உங்களுக்கு...சசி,<BR/><BR/>மிக நல்ல பதிவு (இதைக்கேட்டுக்கேட்டு உங்களுக்கு புளித்துப்போய்விட்டிருக்கக்கூடும்:-) ஊடகங்கள் அவர்களுடைய அனைத்து கிம்மிக்குகளையும் போன தேர்தலிலேயே விற்றுவிட்டார்கள் என்பதால் எந்தப் புதிய உத்தியையும் எதிர்பார்க்கமுடியாது!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com