tag:blogger.com,1999:blog-6148241.post2856684892371111370..comments2023-08-13T04:22:56.556-04:00Comments on சசியின் டைரி: போதுமடா இந்த ஈழப் போராட்டம்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-6148241.post-71207652479036912972009-05-12T17:56:00.000-04:002009-05-12T17:56:00.000-04:00Dear Sasi:
There is only thing I want to say.
"Yo...Dear Sasi:<br /><br />There is only thing I want to say.<br />"You wrote supporting humanity". You must have enormous courage to write this blog.<br /><br />I am FOR Tamil Eelam, but to be frank very disappointed with the approach of LTTE. <br />My view has always been that LTTE never ever believed in "Political Aspects" and they only depended upon "Military" Victories. Some of the actions of LTTE gave victory on platter to SL. The fact SL was commiting Genocide went to background and LTTE got the name of terrorist. If they had good political team, they would have projected the truth about SL. Simply put the DRAVIDIAN brain power to spread the TRUTH was never utilized. I am totally shocked to the core of my being, that a slaughter is going unquestioned. So much could have been done by propoganda of the truth<br /><br />KrishnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-54024954180222457152009-05-12T09:48:00.000-04:002009-05-12T09:48:00.000-04:00letter to Tamil Diaspora,....& Sinhala people
...letter to Tamil Diaspora,....& Sinhala people<br /><br />Hello Sinhala speaking friends, People, and their leaders <br /><br />Why I am writing this to you…<br /><br />I just want share my thoughts, feeling, and emotions …<br /><br />http://www.facebook.com/note.php?note_id=76683638999&ref=nf<br /><br />Hello Tamil Diaspora, international community and everyone,<br />I have something to tell or discuss with you...<br /><br />http://www.facebook.com/home.php?ref=home#/note.php?note_id=74958408999&ref=nfmeerabharathyhttp://www.awakeningawareness.org/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-84989950071294233372009-05-12T05:07:00.000-04:002009-05-12T05:07:00.000-04:00உங்கள் பதிவு படித்தேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இ...உங்கள் பதிவு படித்தேன்.<br />ஆறு மாதங்களுக்கு முன்பு இருக்கலாம் எனக்கு தெரிந்தவர் ஒருவர் சொன்ன செய்தி ஒன்றைச் சொல்கிறேன்.<br />இலங்கை ராணுவம் மன்னாரிலிருந்து உள்நுளைந்த போது இடம் பெயர்ந்த ஒரு குடும்பம் தமது வயதான பாட்டியை விட்டுவந்து விட்டார்கள் என்று உணர்ந்து அந்தக் குடும்பத்தை சேர்ந்த இரு வாலிபர்களும் (இந்த வாலிபர்களுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கலாம்.)ஒரு வயதானவரும் வெள்ளைக் கொடியை பிடித்துக் கொண்டு தமது வீட்டுப் பக்கம் போனபோது இரு வாலிபர்களையும் இலங்கை ராணுவம் பிடித்து விட்டது. பாட்டியும் வயதானவரும் பின்பு தடுப்பு முகாமில் இருப்பதாக அந்தக் குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.<br />பிடிபட்ட இளைஞர்கள் போராளிகள் அல்ல.விடுதலை புலி உறுப்பினரல்ல <br />ஆனால் புலம்பெயர்ந்து இருந்த அவரின் உறவினர்கள் திரும்பவும் அந்த இளைஞர்களைப் பார்த்தது இலங்கை அரசின் பாதுக்காப்பு இணையத்தளத்தில் .<br />அங்கு அவர்கள் புலிகளின் சீருடைகளுடன் காணப்பாடார்கள் ,அவர்களுக்கு கீழே அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் ,ராணுவத்திடம் சரணடைந்து விட்டார்கள் என்றும் தங்களை புலிகள் பலவந்தமாக இணைத்துக் கொண்டார்கள் என்று வாக்கு மூலம் கொடுத்ததாகவும் தகவல் இருந்தது.<br />இது எனக்குத் தெரிந்த ஒரு உதாரணம்.இது மாதிரித்தான் இன்னும் பல வாக்கு மூலங்கள் இருக்கும் என நினைக்கிறேன் <br />போரின் உக்கிரத்தினால் புலிகள் சில தவறுகள் செய்திருக்கலாம் <br />ஆனால் மிகப் பெரிய தவறு செய்கிற இலங்கை அரசு ,அவர்களுக்கு உதவும் இந்திய அரசு ,மற்றைய உலகநாடுகள் ,கண்மூடி ஒன்றும் செய்யாமல் ஐநா அமைப்பு போன்றவைதான் இன்றைய தமிழரின் கொலைகளுக்கு காரணம்.arulnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-80643270458108064002009-05-12T04:37:00.000-04:002009-05-12T04:37:00.000-04:00உங்களிடமிருந்து இந்தப் பதிவை நான் எதிர்பார்க்கவில்...உங்களிடமிருந்து இந்தப் பதிவை நான் எதிர்பார்க்கவில்லை.<br />.<br />தமிழ் ஈழ மாநாடு கூட்டி ,காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டிய திருமாவளவன் இன்று ,சோனியாவிடம் இறைந்து ஒரே மேடையில் இருந்து உயிர் பிச்சை போடுங்கள் தாயே என்று கெஞ்சியதைக் கேள்விப்பட்டு மனம் வெறுத்துப் போய் இருந்த போது உங்கள் பதிவை வாசித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.<br /><br />வழக்கமாக அறிவுபூர்வமாக விவாதம் செய்யும் நீங்கள் வெறுமனே 'நம்பகரமான 'வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாக கூறி விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள் <br />எட்டு மாதங்களுக்கு முன்பே தொண்டு நிறுவனங்களையும் ,சுதந்திர ஊடகங்களையும் மனித உரிமை அமைப்புக்களையும் ஐநா நிறுவனங்களையும் இலங்கை அரசு வன்னியில் இருந்து வெளி ஏற்றியது ,கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஊடகர்களையும் மற்றவர்களையும் தங்கள் பகுதிக்குள் வருமாறு புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் தனது ஒவ்வொரு பேட்டியிலும் கேட்டுக் கொண்டே இருந்தார்.<br />ஆனால் இலங்கை அரசு ஊடகர்களை விடாமல் தடுத்தது உங்களுக்கே தெரியும். <br />புலிகளின் பகுதியில் ஊடகர்களும் மனித உரிமை அமைப்புக்களும் உள்ளே இருந்திருந்தால் அங்கு நடப்பது என்னவென்று நேரடியாகவே தெரிந்து இருக்கும்.<br />இங்கு உண்மையை மறைக்க முயல்வது இலங்கை அரசுதானே.!<br />அப்படி ஊடகர்கள் அந்தப் பகுதியில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வது மாதிரி நம்பகரமான தகவல் என்று பூடகமாகச் சொல்லத் தேவை இல்லை. நேரடியாகவே உண்மையைத் தெரிந்து கொண்டிருக்கலாம். <br />உலக நாடுகளாலும் ஐநா சபையாலும் அங்கீகாரம் செய்யப் பட்ட ஒரு நாடான இலங்கை எல்லா சர்வ தேச விதிகளுக்கு எதிராகவும் ஒரு போரை நடத்திக் கொண்டு இருக்கிறது <br />சுதந்திரம் கேட்ட மக்களை கோரமான போர் செய்து அடக்குகிறார்கள்.<br />நீங்கள் சுதந்திரம் கேட்டவர்களை குற்றம் சொல்கிறீர்கள்.sivakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-5171659416936004792009-05-12T03:23:00.000-04:002009-05-12T03:23:00.000-04:00கொஞ்சம் யோசித்து பாருங்கள்- இலங்கையில் போரை நிறுத்...கொஞ்சம் யோசித்து பாருங்கள்- இலங்கையில் போரை நிறுத்தவில்லை என்றால் தமிழகத்தில் பெரும்பன்மையான இடங்களில் தோற்போம், தோற்றால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தும் ஒரு அரசியல் கட்சி இலங்கையில் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்குமா? ஆளுவதுதான் எந்த அரசியல் கட்சிக்கும் raison d'etre. காங்கிரஸ் அமைதியாக இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. ஒரு சிறு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு எல்லோரும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தியா ஈழப் பிரச்சனையை கையாண்ட விதம் சரியா தவறா என்று வரலாறு தான் பதில் சொல்ல வேண்டும். சோனியா பழி தீர்த்துக்கொள்கிறார் என்பது மிகவும் குழந்தைத்தனமான வாதம். காங்கிரஸ் ஒரு மிக பெரிய கட்சி அதை நம்பி ஒரு பெரிய கூட்டணியும் இருக்கிறது, பல பேருடைய அரசியல் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது சோனியா is just a face to catch votes. That is her only mandate. Period.Rajasekaranhttps://www.blogger.com/profile/15296674429152081083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-5251707904278439222009-05-12T02:20:00.000-04:002009-05-12T02:20:00.000-04:00////மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ...////மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல. <br />//<br /><br /><br />சசி,<br /><br />இது உங்களுக்கு சமீப காலத்தில் தான் புரிந்திருக்கிறது. எம்மை போன்றவர்களுக்கு பல பல ஆண்டுகளுக்கு<br />முன்பே இது தெளிவாகிவிட்டது. Disilusionment என்றால் என்ன என்று அறிந்து கொண்டோம்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-50478004689407541402009-05-11T18:00:00.000-04:002009-05-11T18:00:00.000-04:00//மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’ந...//மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல. <br />//<br /><br />Yea your dad found the proof right.. MORONAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-80086616926622896482009-05-11T17:58:00.000-04:002009-05-11T17:58:00.000-04:00//தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன...//தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி//<br /><br />WTF? My mom is still there and I know the truth more than you if tigers using the cilivians like that or not. <br /><br />Its the people decide what should they do and no one is holding them. <br /><br />U R such a JERK... <br /><br />If you are SL Tamil then here you go for my reply: You failed to do ur duty as we failed to do ours for the country. You dont even feel guilt for that and BS-ing here. DAMN it. <br /><br />If you are Indian Tamil:<br />SHUT UR TRAP & GET LOST. YOU HAVE NO RIGHTS TO POKE UR STINKY NOSE IN OUR ISSUES.<br /><br />Its ur government is TOTALLY responsible for the fucked up situation now. <br /><br />//20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். //<br /><br />Ya right. You made the argeement right. MY FOOT!!!!!<br /><br />//ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. //<br /><br />Do you feel the pain than we feel. MY FOOT..<br /><br />Neeli kanneer vadikamal, just shut ur trap. <br /><br />PS:- U may not post this comment. I just want to reply you. Thats enough.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-38715423607495788532009-05-11T17:54:00.000-04:002009-05-11T17:54:00.000-04:00சசி,
உங்களின் உணர்வுகள் புரிகின்றன. ஒரேநாளில் ஆயி...சசி,<br /><br />உங்களின் உணர்வுகள் புரிகின்றன. ஒரேநாளில் ஆயிரம் பேர் ஈவுஇரக்கமின்றிக் கொல்லப்பட்டுக் கிடக்கையில் மனம் பதறுகிறதுதான். விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை அக்கறையோடும், நடுநிலையோடும் கவனித்துவருகிற பலருக்குமேகூட உண்டுதான். ஆனால் இந்த விடுதலைப் போராட்டமே இத்தோடு நின்று போகட்டும் என நினைக்குமளவு உங்களுக்குத் தளர்ச்சி ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.<br /><br />ஈழம்சார்ந்த உங்களின் அத்தனை இடுகைகளையும் தவறாது படித்து வந்தவள் என்ற முறையில் இப்பதிவு எனக்கு ஏமாற்றம் தந்தது. ஏனெனில் அவற்றிலெல்லாம் இருந்த உங்களின் தெளிவும், கூர்மையும் இதில் இல்லை.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-53702128291201595522009-05-11T17:43:00.000-04:002009-05-11T17:43:00.000-04:00அப்பப்பா! தமிழ்சசிக்கு தலை சுற்றுகிறதோ இல்லையோ! என...அப்பப்பா! தமிழ்சசிக்கு தலை சுற்றுகிறதோ இல்லையோ! எனக்கு தலை சுற்றுகிறது!<br /><br />இத்தனை பதிவுகளையும் வாசித்து அதற்கு ஒரு பதில் எழுதுவது என்பது ஒரு பாரிய பொறுப்பு! நியாயமோ நியாயமில்லையோ! பல பல கருத்துக்கள் வருவது நல்லதே! இதில் நானும் சிலவற்றைச் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன்!<br /><br />1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் <br />1988 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பினர் பதவிகளைத் துறக்காமல் நியாயமாகப் போராடியிருக்கலாம்.<br />1990களின் பின் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாச அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமயத்தில் தமக்காக ஒரு அரசியல் கட்சியை இலங்கை அரச தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்தவர்கள் அரசியல் நீரோட்டத்திற்கு வந்து மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். <br /><br />உங்கள் பதிவில் கருத்துச் சொல்லிய வானதி என நினைக்கின்றேன் - பதவி பணம் என்று சோரம் போகாமல் என்று குறிப்பிட்டீருந்தார். <br />சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறிது விட்டுக் கொடுத்திருந்தால் இன்றைய இந்நிலை ஏற்பட்டிருக்காது. <br />முழு அதிகாரமும் தமக்கு வேண்டும் என்று தான் எல்லாச் சந்தர்ப்பத்திலும் முட்டுக்கட்டையாக இருந்தார்கள்! <br />மேலும் சமாதான காலத்தில் முகமாலைச் சோதனைச் சாவடியிலும் தாண்டிக்குளம் சோதனைச் சாவடியிலும் மக்கள் ஏன் நானுட்பட - சிங்களவனிடம் உடல் பொருள் பரிசோதனைக்காகவும் - இங்கு மறுபுறம் பொருள் பரிசோதனை (இந்தியா ருடே பத்திரிகையிலிருந்த ஒரு கட்டுரைக்காக நான் 2 மணி நேரத்துக்குமேல் விசாரணை செய்யப்பட்டேன்) கொண்டுபோகும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி – எமது பகுதிக்குள்ளே நுழைவதற்கு அனுமதி பாஸ் நடைமுறை ஏன் இன்று மக்கள் வெளியே வர முடியாமலிருப்பதே இந்த பாஸ் நடைமுறைதான் முழுப் பிரச்சனையே!<br /><br />அரச அலுவலருக்கு சம்பளமும் எல்லாப் பொருட்களும் வருவது வெளியிலிருந்து அவர்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து அதிகாரம் பண்ணியது யார்? <br /><br />ஒன்று மட்டும் ஒரு முட்டாள் தனமான வேலை – நாட்டுப் பிரச்சனை தீர்க்க முன்னரே! தனி நீதி மன்றம் - காவல் நிலையம் - அடையாள அட்டை விநியோகம் - வைப்பகம் - இங்கு வைப்பிலிட்ட பணத்திற்கு என்ன நடந்தது! <br /><br />பிபிசியில் மக்கள் சொல்வது புரியவில்லையா?<br /><br />நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் - ஆயுதம் எடுத்தவர்கள் ஒரு நேரத்தில் ஒரு தீர்வுக்கு வரவேண்டும். ஆனால் நாம் பேச்சுவார்த்தை என்று சொல்லிச் சொல்லி ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமே கொண்டோம். இதற்கு அரசும் புலிகளும் உடந்தை. இன்று எமது போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று உலகில் அங்கீகரிக்கப்பட்டது ஒன்றே மிச்சம்.<br /><br />மக்களுக்காக இன்றைய யுத்தம் நடைபெறவில்லை! தனது ஆட்சி அதிகாரத்துக்கு இரு தரப்பும் நியாய தர்மங்களை மீறி கொலைத் தாண்டவம் புரிகின்றனர். உலகம் அமைதி பேணுகிறது!<br /><br />2002ல் இருந்து நோர்வே மத்தியத்தத்துடன் ஏதாவதொரு முடிவை எட்டியிருக்கலாம் சுவிற்சர்லாந்து அரசியலமைப்பு முறை படிக்க இரு தரப்பும் வந்தனர். ஆனால் நடந்தது – மாவிலாறு அணைக்கட்டை மூடியதுடன் தொடங்கியது இந்தப் போரும் அனைத்து அழிவும். <br /><br />நாம் மன நிம்மதியின்றி மக்களுக்காக என்ன செய்வதென தெரியாது மண்டையைப் பிய்த்துக் கொண்டு விசரராகியது தான் மிச்சம்.<br /><br />இங்கு எனது நண்பர் ஒருவர் சொல்லியது – புலிகள் பின்வாங்கும்போது மக்களை சொந்த இடங்களில் இருக்கவிட்டுவிட்டுப் போயிருக்கலாம் என்று! அப்படிப் போயிருந்தால் வயோதிபர்கள் - பெண்கள் - சிறிய குழந்தைகள் இவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் - ஆனால் எல்லோரையும் தங்களோடு அழைத்துச் சென்று இன்று அநியாயமாகப் பலியாக்கியதுதான் அவர்கள் செய்த வேலை என்று.<br /><br />இப்போதும் தாக்குதல்களை நிறுத்திவிட்டு மக்களுக்காக எதையும் செய்யச் சந்தர்ப்பம் இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் தாக்குவதையும் - மக்கள் கொல்லப்பட்டதையும் - வீதிகளில் மக்கள் ஓடுவதையும் - காயப்பட்டவர்களையும் ஒளிப்பதிவு (வீடியோ) பண்ணி தமக்கு ஆதரவு தேடுவதிலல்லவா இன்றைய நிலையிருக்கிறது. சில ஒளிப்பதிவுகளில் மக்கள் இவர்களைத் திட்டித் தீர்ப்பதும் கேட்கிறது! இது சிலருக்கு கோபத்தைத் தரும். ஆனால் யதார்த்தத்தை உணர்ந்து அப்பாவி மக்களுக்காக அவர்களைக் காப்பாற்ற ஏதாவது செய்வதுதான் இன்றைய உடனடித் தேவை!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-91496351817483944612009-05-11T17:07:00.000-04:002009-05-11T17:07:00.000-04:00உங்களின பதிவிற்கு பதிலாக ஒரு பதிவே எழுதியிருக்கிறே...உங்களின பதிவிற்கு பதிலாக ஒரு பதிவே எழுதியிருக்கிறேன். நேரகிருந்தால் பார்க்கவும்<br /><br />http://vetrithirumalai.blogspot.com/2009/05/blog-post_11.htmlVetri Thirumalaihttps://www.blogger.com/profile/13524227137108422677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-9059056510367221162009-05-11T15:38:00.000-04:002009-05-11T15:38:00.000-04:00You are entitled to your opinion,
However by blam...You are entitled to your opinion,<br /><br />However by blaming tigers for the Tamil suffering, you have fallen into the trap of srilankan govt's propaganda.<br />I am not saying that tigers are beyond criticism,but you have to accept that people who are imprisoned at the camps by the srilankan govt are at the mercy of the srilankan army and there are offices of paramilitiary groups at the camps who are terrorising people at the camps.<br />if any one tell the truth to the journalist ,their fate will be sealed immediately and their life will be endangered. <br /><br />I don't think Tamils can live with the Sinhalese any more ,the scars are too deep .<br /><br />Srilankan govt is carrying out this war (with the help of Indian govt)to crush the Tamil rebellion for freedom.<br /><br />sinhala state is asking for subjugatin and surrender of tamils by depriviing them of food and medicine and killing them mercileesly.<br />By asking the tamil to surrender ,you are legitimising the Srilankan state's brutal war .<br />you are blaming the victim ratherthan the perpetrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-89124708120483077862009-05-11T15:27:00.000-04:002009-05-11T15:27:00.000-04:00வணக்கம் சசி,
உணர்வுகள் பொங்கிப் பிராவகிக்கும் போது...வணக்கம் சசி,<br />உணர்வுகள் பொங்கிப் பிராவகிக்கும் போது சரியானதென தோன்றும் கருத்துகள் எல்லாம் சரியானதல்ல...ஆனாலும் உங்கள் கருத்துகள் பலவற்றில் நானும் உடன்படுகிறேன்.<br />உங்களைப்போலவே நானும் சிந்தித்த நேரத்தில் நான் பதிவெழுத முனையவில்லை, காரணம் அப்பதிவு நிச்சயம் சரியான விதத்தில் எமது போராட்டத்தினை முன்னெடுக்கும் மிகச்சொற்பமான மக்கள் நம்பிக்கைகளுக்கு "எதிர்மறையான" திசையில் பயணித்து அவர்கள் ஓர்மத்தினை மழுங்கடித்துவிடும் என்பதனாலேயே.<br /><br />//ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான். //<br /><br />நிச்சயம் ஒத்துக்கொள்கிறேன். காரணமாக நீங்கள் சொன்ன விடயமும் சரியானதே.<br /><br />//எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும்.//<br />அருமையாக கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தொலைத்ததன் பயனை இன்று அனுபவிக்கின்றோம். அதற்காக சிங்கள அரசு தமிழரிற்கு எல்லாம் தாம்பாளத்தில் வைத்து தரும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக அவர்களினை சர்வதேச நாடுகளின் முன் அம்பலப்படுத்தி எமது உரிமைப்போராட்டத்தினை ச்ர்வதேச அதரவுடன் தொடர்ந்திருக்கலாம். எனது அறிவுக்கெட்டியவரை ராணுவ ரீதியாக" விட்டுப்பிடிக்க" நினைத்ததை அரசியல் ரீதியாக விட்டுப் பிடித்திருக்கலாமோ??? என்றே என் மனம் அங்கலாய்க்கிறது. <br /><br />//இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.//<br /><br />100% உண்மையான கூற்று...தோல்வியின் விளிம்பில் நின்றுங்கூட அவர்களின் அடிபணிய மறுக்கும் நெஞ்சுரம்...<br />இந்த ஒன்று தான் இன்று வரை அரசுடன் சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிகளினை (??) நான் கேவலமாகப் பார்ப்பதன் காரணம். அதுமட்டுமல்ல இவர்கள் தமிழ்மக்களின் ஆதரவினை பெற முயற்சிக்காமல் "தங்களுக்கென" என ஒரு வட்டத்தினை போட்டுக்கொண்டு அதற்குள்ளிருந்து சிங்கியடித்தது தான். (மன்னிக்கோனும் எங்கோ போறன் போல இருக்கு...ஆனாலும் இதயும் மனசில வைக்கவேணும் என்டதால தான் )<br />சிங்கள அரச இயந்திரங்களை எதிர்த்து மண்டியிடாது போரிட்ட அனைவருமே என்னப்பொறுத்தவரை இலட்சிய வீரர்கள் தான். அவர்கள் கனவுகளுக்ககவும் போரில் அநியாயமாக இறந்த அப்பாவி மக்களுக்காகவும் மட்டுமே இன்றும் ஈழப்போரை ஆதரிக்கிறேன்....கைவிடுதலினை ஆதரிக்கவும் மனம் ஒப்புதில்லை. <br /><br />போராட்டத்தின் போக்கைக் கூட களத்தில் இருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தப்பியோடி வந்து பதிவெழுதுற நாமல்ல...என்பது என் தாழ்மையான எண்ணம்.<br /><br />//விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.///<br /><br />மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...அவர்கள் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்...அரசியல் பலவீனம் தொடர்ந்தும் அவர்களை வேட்டையாடிக்கொண்டு வருகிறது.<br /><br />// இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//<br /><br />தனிஈழப் போராட்டத்தினை கூட அரசியல் ரீதியிலான போராட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.<br />பி.கு: இதை வாசிக்கும் போதே தெரிந்திருக்கும் நான் ஒன்றும் புத்திஜீவியல்ல என்பது....சாதாரனமாக எனக்குத் தோன்றியதையே எழுதினேன்...<br /><br />நன்றி.பாரதி.சுhttps://www.blogger.com/profile/06623411598893868788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-5401310760298404752009-05-11T15:03:00.000-04:002009-05-11T15:03:00.000-04:00நல்ல பதிவிருக்கு நன்றி,
இனி ஈழப் போராட்டம் என்பது...நல்ல பதிவிருக்கு நன்றி,<br /><br />இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்!!!.<br /><br />அரசியல் போராட்டம் சத்தியம் என்று நம்புரீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-8430791255214028192009-05-11T15:00:00.000-04:002009-05-11T15:00:00.000-04:00திமுகவின் சமரசமும் திருமாவின் சந்தர்ப்பவாதமும் சசி...திமுகவின் சமரசமும் திருமாவின் சந்தர்ப்பவாதமும் சசியிடம் குடியேறிவிட்டன. இனி என்ன சொல்ல?<br /><br />வேண்டும் மாற்றம் என்றவரிடம் ஏனிந்த (தடு)மாற்றம்?ராம கிருஷ்ணன்https://www.blogger.com/profile/17935974536725061146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-39656317120025761432009-05-11T14:51:00.000-04:002009-05-11T14:51:00.000-04:00sasi, eaan ippadi ungalai maatriyathu pool ellarum...sasi, eaan ippadi ungalai maatriyathu pool ellarum maattrathan inta poorattam ivvalavu veriyoodu tamillarkalai kollukirathu enpathi neengal eaan purithu kollavillai. makkalai alithal pulikaluku aatharavau kuraiyum enpatharkkakave ithu nadakkirathu endu neengal ariya villaiya. <br />IPPADI NEENGAL SALITHATHU POOLA SALIPADAYAVE INHTA POORATAM. IPPOTHU THERUKU VARUM IVARKAL EAAN 80% VAITHRIUKKUM POOTHU VRAVILLAI?. KOLAIVERIYOODU EMMAI ALIKIRARKAL ENPATHAI UNARTHU KOLLUNGAL.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-12578974431554784152009-05-11T14:30:00.000-04:002009-05-11T14:30:00.000-04:00//சசிக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை க...//சசிக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.<br />ஜெயலலிதாவுக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.- siva//<br /><br />மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு சசி யதார்த்தத்தை உணர்ந்து கொண்டார். சசி ஒரு Gentleman.ஆனால் ஜெயலலிதா தனது அரசியல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறார். ஜெயலலிதா இலங்கை தமிழர் துன்பத்தை வைத்து அரசியல் செய்பவர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-10442187465989832742009-05-11T12:57:00.000-04:002009-05-11T12:57:00.000-04:00போதுமடா இந்த பாலஸ்தீன போராட்டம், போதுமடா திபெத்திய...போதுமடா இந்த பாலஸ்தீன போராட்டம், போதுமடா திபெத்திய போராட்டம், போதுமடா பர்மிய சுதந்திரத்திற்கான போராட்டம்....இப்படி போதுமடா என்று புலம்பிக் கொண்டே இருக்கலாம்.<br /><br />Defeat is an orphan என்று சொல்வது எத்தனை உண்மை!<br /><br />விடுதலைப் புலிகள் மீது பல ஆண்டுகளாக எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் தற்பொழுது மனதின் விரக்தியை தணிக்கிறேன் என்ற பெயரில், மக்களின் அவலத்திற்கு அவர்கள்தான் காரணம் என்று கட்டுரை எழுதுவது எதிர்மறையான விளைவையே ஏற்ப்படுத்தும்.<br /><br />குர்து மக்கள் மீதும், தன்னை எதிர்த்தவர்கள் மீதும் சதாம் நடத்திய கொடுமைகள் நாம் அறிந்ததே...அதற்காக, சதாமை ஒழிக்கிறேன் பேர்வழி என்று அமெரிக்கா ஈராக மக்களை கொன்று குவித்ததை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?<br /><br />இதனை எழுதியதற்கு ஒரு கவிதையை எழுதி மனதின் ஆற்றாமையை தணித்திருக்கலாம்.<br /><br />விமர்சனங்களுக்கான நேரமல்ல இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-5917274572365778782009-05-11T12:24:00.000-04:002009-05-11T12:24:00.000-04:00//இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான...//இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//<br /><br />Sasi, with this write, I must inform you of the decision on the Eelam wars is totally right. <br />You are a man like others and myself. So we refuse this unnecessary war-blind! <br /><br />Sasi, Tamileelam is over. <br /><br />Broken LTTE was all done, about everything! <br /><br />Yours sincerely, <br /><br />P.V.Sri ranganSri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-40572035736882999462009-05-11T12:22:00.000-04:002009-05-11T12:22:00.000-04:00It's very hard to accept. But this 100% correct. A...It's very hard to accept. But this 100% correct. A transparent post from a painful heart.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-86414516546212193752009-05-11T11:21:00.000-04:002009-05-11T11:21:00.000-04:00so ,sasi !
you are leaving the sinking ship.
but t...so ,sasi !<br />you are leaving the sinking ship.<br />but the time you decided to leave it is regrettable.<br />I thought you would stick with eelam struggle through thick and thin.<br />although I respect your concern about massive civillian death,<br />I don't accept your opinion that eelam struggle should be given up.<br />it will go on,but the form of struggle will change.sennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-38618468362812283572009-05-11T10:45:00.000-04:002009-05-11T10:45:00.000-04:00ஈழப் போராட்டத்தை அன்று ஆதரித்த சசி இன்று ஈழப்போராட...ஈழப் போராட்டத்தை அன்று ஆதரித்த சசி இன்று ஈழப்போராட்டம் வேண்டாம் என்கிறார். <br />அதைக் கேட்டு இந்திய தேசிய வாதிகளும் ,மகிந்தவின் மாதச் சம்பளத்தில் இருப்பவர்களும் மகிழ்வுடன் துள்ளுகிறார்கள்.<br />அன்று ஈழப் போராட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா இன்று தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் என்கிறார்..<br />சசிக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.<br />ஜெயலலிதாவுக்கு ஞானம் வந்ததும் மக்களுக்கு வந்த அவலத்தை கண்டு.<br />எல்லாம் காலத்தின் கோலம்தான்.sivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-718241648268451042009-05-11T10:14:00.001-04:002009-05-11T10:14:00.001-04:00சசி
தங்களது பதிவும் அனைத்து பின்னூட்டங்களையும் பட...சசி<br /><br />தங்களது பதிவும் அனைத்து பின்னூட்டங்களையும் படித்தேன். <br /><br />உங்கள மன உணர்வுகளை நான் நன்கு உணருகிறேன். <br /><br />"வாழ்க்கைப் பாதையில் என் கருத்தக்கள் மாற்றம் பெறலாம். தெளிவு பெறலாம். குழம்பியும் போகலாம். நாளைக்கே வேறு கருத்துக்கு நான் வந்தடையலாம். அது எனது வாழ்க்கை எனக்கு தரும் பாடம். அனுபவம். அவ்வளவு தான்.... முழுக்க முழுக்க உண்மை....<br /><br />ஆனால் இந்த பதிவுன் யாதர்த்தம் உண்மையாக இருப்பதால் மனம் மிகுந்த மனம் வருத்த படுகிறது! <br /><br />நீங்கள் சொல்வது போல ஈழம் வாங்கி மக்களே இல்லாமல் போய்விட்டால்?!<br /><br />இந்திய தேர்தலுக்கு பிறகு வேறு என்னென்ன கூத்து நடக்க போவதோ?!<br /><br />நன்றி சசி<br /><br />மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-85736311249801796332009-05-11T10:13:00.000-04:002009-05-11T10:13:00.000-04:00ஆர்மி ஏரியாவுக்கு வந்திட்டு புலிகளப் பத்தி புகழ் ப...ஆர்மி ஏரியாவுக்கு வந்திட்டு புலிகளப் பத்தி புகழ் பாடிட்டா இருக்க முடியும். அவர்கள் நிர்பந்தங்களுக்கு ஏற்பத் தான் பேச முடியும். அதுவும் புலிகள் தடுத்து வச்சிருந்தாங்க எண்டு, தினமும் ஒரு தமிழ் மகன சொல்ல வச்சு ஒவ்வொரு நாளும் பிபிசி பார்ப்புல,ச்சே தமிழ்ல போட்ட தினமும் கேட்டு நம்பாதவனும் நம்பத் தான் செய்வான். இதுக்கு உளவியற் போர் எண்டு பேர். சொல்ல வேண்டியதில்ல. என் அம்மா, தம்பி, தந்தை புலிகள் ஏரியாவுல இருந்து தான் இப்ப அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்காங்க. யார் யார் எங்க தடுத்தாங்க எண்டு மக்கள் அறிவாங்க. இப்படி தொல்வி, பலிகள், பின்னடைவு எல்லாம் பார்த்து விரக்தி அடைய வச்சு எல்லாரையும் போதுமடா சாமி எண்டு சொல்ல வைக்கிறதும் ஒருவகையில போர் தானே.<br /><br />தமிழ் மக்கள் இத விட வலிகள், தோல்விகள் எல்லாம் பார்த்திருக்கோம். கூட்டங் கூட்டமாக கொல்லப் பட்டிருக்கோம். வெட்ட பட்டு, வன்புணரப் பட்டு, டாங்கிகளால நசுக்கப் பட்டு அழிக்கப் பட்டிருக்கோம், இந்தியன் ஆர்மி காலத்துல. எல்லாம் வரலாறு. அப்ப இணையம் இல்ல. நல்ல வேள அரசியல் திறனாய்வு எண்ட பேரில உங்களப் போல புலம்ப ஆக்களும் இல்ல. <br />போராடுறதா, கால்ல விழுறதா என்டதை அங்க போராடுற சக்திகளும்,<br />எல்லாப் உயிர்ப்பலிகளையும் தாங்கிக் கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்ற அவங்க கூட நிக்கற மக்களும் முடிவு பண்ணட்டும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6148241.post-57113890519102836452009-05-11T08:57:00.000-04:002009-05-11T08:57:00.000-04:00At last,someone is talking about China and it's ar...At last,someone is talking about China and it's arms supply to Srilanka! Ask Comrade Thaa Paandian and company for some explanation on this matter?Anonymousnoreply@blogger.com