tag:blogger.com,1999:blog-61482412024-03-13T13:48:52.182-04:00சசியின் டைரிதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger199125tag:blogger.com,1999:blog-6148241.post-39660304801823662592018-04-08T19:07:00.001-04:002018-04-08T19:12:05.452-04:00நெய்வேலி, கனிமவளச் சுரண்டல்… <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்தியத் தனியார் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கனிம வளச் சுரண்டலில் இந்தியாவெங்கும் ஈடுபட்டு வருகின்றன. கனிம வளங்களைச் சுரண்டத் தோண்டப்படும் சுரங்கங்களும் (Mining), பிராக்கிங் (Fracking) போன்றவை எந்தப் பெரிய தொழில்வளர்ச்சியையும் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெரிய அளவில் இயந்திரமயமாக்கப்பட்ட பிராக்கிங், சுரங்கங்கள் போன்றவை அதிக அளவில் வேலைவாய்ப்புகளைக் கொடுப்பதில்லை. பெரும் சூழலியல் கேடுகளை ஏற்படுத்தும் கனிம வளச் சுரண்டல் அதனை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கே லாபம் கொடுக்கக்கூடியவை. சாமானிய மக்களின் வாழ்க்கை மேம்படுத்த எந்த விதப் பெரிய வேலைவாய்ப்புகளையும், பொருளாதார மேம்பாட்டினையும் கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள் அளிப்பதில்லை. இவை உலகெங்கும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், கனிம வளங்கள் சுரண்டப்படும் நெய்வேலியிலும் இது நிருபிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இந்தியா, தன்னுடைய சந்தையைத் தாராளமயமாக்கிய சூழலில் நிறைய ஆட்டோமோபைல் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளும் தமிழகத்திலும், இந்தியாவின் பிற இடங்களிலும் நுழைந்தன. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் பல மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எதுவும் இருந்ததில்லை. தமிழகம் தொழில்துறையை வரவேற்கவே செய்தது. வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் பெருக வேண்டும் என்றால் தொழில்கள் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள் நமக்குத் தேவை. லட்சக்கணக்கானோர் இன்று தமிழகத்திலேயே பலத் தொழிற்ச்சாலைகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாணியாற்றி வருகிறார்கள்.<br />
<br />
ஆனால் தாரளமயமாக்கப்பட்ட சூழலில் இந்தியாவில் இருக்கின்ற கனிம வளங்களை ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் குறிவைத்தன. அதில் குறிப்பிடத்தக்கது வேதாந்தா நிறுவனம். காங்கிரஸ் கட்சியும், பாரதிய சனதா கட்சியும் இந்தக் கனிம வளத்தைச் சுரண்டும் நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் 2004ல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்தவர் ப.சிதம்பரம். வட இந்தியாவில் குறிப்பாகச் சட்டீல்சுகர், சார்க்கண்ட் போன்ற மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலங்களை இந்த நிறுவனங்கள் குறிவைத்தன. தற்போதைய பாரதீய சனதா கட்சி ஆட்சி, பிராக்கிங் மூலம் ஐட்ரோ கார்பன் சுரண்ட காவிரி டெல்டா உள்ளிட்ட பல இடங்களை இந்தியாவெங்கும் குறிவைத்துள்ளது.<br />
<br />
உண்மையில் கனிமவளச் சுரண்டலால் அப் பகுதி மக்களுக்கு நன்மை இருக்கிறதா? மக்களின் பொருளாதாரம் உயருகிறதா?<br />
<br />
<br />
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தை எடுத்துக் கொள்வோம். நெய்வேலி சுரங்கங்களையும், ஐட்ரோ கார்பன் போன்றவற்றை ஒப்பிட முடியாது என்றாலும் கனிம வளச் சுரண்டல், அதனைச் சார்ந்த பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் நெய்வேலியைச் சார்ந்து இங்கு எழுத முனைந்துள்ளேன். தவிரவும், தமிழகத்தின் முதல் மற்றும் இன்றளவும் முக்கியமான கனிம வளர்ச்சுரண்டல் என்றால் அது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரண்டல் தான். அதனால் நெய்வேலியைச் சார்ந்து இந்தப் பிரச்சனையை அணுகலாம் என்று தோன்றியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-dXxjfGfVQHc/WsqhuQLGQRI/AAAAAAAAD3I/ANXvF5dbUBo-seYBfWu2MZfZlnHAyVq3QCLcBGAs/s1600/NLC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="354" data-original-width="486" height="233" src="https://2.bp.blogspot.com/-dXxjfGfVQHc/WsqhuQLGQRI/AAAAAAAAD3I/ANXvF5dbUBo-seYBfWu2MZfZlnHAyVq3QCLcBGAs/s320/NLC.jpg" width="320" /></a></div>
<br />
கனிம வளங்கள், அந்த வளங்களைச் சுரண்டும் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் சுரங்கங்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் கேள்விக்குரியது. கனிம வளங்களைச் சுரண்ட சுரங்கங்கள் தோண்டும் பொழுது அந்தப் பகுதி மக்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சுரங்கங்கள் ஏற்படுத்தும் சூழலியல் கேடுகளால் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக அந்த இடம் படிப்படியாக மாறி விடுகிறது. நிலக்கரி முழுவதுமாகத் தோண்டி எடுக்கப்பட்ட பகுதிகள் வாழத் தகுதியற்றப் பகுதியாகவே நெய்வேலியில் இருக்கிறது. நிலக்கரிச் சுரங்கம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் சூழலில் பெரும்நிலப்பகுதிகள் இவ்வாறான பயனற்ற நிலங்களாக மாறி விடுகின்றன.<br />
<br />
பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை விழுங்கி தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்றைக்குச் சுமார் 15,000 பேர் மட்டுமே நேரடி தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சில ஆயிரம் பேர் இருப்பார்கள். நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடக்கும் சுரங்க மற்றும் மின் உற்பத்தி வேலைகளுக்குப் பெரிய அளவில் தொழிலாளர்களின் தேவை இல்லை. பொறியாளர்கள், அந்தத் துறையில் முன் அனுபவம் பெற்றவர்கள், அதனைச் சார்ந்த கல்வியறிவு கொண்டவர்கள் தான் இத்தகைய நிறுவனங்களின் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள். கட்டிடவேலைகள், ஓட்டுனர் வேலைகள் போன்றவை தான் அத் துறைச் சார்ந்த அனுபவம் இல்லாத மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள்.<br />
<br />
பெரும்பாலும், விவசாய நிலங்களைக் கைப்பற்றி அந்த நிலங்களில் இத்தகைய கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள், அந் நிறுவனத்தில் பணியாற்ற பிற இடங்களில் இருந்து தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். வெறும் விவசாயம் மட்டுமே அறிந்த அப்பகுதி மக்களுக்கு அதனால் பெரிய பாதிப்புகள் தான் ஏற்படுமே தவிர வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆரம்பகாலங்களில் பெயரளவுக்குக் கிடைக்கும் சில வேலைகள் கூடப் பிறகு அந் நிறுவனங்கள் தங்களைப் பலப்படுத்திக் கொண்டப்பிறகு தேவைப்படுவதில்லை. இதனால் கனிம வளங்களைச் சுரண்டும் நிறுவனங்கள் நிறையவேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற அறிவிப்புகளில் எந்த உண்மையும் இல்லை. நெய்வேலியை எடுத்துக் கொண்டால் கூட நிலம் எடுத்தவர்களுக்கு வேலை, இழப்பீடு என்பது இன்றைக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நிலம் எடுத்தாலும், வேலைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.<br />
<br />
இவ்வளவு பிரச்சனைகளை உள்ளடக்கிய சுரங்கங்கள் எந்தளவுக்கு உற்பத்தியையும், உபதொழில்களையும் கொடுக்கின்றன ?<br />
<br />
நெய்வேலியை எடுத்துக் கொண்டால் கூட இந்த அறுபது ஆண்டுகளில் நெய்வேலி தயாரிக்கும் மொத்த மின்சாரம் சுமார் 3000 மெகாவாட் மட்டுமே. ஆனால் ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பில் அமைந்துள்ள மேட்டூர் மின் நிலையம் சுமார் 1400மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. மேட்டூர், தூத்துக்குடி போன்ற மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அதனை விட மிகப் பெரிய நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்து சூழலியல் கேடுகளை விளைவிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரம் ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவு. ஆனால் நிலக்கரியை எடுக்க நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு நெய்வேலியைச் சுற்றிய பகுதி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த கடலூர் மாவட்டமும் மிகப் பெரிய சூழலியல் கேடுகளுடன் வாழ்ந்து வருகின்றது.<br />
<br />
இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் முதன்மையான சுரங்கம் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம். மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வருவாய் சுமார் எட்டாயிரம் கோடிகள். ஆண்டு லாபம் மட்டுமே சுமார் மூவாயிரம் கோடிகள். ஆனால் அப்படியான மிகப் பெரிய சுரங்கமும், நிறுவனமும் அமைந்த கடலூர் மாவட்டம் தான் தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. கனிம வளங்களைச் சுரண்டினால் வளம் கொழிக்கும், பொருளாதாரம் உயரும் என்றால் நெய்வேலியால் கடலூர் மாவட்டம் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டாமா ? வளர்ச்சி பெற்றது யார் ? தமிழகமும், தமிழக மக்களும் நெய்வேலியால் பெற்றது என்ன ? இழந்தது என்ன ? பெற்றதை விட இழந்ததே அதிகம்.<br />
<br />
சில புள்ளிவிபரங்கள்<br />
<br />
நெய்வேலியில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாராம் - சுமார் 3000 மெகாவாட் (இது பல மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. என்.எல்.சி நிறுவனம் நெய்வேலி தவிரப் பிற இடங்களிலும் மின்சாரம் தயாரிக்கிறது. அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை).<br />
<br />
தமிழக அரசு காற்றாலை மூலம் தயாரிக்கும் மின்சாரம் - 7,870 மெகாவாட் . இந்திய அளவில் தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடத்திலும், உலகளவில் தமிழகம் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது (<a href="https://goo.gl/u5vv8b" target="_blank">https://goo.gl/u5vv8b</a>). சூழலியலுக்குக் கேடு விளைவிக்காத காற்றாலை மின் உற்பத்தியில் உலகளவில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.<br />
<br />
<br />
பி.கு.<br />
நெய்வேலியின் மின்சாரம் கர்நாடகத்திற்குக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை காவிரி பிரச்சனை வரும் பொழுதெல்லாம் எழுந்தாலும் நெய்வேலியின் மின்சாரம் இல்லாமல் கர்நாடகம் இயங்க முடியும். காரணம் கர்நாடகத்தின் மொத்த மின் தேவையில் நெய்வேலி மின்சாரத்தின் பங்கு மிகவும் சொற்பமே. தமிழகத்தின் மின் தேவையில் கூட நெய்வேலியின் பங்களிப்பு மிகவும் குறைவே…<br />
<br />
<br />
<br /></div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-22527725542028908882018-02-18T23:57:00.000-05:002018-02-18T23:57:14.123-05:00செந்தில்-ராசலட்சுமியின் நாட்டுப்புறப்பாடல்கள்… <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #1d2129; font-family: "SF Optimized", system-ui, -apple-system, system-ui, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.12px;">பல பாடகர்களை அறிமுகப்படுத்திய விசய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இன்று இரு நாட்டுப்புறப்பாடகர்களை நம்பி சூழன்று கொண்டிருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்களை, பாடகர்களை, நடிகர்களைத் தங்கள் மேடைக்கு அழைந்து வந்துள்ள விசய் தொலைக்காட்சி இது வரைக்கும் நாட்டுப்புறப்பாடல்களை வெகுசன மக்களிடம் அதன் இயல்புகளுடன் கொண்டு சென்ற விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: "SF Optimized", system-ui, -apple-system, system-ui, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.12px;">பதிகளை அழைக்கவே இல்லை என்பது ஆச்சரியம் இல்லை. அதன் செட்டப்பே அப்படித் தான். கர்நாடக சங்கீதம் இல்லையென்றால் சினிமாப் பாட்டு என்பது அங்குள்ள யதார்த்தம். இன்றைக்கு விசய் தொலைக்காட்சி நாட்டுப்புறப் பாடல்களை உச்ச்சிமோர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் இந்த இரு தம்பதிகள் - செந்தில் -ராசலட்சுமி. </span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: "SF Optimized", system-ui, -apple-system, system-ui, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.12px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-sVO8yYh-R2M/WopY9gWAzzI/AAAAAAAAD2A/ycztdUGpQHQl49M0ZUrELhNvsvw28hyjACLcBGAs/s1600/senthil-rajalakshmi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://4.bp.blogspot.com/-sVO8yYh-R2M/WopY9gWAzzI/AAAAAAAAD2A/ycztdUGpQHQl49M0ZUrELhNvsvw28hyjACLcBGAs/s320/senthil-rajalakshmi.jpg" width="320" /></a></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: "SF Optimized", system-ui, -apple-system, system-ui, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.12px;"><br /><br />விசய் தொலைக்காட்சி என்றில்லை. அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூடக் கர்நாடக இசைக் கச்சேரி நடக்கும். இல்லையென்றால் சினிமா மெல்லிசைக் கச்சேரி நடக்கும். இது தான் இங்குள்ள செட்டப். தமிழர்களின் ரசனை இவை மட்டும் தான் எனத் திரும்பத் திரும்ப ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.<br /><br />இன்றைக்கு நான் பார்த்த செந்தில் பாடிய கருப்பசாமி பாடல் அதிரடியில் ஆடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கிராமியப் பாடலை ஆவேசுத்துடன், அதன் இயல்பு குறையாமல் தொலைக்காட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார் செந்தில். பிரமிப்புடன் இந்தக் கலைஞனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்குச் சற்றும் சளைக்காமல் கிராமிய அழகியலை அற்புதமாகக் தன் பாடலிலும், இயல்புகளிலும் கொண்டு வந்து பாடிக்கொண்டிருக்கிறார் அவரது மனைவி ராசலட்சுமி. இவர்கள் இருவரின் கண்களிலும், பாடல்களிலும் தெரியும் காதல் ஒரு தனி ரசனைக்குரியது. இந்த இருவரின் பாடல்களில் தமிழ் நாட்டுப்புறப் பாடல் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதன் அறிகுறிகள் தென்படுகின்றன.<br /><br />நாட்டுப்புறப் பாடல்களும், நட்டுப்புறக்கலைகளும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் பள்ளிக் காலங்களில் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளின் பாடல்களின் ரசிகன். நெய்வேலியில் ஒரு முறை அவர்களது நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அவர்களின் பாடல்களில் இருந்த கிராமத்து மணம் வேறு பலரின் பாடல்களில் இருந்ததில்லை. அதற்குப் பிறகு புசுபவனம் குப்புசாமி உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்கள் வந்தாலும், விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளின் இடத்தை யாருமே நிரப்பவில்லை. புசுபவனம் குப்புசாமி வந்த வேகத்திலேயே அதன் சுவடு தெரியாமால் மங்கி விட்டார் என்பது தான் அவரைப் பற்றிய என்னுடய கருத்து.<br /><br />அதனால் தான் இன்றைக்கும் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த சினிமா கலக்காத தமிழ் நாட்டுப்புறப்பாடல்களைத் தேடினால் மிகக் குறைவாகவே நாட்டுப்புறப் பாடல்கள் கிடைக்கும். இன்றைக்கும் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் பாடலைகளைக் தவிர அதிக அளவில் பிரபலமான பாடல்கள் அமையவில்லை என்பது ஏமாற்றமே. இதற்குக் காரணம் கிராமிய இசைக் கலைஞர்களின் பற்றாக்குறை அல்ல. பெரும்பாலான கிராமிய இசைக் கலைஞர்களால் கிராமிய சூழலை விட்டு வெளியே வர முடியாத பொருளாதார, ஊடக சூழ்நிலைகளும் ஒரு காரணம். பெரும்பாலும் சில சிடிக்களை வெளியிட்டு அது பெரும் பொருளாதாரப் பயன் தராத சூழலில் அந்தப் பாடகர்கள் அப்படியே காணாமல் போய் விடுகிறார்கள். தமிழ்நாட்டில் பயணம் செய்யும் பொழுது சில நேரங்களில் பயண வழி உணவகங்களில் கேட்கு சில பாடல்களின் சிடிக்களை வாங்கியிருக்கிறேன். அந்தச் சிடிக்களோடு அவர்களின் பயணமும் முடிந்து விடுவது தான் பிரச்சனையாக உள்ளது.<br /><br />செந்தில் - ராசலட்சுமி தம்பதிகள் கூட விசய் தொலைக்காட்சிக்கு வந்திருக்காவிட்டால் நாம் அவர்களைக் கண்டுகொள்ள வாய்ப்பு இருந்திருக்காது. அந்த வகையில் விசய் தொலைக்காட்சிக்கு நன்றி…<br /><br />விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளுக்குப் பிறகு தமிழக நாட்டுப்புற இசைக்குக் கிடைத்த மிக முக்கியமான பாடகர்கள் செந்தில் - ராசலட்சுமி தம்பதிகள். இளம் வயதில் இந்தப் புகழை அடைந்திருக்கிற அவர்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இந்தக் கலைஞர்களை அழைத்துத் தமிழ் நாட்டுப்புறப்பாடலை உலகெங்கும் ஒலிக்கச் செய்வார்கள். அவர்களும் புதிய பாடல்களை நிறையக் கொண்டு வர வேண்டும்…</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: "SF Optimized", system-ui, -apple-system, system-ui, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.12px;"><br /></span></div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-85309730925461558182017-02-04T21:19:00.000-05:002017-02-04T21:20:20.977-05:00மார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">நியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்து சூடான விவாதத்தை ஏற்படுத்தியது.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">டிரம்ப் சில இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்துள்ளார். அகதிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நாடுகளில் உள்ள போர்ச்சூழலில் அங்கிருந்து தப்பித்துப் பல நாடுகளுக்கும் குடியேறி வருவபவர்களை எந்த வித மனிதாபிமானமும் இல்லாமல் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று டிரம்ப் விதித்துள்ள நாசித்தனமான உத்தரவு அமெரிக்காவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிர்த்து பலரும் பேசி வருகிறார்கள். அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பட நடிகர்கள், தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் எனப் பலரும் இந்தத் தடையை எதிர்த்து பேசி வருகிறார்கள்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">அந்த வகையில் மார்க் சக்கர்பர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டிரம்ப்பின் இந்தத் தடையை எதிர்த்து எழுதியிருக்கிறார். தன்னுடைய மூதாதையர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவே பல நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நாடு தான் என்ற கருத்தை தான் மார்க் சக்கர்பர்க் முன்வைத்துள்ளார்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">நீயா நானா நிகழ்ச்சியில் முகநூலை இலவசமாக வழங்கி விட்டு அதனை வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்து வந்த பொழுது நடந்த விவாதத்தில் முகநூலின் வலிமையைக் கொண்டு டிரம்ப்பை ஆளுமை செய்ய மார்க் சக்கர்பர்க் முயல்கிறார் என்ற கருத்தினைக் கோபிநாத் முன்வைத்தார். இதனை மேடையில் இருந்த சிலர் மறுத்துப் பேசினார்கள். மறுத்துப் பேசியவர்கள் தங்கள் கருத்தை இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க, உங்களுக்கு வெள்ளைக்காரர்களைச் சொன்னால் புரியாது. அம்பானியும், அதானியும் இந்திய அரசை கட்டுப்படுத்துகிறார்களா, இல்லையா என்ற கேள்வியைக் கோபிநாத் முன்வைத்தார். மேடையில் இருந்தவர்கள். ஆமாம் என்றார்கள். அம்பானி, அதானியை ஒப்புக் கொள்கிறீர்கள், மார்க் சக்கர்பர்க்கை ஒப்புக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்டார். மறுபடியும் விவாதம் தொடர்ந்தது.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">மார்க் சக்கர்பர்க் எதற்காக இதனைச் சொல்கிறார் எனப் பலரும் விளக்க, கோபிநாத் தான் சொல்வது தான் சரி என்ற பாணியில் விவாதத்தை முடித்துக் கொண்டார். அதற்கு மேல் விவாதத்தைத் தொடர விட வில்லை. நான் சொல்வதன் பின் உள்ள அரசியல் இப்பொழுது உங்களுக்குப் புரியாது. இன்னும் ஒரு வருடம் கழித்துப் புரியும் என்று ஜோதிடம் கூறி முடித்துக் கொண்டார்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">******</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">பொதுவாகத் தமிழகப் பிரபலங்கள், எழுத்தாளர்களுக்கு அமெரிக்கச் சூழ்நிலைப் பற்றிப் புரியாது. அமெரிக்காவைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தட்டையாகப் பார்ப்பார்கள். சமீபத்தில் கூட எழுத்தாளர் ஜெயமோகன் முதலாளித்துவம் குறித்து உளறி இருந்தார். (அது குறித்து நான் எழுதிய பதிவு - <a href="https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fblog.tamilsasi.com%2F2016%2F11%2Fblog-post.html&h=ATM1XL-YLbKxBNCo_6qcuJq2y7rbpiASSYVNZoYFWEFEXp2_44HlsGpkVywErMR8Xz_AnKoq2R5Cidco7Vo7BHuqIc6P_MGZAJEFWo7W61-3KU1YXYrzT_8XDpRPE-lvDB-WQi6j0k6WMOxawWNmXkE30SWqSaeQmYA&enc=AZMXThEhAyur6GFJGd0-0rK4DXdTvep7dc5FkvhiF96lRLFZChS5JOZzTzTml-gD_JDbsB-hQxOA9uoiBCwL-S4PV2p32pOfgTdETk_H3EWo9uEwnVkoqcG-hspVko46T21F03_1K-0Ymw1I5ayvtGj7LEzMtlhsEnjce_8G88fccaiTZ93AWMuJWNBD27RhkUM&s=1" rel="nofollow noopener" style="color: #365899; cursor: pointer; text-decoration: none;" target="_blank">http://blog.tamilsasi.com/2016/11/blog-post.html</a>)</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தி வருகின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அமெரிக்க அரசாங்கத்தையும், அமெரிக்கக் காங்கிரசையும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதில் உண்மை உள்ளது. அது போலவே விசா விசயத்தில் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லாபி செய்து வருகின்றன. தங்கள் நிறுவனங்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விடுவோம் என்று கூறிய உதாரணங்களும் உண்டு. மார்க் சக்கர்பர்க் இந்தியாவில் இணைய இணைப்பை இலவசமாக வழங்கி மொத்த இணையத்தையும் கைப்பற்ற நினைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இது போன்ற பலக் குற்றச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடு உண்டு.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">ஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் முக்கியமான தருணங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்ற வரலாறும் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்னும் பொழுது வியபாரம் முக்கிய நோக்கம் தான் என்றாலும் அந்த வியாபர நோக்கம் சில முக்கியமான சமயங்களில் அமெரிக்காவை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. கறுப்பர்களின் உரிமை, பெண்ணுரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை போன்றவற்றில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்றதில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மார்க் சக்கர்பர்க்கின் சமீபத்தையப் பதிவை கூட அப்படித் தான் பார்க்க வேண்டும். அது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குப் புரியக்கூடிய சாதாரண உண்மை. அதை அம்பானி இந்திய அரசைக் கட்டுப்படுத்த முனையும் கோணத்தில் பார்ப்பது சரியானது அல்ல. டிரம்ப் விவகாரத்தில் மார்க் சக்கர்பர்க் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. டிரம்ப்பை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா என்ன ?</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">கடந்த காலங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குத் தள்ளியதில் பல தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. இது குறித்த சில தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பகிறேன்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">அமெரிக்காவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 8 மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறை. இதற்காகப் பல தொழிற்ச்சங்கங்கள் பல காலங்கள் போராடி வந்தன. 1914ல் போர்ட் நிறுவனம் 8மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறையைக் கொண்டு வந்தது. இதன் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைப் பின்பற்றும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இன்றுள்ள வார இறுதி நடைமுறையைக் கொண்டு வந்ததில் போர்ட் நிறுவனத்திற்கும் பங்கு உள்ளது.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">பெப்சி-கோக் வணிகப் போட்டி உலகப் புகழ் பெற்றது. அந்தப் போட்டி கறுப்பர்களின் உரிமைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கோக் வெள்ளையர்களின் குடிபானமாக இருந்த நேரத்தில் பெப்சி கறுப்பர்களின் பானமாக இருந்தது. இதற்குப் பின் ஒரு வரலாறு உண்டு. பெப்சியின் மார்க்கட்டிங் துறையில் பணியாற்றிய பாய்டு ஒரு கறுப்பர். கறுப்பர்களிடையே பெப்சியைக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர். கறுப்பர்களுக்கான விளம்பரங்கள் ஒரு விதமான clicheவாக இருந்தக் காலக்கட்டத்தில் கறுப்பர்களும் மனிதர்கள் தான் என்பதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் வகையில் விளம்பரங்களை வடிவமைத்தார். இது அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய புரட்சி. பெப்சியின் விளம்பரம் வெள்ளையினவாத இயக்கங்களான KKK போன்ற இயக்கங்களின் எதிர்ப்பைப் பெற்றது. ஆனால் பெப்சி கறுப்பர்களின் மிகப் பெரிய ஆதரவினைப் பெற்றது. தன் வியபாரத்தைப் பெருக்கவே பெப்சி கறுப்பர்களைச் சார்ந்து தன்னுடைய சந்தையை விரிவாக்கியது. ஆனால் கோக் வெள்ளையர்களின் பானமாக இருந்த காலக்கட்டத்தில் தங்களுடைய பானமாகப் பெப்சியைக் கறுப்பர்கள் ஆதரித்தனர். இந்த அரசியலை அந்தக் காலக்கட்டத்துச் சூழ்நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் நமக்குப் புரியும். (இது குறித்த ஒரு விரிவான புத்தகம் - The Real Pepsi Challenge: The Inspirational Story of Breaking the Color Barriers - by Stephanie Capparell)</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;">இது போன்ற பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். இப்பொழுது கூடக் கூகுல், பேஸ்புக் தவிர வேறு பல தனியார் நிறுவனங்களும் டிரம்ப்பின் இனவாத நடவடிக்கையை எதிர்க்க தொடங்கியிருக்கின்றன.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; margin-top: 6px;">
<span style="font-size: large;">அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. வியபாரம் மூலமாகவே பல முற்போக்குக் கருத்துக்களைச் சமூகத்தில் கொண்டு வந்த நெடிய வரலாறு இந்நாட்டில் உண்டு. அதனை இந்த நாட்டில் வாழும் நண்பர்களுடன் திறந்த மனதுடன் கலந்துரையாடி பெற முயலலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதாலேயே தனக்கு எல்லாமும் தெரியும் என நினைப்பது அறிவுஜீவித்தனம் அல்ல.</span></div>
</div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-21263735762985568202016-11-20T20:29:00.000-05:002016-11-22T21:59:34.878-05:00ஜெயமோகனின் முதலாளித்துவம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">எழுத்தாளர் ஜெயமோகனின் <a href="http://www.jeyamohan.in/92500#.WDOfE6IrKb8" target="_blank">கட்டுரையைப்</a> படிக்க நேரிட்டது. அவரின் சார்புகளை அவருடைய சார்புகளாக வைத்து விடுவோம். </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">ஆனால் அவர் எழுதியிருப்பதில் உள்ள சிலச் சிக்கல்களை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவருடைய கட்டுரையின் தொனி அவர் அறிந்தோ, அறியாமலோ இந்தியாவில் இருக்கிற "நட்பு முதலாளித்துவத்தை" (Crony Capitalism) அவர் ஆதரிக்கும் தொனியாகவே மாறிவிட்டது. நான் முதலாளித்துவத்தை நிராகரிப்பவன் அல்ல. நான் “Center-Left” நிலைப்பாடு உள்ளவன். </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">முதலாளித்துவம் என்பது அரசின் தலையீடு இல்லாமல், அரசுடன் கூட்டணி வைக்காமல் தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே தொழில் நடத்தும் முறை. சிறுவணிகர்களும், சிறுகடை வியாபாரிகளும் முதலாளித்துவத்தின் அங்கம். அமெரிக்காவில் சிறு நிறுவனங்கள் தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் முக்கியமான அங்கம் என்று சொல்வார்கள். சிறு நிறுவனங்களுக்கு ஏராளமானச் சலுகைகள் அமெரிக்காவில் உண்டு. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தியாவில் நடப்பது முதலாளித்துவம் அல்ல. நட்பு முதலாளித்துவம் (Crony Capitalism). அதாவது அரசிடம் உள்ள தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி ஒரு சில நிறுவனங்கள் அரசிடம் இருந்து நன்மைகளைப் பெற்று ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொள்வது. அது தான் அம்பானிகளையும், அதானிகளையும் வளர விட்டுள்ளது. அந்த நட்பு முதலாளித்துவத்தைத் தான் ஜெயமோகன் ஆதரிக்கிறார். </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தியாவில் சிறு வணிகர்கள் தான் உண்மையான முதலாளித்துவத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தப் பெரும் சலுகையையும் இந்திய அரசு வழங்குவதில்லை. பல நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் தங்கள் வாழ்வியலை இழந்தவர்கள் சிறு வியபாரிகளே. </span><br />
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; font-size: 14px; white-space: pre-wrap;"><br /></span>
<span style="background-color: white; color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif; white-space: pre-wrap;"><span style="font-size: large;">ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி வழங்குகிறது. சாமானிய மனிதர்களின் நிலங்களை அரசு கையப்படுத்தும் முறை eminent domain என்று அமெரிக்காவில் கூறப்படும். இந்த முறையை அமெரிக்காவில் வலதுசாரிகள் தீவிரமாக எதிர்ப்பார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த தேர்தலில் டிரம்ப் eminent domainஐ ஆதரித்து பேசியதை முதலாளித்துவவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இந்தியாவில் உண்மையில் எது முதலாளித்துவம் என்பதே புரியாமல் "நட்பு முதலாளித்துவம்", "ஜமீந்தாரீ முதலாளித்துவம் (Zamindari Capitalism)" போன்றவை தான் இன்று நடைமுறையில் உள்ளது.அதனைத் தான் ஜெயமோகன் ஆதரித்து எழுதுகிறார். உண்மையான முதலாளித்துவத்தை அல்ல.</span></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">மோடியின் சமீபத்தைய அறிவிப்பு கூட இந்த நட்பு முதலாளித்துவத்தின் ஒரு பகுதியாகவே காண முடிகிறது. காரணம் சிறு வணிகர்களின் வர்த்தகங்களைச் சிதைத்து பெரும் நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தினைக் கொண்டு செல்லும் ஒரு மறைமுக வேலைத்திட்டமாகவே இதனைப் பார்க்க முடிகிறது. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">ஜெயமோகன் கட்டுரையில் பலப் பிரச்சனைகளை சுட்டிக்காட்ட முடியும். ஆனால் சுருக்கமாக அவர் எழுதிய Bailout (பொருளாதார மீட்பு) குறித்து மட்டும் இங்கு எழுதுகிறேன். </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">அமெரிக்காவில் 2008-2009 பொருளாதாரத் தேக்கத்தின் பொழுது இரண்டு முக்கியமான துறைகளைச் சார்ந்த நிறுவனங்களை அமெரிக்க அரசு மீட்டது. நியூயார்க்கில் இயங்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் முதலீட்டு வங்கிகள் (Investment Banks), ஏஐஜி காப்பீட்டு நிறுவனம், டெட்ராய்ட்டில் இயங்கும் கார் தொழிற்ச்சாலைகள் போன்றவை அரசால் மீட்கப்பட்டன. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இங்கு மீட்கப்பட்டவை ஒரு சில நிறுவனங்களோ, தனியார் முதலாளிகளோ அல்ல. மாறாக ஒட்டு மொத்த பொருளாதரத்துடன் பின்னிப்பிணைந்த சில முக்கியமான நிறுவனங்கள் மீட்கப்பட்டன. உதாரணமாக டெட்ராய்ட்டில் உள்ள ஜி.எம், கிரைசலர் போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களை மீட்காமல் திவாலாக அனுமதித்து இருந்தால் அந்தச் சில நிறுவனங்கள் தவிர அந்த நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் திவாலாகும். அந்த நிறுவனங்களின் சங்கிலிப்பிணைப்புப் பொருளாதாரத் தொடர்புகள் அழியும். இதனால் லட்சக்கணக்கான பேர் வேலை இழப்பார்கள் என்ற சூழ்நிலை இருந்த நிலையில் அமெரிக்க அரசு அந்தக் கார் நிறுவனங்களை மீட்க முன்வந்தது. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இதே போன்றதொரு மற்றொரு மீட்பு நியூயார்க் முதலீட்டு வங்களின் மீட்பு. முதலில் இந்த வங்கிகளை மீட்க அமெரிக்க அரசு முன்வரவில்லை. பியர் ஸ்டேர்ன்ஸ் நிறுவனம் திவாலாகும் சூழ்நிலையில் அதனை மற்றொரு வங்கியான ஜே.பி.மார்கன் வாங்கியது. லீமேன் பிரதர்ஸ், மெரில் லின்ஞ் போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்துத் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்ட பொழுது தான் அரசு தலையிட்டது. அதுவும் முதலில் லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் ஆனது. அதற்குப் பண உதவி செய்ய அரசு மறுத்து விட்டது. அதனாலேயே லீமேன் திவால் ஆனது. மற்றொரு நிறுவனமான மெரில் லிஞ்ச் நிறுவனத்தைப் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம் வாங்கியது. லீமேன் நிறுவனம் திவாலானதால் அமெரிக்கப் பொருளாதாரம் தவிர உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">காரணம் அமெரிக்க, உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான கட்டமைப்பு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள். அது தவிர ஏஐஜி போன்ற காப்பீட்டு நிறுனமும் திவாலாகும் சூழல் ஏற்பட்டது. ஒரு காப்பீட்டு நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை அசாதாரணமானது. சாதாரண மக்களின் பணம், பல நிறுவனங்களின் பணம் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள சூழலில் பின்னிப்பிணைந்த ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரமும் ஆட்டம் கண்ட சூழலில், ஒவ்வொன்றாக அமெரிக்காவின் பல நிறுவனங்களும் திவாலாகும் சூழ்நிலையில் அதன் தொடர்ச்சியாகப் பல நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் திவாலாகக்கூடிய சூழல் பல லட்சக்கணக்கன மக்கள் வேலை இழக்கும் சூழலில் தான் மிக மோசமான பொருளாதார நெருக்கடிககளைத் தவிர்க்கவே அமெரிக்க அரசு வங்கிகளை மீட்டது. ஆனால் அந்த வங்கிகளுக்கு அரசு கடன் தான் கொடுத்தது. அந்தக் கடன்களை அந்த நிறுவனங்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். செலுத்தியும் விட்டன. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தக் காலக்கட்டத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி கொண்டு தான் இருந்தன. அவற்றையெல்லாம் அரசு மீட்கவில்லை. காரணம் நிர்வாகத்திறமை இல்லாத எல்லா நிறுவனங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது அரசின் வேலை இல்லை. அது முதலாளித்துவமும் இல்லை. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">முதலாளித்துவதும் என்பது அரசை நம்பியிருப்பது அல்ல. அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுவது அல்ல. கிங்பிஷர் நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மைக்கு அரசைக் காரணம் காட்டி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அரசு வங்கிகளின் நிர்வாகத்திறமையின்மையை சாடிய ஜெயமோகன், ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மைக்கும் அரசையே குற்றம் சொல்கிறார். கிங்பிஷர் நிறுவனத்தின் ஆடம்பரப் போக்கு, விளம்பர மோகம், நிர்வாகத் திறமையின்மை போன்ற பலக் காரணங்களால் தான் அந் நிறுவனம் மோசமான நிலையை எட்டியது.</span><br />
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span>
<span style="font-family: inherit; font-size: large;">முதலாளித்துவ கட்டமைப்பில் அரசின் தலையீட்டை பெரும்பாலும் முதலாளித்துவவாதிகள் விரும்புவதில்லை. அமெரிக்காவில் கூட அமெரிக்க அரசு மோசமான சூழலில் இருந்த நிறுவனங்களை மீட்கவே கூடாது என்று தான் வாதிட்டனர். ஆனால் வேலைஇழப்புகள், பொருளாதாரப் பாதிப்புகள் போன்றவற்றை முன்னிட்டே அமெரிக்க அரசு இந்த நிறுவனங்களை மீட்டது. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">அமெரிக்க அரசு 2009ல் இத்தகைய நிறுவனங்களை மீட்க முயன்று கொண்டிருக்கும் பொழுது இந்த நிறுவனங்களை மீட்க கூடாது, இவர்கள் திவாலாக வேண்டும் என்று வாதிட்டனர் அமெரிக்காவின் முதலாளித்துவவாதிகள். அவற்றில் மிக முக்கியமானவர் 2012ம் ஆண்டுத் தேர்தலில் ஒபாமாவை குடியரசுக் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட மிட் ராம்னி. “Let Detroit Go Bankrupt” என்று மிட் ராம்னி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை எழுதினார். காரணம் தொழிற்சங்களின் கட்டுப்பாட்டில் கார் தொழிற்சாலைகள் உள்ளன. எனவே தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைத்து நிறுவனங்களை மறு சீரமைக்க, இந் நிறுவனங்கள் திவாலாக வேண்டும் என்று மிட் ராம்னி வாதிட்டார். ஆனால் தொழிற்சங்கங்கள் இந்த நிறுவனங்களை மீட்க வேண்டும் என்று கோரின. </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தியாவில் அப்படியா நடக்கிறது ? </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தியாவில் நடப்பது Crony Capitalism. கிங்பிஷ்ர் நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கம் அல்ல. ஒரு நிறுவனம் நிர்வாகத் திறமையின்மையால் திவாலாகும் பொழுது இருக்கும் சூழ்நிலை தான் கிங்பிஷ்ர் சூழ்நிலையும். ஆனால் அரசு அதற்கு ஆதரவாக உள்ளது. இது போன்ற பல நிறுவனங்களுக்கு அரசு வங்களில் இருந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அது தான் நட்பு முதலாளித்துவம். அரசியல்வாதிகளுடனும், அதிகாரிகளிடமும் நட்புடன் உள்ள பெரும் முதலாளிகள் தப்பி விடுவார்கள்.</span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">ஆனால் முதலாளித்துவத்தின் மிக முக்கியமான அங்கமான சிறு முதலாளிகளான வியாபாரிகளையும், வணிகர்களையும் அழித்து, அந்த நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்களின் அன்றாட வாழ்வை அழித்து ஒரு சில பெரிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல. Crony Capitalism. மோடியின் திட்டத்தால் பயன்பெறப் போவது கடன் அட்டை நிறுவனங்கள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தான். </span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">இந்தியாவில் பன்னெடுங்ககாலாமாக இருந்து வரும் வர்த்தக <br />முறையை ஒரு இரவில் மாற்றுவது என்பது ஒரு நாள் முதலமைச்சர் போன்ற திரையுலகக் கற்பனையில் மட்டுமே சாத்தியம். நிஜ உலகில் கொண்டு வந்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சிக்கல்கள் தான் இன்று இந்தியா எங்கும் தென்படுகிறது. சிறு வியாபாரிகள், சிறு வணிகர்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களும் முதலாளித்துவத்தின் ஒரு அங்கம் தான். </span><br />
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;">ஆனால்... அவர்கள் நட்பு முதலாளித்துவத்தின் அங்கம் அல்ல. அதனால் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாக இந்த அரசு கருதுகிறது. அதன் ஒரு பகுதி தான் மோடி அரசின் அதிரடி அறிவிப்பு.</span><br />
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span>
<span style="font-family: inherit; font-size: large;">******</span><br />
<span style="font-size: large;">
</span></div>
<div class="p1">
<span style="font-family: inherit; font-size: large;"><br /></span></div>
<div class="p1">
<span style="font-size: large;">அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் வெவ்வேறு தேவைகள், வரலாறு உண்டு. அமெரிக்காவின் முதல் வங்கி 1791ல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏராளமான வங்கிகள் தொடங்கப்பட்டன. வங்கிகளுக்கு என்று சட்டதிட்டங்களும் இயற்றப்பட்டன. அமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதாரத் தேக்கம் 1930களில் வங்கிகளால் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கிகளையும், முதலீட்டு வங்கிகளையும் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அப்பொழுதே கொண்டு வரப்பட்டன. </span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இதைப் போலவே க்ரெடிட் கார்டு என்று சொல்லப்படுகிற கடன் அட்டைகளின் வரலாற்றை நோக்கினால் 1900களிலேயே நடைமுறையில் இருந்தது. இவை படிப்படியாகப் பல வடிவம் பெற்று இன்றைய வடிவத்தைப் பெற்று இருக்கிறது. </span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இதனை ஏன் சொல்கிறேன் என்றால் வங்கிகள் சில நூறு ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ளன. கடன் அட்டை முறை கிட்டத்தட்ட கடந்த பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. அதனால் பல பறிமாற்றங்கள் வங்கிகள் மூலமாகப் படிப்படியாக மாறி விட்டது. தொழில் நுட்பம் வளர தொடங்கியதும், இந்தப் பயன்பாடும் பரவலாக விரிவடைந்தது. </span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">ஆனால் நம் முறை என்ன ? அமெரிக்காவைப் போன்று மாற வேண்டும் என்று ஒரே இரவில் மாற முடியாது. இன்னும் பல காலங்கள் தேவைப்படும். தொழில்நுட்பம் கிராமங்கள் எங்கும் பரவ வேண்டும். இன்னமும் 50% மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இன்னும் சில தசாப்தங்கள் தேவைப்படும். </span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">அமெரிக்காவிலும் ரொக்க வர்த்தகம் உண்டு. பெரும்பாலும் அன்றாடச் செலவீனங்களுக்கு ரொக்கமாகச் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அதில் நன்மையும் உண்டு. ரொக்கமாகச் செலுத்தினால் 5% விலைக்குறைப்பு கூடக் கிடைக்கும். இதனை நான் பல இடங்களில் பயன்படுத்துகிறேன். அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 40% பரிவர்த்தனைகளை ரொக்கமாகச் செலுத்துவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ரொக்கமாகச் செலுத்தினால் விலையைக் குறைக்க முடியும் என்று கூறும் வர்த்தகர்கள் பலரை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். இவர்கள் எல்லோரும் சிறு வர்த்தகர்கள் தான். அத்தகைய இடங்களில் ரொக்கமாகச் செலுத்தியும் இருக்கிறேன். ரொக்கமாகச் செலுத்துவது குற்றம் அல்ல. மாறாக ஏதோ ஒரு கடன் அட்டை நிறுவனத்திற்கு அழுவதை விட வாடிக்கையாளரான எனக்கு அந்தப் பலனை கொடுக்க வர்த்தகர்கள் தயாராக இருக்கிறார்கள். சில சிறு வியாபாரிகள் கடன் அட்டையைப் பயன்படுத்த ஒரு குறைந்தபட்ச வரம்பு வைத்துள்ளனர். அதற்குக் கீழ் இருந்தால் ரொக்கமாகத் தான் கொடுக்க வேண்டும். </span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">கடன் அட்டை ஒரு வசதி. பணத்தை எல்லா இடங்களுக்கும் கொண்ட செல்ல இயலாது. ஆனால் அதனால் சிறு வியபாரிக்கு நன்மை இல்லை. ஒரு பரிவர்த்தனையில் சுமார் 2-3% பணத்தைத் தேவையே இல்லாமல் கடன் அட்டை நிறுவனத்திற்குச் செலுத்தியாக வேண்டும். எல்லோரிடமும் கடன் அட்டை உள்ள சூழ்நிலையில் ஒரு வியபாரி அதன் மூலம் தன் வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் பெரும்பாலானோரிடம் கடன் அட்டை இல்லாத சூழலில் நீ வைத்து தான் தீர வேண்டும் என எப்படி ஒரு அரசு நிர்பந்திக்க முடியும். இது முதலாளித்துவமே அல்ல.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">******</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">அமெரிக்காவில் உள்ள ஒரே தேசிய வங்கி Bank of North Dakota தான். முதலாளித்துவக் கட்டமைப்பில் அரசு எந்த வங்கியையும் நிர்வாகம் செய்யக்கூடாது. அமெரிக்காவில் அவ்வாறு தான் உள்ளது. இந்தியாவில் இருந்த சோசலிச பொருளாதாரத்தின் மிச்சம் தான் தேசிய வங்கிகள். அந்த வங்கிகளின் நிர்வாகம் தான் "நட்பு பொருளாதாரத்திற்கும்" வழி வகுக்கிறது. வங்கிகளின் பணத்தை ஹர்ஷ்த் மேத்தா பங்குச்சந்தைக்குத் திருப்பியது தொடங்கி இந்தியா தீவிர முதலாளித்துவத்துக்கு அடி எடுத்து வைத்த காலம் தொடங்கி இன்று வரை இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரசு வங்கிகளைத் தங்களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. </span><br />
<br /></div>
<style type="text/css">
p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 17.0px 'Tamil Sangam MN'; color: #454545}
p.p2 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 17.0px 'Helvetica Neue'; color: #454545; min-height: 21.0px}
p.p3 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Helvetica Neue'; color: #454545; min-height: 14.0px}
span.s1 {font: 17.0px 'Helvetica Neue'}
</style><style type="text/css">
p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 17.0px 'Tamil Sangam MN'; color: #454545}
span.s1 {font: 17.0px 'Helvetica Neue'}
</style></div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-75462704725615602092016-10-23T00:19:00.003-04:002016-11-22T22:28:21.498-05:00அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://3.bp.blogspot.com/-ds-L2gQv5e0/TpOo4d1g4yI/AAAAAAAADJU/ngonW5C-ZNw/s1600/gty_occupy_wall_Street_union_thg_111007_wg.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054844570067746" src="https://3.bp.blogspot.com/-ds-L2gQv5e0/TpOo4d1g4yI/AAAAAAAADJU/ngonW5C-ZNw/s320/gty_occupy_wall_Street_union_thg_111007_wg.jpg" style="cursor: pointer; float: left; height: 180px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a>(<a href="http://blog.tamilsasi.com/2011/10/occupy-wall-street-movement-class.html" target="_blank">இது 2011ல் எழுதியப் பதிவின் மீள்பதிவு</a>)<br />
<br />
வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.<br />
<div>
<br /></div>
<div>
வால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்<br />
<br />
<b>தற்போதைய அரசியல் சூழ்நிலை</b><br />
<br />
இந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.<br />
<br />
தற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (<a href="http://blog.tamilsasi.com/2010/03/health-care-reform-tamilnadu-insurance.html">சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை</a>) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.<br />
<br />
<br />
சுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்டியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.<br />
<br />
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின் ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.<br />
<br />
****************</div>
<div>
<b>பணக்காரர்களுக்கு வரி விதிப்பு</b><br />
<br />
ஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-8eZ2qOD42zQ/TpOoco-kWMI/AAAAAAAADI8/91X_1YBMkUs/s1600/gty_occupy_Wall_street_nt_111005_wg.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054366524496066" src="https://4.bp.blogspot.com/-8eZ2qOD42zQ/TpOoco-kWMI/AAAAAAAADI8/91X_1YBMkUs/s320/gty_occupy_Wall_street_nt_111005_wg.jpg" style="cursor: pointer; float: left; height: 180px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a>வேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.<br />
ஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.<br />
<br />
பணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.<br />
<br />
****************<br />
<br />
உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்ன தான் நடக்கிறது ? அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.</div>
<div>
<br /></div>
<div>
<b>ரீகனின் பொருளாதாரம் - Trickle <gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="44f497e6-671e-4a22-bc7a-be68910365f5" id="ad9b842c-aa32-4346-b0d0-d5fa5dc0f6b3"><gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="224261a4-15fc-49fc-9b28-e00b528505c4" id="f7c836bc-2b0a-4666-a6a6-8b93458b6c70">down</gs></gs> Economics</b><br />
<br />
இந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.<br />
<br />
அது என்ன Trickle <gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="db521f6d-12e3-4952-95fb-e62ba6298697" id="b3913c3c-84e3-41ee-b741-4a6daa86940d"><gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="f20d2e8f-ef99-4a49-b439-ce6b1ae8cdde" id="d88100ff-40a5-4527-af16-4aa3d181e451">down</gs></gs> Economics<gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="db521f6d-12e3-4952-95fb-e62ba6298697" id="2645277c-9dc5-4bd5-b7e6-221319db779c"><gs class="GINGER_SOFTWARE_mark" ginger_software_uiphraseguid="f20d2e8f-ef99-4a49-b439-ce6b1ae8cdde" id="9fe1c941-5ae5-4691-9a69-b7bef817f972"> ?</gs></gs> அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.<br />
தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.<br />
<br />
இந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.</div>
<div>
<br /></div>
<div>
<b>ரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்</b></div>
<div>
<br />
<br />
<a href="http://2.bp.blogspot.com/-oIU2WL8DWNU/TpOqLWGf7-I/AAAAAAAADJ4/zdDFoYr4N9s/s1600/real-average-earnings-have-not-increased-in-50-years.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662056268422967266" src="https://2.bp.blogspot.com/-oIU2WL8DWNU/TpOqLWGf7-I/AAAAAAAADJ4/zdDFoYr4N9s/s320/real-average-earnings-have-not-increased-in-50-years.jpg" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a>பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-7Q8glzcXokE/TpOpQE7auhI/AAAAAAAADJg/UeQWX_0ZNqY/s1600/pay-graph1.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662055250200803858" src="https://4.bp.blogspot.com/-7Q8glzcXokE/TpOpQE7auhI/AAAAAAAADJg/UeQWX_0ZNqY/s320/pay-graph1.jpg" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a>சரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா ? இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.<br />
<br />
<br />
பணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.</div>
<div>
<br /></div>
<div>
<b>அமெரிக்காவின் பொருளாதார சரிவு</b><br />
<br />
ரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.<br />
<br />
ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
<b>Collateralized debt obligation மற்றும் Credit Default Swaps</b></div>
<div>
<br />
சரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் ? அவர்களுக்கு பணம் வேண்டாமா ? அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.<br />
<br />
இது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது ? நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.<br />
<br />
2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ? அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.<br />
<br />
ரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன ? வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.</div>
<div>
<br /></div>
<div>
<b>Bailout</b><br />
<br />
எந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தாலும் வேறு வழியில்லை.<br />
<br />
இவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.</div>
<div>
<br /></div>
<div>
<b>வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்</b><br />
<br />
<a href="http://2.bp.blogspot.com/-QlA5kDHRMQU/TpOoLBfcfnI/AAAAAAAADIw/oy09QukzScA/s1600/Day_7_Occupy_Wall_Street_September_23_2011_Shankbone_2.JPG"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054063867199090" src="https://2.bp.blogspot.com/-QlA5kDHRMQU/TpOoLBfcfnI/AAAAAAAADIw/oy09QukzScA/s320/Day_7_Occupy_Wall_Street_September_23_2011_Shankbone_2.JPG" style="cursor: pointer; float: left; height: 320px; margin: 0px 10px 10px 0px; width: 213px;" /></a>இடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.<br />
<br />
இவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).<br />
<br />
*********************<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-YSkjKLDBCgk/TpOotxILIhI/AAAAAAAADJI/mbYizQXPYak/s1600/Brooklyn-Bridge-Arrests.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054660770046482" src="https://4.bp.blogspot.com/-YSkjKLDBCgk/TpOotxILIhI/AAAAAAAADJI/mbYizQXPYak/s320/Brooklyn-Bridge-Arrests.jpg" style="cursor: pointer; float: left; height: 180px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a><br />
இடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.<br />
<br />
<a href="http://1.bp.blogspot.com/-w5vc0MKV2rI/TpOpgBEb1GI/AAAAAAAADJs/nCwjCWQ9nx4/s1600/if-you-arent-in-the-top-1-then-youre-getting-a-bum-deal.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662055524042789986" src="https://1.bp.blogspot.com/-w5vc0MKV2rI/TpOpgBEb1GI/AAAAAAAADJs/nCwjCWQ9nx4/s320/if-you-arent-in-the-top-1-then-youre-getting-a-bum-deal.jpg" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a>99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% மக்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.<br />
<br />
<br />
*****************<br />
<br />
வர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.</div>
</div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148241.post-53466120357259310652015-01-30T18:32:00.001-05:002015-01-30T18:32:38.091-05:00தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப
காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு
பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை
பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல்
வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன்
முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் குழுமங்களிலும்,
வலைப்பதிவுகளிலும் வாசகனாக மட்டும் இருந்த எனக்கு எழுதும் ஆர்வத்தை
ஏற்படுத்தியது தமிழ்மணம் தான்.<br />
<br />
2004ல் தமிழ்மணம் எனக்கு முதன் முதலில் அறிமுகமான பொழுது வலைப்பதிவிற்கு
வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் எனக்கும் வாசகர்களை கொண்டு
வரும் என்ற நம்பிக்கையிலேயே எழுதத் தொடங்கினேன். 2004ல் இருந்து 2006வரை
தமிழ்மணத்தை ஒரு பயனாளனாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். 2006ல் இருந்து
தான் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறேன். தமிழ்மணத்தை நண்பர் காசியிடம்
இருந்து பெற்று "தமிழ் மீடியா இண்டர்நேஷனல்" என்ற தன்னார்வ நிறுவத்தை
உருவாக்கிய பொழுது தான் நான் இதில் இணைந்தேன். எனவே நான் முதலில் ஒரு
வலைப்பதிவன். பிறகு தான் நிர்வாகி. தமிழ்மணத்தை ஒரு வாசகர், பதிவர்
நிலையில் இருந்தும் பார்த்திருக்கிறேன். நிர்வாகியாகவும் பார்த்து
இருக்கிறேன். இரண்டு பார்வைக்கும் இரு வேறு பரிமாணங்கள் உண்டு.<br />
<br />
தமிழ்மணம் தொடங்கிய பயணத்தில் தமிழ் வலைப்பதிவு உலகம் வேகமாக விரிவடைந்தது.
தமிழ்மணத்தை தொடர்ந்து மறைந்த சாகரன் தேன்கூடு திரட்டியை உருவாக்கினார்.
2006ல் நண்பர் குழலி தமிழ்வெளியும், பிறகு நண்பர் வெங்கடேஷின் திரட்டி
போன்றவையும் வந்தன. சமீப ஆண்டுகளில் பிலிக்கை அடிப்படையாக கொண்டு பல
புக்மார்க்கிங் தளங்களும் வந்தன. தமிழ் எழுதுவது எப்படி என கடினப்பட்டு
தேடிக் கொண்டிருந்த காலம் மறைந்து இன்றைக்கு இணைய உலகம் முழுவதிலும்
“தமிழ்” விரிவடைந்து விட்டது. இதற்கு காரணமானவர்கள் பலர். தேனீ எழுத்துரு
உருவாக்கிய உமர் வலைப்பதிவுகளில் தமிழ் தெரிய வழிவகுத்தார். சுரதா,
முகுந்த் போன்ற நண்பர்கள் தமிழ் தட்டச்சியை எளிதாக்கினர். குறிப்பாக
முகுந்த்தின் இ-கலப்பையை கொண்டு தான் தமிழ் வலைப்பதிவுகளில் உழுது
கொண்டிருந்தோம். காசி ஆரம்பித்த தமிழ்மணம் வலைப்பதிவுகளை பெருக்கியது.
இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களை தவிர இன்னமும் எண்ணற்றோர் தமிழை
இணையத்தில் கொண்டு வர உழைத்திருக்கிறார்கள்.<br />
<br />
இந்த உழைப்பின் மூலமான தமிழின் பரவல் மகிழ்ச்சியை தருகிறது. பேஸ்புக்,
கூகுள் ப்ளஸ், டிவிட்டர் என இன்றைக்கு தமிழை சுலபமாக எங்கும் நுழைக்க
முடிகிறது. இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும்
தமிழ் எழுத்து உலகிற்கு இது ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் என்னுள்
எழுகிறது. 2004ல் தொடங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்த பலர் இன்று
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் முடங்கிப் போய் விட்டார்கள். பேஸ்புக்,
டிவிட்டர் போன்ற தளங்களை வெறும் அரட்டை தளங்களாக மட்டுமே என்னால் பார்க்க
முடிகிறது. வலைப்பதிவில் இருக்கிற ”எழுத்து சுகம்” இந்த சமூகத் தளங்களில்
கிடைப்பதில்லை.<br />
<br />
************<br />
<br />
பிரபல பதிவர்கள் என்ற சொற்றொடர் தற்பொழுது வலைப்பதிவுகளில் பிரபலமாக
உள்ளது. பிரபல பதிவர் என்ற இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியும் நிலவுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் வலைப்பதிவில் பிரபல பதிவர்கள் மாறிக் கொண்டே
இருப்பார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து
கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நகர முடியாது.<br />
<br />
நானும் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்த காலத்தில் வாழ்க்கையில் நகரவில்லை.
வாழ்க்கையில் நகர வேண்டும் என முடிவு செய்த பின்பு வலைப்பதிய நேரமில்லை.
இப்படி பிரபல பதிவர்களாக இருந்து இன்று வலைப்பதிவில் காணாமல் போன நிறையப்
பேரினை தெரியும். எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக செய்யாத யாரும்
வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து கொண்டிருப்பது கடினம்.
வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களைப் பார்த்தால் எனக்கு
பொறாமையாக கூட இருக்கும். ஆனாலும் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கு முழு நேர
தொழில் எழுத்து அல்ல. எழுத்து ஒரு ஆர்வம் மட்டுமே. சமூகம் மீதான நம்முடைய
பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில்
அந்த ஓட்டத்தினூடே பகிர்ந்து கொள்ள டிவிட்டரும், பேஸ்புக்கும், கூகுள்
பஸ்சும் தான் சுலபமாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த ஊடகங்களில் இருக்கும்
மாயையும், எழுத்தில் இருக்கும் போதையும் அதனை எழுதும் பொழுது தான்
தெரிகிறது.<br />
<br />
இப்படியான வாழ்க்கைச் சக்கரத்தால் தான் பதிவர்கள் வலைப்பதிவில் இருந்து
மறைவதும், புதியவர்கள் நுழைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே நாங்கள்
தான் வலைப்பதிவர்கள். எங்களைச் சார்ந்து தான் எல்லாமும் என்பது
மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு வலைப்பதிவருக்கு வாசகர்கள் தேவை என்றால்
திரட்டிகள் தேவை. திரட்டிகள் ரயில்கள் போன்றவை. ரயில்களில் புதியவர்கள்
ஏறுவதும், பழையவர்கள் இறங்குவதும் இயல்பாக நடப்பவை. ரயில்களில் ஏறுபவர்கள்
வேண்டுமானால் மாறலாம். ஆனால் ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For
men may come and men may go. We will go on forever. <br />
<br />
பதிவர்களே மாறிக் கொண்டே இருக்கும் சூழலில் வலைப்பதிவர்களாக இருந்து
தமிழ்மணத்தை நிர்வாகம் செய்யும் நாங்கள் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து
நிற்பதே ஒரு இமாலய சாதனை தான். இதனை ஏதோ தற்பெருமையாக சொல்ல வில்லை. ஒரு
தளத்தினை நடத்தும் எவரும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து
கொள்வார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே தமிழ்மணத்தினை நடத்திக்
கொண்டிருக்க காரணம் தமிழ்மணம் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு மாற்று ஊடகமாக
பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தளத்தினை தொடர்ந்து நடத்துவதை நாங்கள்
ஒரு கடமையாக கருதுகிறோம். எனவே எங்களுடைய ரயில் ஓடிக் கொண்டே தான்
இருக்கும். எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல
எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர
இழுத்து மூடி விட மாட்டோம்.<br />
<br />
வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு
தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே
தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை
விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம், நக்கீரன் போன்ற தளங்களே
இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.
இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ்
ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது
என்பது தான் யதார்த்தமான உண்மை. தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச்
செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக
இல்லை என்பதே யதார்த்தம்.<br />
<br />
இதையெல்லாம் நான் எங்களை நோக்கி அவதூறு செய்பவர்களுக்கு சொல்ல வில்லை.
தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே சொல்கிறேன். அவதூறு
செய்பவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் எப்பொழுதோ தமிழ்மணம்
காணாமல் போய் இருக்கும். தமிழ்மணத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அவதூறுகள்
இருந்து கொண்டு தான் இருக்கின்றன.<br />
<br />
************<br />
<br />
2004ல் தமிழ்மணம் தொடங்கப்பட்ட காலம் முதலே தமிழ்மணத்திற்கு மாற்றாக ஒரு
திரட்டி தேவை என்ற கருத்தினை பலரும் முன்வைத்து வந்துள்ளனர். இன்றைக்கு பல
புக்மார்க்கிங் தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும் ஒரு வலைப்பதிவினைச்
சார்ந்த அத்தனை பரிமாணங்களையும் (பதிவுகள், மறுமொழிகள், குறிச்சொற்கள்,
வகைப்படுத்தல், முன்னணி பதிவுகள், வாசகர் பரிந்துரைகள் போன்றவை) கொண்ட
திரட்டியாக தமிழ்மணம் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு திரட்டியை
உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல. மிக மிக சுலபமானது தான். அவதூறு
செய்யும் நேரத்தில் உருப்புடியாக எழுதலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை
உருவாக்கலாம்.<br />
<br />
2007ல் வேறொரு வலைப்பதிவு பிரச்சனையில் ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது
எப்படி ? என்ற பதிவை எழுதினேன். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 2007
என்பது தற்பொழுது கற்காலம் போன்றது. ஆனாலும் இந்த அடிப்படையை வைத்து
எவரும் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். தமிழ்மணத்தை விட மிகவும் சிறப்பான
திரட்டி உருவானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே<br />
<br />
<a href="http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html">ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? - http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html</a><br />
<br /></div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6148241.post-29123820784589394942013-05-05T23:59:00.000-04:002013-05-06T00:16:53.814-04:00வடமாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் பெருகி வருவது ஒரு ஆபத்தான போக்கு ஆகும். ஒரு முறை அதன் காரணமாக நான் நேரடியாக பாதிப்பும் அடைந்து இருக்கிறேன். சென்னை தாம்பரத்தில் 2003ல் ஒரு இடம் ஒன்றினை வாங்கினேன். பத்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்து வாங்கினாலும் அந்தப் பகுதி ஒரு ரவுடிக் கும்பலின் பிடியில் இருந்தது அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது போல அல்லாமல் தாம்பரம் அப்பொழுது ஒரு புறநகருக்கே உரிய கிராமத்தனமாக தான் இருந்தது. நான் இடம் வாங்கி அங்கே வீடு கட்ட ஆரம்பித்த பொழுது பிரச்சனைகள் தொடங்கியது. திடீரென்று ஒரு நாள் என்னுடைய இடத்தில் திமுக, அதிமுக கொடிக்கம்பங்கள் முளைத்தன. அம்மா குடிநீர் பந்தல் என்ற ஒன்றை என்னுடைய இடத்தில் கொஞ்சம், ரோட்டில் கொஞ்சம் என்று சேர்த்து போட்டு விட்டார்கள். இடத்தை அளந்து போட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கினார்கள். பேரம் பேசத் தொடங்கினார்கள். ஒரு தொகையை கொடுத்து பிரச்சனையை முடித்தோம். என்னுடைய தரப்பில் லோக்கல் அரசியலில் அனுபவம் உள்ள என்னுடைய மாமா இருந்ததால் பிரச்சனையை தீர்க்க முடிந்தது. அப்படி இல்லாதபட்சத்தில் சில லட்சங்களை பிடுங்கியிருப்பார்கள். போலீசிடம் போனால் பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் தீராது. போலீசுக்கு கொடுக்க வேண்டிய தொகை, கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு கொடுக்க வேண்டிய தொகை என இரட்டிப்பு தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்.<br />
<br />
கட்டப்பஞ்சாயத்து என்பது ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்குடன் இருக்கும் ரவுடிக்கும்பல் செய்வது. திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் எல்லா கட்சிகளிலும் உள்ள ரவுடிக்கும்பல் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ரவுடிகள். இதில் எந்தக் கட்சி வேறுபாடும் இல்லை. பணம் தொடங்கி ரியல் எஸ்டேட், பங்காளித் தகராறு என பல்வேறு பிரச்சனைகளில் இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2005க்கு பிறகு ரியல் எஸ்டேட் வளர்ந்த பொழுது இவர்களது அட்டூழியம் மிக அதிகமாக இருந்தது. அரசியல்வாதிகள் இத்தகைய ரவுடிக்கும்பல்களை வளர்த்து விடுகிறார்கள். தாங்கள் அரசியல் செய்ய இத்தகைய ரவுடிக் கும்பல் தேவை என்பதாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். இதில் எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் கிடையாது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்தக் கட்டப்பஞ்சாயத்து கூட்டணிக்கு புதிய வரவு தேமுதிக.<br />
<br />
இது போன்ற கட்டபஞ்சாயத்துக்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து தான் வருகிறது. ஒவ்வொரு கட்சி, சாதியின் லோக்கல் செல்வாக்கிற்கு ஏற்ப கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் சாதியும், கட்சியும் மாறுபடுகிறது. வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பாமக, திமுக போன்ற கட்சியைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் இருக்கும். தலித்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். அதிமுக ஆளுங்கட்சி என்னும் பொழுது அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.<br />
<br />
ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் திமுக, பாமக, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்பவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாதி அடுக்கில் தங்களுக்கு கீழே இருக்கும் தலித்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதா என்ற சாதி வெறியே இதற்கு காரணம். இது பரவலாக இருந்த ஒரு சாதிவெறி எண்ணம். அதற்கு தற்பொழுது பாமக மேடையில் இடம் கொடுத்து இருக்கிறார் ராமதாஸ். ராமதாசே விடுதலைச் சிறுத்தைகளை கட்டப்பஞ்சாயத்து கும்பல் என வெளிப்படையாக பேசுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்றால் ராமதாசுக்கு அருகில் நிற்கும் காடுவெட்டி குரு யார் ? காடுவெட்டி குரு என்ன பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயின்று கட்சி நடத்துகிறவரா ? அல்லது அன்புமணி ராமதாஸ் போல ஏற்காடு கான்வென்ட்டில் படித்தவரா ? ஜெயங்கொண்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடி தானே இன்றைய வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ?<br />
<br />
தருமபுரி நாயக்கன்கொட்டையில் நடந்த கலவரம் போல கடலூரிலோ, விழுப்புரத்திலோ இன்றைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதே என் நம்பிக்கை. காரணம் வடமாவட்டத்தில் ஒரு தலித் குடிசை எரிக்கப்பட்டால் பதிலுக்கு ஒரு வன்னியர் குடிசை எரியும் என்ற அச்சம் இருக்கிறது. திருப்பி அடிப்பார்கள் என்ற பயம் தான் கலவரங்களைக் குறைக்கும் என நான் நம்புகிறேன்.<br />
<br />
***********<br />
<br />
அரசியலில் ரவுடிகள் வந்ததால் விளைந்த மிகப் பெரிய அவலமே இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்களின் வளர்ச்சி. ஒரு வகையில் இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை வளர்த்து விட்டது திமுகவின் உள்ளூர் தலைவர்களே. உட்கட்சி தேர்தலில் தங்களை எதிர்த்து நிற்பவர்களை தோற்கடிக்க திமுக தலைவர்களே இந்தக் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். திமுக, அதிமுக போன்ற நிலைநிறுத்தப்பட்ட அரசியல் கட்சிகளின் அடியாள் பலத்தை எதிர்கொள்ள தங்களுக்கும் ஆட்பலம் தேவை என அரசியல் கட்சி தலைவர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் திமுக வளர்த்து விட்ட அரசியல் கலாச்சாரத்தை அதன் வழியில் புதியதாக அரசியல் தொடங்குபவர்களும் பின்பற்ற தொடங்கி விடுகிறார்கள். பாமக, தேமுக, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளுமே அதனைப் பின்பற்றுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு புதியதலைமுறை செய்திகளில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 40க்கும் மேற்பட்ட பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி செய்த பொழுது லாலு வளர்த்து விட்ட இத்தகைய கும்பல் தான் மொத்த ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகம் அந்த நிலை நோக்கி செல்லுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.<br />
<br />
கட்டப்பஞ்சாயத்து சட்டவிரோதமானது. அதனை ஒடுக்க முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசாங்கமும் அதனை செய்யாது. கட்டப்பஞ்சாயத்து மூலம் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்துக்களையும் ஒழிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தால் விடுதலைச் சிறுத்தைகளும் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போவதில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சொல்வது சாதீயமே...</div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-71548433367052545462013-05-04T19:12:00.000-04:002013-05-04T19:15:15.027-04:00சாதி வெறி பாசிசப் பாதையில் பாமக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்னுடைய முகநூலில் (Facebook) மே 2ம் தேதி எழுதியதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் - <a href="https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564&set=a.2136588627154.116605.1619275375&type=1">https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564&set=a.2136588627154.116605.1619275375&type=1</a><br />
<br />
வடமாவட்டங்களில் நிலைமை இன்னமும் பதற்றமாக இருந்து கொண்டிருக்கிறது. வடமாவட்டங்கள் சாதி பூசலில் இருபது ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது ஒரு ஆபத்தான போக்காவே தென்படுகிறது. ஊரில் இரு தரப்பிலும் உள்ள நண்பர்களிடம் பேசும் பொழுது ஒருவர் அடுத்தவரை குற்றம்சாட்டும் போக்கு அதிகமாக உள்ளது. எதிர்தரப்பை நோக்கி கோபமும், துவேசமும் பொங்க பேசும் வெறுப்பு பேச்சுகள் என்னை அச்சப்படுத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வளர்த்து விட்ட சாதி வெறி போதாதென்று மக்கள் தொலைக்காட்சி பொதுமக்களின் உணர்வுகள் என்ற பெயரியில் கடந்த சில தினங்களாக இன்னும் அதிகமான வெறியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சகமனிதன் மீது ஏற்படுத்தப்படும் வெறுப்பு ஒரு ஆபத்தான போக்கு ஆகும்.<br />
<br />
*****************<br />
<br />
பாமக என்ற அமைப்பு மீது கடந்த காலங்களில் பல தரப்புக்கும் பல்வேறு காரணங்களால் நம்பிக்கை இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு கிடைத்த நேரடி மற்றும் மறைமுக பொருளாதார உயர்வு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தங்கள் இடங்களை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு, இழப்பீடு போன்றவை பாமக என்ற அமைப்பால் கிடைத்த சில பலன்கள். இது தவிர 1991க்குப் பிறகு ஈழவிடுதலையை தமிழ்நாட்டில் யாருமே பேச முடியாமல் இருந்த சூழலில் பாமக முதலில் பேச தொடங்கியதும் பாமக என்ற அமைப்பினை சாதிக்கு வெளியே "தமிழ் தேசிய" வெளிக்கு கொண்டு வந்தது. அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஈழவிடுதலையை பேசிய பாமகவை தடைசெய்ய சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பியது. 1991க்குப் பிறகு திமுக கைவிட்ட ஈழவிடுதலையை பாமக தன் கையில் எடுத்த சூழலில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள் பாமகவை ஆதரித்தனர். அதை தொடர்ந்து பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து ஏற்படுத்திய தமிழ் பாதுகாப்பு இயக்கம் போன்றவை எல்லாமே ஒரு முற்போக்கு முயற்சியே. சாதியை மையப்படுத்தி எழுந்த ஒரு அமைப்பு பரந்துபட்ட வெளிக்கு தன்னை புகுத்திக் கொள்வது வரவேற்கதக்கவையாகவே இருந்தது.<br />
<br />
ஆனால் தேர்தல் அரசியலில் பாமக சந்தர்ப்பவாத அரசியலையே மேற்கொண்டது. மாறி மாறி கூட்டணி அமைத்த பாமக 2004ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அன்புமணியை அமைச்சார் ஆக்கியது. பதவி சுகம் கண்ட பாமக படிப்படியாக தன்னுடைய எல்லா முற்போக்கு நிலைப்பாடுகளையும் கைவிட தொடங்கியது. தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதையே முக்கிய நோக்கமாக கொண்டது. அன்புமணிக்கு ராஜசபா இடம் வாங்குவதையே முக்கிய இலக்காக கொண்டு பாமக செயல்பட்டது. 2009 பாரளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியும், 2011 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் பாமகவின் அதிகார வெறிக்கு சாவு மணி அடித்த நிலையில் சாதிவெறியே அதிகாரத்தை கைப்பற்ற ஒரே வழி என்று முடிவு செய்து பாமக இன்றைக்கு ஒரு முழுமையான சாதி வெறி பாசிசப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. <br />
<br />
1980களில் வன்னியர் சங்கம் என்ற சாதி அமைப்பாக செயல்பட்ட பொழுது கூட வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அது முன்வைத்ததே தவிர தலித்களை நோக்கி "மேளம் கொட்டுபவன்" என இழிவாக யாரும் பேசியதில்லை. ஆனால் இன்றைக்கு அத்தகைய ஒரு தரம் தாழ்ந்த நிலைக்கு பாமகவை ராமதாசும், காடுவெட்டி குருவும் கொண்டு வந்து விட்டனர். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டு கொண்டு கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு இருப்பதாக பேசும் பேச்சுகள் சாதி வெறியின் உச்சக்கட்டமாகவே உள்ளது. கலப்பு திருமணங்களை எதிர்ப்பதும், தலித்களின் பொருளாதார பலத்தை சிதைப்பதும் ஒரு பாசிச போக்கு ஆகும். அத்தகைய பாசிசத்தை மனிதநேயம் கொண்ட யாருமே ஆதரிக்க முடியாது.<br />
<br />
*****************<br />
<br />
வடமாவட்டங்களில் சாதியை ஒழிக்கும் முயற்சிகள் 1980களில் இருந்து தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. சாதி ஒழிப்பில் சாதியால் வன்னியர்களாக இருந்த பலரும் பங்காற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்த தமிழ்தேசியத்தின் முக்கியமான குரல் வடமாவட்டங்களில் இருந்தே எழுந்தது. தமிழ் சமூகத்தில் உள்ள சாதிகளை ஒழிக்காமல் தமிழ்தேசியத்தை அமைக்க முடியாது என்று அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன் அவர்கள். சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த பொழுது "சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" என்ற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பை 1980களில் தொடங்கிய தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பு பற்றி எழுதிய கருத்துக்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். 1980களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் இன்றைக்கும் சாதி ஒழிப்பை பேசவேண்டியுள்ளது மிக மிக அவலமான சூழ்நிலை ஆகும்.<br />
<br />
<br />
<a href="http://1.bp.blogspot.com/-XHW98h1JnOA/UYWUhZn3lvI/AAAAAAAADdM/wIMHv0xxJcM/s1600/Caste_tamilarasan.jpg" imageanchor="1"><img border="0" src="http://1.bp.blogspot.com/-XHW98h1JnOA/UYWUhZn3lvI/AAAAAAAADdM/wIMHv0xxJcM/s320/Caste_tamilarasan.jpg" /></a> <br />
<br />
1980களில் சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த பலர் கடுமையான போலீஸ் அடக்குமுறைக்கு உள்ளாகினர். வன்னியர் சமூகத்தை சேர்ந்த பலர் 1989ல் பாமக தொடங்கிய பொழுது அதனுடன் இணைந்தனர். பாமகவின் முற்போக்கு வேடம் களைந்து விட்ட நிலையில் தமிழ்தேசிய உணர்வு கொண்ட அத்தகைய பலர் இன்றைக்கு பாமகவை விட்டு வெளியேறி வருகிறார்கள். பாமகவில் உள்ளவர்கள் உணர வேண்டியது பாமகவின் பாசிசப் பாதை ஒரு அழிவு பாதை என்பதே.<br />
<br />
*****************<br />
<br />
உலக வரலாறு எங்கும் வெறுப்பு காரணமாக கொல்லப்பட்ட சகமனித வரலாறுகளை நாம் வாசித்து வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான யூதர்களை நாசிக்கள் கொல்ல காரணமாக இருந்தது யூதர்கள் மீது ஹிட்லர் குரூரமாக பரப்பிய வெறுப்பு. துட்சி இனமக்கள் ருவாண்டாவில் கொல்லப்பட காரணமாக இருந்ததும் அதே வெறுப்பு தான். சிங்களர்கள் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக செய்த வெறுப்பு பிரச்சாரமே 2009ல் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. தமிழகத்தில் அது போல நிகழ வாய்ப்பில்லை என்றாலும் வெறுப்பு பிரச்சாரம் ஒரு ஆபத்தான பாதை என்பதே உலக வரலாற்றில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம். அதுவும் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலைக்கு பறிகொடுத்த தமிழர்கள் நிச்சயம் தம் சக தமிழர்களையே வெறுக்கும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எந்தச் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விலைபோக மாட்டார்கள்.<br />
<br />
சாதி அடுக்குகளை கொண்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிற நாம் எல்லோருமே சாதி என்ற சட்டையை பிறப்பிலே அணிந்தே பிறந்திருக்கிறோம். அந்தச் சட்டையை அறிவுமுதிர்ச்சியுடன் கழுட்டி எறிவதே சரியான மனிதகுல வளர்ச்சியாக இருக்க முடியும். அடிப்படையில் மனிதநேயம் மிக்க ஒரு மனிதனாக இருப்பதையே என்னுடைய முதல் மற்றும் முக்கிய அடையாளமாக கருதுகிறேன். அதைத் தாண்டியும் ஒரு அடையாளம் வேண்டும் என்றால் "தமிழன்" என்ற அடையாளம் மட்டுமே எனக்கு தேவையாக உள்ளது. அதைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் நாம் உதறித்தள்ள வேண்டும். இதையே என்னுடைய கோரிக்கையாக வன்னியர்களிடமும் பிற சாதி நண்பர்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன்.<br />
<br />
மனிதநேயம் மிக்க தமிழனாக மட்டும் இருப்போம்....<br />
<br />
<br /></div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148241.post-80159045284927435332011-11-24T16:39:00.001-05:002011-12-02T21:21:04.108-05:00Mullai Periyaru - Environmental impact of Dams and Kerala's PR Machine<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து பேஸ்புக்கில் நான் எழுதிய ஆங்கில கட்டுரையை இங்கே வெளியிடுகிறேன்...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-SuTje8B6MZM/TtldLD3cXxI/AAAAAAAADLY/W7syAfZzffw/s1600/Mullai-periyaru-dam2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="220" src="http://2.bp.blogspot.com/-SuTje8B6MZM/TtldLD3cXxI/AAAAAAAADLY/W7syAfZzffw/s320/Mullai-periyaru-dam2.jpg" width="320" /></a><a href="http://1.bp.blogspot.com/-cjfRhppMq4k/Ts68-R1pfBI/AAAAAAAADKo/scaRgXFNr6M/s1600/Mullai-periyaru-dam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">I always consider my Identity as a
Tamil. Just Tamil. No further Nationality is required for me. But even more
than that, I primarily consider myself as a Human. I love my Mother Earth. I
like to save my environment and Earth from ruthless exploitation which results
in global warming and climate change. That’s the reason I oppose the Nuclear
Power Plant in Kudankulam. Not only in Kudankulam, I will also oppose Nuclear
Power Plant in Jaitapur or even in Kabul. But Kudankulam being in Tamilnadu
gives me more vigor to oppose it as Tamilnadu is my own Land</span></span><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<br />
<span class="messagebody">While I oppose the Nuclear Power plant for Environmental
reason, I also oppose the construction of Dams. I am an environmentalist and I
have to oppose the Dams as it is dangerous to the environment. Dams are
unnatural structures which disturbs the natural River Ecosystem. I am against
Dams of any kind. Whether it is New Dams or Old Dams, Dams are bad. Dams were
created not just for Storing water for irrigation. It’s only a starting point.
Human greed takes it further to generate Hydroelectricity, drawing water for
Industrialization and so on. And in the process Dams pose a threat to the
environment</span><br />
<br />
<span class="messagebody">Kerala says it will demolish the old Dam and construct
a new Dam. How will a new Dam save Kerala? It will also have to face earth
quakes? It can also get cracked in an earth quake. In fact many Scientists
believe that “Dams create the Earthquakes”. The Huge amount of water stored in
the reservoirs is the cause for many Earth quakes. So, Kerala’s theory that a
new Dam will save them is as theatrical as to say the old Dam will fail in an
Earth quake. Both new and old Dams are vulnerable in the event of an Earth
quake</span>. <span class="messagebody">Adding to this, there is a scientific
proof to link Dams as a cause for Earthquakes. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">Let me quote a Scientific theory
here (<a href="http://www.internationalrivers.org/node/3845" target="_blank">http://www.internationalrivers.org/node/3845</a>)</span></span><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<span class="messagebody"><a href="http://www.internationalrivers.org/node/3845" target="_blank">“Earthquakes can be induced by dams. Globally, thereare over 100 identified cases of earthquakes that scientists believe weretriggered by reservoirs. The most serious case may be the 7.9-magnitude Sichuanearthquake in May 2008, which killed an estimated 80,000 people and has beenlinked to the construction of the Zipingpu Dam.”</a></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">If Kerala’s claim that Mullai
Periyaru Dam is in a seismic zone, it holds true for the new Dam it plans to
replace Mullai Periyaru. As nature of Earthquakes is unpredictable, so does the
stability of the Dams even if it is constructed with ultra-modern technology.
There is no 100% safety for the new Dams or Old Dams.</span></span><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<br />
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">So, what’s the aim of Kerala? What is the ultimate motive
behind this massive PR campaign of Kerala and Malayalees ?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<span class="messagebody">As much as the Kudankulam issue which tries to give
power to the Business elites, Kerala’s cry about Dam safety has more
Electricity and Economic reason than Safety. Kerala’s PR machine does not
oppose the Dams in total. They selectively oppose only Mullai Periyaru Dam
which is in the control of Tamilnadu. They don’t oppose the Idduki Reservoir
which gives electricity to Kerala. If Dams are totally bad as “Dam 999” says,
why would they want to construct a new Dam? Should not they get rid of all Dams
in Kerala (Like the Elwha Dam removal in USA) ?</span><br />
<br />
<span class="messagebody">The whole issue comes down to the perception of Kerala
that Tamilnadu pays less taxes for the water and electricity it produces from
the Mullai Periyaru Dam and that Kerala could not meet its state demand of
electricity from its Idukii reservoir. If Kerala needs to reprice the taxes
that Tamilnadu pays, it is only reasonable for it to come out openly and ask
for new taxes based on the current Inflation. </span></span><span class="messagebody"><span style="font-family: Tahoma, sans-serif;">But Kerala indulges
in fear mongering to achieve multiple purposes.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span style="font-family: Tahoma, sans-serif;"><br /></span></span></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">Constructing a new dam will hit multiple
mangoes in one stone for Kerala</span></span></div>
<div class="MsoNormal">
</div>
<ul style="text-align: left;">
<li><span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">The lease of the land to Tamilnadu for 999 years will
expire automatically with the construction of new dam.</span></li>
<li><span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">Tamilnadu will lose its rights
over the land to get water and generate electricity</span></li>
<li><span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">Kerala can use the new dam to generate electricity to
meet its state Demand</span></li>
</ul>
<br />
<div class="MsoNormal">
<span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">Power and Economy are the primary motive behind Kerala's fear mongering PR drive. In this PR campaign Kerala unleashes many fictional stories, such as Kerala's claim </span><span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">that the Agreement of
1886 to give Tamilnadu the rights for 999 years was not a fair deal and it was thrust
on it in by the erstwhile British Presidency of Madras on the Princely state of
Travancore. Kerala’s fiction is that the mighty British empire forced the
agreement on the small Princely state of Travancore. However, in 1970 the
Kerala (Chief Minister C. Achutha Menon) and Tamil Nadu governments signed a formal agreement to renew the 1886
treaty almost completely. In Independent India, when Tamilnadu lost its lands such as Devikulam and Peermade to Kerala, it can only be fictional to say the Agreement was forced on Kerala. </span></div>
<div class="MsoNormal">
<span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span class="Apple-style-span" style="font-family: Tahoma, sans-serif;">May be in 1970 Kerala Politicians did not foresee the Power challenges in a modern World. Since
1970 the demand for Electricity has grown in Kerala and it needs Mullai Periyaru
to meet its demand. So, a new Dam is a clever ploy to kick out Tamilnadu and
take full control of the Mullai Periyaru Dam</span></div>
<div class="MsoNormal">
<span lang="EN">
<br />
<span class="messagebody" style="font-family: Tahoma, sans-serif;"><o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span class="messagebody"><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;">Kerala’s well-oiled PR machines uses
sleight of hand tactics to hide the actual reason and fabricates Mullai Periyaru
into a safety issue. Kerala claims that it is ready to bear the cost of
constructing a new Dam and it is magnanimous enough to provide water to
Tamilnadu. It portrays as if it is concerned only about the safety of the people. But the actual fact is, the day Kerala starts its new Dam construction, Tamilnadu loses
all its rights as the old lease agreement will expire automatically. It is a
well calculated game plan of Kerala. After all, Malayalee IAS, IPS and IFS
officers run entire India. So, they know better lobbying than slogan shouting
Tamils.</span></span><span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<br />
<span class="messagebody">Kerala is a water surplus state. Kerala is not
dependent on Agriculture and does not grow crops such as Paddy in its river
basin. Kerala imports most of its food products from Tamilnadu. So, water is
not the problem here. It’s again the power politics, politics of money and
Power, is playing here. The same power issue which haunts Tamils at Kudankulam is
haunting us in Mullaiperiyaru also. <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><br />
<span class="messagebody">As I said in this article, Dams are always Dangerous
and we should avoid Dams. Let’s start a debate of carefully demolishing all the
many mindless Dams constructed in many Rivers. Tamilnadu being the downstream
state of many rivers was a victim of many mindless Dams constructed across
rivers such as Cauvery. I am all for demolishing such Dams in a systematic
fashion like the Elwha Dam removal in USA. Let’s carefully demolish all Dams
across Cauvery. Let Nature runs its own course, whether it is Cauvery or
Periyaru river.</span><br />
<br />
<span class="messagebody">******************</span><br />
<span class="messagebody">Tamils were just reduced to slogan shouting, Tamil
jingoistic herd; Look at Malayalees who have unleashed their PR machines in a much more sophisticated pattern. From Hollywood movies to Save Mullaperiyar
campaign in Facebook, their campaign is a well-oiled PR Machine. </span><br />
<br />
<span class="messagebody">Tamils need a better PR machine to expose Kerala’s
Political Games. Let’s bring out these facts rather than just slogan shouting
Tamil jingoism. </span><br />
<br />
<span class="messagebody">Let's think about how we can do it...</span><o:p></o:p></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody"><br /></span></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody">***************</span></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody">Please spend some time to watch these videos about Mullai Periyaru Dam - The Real story of Mullai Periyar Dam</span></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody"><br /></span></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody">Join Save Mullai periyar Dam Facebook Campaign - <a href="http://www.facebook.com/mullaiperiyar" target="_blank">http://www.facebook.com/mullaiperiyar</a></span></span><br />
<span lang="EN" style="font-family: Tahoma, sans-serif;"><span class="messagebody"><br /></span></span></div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/eXti8xblCLM" width="560"></iframe>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/pDYDBcfziDE" width="560"></iframe>
</div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6148241.post-32165940561758430712011-10-20T12:48:00.000-04:002011-10-20T17:40:16.900-04:00தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல் வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன் முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் குழுமங்களிலும், வலைப்பதிவுகளிலும் வாசகனாக மட்டும் இருந்த எனக்கு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ்மணம் தான்.<br />
<br />
2004ல் தமிழ்மணம் எனக்கு முதன் முதலில் அறிமுகமான பொழுது வலைப்பதிவிற்கு வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் எனக்கும் வாசகர்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலேயே எழுதத் தொடங்கினேன். 2004ல் இருந்து 2006வரை தமிழ்மணத்தை ஒரு பயனாளனாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். 2006ல் இருந்து தான் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறேன். தமிழ்மணத்தை நண்பர் காசியிடம் இருந்து பெற்று "தமிழ் மீடியா இண்டர்நேஷனல்" என்ற தன்னார்வ நிறுவத்தை உருவாக்கிய பொழுது தான் நான் இதில் இணைந்தேன். எனவே நான் முதலில் ஒரு வலைப்பதிவன். பிறகு தான் நிர்வாகி. தமிழ்மணத்தை ஒரு வாசகர், பதிவர் நிலையில் இருந்தும் பார்த்திருக்கிறேன். நிர்வாகியாகவும் பார்த்து இருக்கிறேன். இரண்டு பார்வைக்கும் இரு வேறு பரிமாணங்கள் உண்டு.<br />
<br />
தமிழ்மணம் தொடங்கிய பயணத்தில் தமிழ் வலைப்பதிவு உலகம் வேகமாக விரிவடைந்தது. தமிழ்மணத்தை தொடர்ந்து மறைந்த சாகரன் தேன்கூடு திரட்டியை உருவாக்கினார். 2006ல் நண்பர் குழலி தமிழ்வெளியும், பிறகு நண்பர் வெங்கடேஷின் திரட்டி போன்றவையும் வந்தன. சமீப ஆண்டுகளில் பிலிக்கை அடிப்படையாக கொண்டு பல புக்மார்க்கிங் தளங்களும் வந்தன. தமிழ் எழுதுவது எப்படி என கடினப்பட்டு தேடிக் கொண்டிருந்த காலம் மறைந்து இன்றைக்கு இணைய உலகம் முழுவதிலும் “தமிழ்” விரிவடைந்து விட்டது. இதற்கு காரணமானவர்கள் பலர். தேனீ எழுத்துரு உருவாக்கிய உமர் வலைப்பதிவுகளில் தமிழ் தெரிய வழிவகுத்தார். சுரதா, முகுந்த் போன்ற நண்பர்கள் தமிழ் தட்டச்சியை எளிதாக்கினர். குறிப்பாக முகுந்த்தின் இ-கலப்பையை கொண்டு தான் தமிழ் வலைப்பதிவுகளில் உழுது கொண்டிருந்தோம். காசி ஆரம்பித்த தமிழ்மணம் வலைப்பதிவுகளை பெருக்கியது. இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களை தவிர இன்னமும் எண்ணற்றோர் தமிழை இணையத்தில் கொண்டு வர உழைத்திருக்கிறார்கள்.<br />
<br />
இந்த உழைப்பின் மூலமான தமிழின் பரவல் மகிழ்ச்சியை தருகிறது. பேஸ்புக், கூகுள் ப்ளஸ், டிவிட்டர் என இன்றைக்கு தமிழை சுலபமாக எங்கும் நுழைக்க முடிகிறது. இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் தமிழ் எழுத்து உலகிற்கு இது ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. 2004ல் தொடங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்த பலர் இன்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் முடங்கிப் போய் விட்டார்கள். பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களை வெறும் அரட்டை தளங்களாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. வலைப்பதிவில் இருக்கிற ”எழுத்து சுகம்” இந்த சமூகத் தளங்களில் கிடைப்பதில்லை.<br />
<br />
************<br />
<br />
பிரபல பதிவர்கள் என்ற சொற்றொடர் தற்பொழுது வலைப்பதிவுகளில் பிரபலமாக உள்ளது. பிரபல பதிவர் என்ற இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியும் நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வலைப்பதிவில் பிரபல பதிவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நகர முடியாது.<br />
<br />
நானும் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்த காலத்தில் வாழ்க்கையில் நகரவில்லை. வாழ்க்கையில் நகர வேண்டும் என முடிவு செய்த பின்பு வலைப்பதிய நேரமில்லை. இப்படி பிரபல பதிவர்களாக இருந்து இன்று வலைப்பதிவில் காணாமல் போன நிறையப் பேரினை தெரியும். எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக செய்யாத யாரும் வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து கொண்டிருப்பது கடினம். வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக கூட இருக்கும். ஆனாலும் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கு முழு நேர தொழில் எழுத்து அல்ல. எழுத்து ஒரு ஆர்வம் மட்டுமே. சமூகம் மீதான நம்முடைய பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் அந்த ஓட்டத்தினூடே பகிர்ந்து கொள்ள டிவிட்டரும், பேஸ்புக்கும், கூகுள் பஸ்சும் தான் சுலபமாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த ஊடகங்களில் இருக்கும் மாயையும், எழுத்தில் இருக்கும் போதையும் அதனை எழுதும் பொழுது தான் தெரிகிறது.<br />
<br />
இப்படியான வாழ்க்கைச் சக்கரத்தால் தான் பதிவர்கள் வலைப்பதிவில் இருந்து மறைவதும், புதியவர்கள் நுழைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே நாங்கள் தான் வலைப்பதிவர்கள். எங்களைச் சார்ந்து தான் எல்லாமும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு வலைப்பதிவருக்கு வாசகர்கள் தேவை என்றால் திரட்டிகள் தேவை. திரட்டிகள் ரயில்கள் போன்றவை. ரயில்களில் புதியவர்கள் ஏறுவதும், பழையவர்கள் இறங்குவதும் இயல்பாக நடப்பவை. ரயில்களில் ஏறுபவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For men may come and men may go. We will go on forever. <br />
<br />
பதிவர்களே மாறிக் கொண்டே இருக்கும் சூழலில் வலைப்பதிவர்களாக இருந்து தமிழ்மணத்தை நிர்வாகம் செய்யும் நாங்கள் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து நிற்பதே ஒரு இமாலய சாதனை தான். இதனை ஏதோ தற்பெருமையாக சொல்ல வில்லை. ஒரு தளத்தினை நடத்தும் எவரும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே தமிழ்மணத்தினை நடத்திக் கொண்டிருக்க காரணம் தமிழ்மணம் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு மாற்று ஊடகமாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தளத்தினை தொடர்ந்து நடத்துவதை நாங்கள் ஒரு கடமையாக கருதுகிறோம். எனவே எங்களுடைய ரயில் ஓடிக் கொண்டே தான் இருக்கும். எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர இழுத்து மூடி விட மாட்டோம்.<br />
<br />
வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம், நக்கீரன் போன்ற தளங்களே இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தமான உண்மை. தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச் செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தம்.<br />
<br />
இதையெல்லாம் நான் எங்களை நோக்கி அவதூறு செய்பவர்களுக்கு சொல்ல வில்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே சொல்கிறேன். அவதூறு செய்பவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் எப்பொழுதோ தமிழ்மணம் காணாமல் போய் இருக்கும். தமிழ்மணத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அவதூறுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.<br />
<br />
************<br />
<br />
2004ல் தமிழ்மணம் தொடங்கப்பட்ட காலம் முதலே தமிழ்மணத்திற்கு மாற்றாக ஒரு திரட்டி தேவை என்ற கருத்தினை பலரும் முன்வைத்து வந்துள்ளனர். இன்றைக்கு பல புக்மார்க்கிங் தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும் ஒரு வலைப்பதிவினைச் சார்ந்த அத்தனை பரிமாணங்களையும் (பதிவுகள், மறுமொழிகள், குறிச்சொற்கள், வகைப்படுத்தல், முன்னணி பதிவுகள், வாசகர் பரிந்துரைகள் போன்றவை) கொண்ட திரட்டியாக தமிழ்மணம் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு திரட்டியை உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல. மிக மிக சுலபமானது தான். அவதூறு செய்யும் நேரத்தில் உருப்புடியாக எழுதலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கலாம்.<br />
<br />
2007ல் வேறொரு வலைப்பதிவு பிரச்சனையில் ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? என்ற பதிவை எழுதினேன். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 2007 என்பது தற்பொழுது கற்காலம் போன்றது. ஆனாலும் இந்த அடிப்படையை வைத்து எவரும் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். தமிழ்மணத்தை விட மிகவும் சிறப்பான திரட்டி உருவானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே<br />
<br />
<a href="http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html">ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? - http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html</a><br />
<br /></div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-6148241.post-71631737584784826692011-10-10T21:07:00.021-04:002011-10-11T00:21:39.059-04:00அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://3.bp.blogspot.com/-ds-L2gQv5e0/TpOo4d1g4yI/AAAAAAAADJU/ngonW5C-ZNw/s1600/gty_occupy_wall_Street_union_thg_111007_wg.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054844570067746" src="http://3.bp.blogspot.com/-ds-L2gQv5e0/TpOo4d1g4yI/AAAAAAAADJU/ngonW5C-ZNw/s320/gty_occupy_wall_Street_union_thg_111007_wg.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 180px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a>வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. <br />
<div>
<br /></div>
<div>
வால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்<br />
<br />
<b>தற்போதைய அரசியல் சூழ்நிலை</b><br />
<br />
இந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.<br />
<br />
தற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (<a href="http://blog.tamilsasi.com/2010/03/health-care-reform-tamilnadu-insurance.html">சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை</a>) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.<br />
<br />
<br />
சுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்டியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.<br />
<br />
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின் ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.<br />
<br />
****************</div>
<div>
<b>பணக்காரர்களுக்கு வரி விதிப்பு</b><br />
<br />
ஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-8eZ2qOD42zQ/TpOoco-kWMI/AAAAAAAADI8/91X_1YBMkUs/s1600/gty_occupy_Wall_street_nt_111005_wg.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054366524496066" src="http://4.bp.blogspot.com/-8eZ2qOD42zQ/TpOoco-kWMI/AAAAAAAADI8/91X_1YBMkUs/s320/gty_occupy_Wall_street_nt_111005_wg.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 180px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a>வேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.<br />
ஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.<br />
<br />
பணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.<br />
<br />
****************<br />
<br />
உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்ன தான் நடக்கிறது ? அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.</div>
<div>
<br /></div>
<div>
<b>ரீகனின் பொருளாதாரம் - Trickle down Economics</b><br />
<br />
இந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.<br />
<br />
அது என்ன Trickle down Economics ? அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.<br />
தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.<br />
<br />
இந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.</div>
<div>
<br /></div>
<div>
<b>ரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்</b></div>
<div>
<br />
<br />
<a href="http://2.bp.blogspot.com/-oIU2WL8DWNU/TpOqLWGf7-I/AAAAAAAADJ4/zdDFoYr4N9s/s1600/real-average-earnings-have-not-increased-in-50-years.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662056268422967266" src="http://2.bp.blogspot.com/-oIU2WL8DWNU/TpOqLWGf7-I/AAAAAAAADJ4/zdDFoYr4N9s/s320/real-average-earnings-have-not-increased-in-50-years.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 240px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a>பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-7Q8glzcXokE/TpOpQE7auhI/AAAAAAAADJg/UeQWX_0ZNqY/s1600/pay-graph1.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662055250200803858" src="http://4.bp.blogspot.com/-7Q8glzcXokE/TpOpQE7auhI/AAAAAAAADJg/UeQWX_0ZNqY/s320/pay-graph1.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 240px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a>சரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா ? இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.<br />
<br />
<br />
பணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.</div>
<div>
<br /></div>
<div>
<b>அமெரிக்காவின் பொருளாதார சரிவு</b><br />
<br />
ரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.<br />
<br />
ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
<b>Collateralized debt obligation மற்றும் Credit Default Swaps</b> </div>
<div>
<br />
சரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் ? அவர்களுக்கு பணம் வேண்டாமா ? அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.<br />
<br />
இது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது ? நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.<br />
<br />
2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ? அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.<br />
<br />
ரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன ? வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.</div>
<div>
<br /></div>
<div>
<b>Bailout</b><br />
<br />
எந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தாலும் வேறு வழியில்லை.<br />
<br />
இவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.</div>
<div>
<br /></div>
<div>
<b>வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்</b><br />
<br />
<a href="http://2.bp.blogspot.com/-QlA5kDHRMQU/TpOoLBfcfnI/AAAAAAAADIw/oy09QukzScA/s1600/Day_7_Occupy_Wall_Street_September_23_2011_Shankbone_2.JPG"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054063867199090" src="http://2.bp.blogspot.com/-QlA5kDHRMQU/TpOoLBfcfnI/AAAAAAAADIw/oy09QukzScA/s320/Day_7_Occupy_Wall_Street_September_23_2011_Shankbone_2.JPG" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 320px; margin: 0 10px 10px 0; width: 213px;" /></a>இடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.<br />
<br />
இவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).<br />
<br />
*********************<br />
<br />
<a href="http://4.bp.blogspot.com/-YSkjKLDBCgk/TpOotxILIhI/AAAAAAAADJI/mbYizQXPYak/s1600/Brooklyn-Bridge-Arrests.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662054660770046482" src="http://4.bp.blogspot.com/-YSkjKLDBCgk/TpOotxILIhI/AAAAAAAADJI/mbYizQXPYak/s320/Brooklyn-Bridge-Arrests.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 180px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a><br />
இடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.<br />
<br />
<a href="http://1.bp.blogspot.com/-w5vc0MKV2rI/TpOpgBEb1GI/AAAAAAAADJs/nCwjCWQ9nx4/s1600/if-you-arent-in-the-top-1-then-youre-getting-a-bum-deal.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5662055524042789986" src="http://1.bp.blogspot.com/-w5vc0MKV2rI/TpOpgBEb1GI/AAAAAAAADJs/nCwjCWQ9nx4/s320/if-you-arent-in-the-top-1-then-youre-getting-a-bum-deal.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 240px; margin: 0 10px 10px 0; width: 320px;" /></a>99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% மக்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.<br />
<br />
<br />
*****************<br />
<br />
வர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.</div>
</div>
தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-6148241.post-29900174217021162202010-07-08T14:52:00.009-04:002010-07-08T18:09:58.486-04:00பெட்னா 2010 - அனுபவங்களும், விமர்சனங்களும்வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் சுதந்திர தின வார இறுதியில் அமெரிக்காவின் ஏதேனும் ஒரு நகரில் பெட்னா விழாவினைக் கொண்டாடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு 23வது ஆண்டு நிகழ்வு கனெக்டிக்கெட் மாநிலத்தில் உள்ள வாட்டர்பெரி நகரத்தில் ஜூலை 3,4,5 ஆகிய மூன்று தினங்களில் நடந்து முடிந்துள்ளது. முதன் முறையாக இந்த ஆண்டு பெட்னாவில் கலந்து கொண்டேன். பெட்னா குறித்து கேள்விப்பட்டதற்கும், பெட்னாவில் பெற்ற அனுபவத்திற்கு பெரிய வேறுபாடு இருந்தது. நிகழ்ச்சிகள் குறித்து பாரட்டுதல்களும், விமர்சனங்களும் உள்ளன. ஏமாற்றம், ஆச்சரியம் என இரண்டு உணர்வுகளும் பெட்னா விழாவில் ஏற்பட்டது. முதல் நாள் ஏமாற்றமும், இரண்டாம் நாள் நிகழ்வுகள் நம்பிக்கையையும் அளித்தன. மூன்றாம் நாள் இலக்கிய நிகழ்வுகளில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை கேட்க முடிந்தது. பெட்னாவின் அனைத்தும் பிடித்திருந்தது என சொல்லி விட முடியாது. ஆனால் மனநிறைவை அளிக்கும் நிகழ்வுகள் பெட்னாவில் இருந்தன.<br /><br />முதலில் நிகழ்ச்சி நடத்திய பெட்னா குழுவினருக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 2500பேர் உட்காரக் கூடிய அரங்கம் நிரம்பி இருந்தது. தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அரங்கம் நிரம்பி இருந்தது. இவ்வளவு பேரையும் ஒழுங்குப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உணவு ஏற்பாடுகள் தொடங்கி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகவே இருந்தன.<br /><br />**************<br /><br />முதலில் பெட்னாவைக் குறித்து இந்த ஆண்டு எழுந்த சில விமர்சனங்களைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். பெட்னாவையும், செம்மொழி மாநாட்டையும் ஒப்பிடுவது போன்ற லூசுத்தனமான வாதம் வேறு ஒன்றும் கிடையாது. பெட்னா என்பது ஒரு தனியார் அமைப்பு. யாருடைய வரிப்பணத்தையும் எடுத்து தன்னுடைய தனிப்பட்ட கனவுகளையும், குடும்பத்தையும் முன்னிறுத்தி பெட்னா விழா நடைபெற வில்லை. ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறும் தனிப்பட்ட நன்கொடைகளையும், கட்டணங்களையும் கொண்டே பெட்னா விழாக்கள் நடந்து வருகின்றன. கருணாநிதியின் ஜால்ராக்களை நாம் எதிர்ப்பதால், கருணாநிதியின் சூரியக் குடும்பம் தமிழகத்தில் செய்து வரும் தில்லுமுல்லுக்களை நாம் வெளிப்படுத்துவதால் நாம் முன்னெடுக்கும் ஒரு விழாவினை கருணாநிதியின் உடன்பிறப்புகள் எதிர்க்கின்றனர். தமிழர்கள் மத்தியில் சரிந்துப் போன செல்வாக்கினை தூக்கி நிறுத்துவதற்காக பெட்னா முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழா, 23வது வருடமாக இந்த ஆண்டும் நடைபெற்றது. தவிரவும் தமிழர்களுக்கு நாடகங்களை நடத்தி துரோகங்களை பெட்னா செய்யவில்லை. அந்த துரோகங்களை மறைக்க விழா எடுக்கவில்லை. தமிழக மக்களின் வரிப்பணத்தில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பிசினஸ் க்ளாஸ் விமானப் பயணத்துடன் செம்மொழி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மத்தியில் தங்களின் சொந்தக் காசு போட்டு அமெரிக்காவின் பல மூலைகளில் இருந்தும் விமானத்தில் பெட்னாவிற்கு வந்திருந்தனர்.<br /><br />கருணாநிதி ஆதரவாளர்கள் ஒரு புறம் என்றால் சங்பரிவார் கும்பலும் பெட்னாவை குறித்து இணையத்தில் அவதூறுகளை பரப்பி வந்தது. அதற்கு ஒரு பிண்ணனி காரணம் உண்டு. பெட்னா அமெரிக்காவில் அனைத்து தரப்பு தமிழர்களையும் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பாக அமெரிக்க தமிழர்களை பிரதிபலித்து வருகிறது. சங்பரிவார் கும்பல் அமெரிக்காவில் முன்னெடுக்கும் ஹிந்துத்துவ முயற்சிகளை எதிர்க்கும் ஒரு அமைப்பாக பெட்னா செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாஜக இந்தியாவில் பாடப்புத்தகங்களில் தன்னுடைய கருத்துக்களை திணிக்க முயன்றது நினைவிருக்கலாம். அது போன்றதான ஒரு முயற்சியை 2005ல் சங்பரிவாரின் அமெரிக்க கும்பல் செய்ய முயன்றது. Vedic Foundation (VF), Hindu Education Foundation (HEF) போன்றவையே இந்த அமைப்புகள். இவை சங்பரிவாரின் அமெரிக்க முகங்கள். கலிபோர்னியா மாநிலத்தில் பாடப்புத்தகங்களில் இந்து மதம், சாதி, ஆரியர்கள் போன்ற குறிப்புகளை மாற்ற முயன்று கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் (தமிழ் உட்பட) சமஸ்கிருதமே அடிப்படை மூலம் என அமெரிக்க பாடதிட்டத்தில் இந்துத்துவத்தை திணிக்க சங்பரிவார் கும்பல் முயன்றது. ஆனால் இந்த முயற்சியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் விட்சல் போன்றவர்களும், பல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இடதுசாரி அமைப்புகளும் எதிர்த்தன. அவ்வாறான அமைப்புகளில் பெட்னாவும் ஒன்று. பெட்னாவின் அப்போதைய தலைவர் திரு.தில்லைக் குமரன், கலிபோர்னியா கல்வித்துறைக்கு எழுதிய கடிதத்தை இங்கே வாசிக்கலாம் - <a href="http://www.friendsofsouthasia.org/textbook/LetterToCAStateBoard_FeTNA.pdf">http://www.friendsofsouthasia.org/textbook/LetterToCAStateBoard_FeTNA.pdf</a>. இவ்வாறான அமைப்புகளின் கூட்டு முயற்சியின் காரணமாக சங்பரிவாரின் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.<br /><br />இவ்வாறு அமெரிக்காவில் தமிழ் மொழியைச் சார்ந்தும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் நலன்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும் பெட்னா இருந்து வருகிறது. அத்தகைய பெட்னா அமைப்பு தான் ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவினை நடத்தி வருகிறது. பெட்னா விழா என்பது அமெரிக்காவில் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வு. தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் சூழலில் தமிழர்களை ஒன்றிணைக்க இத்தகைய விழாக்கள் அவசியமாகிறது. பெட்னாவில் கலந்து கொள்பவர்களில் 95% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களே. பெட்னாவை ஒரு விழாவாக மட்டும் இல்லாமல் ஒன்று கூடும் நிகழ்வாகவே பலர் பார்க்கின்றனர். மூன்று நாட்கள் கலந்து கொண்டு விட்டு திரும்பிய வழியில் என் மனைவி மூன்று நாட்களும் சென்னையில் இருந்தது போல உணர்ந்ததாக தெரிவித்தார். இத்தகைய உணர்வு புலம்பெயர்ந்து வாழும் சூழலில் அவசியமாகிறது. தவிரவும் தங்களின் குழந்தைகளின் திறமைகளை அரங்கேற்றும் களமாகவும், நண்பர்களை சந்திக்கும் இடமாகவும், தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளை அடுத்த ஒரு வருடத்திற்கு திட்டமிடும் சிந்தனை வெளியாகவும் பெட்னா விளங்குவதை என்னால் உணர முடிந்தது.<br /><br />பெட்னாவை ஒரு முற்போக்கு அமைப்பாகவும், புலிகள் ஆதரவு அமைப்பாகவும் பல ஊடகங்கள் கடந்த காலத்தில் எழுதியிருக்கின்றன. அவ்வாறான கருத்தாக்கத்துடன் பெட்னாவில் கலந்து கொண்ட எனக்கு முதல் நாள் ஏமாற்றமே ஏற்பட்டது. பெட்னா நிகழ்ச்சிகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அவசியம் தான் என்றாலும் சன் டிவி, கருணாநிதி டிவி பாணியிலான நிகழ்ச்சிகள் அவசியம் தானா என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் என்னால் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக ப்ரியாமணி, லட்சுமி ராய் போன்ற பொம்மைக் கதாநாயகிகளை பெட்னா மேடையில் அரங்கேற்றுவதும், பிறகு மொம்மைக் கதாநாயகிகள் குறித்து கவிஞர் தாமரை பேசுவதும் பெருத்த முரண்பாடாக எனக்கு தெரிகிறது.<br /><br />சினிமாவையோ, சினிமாக் கலைஞர்களையே நான் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஆனால் தமிழ்ச்சினிமா பாணியில் சினிமாக் கலைஞர்களை அழகுப் பதுமைகளாக மேடை ஏற்றுவதை தான் நான் நிராகரிக்கிறேன். விக்ரம், ப்ரியாமணி, லட்சுமி ராய், ஸ்ரீராம் போன்றவர்கள் சில லட்சங்களை செலவழித்து விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களால் விழா ஏதேனும் நன்மைகளைப் பெற்றதா ? Did they add any value to the function ? சினிமா நட்சத்திரங்களிலேயே தன்னை அழைத்து வந்தமைக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் மட்டுமே எதனைப் பேச வேண்டும் என ஒரு திட்டத்துடன் வந்திருந்தார். அனைவரையும் சிரிக்கவும் வைத்தார். ஆனால் விக்ரம் எந்த ஒரு திட்டமும் இல்லமால், மேடை ஏறி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் தான் மேடையேறினார். ஏதோ பேசினார். என்னமோ கேள்வி கேட்டார்கள். பதில் சொன்னார். மறுநாள் இன்னிசையில் பாடல் சில பாடி தன் கடமையை முடித்து விட்டுச் சென்று விட்டார். குத்தாட்டம் ஆடி அவர் விருப்பத்திற்கு விழாவினை ப்ரியாமணி கடத்திச் சென்றார். தமிழும் பேசத் தெரியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் ஜவுளிக் கடை பொம்மை போல வந்துச் சென்றார் லட்சிமி ராய்.<br /><br />நான் சினிமா நட்சத்திரங்களை விமர்சிப்பதை விட பெட்னா மீது தான் இந்த விடயத்தில் என்னுடைய விமர்சனத்தை வைக்கிறேன். பாரதிராஜா போன்றவர்களை மேடையேற்றுவது போல இவர்களையும் மேடையேற்றி தமிழா விழித்து எழு, பொங்கி எழு என இவர்கள் பேசுவார்கள் என விழாக் குழுவினர் நினைத்தார்களா என்ன ? விழாவிற்கு ஏதோ வந்தோம், சென்றோம் என இல்லாமல் விழாவில் இதனைச் செய்ய வேண்டும் என்று சினிமா நட்சத்திரங்களுக்கு விழாக் குழு ஏதேனும் பணித்திருக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்களை நாம் தான் இயக்க வேண்டுமே தவிர அவர்களாக இயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. சினிமா நட்சத்திரங்களை அழைப்பது கூட்டத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி தான் என்றாலும் அவர்களை சில இலட்சங்கள் கொடுத்து அழைத்து வந்தமைக்கான நியாயம் விழாவில் எனக்கு தெரியவில்லை.<br /><br />**********<br /><br />பெட்னா விழாவின் உச்சம் என்றால் அது தெருக்கூத்து தான். முதல் நாள் நிகழ்ச்சிகளைச் சார்ந்து எனக்கு எழுந்த ஏமாற்றம், இரண்டாம் நாள் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியால் தான் தணிந்தது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைத் தலைவர் முனைவர் வ. ஆறுமுகம் அவர்களின் தலைக்கோல் தெருக்கூத்து குழுவினர் வழங்கிய ”மதுரை வீரன்” நாடகம் பெட்னாவின் மற்றொரு பரிமாணத்தை கொண்டு வந்தது. தெருக்கூத்து குறித்து கூறும் முன்பு இந்த தெருக்கூத்தினை மேடையேற்றுவதற்காக விழாக் குழுவினர் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை விளக்க வேண்டும். இந்த முயற்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் திரு.சாக்ரடீஸ், திரு.முத்துவேல் செல்லையா, திரு.சங்கரபாண்டி போன்றோர்களே என்பது என்னுடைய புரிதல். அமெரிக்காவிற்கு விசா கிடைப்பது என்பது எளிதானது அல்ல. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து விட்டு திரும்பிச் செல்வார்களா என ஆராய்ந்தே அமெரிக்காவிற்கான விசாவினை சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழங்கும். பலர் அமெரிக்காவில் நுழைந்து பிறகு நிரந்தரமாக சட்டவிரோதமாக தங்கி விடுவதால் இந்த விடயத்தில் அமெரிக்கத் தூதரகம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இதன்படி அமெரிக்காவிற்கு வரும் ஒவ்வொருவரும் தமிழகத்தில் சொத்துக்கள் வைத்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கில் நிறையப் பணம் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இப்படி பலப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இவையெல்லாம் இருந்தால் தான் அமெரிக்கா வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் செல்வார்கள் என்பது அமெரிக்கத் தூதரகத்தின் நிலையாக உள்ளது.<br /><br />ஆனால் ஒரு சாமானிய கிராமத்து தெருக்கூத்து கலைஞனுக்கு இவையெல்லாம் இருக்காது. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு விசா வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு வர பெட்னா நிறையச் சிரமப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தை அணுகி சிறப்பு அனுமதி பெற்று இந்தக் கலைஞர்களை பெட்னா கொண்டு வந்துள்ளது. இந்தக் கலைஞர்களில் பலருக்கு பாஸ்போர்ட் கூட இல்லை. அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்குவதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா செய்துள்ளது. பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா ஏன் செய்ய வேண்டும் ? அங்கு தான் பெட்னா என்ற அமைப்பின் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. வெறும் சினிமாக் கூத்துக்களை மட்டும் நம்பியிருக்கும் தானா (TANA - பெட்னா போன்ற தெலுங்கு சார்ந்த அமைப்பு) போன்று இல்லாமல் தமிழ் மண்ணின் கலைகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவதும், கிராமத்து கலைஞர்களை ஊக்குவிப்பதும் பெட்னாவின் நோக்கமாக உள்ளது. இது பாரட்டத்தக்க, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று. பெட்னாவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.<br /><br />விழா தொடங்கியதில் இருந்து முதன் முறையாக அரங்கம் நிறைந்தது என்றால் அது தெருக்கூத்து நிகழ்ச்சியின் பொழுது தான். மற்ற நிகழ்ச்சிகளின் பொழுது கிட்டதட்ட சிந்துபைரவியில் வரும் சுகாசினி போன்று தான் நான் உணர்ந்தேன். மேடையில் என்னவோ நடக்க, பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால் தெருக்கூத்து அனைவரையும் மேடையை நோக்கி கட்டிப் போட்டு இருந்தது. நட்டுப்புறக் கலைகளுக்கு இருக்கும் சிறப்பே பார்வையாளர்களை வசீகரிப்பது தான். அதனை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.<br /><br />அடிமையாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை ஒட்டி மதுரை வீரன் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் விடுதலைக்கு போராடும் வீரர்களின் போராட்டம் வெற்றி பெறாமலேயே மடிந்து போவது தமிழர் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்று. இன்றைய சூழ்நிலையை ஒட்டியக் கருத்துக்கள் மதுரை வீரன் கதையில் வந்தது சிறப்பாக இருந்தது. ஆனால் கூத்து ஆரம்பித்த பொழுது இருந்த சுவாரசியம் மதுரை வீரன் - பொம்மியின் காதல் பாடல்களால் தொய்வு அடைய தொடங்கியது. அந்த நேரம் இரவு உணவு நேரமாகவும் இருக்க, கூட்டம் கலைய தொடங்கியது. மதுரை வீரன் - மொம்மி காதல் மிக நீண்ட விவரணையுடன் இருக்க இறுதிக் காட்சிகள் உடனே முடிந்து விட்டது. இது தெருக்கூத்தின் முழுமையான உணர்வை எனக்கு தரவில்லை. இதனை மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.<br /><br />**********<br /><br />விழாவிற்கு வந்திருந்த அமெரிக்க பேராசிரியர் போயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் இலியன் ஷாண்டர், பேராசிரியர் அடிலே பார்கர், தோழர் தியாகு போன்றோரின் பேச்சுகள் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் போயல் சிறீலங்காவின் பிரச்சனையை தென்னாப்ரிக்காவில் நடந்த இனவெறிப் பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பேசினார். தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக சிறீலங்காவை பணிய வைக்க முடியும். தமிழர்களின் உரிமையை பெற்றிட முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார்.<br /><br />இலியன் ஷாண்டர் சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அமெரிக்கா முழுவதும் பரப்பி வருபவர். இலியன் ஷாண்டர் ஒரு மருத்துவர். சுனாமியின் பொழுது ஈழத்திற்குச் சென்ற ஷாண்டர் அங்கிருந்த மக்களின் பிரச்சனைகளையும், விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளையும் பார்த்து இந்தப் போராட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஈழம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்து வரும் ஒருவராக டாக்டர் இலியன் ஷாண்டர் இருக்கிறார். அவரது பேச்சு "அடுத்த வரும் தமிழீழம் - Next Year in Tamil Eelam" என்பதைச் சார்ந்து இருந்தது. அடுத்த வருடம் தமிழீழம் என்பது<br />தமிழீழ போராட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முழக்கம். இத்தகைய முழக்கத்தையே யூதர்கள் முன்வைத்து இருந்தனர். அதனை Next Year in Jerusalem என அழைப்பார்கள்.<br /><br />அடிலே பார்கர் ஒரு பேராசிரியராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டதையும், அவர்களை மீட்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முன்வைத்துப் பேசினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் செய்து வரும் பணிகளையும் விவரித்தார். மூன்று அமெரிக்கர்களும் மூன்று வெவ்வேறு கோணங்களில் ஈழப் பிரச்சனையை விவரித்தனர்.<br /><br />தோழர் தியாகுவின் பேச்சு பலமான சிந்தனையை என்னுள் எழுப்பியது. உணர்ச்சிமயமான பேச்சுக்களை எப்பொழுதுமே நிராகரித்து வருபவர் தோழர் தியாகு. அதனால் அவரது பேச்சுகளில் எப்பொழுதுமே உணர்வுகளை தூண்டும் விடயங்கள் இருக்காது. மாறாக சிந்தனைகளை எழுப்பும் கருத்துக்களே புதைந்து இருக்கும்.<br /><br />***************<br /><br />தோழர் தியாகுவின் பேச்சுக்கு நேர் எதிராகத் தான் பிற விருந்தினர்களின் பேச்சுக்கள் இருந்தது. கைதட்டல்களைப் பெறுவது என்பதைத் தவிர பாரதிராஜாவின் பேச்சில் எந்தப் பெரிய சிந்தனையும் வெளிவந்து விடவில்லை. பர்வீன் சுல்தானாவின் அரசியல் பேச்சும் கைத்தட்டல் பெறுவதைக் குறித்தே இருந்தது. பர்வீன் சுல்தானாவின் இலக்கியப் பேச்சு சிறப்பாக இருந்தது. பாரதி, பாரதிதாசனை ஒட்டிய தோழர் தியாகுவின் இலக்கிய உரையும் சிறப்பாக இருந்தது.<br /><br />திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் பேச்சு சில சர்ச்சைகளை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளதை கவனிக்க முடிந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதனைக் குறித்து மற்றொரு தருணத்தில் விரிவாக எழுதுகிறேன். <a href="http://twitter.com/thamizhsasi">தற்போதைக்கு இதனைச் சார்ந்து நான் டிவிட்டரில் எழுதிய சில டிவிட்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.<br /></a><br /><ol><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது<br /><br /></span></span></span></li><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று<br /><br /></span></span></span></li><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். </span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது</span></span></span><br /><span class="status-body"><span class="status-content"><span class="entry-content"><br /></span></span></span></li><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">ஆன்மீகம் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. அதனை நிராகரித்தது வரலாற்று தவறு. </span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. </span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை; சமூக நீதியில் நாம் பெற்ற வெற்றியை பிற துறைகளில் கிடைக்காமைக்கு காரணம் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்<br /><br /></span></span></span></li><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மனிதன் ஆன்மீகத்தையே நாடுகிறான்; அது வெகு இயல்பாக நடக்கிறது; </span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">தவிரவும் ஆன்மீகம் என்பது ஒரு கொண்டாட்டம்; மனிதனுக்கு கொண்டாட்டம் அவசியமான ஒன்று. </span></span></span><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">2006ல் தேர்தல் சமயத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் இதனை தொட்டுச் சென்றிருக்கிறேன் - <a class="tweet-url web" href="http://blog.tamilsasi.com/2006/03/blog-post_09.html" target="_blank" rel="nofollow">http://blog.tamilsasi.com/2006/03/blog-post_09.html<br /><br /></a></span></span></span></li><li><span class="status-body"><span class="status-content"><span class="entry-content">மேலே உள்ள என்னுடையக் கருத்துக்கள் சாமானிய மனிதனைச் சார்ந்தே நான் முன்வைத்துள்ளேன்.</span></span></span></li></ol>இவ்வாறான கருத்துக்களை வைத்துள்ள நான் இன்றைய சூழலிலும் ஒரு நாத்திகனே. ஆனால் வெகுஜன மக்களை நாம் இழந்து விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கிற நாத்திகன். பொது புத்தி என வெகுஜன மக்களின் சிந்தனைகளை ஒதுக்கி விட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக வெகுஜன மக்களின் பொதுப் புத்திக்கு காரணமான காரணிகளை ஆராய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்.<br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);font-size:small;" ><span style="line-height: 19px;"><span style="color: rgb(0, 0, 0);"><strong></strong></span></span></span>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6148241.post-42868580525189246542010-05-18T00:26:00.005-04:002010-05-18T00:46:56.887-04:00அஞ்சலிதமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயிரம் தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினை சிங்கள இனவாத அரசு கொண்டாடி வருகிறது. போரில் பலியான பல ஆயிரம் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இன்று எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எந்த வகையிலும் அவர்களின் மரணத்தை தடுக்க முடியாத நம்முடைய இயலாமைச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது இந்த அஞ்சலி மட்டுமே.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilmanam.net/v3_images/candlelight.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 150px; height: 113px;" src="http://www.tamilmanam.net/v3_images/candlelight.jpg" alt="" border="0" /></a><br /><br />ஈழத்திற்கான இறுதிப் போரிலே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனும் வீரமரணம் அடைந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S_Ia_pfY9LI/AAAAAAAAC_I/f35TQ93NmAo/s1600/prabakaran.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 277px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S_Ia_pfY9LI/AAAAAAAAC_I/f35TQ93NmAo/s320/prabakaran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472466177980167346" border="0" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S_IbhEs4v5I/AAAAAAAAC_Q/T0hxQcnBOIA/s1600/prabakaran1.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 247px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S_IbhEs4v5I/AAAAAAAAC_Q/T0hxQcnBOIA/s320/prabakaran1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472466752220217234" border="0" /></a>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6148241.post-25079206312131530022010-05-16T02:15:00.002-04:002010-05-16T02:24:56.165-04:00சசிகுமார் என்கிற நான்...<p>நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த உலகத்தில் உள்ள ரத்தமும் சதையுமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் மனிதர்கள் வாழும் இடங்களில் நான் தற்பொழுது வாழவில்லை. நான் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் அவ்வாறு எழுதக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறேன். "என் உலகத்தில்" நிகழும் நிகழ்வுகளை எழுத வேண்டும் என்றால் என்னுடைய "தற்போதைய" இருப்பிடத்தை விட்டு வெளியேறியே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறேன். </p><p>வாழ்க்கை நெடியது. பல ஆண்டுகள் கொண்ட இந்த வாழ்க்கையில் நாம் எதையும் திட்டமிட்டு அணுகுவது இல்லை. நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகவில்லை. எதிர்பாராத பல விடயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. என் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களைக் கொண்டே என் வாழ்க்கையை என் அனுபவங்களால் நான் அமைத்துக் கொள்கிறேன். என் அனுபவங்களே என் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், என் அரசியல் கருத்துக்கள் என்றாலும், அதனை என் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்தே நான் பெறுகிறேன்.</p><p>நெய்வேலியின் புறநகர்ப் பகுதியான தாண்டவன்குப்பம் என்ற குடிசைப் பகுதியை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலியில் உள்ளவர்களுக்குத் தெரியும். நான் அங்கே தான் பிறந்தேன். தாண்டவன் குப்பத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே. நெய்வேலி டவுன்ஷிப்பில் (Township) வீடு கிடைக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். மொத்தத்தில் இங்கிந்தவர்கள் அடிமட்டத்தில் இருந்தவர்கள். அந்தக் காரணத்தால் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இடம் இழந்தப் பலரும் நெய்வேலியைச் சுற்றிய இத்தகையப் பல குடிசைப் பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.</p><p><br />நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வரை என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. நெய்வேலி இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் ஒரு நகரம். ஆனால் நெய்வேலியில் இருக்கும் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையே இருந்தது 1980கள் வரை இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் இருந்த பலருக்கும் பெரிய வசதி இல்லை. பலரும் சாமானிய மக்கள். சாமானிய மக்களைப் பற்றி அரசாங்கங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, எங்கள் நிலத்தைப் பிடுங்கிய நிறுவனங்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை. நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட என் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நெய்வேலியில் வீடு இருந்தது. அன்றைக்கு அவர்கள் இருந்த கிராமத்தின் பெயர் இளவரசன்பட்டு. இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமாகவும், அனல்மின் நிலையமாகவும், நெய்வேலி டவுன்ஷிப்பாகவும் இருக்கும் பல கிராமங்களில் இளவரசன்பட்டு கிராமமும் ஒன்று. பலக் கிராமங்களை அழித்து அதில் எழுந்து நிற்கும் நிறுவனம் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். என் பாட்டி இருந்த வீடு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காகப் பறிக்கப்பட்டப் பிறகு அவர்கள் ஆதண்டார்கொல்லை என்ற குடிசைப் பகுதியிலேயே குடி அமர்த்தப்பட்டனர். பிறகு தாண்டவன் குப்பம் என்ற மற்றொரு குடிசைப் பகுதிக்கு மாறினர். ஆதாண்டார்கொல்லை பகுதியை பேச்சுத் தமிழில் ஆண்டாக்கொல்லை என அழைப்பார்கள்.</p><p>என் பாட்டி மிகச் சிறிய வயதிலேயே விதவையானவர். நெய்வேலிக்காக நிலத்தை இழந்த என் பாட்டி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கட்டப்பட்ட ஆரம்பகாலங்களில் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாகவே பணிபுரிந்தார். என் அப்பா ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க வில்லை. வாழ்க்கைத் தேவைக்காக வியபாரத்தை என் அப்பா சிறிய வயதிலேயே தொடங்கினார். முதலில் பெட்டிக் கடை, பிறகு சைக்கிள் கடை, டீக்கடை, மளிகைக் கடை எனப் படிப்படியாக உயர்ந்தார். அதனால் நான் பிறந்த பொழுது ஏழ்மையில் பிறக்க வில்லை. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு குடும்பத்திலேயே நான் பிறந்தேன். என் அப்பாவிற்கு படிப்பில் நிறைய ஆர்வம் இருந்தும் ஏழ்மையின் காரணமாகப் படிக்கவில்லை. அதனால் தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். அதற்காக எந்தச் செலவும் செய்ய சித்தமாக இருந்தார். </p><p>படிப்பு தவிர வேறு எதிலும் கவனம் இருக்கக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பல தமிழகப் பிள்ளைகளில் நானும் ஒருவன். ஆங்கில வழிப் படிப்பே சிறந்தப் படிப்பு என்ற தமிழக மக்களின் பொதுவான மனப்பாங்கிற்கு என் அப்பாவும் விதிவிலக்கல்ல. ஆங்கில வழிப் பள்ளியிலேயே என் அப்பா என்னைப் படிக்க வைத்தார். எல்.கே.ஜி முதல் பொறியியல் வரை அவ்வாறே படித்தேன். தாண்டவன் குப்பம் பகுதியில் இருந்த அரவிந்தோ வித்யாலயா தான் நான் படிப்பைத் தொடங்கிய இடம். அக் காலத்தில் இது குடிசைப் பள்ளியாகவே இருந்தது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிக்கு மாறினேன். நெய்வேலி வட்டம் 4ல் இருக்கும் செயிண்ட் பால் பள்ளியில் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் பொறியியல் படித்தேன். </p><p>இயந்திரவியல்(மெக்கானிக்) பொறியியல் படித்தவுடன் எனக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாதாரண மதிப்பெண்களையே பெற்றேன். பலப் போராட்டங்களுக்குப் பிறகே வேலைக் கிடைத்தது. வேலையிலும் படிப்படியாக நகர்ந்து இன்று அமெரிக்காவில் ஒரு முண்ணனி வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொறுப்பில் இருக்கிறேன். இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன். நெய்வேலி தாண்டவன் குப்பத்தில் இருந்து யாரும் எளிதாக இதில் வந்து விட முடியாது. வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒவ்வொரு முடிவையும் சுயமாக எடுத்து, அதனால் அடிபட்டு பாடம் கற்றுக் கொண்டு அடுத்த அடியை வைத்து நகர்ந்து இருக்கிறேன். </p><p>இன்று அமெரிக்காவில் நான் சொகுசாக இருக்கிறேன் என்பதை நான் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் வீட்டில் லேடஸ்ட் தொலைக்காட்சி உள்ளது. இன்னும் சில லேடஸ்ட் அயிடங்கள் உள்ளன. ஓரளவுக்கு நல்ல கார் இருக்கிறது. வாடகை வீடு தான் என்றாலும் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருக்கிறேன் என்பதை மறைக்க நான் விரும்பவில்லை. ஆனால் சிறு வயதில் கோடைக் காலத்தில் மிகவும் புழுக்கமான அறையில் மின்சாரம் கூட இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாகப் படுத்தால் தான் ஓரளவிற்கு நிம்மதியாக தூங்க முடியும் என்ற சூழலில் கட்டாந்தரையில் படுத்து, அதில் கிடைக்கும் காற்றிலும் தூங்கியிருக்கிறேன். அவ்வாறு தூங்கியிருப்பதால் இன்னமும் அதைப் போன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். </p><p>மின்சாரம் கூட இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் படித்தக் காலமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நம்முடைய நிலத்தின் மீது கட்டப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறவே நாம் போராடி இருக்கிறோமே என்ற ஞாபகம் என் நெஞ்சில் இருந்து அகல வில்லை. அத்தகைய அநீதி தானே சட்டிஸ்கரில், ஜார்க்கண்ட்டிலும், ஓரிசாவிலும் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகிறது என்பதை எண்ணும் பொழுது அம் மக்களுடனும் அவர்கள் நிலத்தை பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் நான் அமெரிக்காவில் சொகுசாக இருக்கும் சூழ்நிலையிலும் எழுதத் தோன்றுகிறது. </p><p>ஈழப் போராட்டத்தைக் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். அவ்வாறு எழுதுவதால் எனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள் ? குறைந்தபட்சம் எந்த வெகுஜன இதழாவது என் கட்டுரைகளை தான் வெளியிடுமா ? இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும், கருணாநிக்கும் ஜல்ரா அடித்தால் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்ற ஒரு அணிக்காக வக்காலத்து வாங்கினோம் என்ற திருப்தியையாவது அடைய முடியும். ஆனால் இன்று பின்னடைவு நேரிட்ட ஒரு போராட்டத்திற்காகப் பல மணி நேரம் செலவு செய்து எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். எதிர்காலத்திலும் எழுதுவேன். காரணம் அந்தப் போராட்டம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் சிறிய வயதில் இருந்து என்னுள் இருந்து வந்திருக்கிறது. 10 வயதில், எங்கள் ஊரில் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த குரலாக இதனைப் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என்னை இந்தப் போராட்டம் நோக்கி ஈர்த்தது. </p><p>விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் என்னுடைய சிறிய வயது ஹீரோக்கள். இதைத் தவிர நெய்வேலிக்கு பக்கத்தில் இருந்த முந்திரிக் காடுகள் தமிழ்தேசியம் பேசியக் காலம் அது. இதுவும் என்னை பாதித்தது. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். பிரபாகரனை எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் கடவுளாகவும் பார்த்த எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன். ஒரு சராசரி தமிழக ஈழ ஆதரவாளன் அவ்வாறே இருக்க முடியும். அது தான் பிரபாகரன் என்ற மனிதன் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடையாளம். நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கும் பொழுது ஈழத்தின் நினைவுகளை எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அதனை எழுதாமல் என்னால் இருக்க முடியாது.<br /></p><p>தற்கால வாழ்க்கை சொகுசாக இருக்கலாம். தற்போதைய செகுசான வாழ்க்கைக்கு ஏற்ப நம் கருத்துக்களை அமைத்துக் கொள்ளலாம். பலர் அமைத்தும் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய கடந்தக் காலத்தின் நினைவுகள், தாக்கங்கள், நாம் பார்த்த ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட்டு சென்று விட முடியாது. அந்த நினைவுகளே என்னை போராட்டத்தைக் குறித்து எழுத வைக்கின்றன. அத்தகைய மனிதர்களைப் போன்ற வேறு மனிதர்களைப் பார்க்கும் பொழுது அவர்களையும் பற்றியும் எழுத வைக்கிறது. ஈழத்தின் போராட்டத்தை பார்த்து விட்டு காஷ்மீரின் போராட்டத்தையோ, நாகா மக்களின் பிரச்சனைகளையோ புறந்ததள்ளி விட முடியாது. நெய்வேலியில் நிலம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு சட்டிஸ்கரில் நடக்கும் பிரச்சனைகளை புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு எழுதுவதால் சொல்லப்படும் வாதம், நீ ஈழத்திற்கு போ, சட்ஸ்கருக்கோ போ என்பது. இந்த நுண்ணிய அரசியலை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும், நான் கடந்து வந்த கடந்தக் காலம் என்னைக் கடந்து விடவில்லை. அது என்னுடன் ஒட்டியே வருகிறது. நினைவுகளாக ஒட்டி வருகிறது. என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் நினைவுகளே என்னுடைய கருத்தாக்கங்களை வழி நடத்துகிறது. அந்த எண்ணங்களையே நான் எழுத முடியும்.</p><p>வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும். </p><p>முதலில் நாம் எல்லாம் சாமானியத் தனி மனிதர்கள். நம்மைச் சுற்றி நமது குடும்பமும், நம்மை நம்பி இருப்போரும் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை என்பது நமக்கு மட்டும் என்பது அல்லாமல் அவர்களுக்குமானது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வகையில் குடும்பமே முதன்மையானதாகிறது. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்பவுமே வாழ்க்கை அமைகிறது. இந்த வாழ்க்கையை விடுத்து வெளியே சென்று புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது 33வயதில் எளிதானது அல்ல. இது ஒரு வகையில் இயலாமை கலந்து சுயநலம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவம் அவ்வாறு தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்ற பணியையே நான் செய்ய விரும்புகிறேன்.</p><p>என்னுடைய எண்ணங்களை எழுதுவதோடு மட்டுமில்லாமல் என்னால் முடிந்ததை செய்ய முயன்று கொண்டு தான் இருக்கிறேன். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பின்பற்றவே விரும்புகிறேன். அப்படி நான் பின்பற்ற விரும்புகிறவர்களில் முக்கியமானவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். அவரைப் பற்றி எழுதுவதை அவர் விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர். இதற்காக அவர் செலவிடும் நேரம் அதிகம். </p><p>அமெரிக்காவில் இன்னும் எத்தனையோப் பேர் இது போன்று தங்களால் முடிந்த பல விடயங்களைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழுவது ஒரு வகையில் பலமானதே என்பதைக் கடந்த காலங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஈழத்தமிழர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தனர். நானும் என்னால் முடிந்த சிலவற்றையேனும் கடந்த சில ஆண்டுகளில் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. தமிழ்ச் சார்ந்த விடயங்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறேன். </p><p>**************</p><p>தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் எழுத நினைத்தவற்றை முழுமையாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதில் எனக்கு ஒரளவிற்கு திருப்தியும் இருக்கிறது. இனி தொடர்ந்து எழுத முடியும் என நம்புகிறேன். </p><p>வாய்ப்பளித்த தமிழ்மணம் நண்பர்களுக்கும், வாசித்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இந்த நட்சத்திர வாரத்தை ஈழப் போரில் ஆர்ட்டலரிகளுக்கும், செல்லடிகளுக்கும் பலியான மக்களுக்கும், போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஈழப் போராட்டம் சார்ந்த நினைவுகளை அடுத்த வாரமும் தொடர இருக்கிறேன்.</p><p>மீண்டும் சந்திப்போம்...<br /></p>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-6148241.post-68566481971913906572010-05-13T01:23:00.002-04:002011-12-09T21:27:06.464-05:00ஈழ மக்களின் இன்றைய தேவை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைமை எதுவும் இல்லாமல், எந்த நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழப்பான சூழ்நிலையிலே தமிழ் மக்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒன்றாக தெரிந்த ஈழத்தமிழினம் இன்றைக்கு பல்வேறு துண்டுகளாக தெரிகிறது.<br />
<br />
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஆளுமை மிக்க தலைவர்களின் திடீர் மறைவும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையும் குழப்பங்களையே ஏற்படுத்தும். அது தான் தற்பொழுது நடந்தேறி வருகிறது. அடுத்த தலைமையைக் கைப்பற்ற நடக்கும் போட்டி, பல்வேறு குழுக்களுக்குள் நடக்கும் மோதல்கள் என குழப்பமான சூழ்நிலையே தற்பொழுது உள்ளது. தற்பொழுது நடந்துக் கொண்டிருக்கின்ற எந்த நிகழ்வும் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஒரு மோசமான காலக்கட்டத்திலே தமிழர்கள் இருக்கிறோம். ஒரு வலுவான தலைவனை இழக்கும் ஒரு சமூகம் இப்படியான ஒரு சூழ்நிலையையே எதிர்கொண்டு வந்துள்ளதை பல்வேறு வரலாறுகளில் கண்டுள்ளோம். அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்.<br />
<br />
<br />
ஈழத்திலே இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் தடுப்பு முகாம்களில் உள்ளனர். போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிக் காரணமாக மக்களை இன்னமும் முகாம்களில் வைத்திருக்க வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. அது தான் காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. தமிழர் பகுதியில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள-புத்த மயமாக்கம் போன்றவை தமிழர்கள் நிலங்களைக் களவு கொண்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் கிழக்குப் பகுதியில் நடந்த குடியேற்றங்கள் போலவே தற்பொழுது கிளிநொச்சியிலும் குடியேற்றங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் நிலம் எங்கும் சிங்கள இராணுவ முகாம்கள் நிறைந்து உள்ளன. இந்திய வியாபாரிகளும், முதலாளிகளும் ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளனர். நெல் விளையும் மன்னாரின் விளை நிலங்களை வர்த்தகமயமாக்கும் போக்கும் நடந்து வருவதாக செய்திகளில் காண முடிகிறது.<br />
<br />
<br />
தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களில் பிற இடங்களில் உறவினர்களை உடையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். ஆனால் எந்த உறவும் அற்ற மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கின்றனர். ஈழத்தின் போரை தங்களின் தலையில் சுமந்து போராடிய வன்னி மக்களை தங்கள் உறவினர்களாக்கிக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தோ, திருகோணமலையில் இருந்தோ, மட்டக்களப்பில் இருந்தோ, ஈழ மக்களின் போராட்டத்தை தாங்களே இனி சுமக்கப் போவதாக கூறும் வெளிநாட்டில் இருந்தோ இன்னமும் யாரும் முன்வாராதது வேதனையான சூழ்நிலையே ஆகும். தடுப்பு முகாம்களை விட்டு வெளியே வந்த மக்களுக்குச் சரியான வாழ்வியில் தேவைகள் இன்னும் கிடைக்காத சூழ்நிலையே உள்ளது. போரில் தங்களது உறவுகளை, பெற்றோர்களை, குழந்தைகளை இழந்து தவிக்கும் இம் மக்களுக்கு கூடுதல் பிரச்சனையாக தற்பொழுது வாழ்வியல் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் அவலமான சூழ்நிலையே உள்ளது.<br />
<br />
ஈழ மக்களின் போராட்டத்தை இனி தாங்களே சுமக்கப் போவதாக கூறும் வெளிநாடுத்தமிழர்களோ, அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் பிரிந்து கிடக்கின்றனர். நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் உருத்திரகுமார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியிலே இருக்கின்றனர். மற்றொரு குழு நார்வேயைச் சேர்ந்த நெடியவன் தலைமையில் மறுபடியும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை செய்வதாகக் கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு மே முதல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறியது. நடைபெற்ற தேர்தலில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் நடந்தேறி இருப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறி வருகிறது. புதினம் இணையத்தளமோ தமிழ்நெட் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறது. புதினம் உருத்திரகுமார் அமைக்கும் நாடு கடந்த அரசாங்கத்தை ஆதரிக்கிறது. தமிழ்நெட் இணையத்தளம் நெடியவன் தலைமையிலான குழுவை முன்னிறுத்துகிறது. ஒரு வருடம் முன்பு ஆங்கிலத்தில் தமிழ்நெட், தமிழில் புதினம் என ஈழத்தில் நடைபெறும் செய்திகளை தமிழர்களின் பார்வைக்கு ஒரே மாதிரியாக கொடுத்து வந்த செய்தித்தளங்கள் இன்று இரு வேறு குழுக்களை பிரதிபலிக்கும் தளங்களாக மாறிப் போனது தற்போதைய தமிழர்களின் வேதனையான சூழ்நிலையை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.<br />
<br />
<br />
இன்னொரு புறம் நடந்து முடிந்த சிறீலங்கா தேர்தலில் ராஜபக்சே தன்னுடைய அதிகாரத்தை ”வலுவாக” நிலை நாட்டி இருக்கின்றார். ஆனால் ஈழத்தில் பெருவாரியான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். அவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது - 13 இடங்கள். புலிகள் இருந்த காலத்திலே இவர்கள் கைப்பற்றிய இடங்கள் 22. அதனுடன் ஒப்பிடும் பொழுது இது குறைவானது தான் என்றாலும் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும். என்றாலும் பெருவாரியான தமிழ் மக்கள் இந்த வாக்குப்பதிவை புறக்கணித்து தங்கள் நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்தி உள்ளனர். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் மக்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்பதையே இந்தப் புறக்கணிப்பு தெளிவுபடுத்துகிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பல்வேறு பிளவுகளை எதிர்கொண்டே இந்த தேர்தலை சந்தித்தது. தனித் தமிழீழம் என்ற கோரிக்கையை கைவிடுவதாகவும் சம்பந்தம் அறிவித்து இருந்தார்.<br />
<br />
தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளிநாட்டில் உள்ள தமிழர் குழுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழத்தில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் வெளிநாட்டில் இருந்து முன்வைக்கப்படும் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற முரண்பட்டச் சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.<br />
<br />
******************<br />
<br />
போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி குறித்தானது அல்ல என்பதையே ஈழம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை, போராட்டம் என்பது போராடும் இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதே ஆகும். போராட்டம் என்பது மிகவும் நெடியது. வெற்றிகளும், தோல்விகளும் இந்தப் போராட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நேரக்கூடிய நிகழ்வுகளே ஆகும். தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.<br />
<br />
Protracted People's war என்று சொல்லப்படுகின்ற மிக நீண்ட மக்கள் யுத்தத்தை மாவோ வலியுறுத்துகிறார். புலிகளின் 30 ஆண்டு காலப் போராட்டமும் மிக நெடிய போராட்டம் தான். பல வெற்றி, தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த இயக்கம் தான் புலிகள் இயக்கம். மிக மோசமான தோல்விகளின் பொழுதும் புலிகள் தங்களின் போராடும் இருப்பை தக்கவைத்துக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்களால் தோல்விகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர முடிந்தது. ஆனால் 30 ஆண்டு கால நெடிய போராட்டத்தால் களைப்புற்ற புலிகள் தங்களின் ஒட்டு மொத்த போராட்ட களத்தையே வெற்றியை நோக்கி குறிவைத்தனர். வெற்றியா அல்லது தோல்வியா என்ற இரண்டு நிலைக்குள் போராட்டம் என்ற இருப்பு பறிபோனது. வெற்றி கிடைக்காமல் தோல்வி அடைந்த பொழுது போராட்டக் களம் பறி போனது.<br />
<br />
<br />
இன்றைக்கும் போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் உள்ளது. சிங்கள இனவெறி முன் எப்பொழுதும் இல்லாத உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நாம் போராடுவதற்கான களம் தான் இல்லாமல் போனது. அது தான் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. நான் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. தமிழ் மக்களுக்காக செயல் திறனுடன் போராடிய இயக்கம் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இருந்த வரை தமிழ் மக்களை இந்த உலகம் நோக்கியப் பார்வையும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உலகம் தமிழர்களை அணுகும் முறையையும் கவனிக்கும் பொழுது புலிகள் தமிழர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் நமக்கு தெளிவாகிறது. இறுதிக் காலத்தில் தமிழர்களை தடுத்து வைத்தது போன்ற குற்றங்களை புலிகள் புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கட்டி எழுப்பிய வகையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது நமக்கு இன்னமும் மதிப்பு அதிகமாகிறது.<br />
<br />
அதே நேரத்தில் புலிகளின் முழுமையான இராணுவ அணுகுமுறை நம்முடைய அரசியல் வெளியை சிதைத்தும் வந்துள்ளது. மிக நெடியப் போராட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகவும் அவசியமாகிறது. ஒரு தலைமுறை தங்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு கொடையாக போராட்டத்தை கொண்டுச் செல்ல முடியாது. அதைத் தான் ஈழப் போராட்டம் செய்தது. தொடர்ச்சியான போர் மக்களை தங்கள் வாழ்வியலை இழக்கச் செய்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத மக்கள் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையை போராட்டக் களம் ஏற்படுத்தியது. வன்னியில் உள்ள மக்கள் ஆர்ட்டலரியிலும், பிற ஆயுதங்களாலும் பலியான பொழுதும் அது அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக செய்யும் தியாகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாதங்களை பல ஈழத்தமிழர்கள் முன்வைத்திருந்தனர். போராடும் வலுவை சிதைக்கவே சிங்கள இரணுவம் அடிப்பதாகவும், அதனை எதிர்த்தே போராட வேண்டி இருப்பதாகவும் பல நண்பர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.<br />
<br />
இதை விட அபத்தமான சித்தாந்தம் எதுவும் இல்லை. தற்போதைய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவது என்பது கால ஓட்டத்தின் நியாதிகளின் படி அபத்தமானது. தற்கால மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பது எந்த வகையிலும் அறமான செயலாகாது. எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.<br />
<br />
******<br />
<br />
தற்பொழுது போராட்டக் களத்தையே நாம் இழந்திருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தை மீள் அமைப்பது என்பது களநிலையையே பொறுத்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்கள் போராட தொடங்கினால் போராட்டம் தொடங்கும்.<br />
<br />
இந்த உலகு ஒழுங்கு என்பது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதே. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு அது அந்த சாம்ராஜ்யம் உருவான இடத்திலேயே சுருங்கி விட்டது. சோவியத் யூனியன் என்ற தேசம் மிகவும் பலமான வலுவான தேசமாக இருந்தது. இன்றைக்கு அது சுருங்கி விட்டது. நிரந்தரமாக வலுவான தேசம் என்பது எதுவும் இல்லை. அது காலவெள்ளத்திலும், ஓட்டத்திலும் மறையக்கூடியதே. புதிய தேசங்கள் உருவாவதும் நிகழக்கூடியதே. அதே நேரத்தில் அதற்கான நெடியப் போராட்டம் மக்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் போராட்டம் மக்களை உள்ளடக்கியது. மக்களின் உரிமைகளைச் சார்ந்தது. தனி நாடு என்பது இறுதி இலக்காக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் உரிமைகளே நமக்கு முக்கியமானது. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியல் தேவைகளே.<br />
<br />
*******************<br />
<br />
ஈழத்திலே இருக்கின்ற தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தின் எதிர்கால கட்டமைப்பிலும், போராட்டங்களிலும் கைகோர்த்து நின்றாக வேண்டியது அவசியமாகிறது. தற்பொழுது ஈழமக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னுரிமைப் பெறுகிற சூழலில் அந்த அடிப்படை தேவைகளை ஈழ மக்களுக்குச் செய்யும் கடமை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது.<br />
<br />
ஈழத்திலே தற்பொழுது இருக்கின்ற சிங்கள ஆதிக்கமும், ஒடுக்குமுறையும் எதிர்காலத்திலும் தொடருகின்ற பட்சத்தில் போராட்டங்கள் வெடிப்பது வெகு இயல்பான ஒன்றே. அத்தகைய தருணத்திலே ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே.<br />
<br />
புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலையும், புலம் பெயர்ந்த யூத மக்களின் நிலையும் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. இத்தகைய ஒப்பீடுகளில் எனக்கு மாறுபட்டக் கருத்து இருந்தாலும், அந்த ஒப்பீடுகளில் இருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரேலின் நன்மையையும், இஸ்ரேலில் உள்ள யூதர்களின் நலனையுமே புலத்திலே இருக்கின்ற யூத மக்கள் முன்னெடுக்கின்றனர்.<br />
<br />
புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்திலே இருக்கின்ற மக்களின் நலன்களையும், ஈழத்திலே இருக்கின்ற மக்களின் தேவையையுமே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையும் ஆகும்.<br />
<br />
தற்போதைய தலைமுறை பல ஆண்டுகளாக நடந்தப் போரில் பலவீனமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டத்திற்கான களம் நமக்கு இல்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலை ஆகும். இன்றைய சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் தேவைகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்கைக்குரிய சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைய நாம் வழிவகுக்க வேண்டும்.<br />
<br />
<br /></div>
<br />
<div>
</div>
</div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-6148241.post-70247829126894320412010-05-12T01:15:00.001-04:002010-05-12T01:20:03.067-04:00பரிட்டோ, டேக்கோ, ஹாட் சல்சா, ரேசிசம் (Racism)<div><a href="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S-V4JEZddVI/AAAAAAAAC-4/1v-lxmmmoXE/s1600/wet_burrito.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5468909419706021202" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 240px;" alt="" src="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S-V4JEZddVI/AAAAAAAAC-4/1v-lxmmmoXE/s320/wet_burrito.jpg" border="0" /></a> <strong></strong>உலகின் பல வகையான உணவு வகைகளில் மெக்சிக்கன் உணவிற்கு தனி இடம் உண்டு. அதன் சுவையே தனியானது. எனக்கு மிகவும் பிடித்த உணவு மெக்சிக்கன் உணவு வகைகள் தான். பரிட்டோ, கேஸிடியா, டேக்கோ என அனைத்துமே மிகவும் சுவையான உணவு வகைகள். மெக்சிக்கன் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பரிட்டோ. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டொர்ட்டியாவினுள் (Tortilla) பீன்ஸ், மெக்சிக்கோ அரிசி(சாதம்), தக்காளி, சல்சா, வறுத்த சிக்கன் துண்டுகள், சீஸ் எல்லாம் போட்டு வேகவைத்து பிறகு அதன் மேல் கொஞ்சாம் சாஸ் ஊற்றி, தொட்டுக் கொள்ள கிரிமுடன் (Sour Cream) தருவார்கள். பரிட்டோவை கொஞ்சம் வெட்டி அதனை கிரிமுடன் கொஞ்சம் தொட்டு... சாப்பிட்டால்... ம்ம்ம்...நவரசம். மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்களில் சல்சாவுடன் சிப்ஸ் கொடுப்பார்கள், அதனுடன் கொஞ்சம் மெக்சிக்கன் டக்கீலாவையும் சேர்த்துக் கொண்டால்... எங்கோ பறப்பது போல இருக்கும்.<br /><br />நான் டெக்சாசில் சில மாதங்கள் இருந்த பொழுது அங்கிருந்த பல மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட்டு இருக்கிறேன். டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளின் சுவையே தனியானது. அதைப் போன்ற சுவை நியூஜெர்சி போன்ற இடங்களில் கிடைக்காது. டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளை டெக்-மெக்(Tex-Mex) என அழைப்பார்கள். அதாவது டெக்சஸ் உணவு முறையும், மெக்சிக்கோ உணவு முறையும் கொண்ட கலவையான உணவு முறை தான் டெக்-மெக் உணவு வகைகள்.<br /><br />டெக்சாசும், மெக்சிக்கோவும் இணைந்து இருப்பது உணவு முறையால் மட்டும் அல்ல. கலாச்சாரத்தாலும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் மிக நெருக்கமான பிணைப்பு உண்டு. காரணம் டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு பகுதியாகவே 1880களில் இருந்தது. டெக்சாஸ் மட்டும் அல்ல. அரிசோனா, கலிபோர்னியா, நெவேடா, நியூமெக்சிக்கோ என பல மாநிலங்கள் மெக்சிக்கோவில் தான் இருந்தன. மெக்சிக்கோவுடன் இருந்த இந்தப் பகுதிகளை அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் மூலம் கைப்பற்றிக் கொண்டது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S-owidHTn-I/AAAAAAAAC_A/qR9G_MfVBkE/s1600/mexico.png"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 291px;" src="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S-owidHTn-I/AAAAAAAAC_A/qR9G_MfVBkE/s320/mexico.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5470238065883848674" border="0" /></a>1821ல் மெக்சிக்கோ ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பொழுது டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு அங்கமாகவே இருந்தது. இதனை மெக்சிக்கன் டெக்சஸ் என்று கூறுவார்கள். 1821 முதல் 1836வரை டெக்சஸ் மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்தது. டெக்சஸ் மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக இருந்த பொழுது அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து குடியேறுவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வெள்ளையின மக்கள் டெக்சஸ் பகுதியில் குடியேறினர். இதனால் டெக்சஸில் மெக்சிக்கர்களை விட வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இத்தகைய குடியேற்றத்தை தடுக்க அப்பொழுது மெக்சிக்கோவின் அதிபராக இருந்த அனாஸ்டாசியோ புஸ்டாமாண்டே புதிய கட்டுப்பாடுகளையும், வரி விதிப்புகளையும் கொண்டு வந்தார். உணவுப் பொருள் உற்பத்தியிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் டெக்சாசில் இருந்த வெள்ளையர்களுக்கும், மெக்சிக்கோவுக்கும் இடையே பிரச்சனை மூண்டது. இது போராக உருவெடுத்தது. இந்தப் போரில் வெற்றி பெற்ற டெக்சாஸ் ஒரு தனி நாடாக 1836ல் தன்னை அறிவித்துக் கொண்டது.<br /><br />இதன் பிறகும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் இடையே போர் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 1846ல் இருந்து 1848வரை அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான மெக்சிக்கன் - அமெரிக்கன் போர் நடந்தது. இதன் காரணமாக 1845ல் டெக்சாஸ் அமெரிக்காவுடன் இணைந்தது.<br /><br />அமெரிக்காவின் மற்றொரு மாநிலம் அரிசோனா. மெக்சிக்கோ ஸ்பெயினின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பொழுது அரிசோனா மெக்சிக்கோவின் ஒரு பகுதியாக 1821ல் இருந்தது. 1846ல் நடந்த மெக்சிக்கன்- அமெரிக்கன் போர் காரணமாக டெக்சஸ் விடுதலைப் பெற்ற பொழுது அரிசோனாவின் சில பகுதிகளும் அமெரிக்காவின் வசம் வந்தது.<br /><br />இதையெடுத்து பல நிகழ்வுகளுக்குப் பிறகு கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிக்கோ, நெவேடா போன்ற மாநிலங்கள் உள்ளிட்ட மிகப் பெரும் பகுதிகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க மெக்சிக்கோ ஒப்புக் கொண்டது. அரிசோனாவும் அமெரிக்கா வசம் வந்தது. ஆனால் 1912ல் தான் அரிசோனா அமெரிக்காவின் 48வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது. இது சுருக்கமான வரலாறு.<br /><br />இன்றைய சூழ்நிலைக்கு வருவோம். இன்றைக்கு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக உள்ள அரிசோனா, ஒரு சட்டம் இயற்றி இருக்கிறது. அரிசோனாவின் குடியேற்றச் சட்டம். இந்தச் சட்டம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளவர்களை தடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாக அரிசோனாவின் ஆளும் குடியரசுக் கட்சி கூறுகிறது. இந்தச் சட்டத்தின் படி போலீசார் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் என ”சந்தேகிக்கும்” நபர்களை சோதனை செய்யலாம். சோதனை செய்பவர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதை நிருபிக்க தங்களுடைய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், முறைப்படி அமெரிக்காவில் விசா பெற்று உள்ளே வந்தவர்கள் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமையோ, விசா போன்றவையோ இருக்கும். போலீசார் சந்தேகிக்கும் நபர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாகவே இருக்கிறோம் என்பதை நிருபிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் இது வரையில் அப்படியான சூழ்நிலை இல்லை.<br /><br />தனி மனித உரிமைகள் ”அதிகம்” மதிக்கப்படும் அமெரிக்காவில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாள அட்டை கேட்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் பிரச்சனையாகவுமே பார்க்கப்படுகிறது. அது தவிர சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அடையாள அட்டை கேட்கலாம் என்பதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. போலீசார் யாரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள் ? அமெரிக்காவில் அதிகமாக சட்டவிரோதமாக இருப்பது <em>லாட்டினோ</em> க்கள் தான் . அதே நேரத்தில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற லாட்டினோக்களும் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் சிறுபான்மையினராக அமெரிக்காவில் உள்ளனர்.மெக்சிக்கோ, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் <em>லாட்டினோ</em> அல்லது ஹிஸ்பேனிக்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களே அதிகமாக சட்டவிரோதமாக இருப்பதால் போலீசார் தங்களையே சந்தேகிப்பர் என லாட்டினோக்கள் கூறுகிறார்கள். இந்தச் சட்டம் இனரீதியான பிரச்சனையையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது - Racial Profiling.<br /><br /><br />ஒபாமா அரிசோனா மாநிலத்தின் இந்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தச் சட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். வலதுசாரிகளும், இடதுசாரிகளும் முட்டிக் கொள்ளும் மற்றொரு பிரச்சனையாக இது உருவெடுத்து உள்ளது. ஒபாமா வெற்றி பெற்றதில் இருந்தே எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி தீவிரமான வலதுசாரி நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கியுள்ளதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு உண்டு. இத்தகைய வலதுசாரி போக்கினையே இந்தச் சட்டம் வெளிப்படுத்துவதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுவும் அரிசோனா மாநிலம் வலதுசாரி போக்கினை மிகவும் தீவிரமாக பின்பற்றும் ஒரு மாநிலம் ஆகும். ரெட் ஸ்டேட் (Red State) என்று சொல்லப்படும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலம். டெக்சஸ், அரிசோனா போன்றவை குடியரசுக் கட்சியினரின் கோட்டை. கன்சர்வேட்டிவ்கள் வலுவாக உள்ள மாநிலம்.<br /><br />அரிசோனாவின் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1990களில் கறுப்பர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அவரது பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள அரிசோனா மறுத்தது. இதையெடுத்து அரிசோனா மாநிலத்தை புறக்கணிக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டன. அரிசோனாவை புறக்கணிக்கும் அடையாளமாக சூப்பர் பவுல் எனப்படும் அமெரிக்கன் புட்பால் (கால்பந்து அல்ல) போட்டிகள் அரிசோனாவில் இருந்து மாற்றப்பட்டன. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகே அரிசோனா பணிந்தது. தற்பொழுதும் புறக்கணிக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மெக்சிக்கோ தன்னுடைய குடிமக்களை அரிசோனா செல்ல வேண்டாம் என எச்சரித்து உள்ளது. இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஃபாக்ஸ் தொலைக்கட்சி இந்தச் சட்டம் அமெரிக்காவிற்கு நன்மைகளை கொடுக்கிறது, போதைப் பொருள்களை தடுக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது போன்ற வாதங்களை முன்வைக்கிறது. MSNBC தொலைக்காட்சியைப் பார்த்தால் இந்தச் சட்டம் அமெரிக்காவை நாசி ஜெர்மனியின் காலத்திற்க்கு கொண்டு செல்வதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை இந்தச் சட்டம் பறிப்பதாகவும், லாட்டினோக்களை குறிவைக்கும் Racial Profilingஐ இந்தச் சட்டம் கொண்டு வரும் எனவும் கூறுகிறது. மெசிக்கோ மக்கள் அமெரிக்காவிற்கு தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக, அதாவது 1880களில் இருந்து வேலை தேடி வந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தாங்கள் ஏன் குறிவைக்கப்படுகிறோம் என கேள்வி எழுப்புகிறார்கள். விவாதம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.<br /><br />************************<br /><br />மெக்சிக்கோ-அமெரிக்கா இடையேயான வரலாற்றினை நாம் கூர்ந்து கவனித்தால் இந்தப் பகுதிகளுக்குள் வெள்ளையர்களின் குடியேற்றமும், லாட்டினோக்களின் குடியேற்றமும் தொடர்ச்சியாக இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மெக்சிக்கோ, டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா, அமெரிக்கா இடையேயான எல்லைகள் பல்வேறு காலக்கட்டங்களில் மாறியிருக்கின்றன. அவ்வாறு எல்லைகள் மாறினாலும் குடியேற்றங்கள் எப்பொழுதுமே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எல்லைகள் என்பன நாட்டின் அளுமை சார்ந்த ஒரு விடயமாக இருந்துள்ளதே தவிர அது மக்களின் நடமாட்டத்தை எப்பொழுதும் கட்டுப்படுத்தியதில்லை. வெள்ளையர்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தது போல, லாட்டினோக்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளார்கள். இன்றைக்கும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும், மெக்சிக்கோவின் வறுமையும் லாட்டினோக்களை மிக அதிகமாக அமெரிக்கா நோக்கி நகர வைத்துள்ளது. அமெரிக்காவும் லாட்டினோக்களை தன்னுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. தனக்கு தேவைப்படும் நேரத்தில் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை அமெரிக்க மைய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் தனக்கு தேவையில்லாத பொழுது மெக்சிக்கோவில் இருந்து வரும் குடியேற்றங்களை தடுக்கச் சட்டங்களை கொண்டு வரும்.<br /><br />*****************************<br /><br />சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சனை அமெரிக்காவில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அமெரிக்காவில் சுமார் 12 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானானோர், அதாவது 57% மெக்சிக்கோவில் இருந்து குடியேறி உள்ளவர்களே ஆவார்கள். பிற லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்து குடியேறி உள்ளவர்களும் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே லாட்டினோக்கள் அல்லது ஹிஸ்பேனிக்ஸ் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை தவிர ஆசிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். லாட்டினோக்களில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா- மெக்சிக்கோ எல்லை வழியாகவே அமெரிக்காவில் நுழைகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலில் சட்டரீதியாக அமெரிக்காவில் நுழைந்து பிறகு தங்களின் பயண காலக்கட்டம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள பல குஜராத்தி வியபார மையங்களில் பணிபரியும் தொழிலாளர்கள் இவ்வாறு சட்டவிரோதமாகவே குஜராத்தி வியபாரிகளால் கொண்டு வரப்படுகிறார்கள்.<br /><br />மெக்சிக்கோவில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் எல்லையோர மாநிலங்களான டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் தான் உள்ளனர். இப்படிச் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த சம்பளத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக இருப்பதை பலரும் பயன்படுத்திச் சுரண்டுகின்றனர். நம்மூரில் சுரண்டப்படும் கூலித் தொழிலாளிகளின் நிலையும் இவர்களின் நிலையும் ஒன்று தான். அமெரிக்காவில் கழிப்பறையை சுத்தும் செய்யும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் மெக்சிக்கன்ஸ் தான். கட்டடத் தொழில் தொடங்கி வீட்டு வேலை, வீட்டின் முன் இருக்கும் புற்களை வெட்டுவது வரை இதில் பணிபுரியும் எல்லோரும் மெக்சிக்ன்ஸ் தான். வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா மெக்சிக்கன்ஸ் தான். வீட்டை மாற்ற வேண்டுமா, ஒரு மணி நேரத்திற்கு 8டாலர் கொடுத்தாலே போதும், ஆள் கிடைப்பார்கள். நான் அமெரிக்காவில் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். இத்தனை வருடங்களில் மெக்சிக்கன்ஸ் அல்லாத எவரும் கழிப்பறையை சுத்தம் செய்து நான் பார்த்ததில்லை. ஹீஸ்டனில் ஒரு இடம் உள்ளது. பெயர் மறந்து விட்டது. நமக்கு எந்த வேலை தேவைப்பட்டாலும் அந்த இடத்திற்கு செல்லலாம். காரை விட்டு இறங்கினால் ஏராளமான மெக்சிக்கன்ஸ் கிடைப்பார்கள். சகாய விலைக்கு வீட்டிற்கு அழைத்து வரலாம். வீட்டை சுத்தம் செய்வது, வேறு வீட்டிற்கு மாற்றுவது போன்ற வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கொடுத்த காசை விட அதிகமாக அதற்காக வேலை செய்வார்கள். இவ்வாறு அடி மட்டத்தில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாளிகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். மெக்சிக்கன்ஸ் இல்லாவிட்டால் அமெரிக்காவில் இதனை செய்ய வேறு யாரும் ஆள் இல்லை என்று கூட ஒரு வாதம் உண்டு.<br /><br />இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் வளருகிறார்கள் என இந்திய ஊடகங்கள் மார்தட்டிக் கொள்ளும், ஆனால் இந்த தொழில் அதிபர்கள் சுரண்டிக் கொழிப்பது மெக்சிக்கன்சை தான். பட்டேல் கடைகளில் சரக்கு எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் தொழிலாளர்களில் கொஞ்சம் குஜாராத்தில் இருந்து முதலாளிகள் இறக்குமதி செய்த இந்தியத் தொழிலாளர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். இந்திய ரெஸ்டாரண்ட்களில் தந்தூரி சிக்கன் செய்து கொண்டிப்பதில் இருந்து மேசை துடைப்பது வரை மெக்சிக்கன்ஸ் தான். அவ்வளவு ஏன், நியூஜெர்சியில் திருப்பதியின் கிளையாக உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயில் கேண்டினில் தோசை சுட்டுக் கொண்டிருப்பதும் ஒரு மெக்சிக்கன் தொழிலாளி தான். கோயிலை சுத்தம் செய்வதும் மெக்சிக்கன்ஸ் தான். ஏழுமலையானும் தொழிலாளர்களை சுரண்டியே பிரிட்ஜ்வாட்டரில் வாழுகிறார்.<br /><br />இப்படி எல்லா தொழில் நிறுவனங்களிலும் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பது மெக்சிக்கன்ஸ் தான். காரணம் குறைந்த சம்பளம், நிறைய லாபம். சட்டவிரோதமாக இந்தத் தொழிலாளிகள் அமெரிக்காவில் இருப்பதால் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் சம்பளத்தை இவர்கள் வாங்கிக் கொள்வார்கள். கேள்வி கேட்பதில்லை. இவர்களை undocumented workers என அழைப்பார்கள். இந்த வழக்கம் (சுரண்டல்) தொன்று தொட்டு அமெரிக்காவில் இருந்து வருகிறது. இன்று சட்டவிரோத குடியேற்றம் என அலறும் அமெரிக்க வலதுசாரிகளும், ஊடகங்களும் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை என்றைக்கோ தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் எப்பொழுதுமே அமெரிக்க அரசாங்கமோ, இன்று சட்டத்தை இயற்றும் அரிசோனாவோ செய்ததில்லை. காரணம் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தால் தங்களுக்கு பெரும் நன்மை இருந்ததாக அமெரிக்க நிறுவனங்களும், பொதுமக்களும், அமெரிக்க அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கருதின. எனவே இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை அதிகம் கண்டுகொண்டதில்லை. மறைமுகமாக ஊக்குவித்தன.<br /><br />அமெரிக்காவுக்கு மெக்சிக்கோவில் இருந்து வேலை செய்ய தொழிலாளர்களை கொண்டு வரும் வழக்கம் 1880களில் இருந்து வழக்கில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள விவசாய பண்ணைகளில் வேலை செய்யவே மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் முதலில் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்ட ரயில் பாதைகளுக்காக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மெக்சிக்கோவில் இருந்து கொண்டு வரப்பட்டனர். மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே மிகவும் குறைவான கூலியே. 1880களில் சுமார் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டனர். விவசாய நிலங்கள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் அமைப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் காலக்கட்டங்களில் ரயில்வே பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 60%க்கும் மேற்ப்பட்டோர் மெக்சிக்கோவில் இருந்தே கொண்டு வரப்பட்டனர்.<br /><br />இதைத் தொடர்ந்து முதலாம் உலகப் போரின் பொழுதும் பெருமளவில் தொழிலாளர்கள் மெக்சிக்கோவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். போர் சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்ட பொழுது மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இதனை அப்போதைய அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை. போர் முடிந்த பிறகு எழுந்த மிகப் பெரிய பொருளாதார தேக்கத்தின் பொழுது (The Great Depression of the 1930s)மெக்சிக்கோ தொழிலாளர்களாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக 1929ல் 1 மில்லியனுக்கும் அதிகமான மெக்சிக்கோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை <a href="http://en.wikipedia.org/wiki/Mexican_Repatriation">Mexican Repatriation</a> என அழைப்பார்கள்.<br /><br />1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்த பொழுது போர் காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. 1929-1930ல் பெருமளவில் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிய அமெரிக்கா, இப்பொழுது மறுபடியும் மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத்தொடங்கியது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பெரும் சுரண்டலுக்கே உள்ளானர்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மெக்சிக்கோ அரசாங்கம் மெக்சிக்கோ தொழிலாளர்களின் உரிமைகளை காக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய செல்லும் மெக்சிக்கோ தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல வகை செய்தல், மெக்சிக்கோ அரசாங்கம் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூலியை நிர்ணயம் செய்தல், பணி நேரம், பணி இடம் போன்றவற்றை மெக்சிக்கோவிலேயே நிர்ணயம் செய்தப் பிறகே அமெரிக்கா செல்லுதல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதாவது சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுத்து சட்டரீதியிலாக தொழிலாளர்களை அனுப்புவதாக இது அமைந்தது. இதனை பிராசிரோ திட்டம் (Bracero Program) என அழைப்பார்கள். பிராசிரோ திட்டம் 1942 முதல் 1960கள் வரை அமலில் இருந்தது. ஆனால் இந்த திட்டம் குறைந்தபட்ச ஊதியம், பணி நேரம், பணி இடம், தங்கும் இடம் போன்றவற்றை நிர்ணயம் செய்ததால் அமெரிக்க முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும், பண்ணைகளுக்கும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே அவர்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க, செலவைக் குறைக்க மறுபடியும் சட்டவிரோதமாக மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத் தொடங்கினர். இதன் காரணமாக சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்தது. இந்த திட்டமும் முடிவுக்கு வந்தது.<br /><br />*************************<br /><br />இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வந்ததை பார்க்க முடிகிறது. அவ்வாறு இருந்த அமெரிக்காவின் ஒரு மாநிலம், இன்றைக்கு ஏன் இத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது ?<br /><br />இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு, பொருளாதார தேக்கம் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதால் போதைப் பொருளை தடுத்து விட முடியாது. அதற்கு வேறு விதமான நடவடிக்கையே தேவைப்படுகிறது. எல்லா தொழிலாளிகளையும் குறிவைக்கும் இந்தச் சட்டம் எதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தப் பலத் தகவல்களை <a href="http://www.msnbc.msn.com/id/26315908/">ரேச்சல் மேடோ தன்னுடைய MSNBC தொலைக் காட்சி நிகழ்ச்சியில்</a> வெளிப்படுத்தி இருந்தார். லாட்டினோக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களே. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொருவரும் அமெரிக்க குடிமக்களே. அதன் காரணமாக அமெரிக்காவில் லாட்டினோக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அமெரிக்காவில் எதிர்காலத்தில் வெள்ளையர்களின் அதிக்கம், அதாவது ஐரோப்பிய வெள்ளை அமெரிக்கர்களின் ஆதிக்கம் குறையும் என வலதுசாரிகள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை வலதுசாரி மாநிலமான அரிசோனா கொண்டு வந்துள்ளதாக ரேச்சல் மேடோ குற்றம்சாட்டினார். இருக்கலாம். இந்தக் காரணமும் இருக்கலாம். அல்லது ஒபாமாவை எதிர்க்கும் ஒரு வகை உத்தியாகவும் இருக்கலாம்.<br /><br />தற்போதைய எதிர்பார்ப்பு இந்தச் சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா என்பதே. மக்களின் அடிப்படை உரிமை மீறும் சட்டமாக இருப்பதால் நிச்சயம் இந்தச் சட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு எதிர்பார்ப்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டரீதியாக்க ஓபாமா முன்வைத்த குடியேற்ற சீர்திருத்த மசோதா. இது சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை தடுக்கும். தன்னுடைய இந்தப் பதவிக்காலத்திலேயே இதனை கொண்டு வரப்போவதாக ஒபாமா கூறியிருந்தார். அரிசோனாவின் இந்த குடியேற்றச் சட்டம் அதனை துரிதமாக்கும் என்பதே பலரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.<br /><br /><br /></div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6148241.post-41331426570704121762010-05-10T15:05:00.004-04:002010-05-10T15:05:00.788-04:00செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாகக் கூட பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள், ஒவ்வொரு மொழியை பேசுபவர்களின் சூழலுக்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் தனித்தனி பண்பாட்டுக் கூறுகளாகவும் வெளிப்படுகிறது. இப்படி மொழியைச் சார்ந்த ஒரு பண்பாடும், தனித்த அடையாளங்களும் எழும் பொழுது அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தேசிய இனங்களாக அந்தப் பண்பாட்டினைச் சார்ந்த மக்களை முன்னிறுத்துகிறோம். எனவே மொழி வெறும் கருவியாக மட்டுமே இல்லாமல் அதன் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து இருப்பதால் மொழியையும், அம் மொழி பேசும் மக்களையும் எவ்வளவு எளிதில் பிரித்து விட முடிவதில்லை. தங்கள் மொழிக்குப் பிரச்சனை நேரும் பொழுது அம் மொழி பேசும் மக்கள் வெகுண்டு எழுந்து தங்கள் மொழியைக் காக்க முனைகின்றனர். தமிழ் மொழி பேசுபவர்களிடம் ஹிந்தி திணிக்கப்படும் பொழுது அம் மொழியைப் பேசும் தமிழர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். சிங்களம் மட்டும் தேசிய மொழியாக்கப்பட்ட பொழுது இலங்கையில் தமிழர்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே மதத்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக இருந்ததால் கிழக்கு பாக்கிஸ்தான், பங்களாதேஷாக மாறியது.<br /><br />மொழியும், மொழிச் சார்ந்த வளர்ச்சியும் எப்பொழுதுமே சாமானிய மக்களை உள்ளடக்கி இருந்தால் சிறப்பானது. ஆனால் அவ்வாறு தமிழ் மொழி என்றைக்கும் இருந்ததில்லை. தமிழ் மொழியின் இலக்கியங்கள் மக்களின் இலக்கியங்களாக இல்லாமல் மேட்டுக்குடியினரின் இலக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் மண்ணின் மணம் இல்லை. மண்வாசனை இல்லை. தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை ஏன் பெரும்பான்மையான தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதுமே உண்டு. தற்கால இலக்கியங்களே குறிப்பாக தலித் இலக்கியம் போன்றவையே மக்களை முன்னிறுத்துகின்றன.<br /><br />ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், கூத்து சாமானிய மக்களின் கலை. ஆனால் கூத்துப் பாடல்கள் என்றைக்கும் இலக்கியமாக தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். ஆனால் அவை வெறும் கூத்துகளாக கட்டமைக்கப்பட்டு விட்டன. இப்படி சாமானிய மக்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் தமிழறிஞர்களும், தமிழ்ப்புலவர்களும் புறக்கணித்தே வந்துள்ளார்கள். இப்படியான இந்த மொழி அரசியல் தொடர்ச்சியாக காலங்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.<br /><br />மொழியையும், மொழி பேசும் மக்களையும் வேறுபடுத்துவது என்பது ஒரு நுண்ணிய அரசியலாகும். நான் பேசும் மொழி என்றளவில் தான் தமிழ் மொழி மீது எனக்கு காதலே தவிர வெறும் மொழி என்றளவில் இல்லை. இங்கே முன்னிறுத்தப்படுவது நான் என்ற என்னையும், நாம் என்ற மொழி பேசும் மக்களையும் தான். மொழிக்குச் சிறப்பு என்பது மொழியைச் சார்ந்தது மட்டும் அல்ல. மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியே தான் இருக்க முடியும். ஆனால் தமிழறிஞர்கள் என்றைக்கும் அவ்வாறு இல்லாமல் போனதன் அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மொழியை முன்னிறுத்துகிறோம் என்று கூறி இவர்கள் முன்னிறுத்தியது தங்களின் அரசியலை தான். அதாவது தனி மனிதர்களான தங்களையே இவர்கள் முன்னிறுத்தி இருக்கிறார்கள்.<br /><br />சரி..இதையெல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? ஏனெனில் இன்றைக்கும் இத்தகைய ஒரு நுண்ணிய அரசியலே தமிழ்ச் சூழலில் வெளிப்பட்டு வருகிறது. மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து மொழிக்கு நன்மை என்று கூறும் ஒரு நுண்ணிய அரசியலை தமிழறிஞர் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நுண்ணரசியல் இடம் பெறும் இடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.<br /><br />உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் அடுத்த மாதம் (சூன் மாதம்) நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழறிஞர்கள் எல்லாம், ஒவ்வொருவராக மாநாட்டில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஐக்கியமாகி விட்டனர். இவர்கள் எல்லோரும் கூறும் காரணத்தை ஒரு வார்த்தையில் தொகுக்க முடியும் - அது இந்த மாநாட்டால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இது ஒரு மேல் பூச்சான காரணமே தவிர, உண்மையான காரணம் - இந்த மாநாட்டில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், இந்த மாநாட்டினை புறக்கணிப்பதால் தமிழக அரசை பகைத்துக் கொள்ள வேண்டுமோ என்ற அச்சம், இவ்வளவு பெரிய மாநாட்டினை நம்முடைய புறக்கணிப்பு என்ன செய்து விடும் எனவே கலந்து கொள்வோம் என்ற சால்ஜாப்பு போன்றவையே.<br /><br />இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி தமிழின் அனைத்துத் துறைகளும், அமைப்புகளும் இன்று இந்த மாநாட்டில் இடம் பிடித்து விட்டன. தமிழ் வலைப்பதிவுகள், தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் இந்த மாநாட்டில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தங்களை இணைத்துக் கொள்கின்றன. ஒரு உதாரணத்திற்கு தமிழ் விக்கிப்பீடியா இந்த மாநாடு மூலம் வீக்கிப்பீடியாவிற்கு ஆயிரக்கணக்கிலான கட்டுரைகள் கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்து செம்மொழி மாநாட்டில் தன்னை இணைத்துக் கொள்கிறது. பல தமிழ் ஆர்வலர்களை உள்ளடக்கிய தமிழ் விக்கிப்பீடியா குழுவே இவ்வாறு என்றால் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ்க் கணினி அமைப்பான உத்தமம் (INFITT), தமிழ்ச்சங்கங்கள் போன்றவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. அரசு அறிவித்த அடுத்த நிமிடமே இந்த அமைப்புகள் செம்மொழி மாநாட்டுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டன. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்மணம் பங்கேற்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்த பொழுது, எந்தக் காரணம் கொண்டும் இத்தகைய மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இதனால் தமிழ்மணத்திற்குச் சில இழப்புகள் நேரலாம். ஆனால் தமிழுக்கு நன்மை என்று கூறி செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் அரசியலை என்னால் புறந்தள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. You can put lipstick on a Pig. But it is still a pig. தமிழுக்கு நன்மை என்ற உதட்டுச் சாயத்தை அணிந்து வரும் செம்மொழி மாநாட்டின் துரோக அரசியலை நம்மால் புறந்தள்ள முடியாது.<br /><br />மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து செய்யும் அரசியல் வஞ்சகமானது. இன்று மொழியை கொண்டாடும் சூழல் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. இன்னும் சுமார் ஒரு லட்சம் மக்கள் தடுப்பு முகம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் ஒரு அசாதாரணமான சூழ்நிலையையே எதிர் கொண்டுள்ளது. கடந்த காலங்களின் ரணங்களை கடந்து அவர்கள் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன ? அவர்கள் பேசும் மொழி. தமிழ் மொழி தான் இன்றைக்குப் பல்லாயிரம் மக்கள் பலியிடப்படுவதன் காரணமாக அமைந்து விட்டது. தமிழர்களாக அவர்கள் இருந்ததால் தான் முல்லைவாய்க்கால் கடற்கரைகளில் ஆர்ட்டலரிகளுக்கு பலியாகினர். அப்படியான சூழலில் மொழியைக் கொண்டாடி, மாநாடு எடுத்து சிறப்பிப்பது ஈழ மக்களின் துயரங்களை புறந்தள்ளும் செயலே ஆகும்.<br /><br />அது மட்டுமில்லாமல் இன்றைக்கு செம்மொழி நடத்தப்படுவது தமிழ் மொழிக்காக அல்ல. இந்த மாநாடே கருணாநிதியின் தமிழினத்தலைவர் பட்டத்தை மீள்கட்டமைக்கவே கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் திமுக ஈழத்தமிழர் பிரச்சனையின் பொழுது தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள முனைந்ததே தவிர தார்மீக அடிப்படையில் தமிழர் நன்மையை கருத்தில் கொள்ள வில்லை. ஈழத்தில் நடந்தப் போரை கருணாநிதியால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது அல்ல நம்முடைய நிலைப்பாடு. ஆனால் அந்தப் போர் நடைபெற்ற சூழலில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையே தமிழர்கள் எதிர்நோக்கி இருந்தனர். காரணம் கருணாநிதி தமிழினத்தலைவராக பார்க்கப்பட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழர்கள் தனித்து விடப்பட்டனர். தனித்து விடப்பட்ட தமிழர்கள் தங்களுக்குள்ளாவது ஒற்றுமையாக குரல் கொடுத்து இருந்தால் 25000க்கும் மேற்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை ஓரளவுக்காவது தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியே ஆவார். தன்னுடைய திமுக அரசாங்கம் தமிழகத்தில் காங்கிரசை நம்பி இருப்பதால் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்தி தமிழின அரசியலை நீர்த்துப் போகச் செய்தார். தமிழக மக்கள் அவரது நாடகங்களை உணர்ந்த பொழுது சகோதரச் சண்டை என்று புதிய ஆயுதத்தை எடுத்தார். தமிழின அரசியல் பேசியவர்களை சிறையில் தள்ளவும் அவர் தயங்கவில்லை. எல்லாம் முடிந்து குறைந்தபட்சம் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்க கூட எவ்வித முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. தடுப்பு முகாம்களுக்கு சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையையே திமுக நாடாளுமன்றக் குழு எடுத்தது.<br /><br />இவ்வாறு தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள தமிழின விரோத அரசியல் செய்த கருணாநிதியின் செல்வாக்கு உலகத்தமிழர்கள் மத்தியில் சரிந்தது. தமிழினத்தின் தலைவராகப் பார்க்கப்பட்ட கருணாநிதி, உலகத்தமிழர்களாலும் ஈழ ஆதரவாளர்களாலும் வெறுக்கப்பட்டார். இழந்த தன்னுடைய நிலையை உலகத்தமிழர்களிடம் பெற வேண்டிய நிலையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியின் செல்வாக்கினை புதுப்பிக்க உதயமானது தான் செம்மொழி மாநாடு. அதுவும் இந்தச் செம்மொழி மாநாடு உருவாக்கப்பட்டச் சூழலையும் நாம் கவனிக்க வேண்டும்.<br /><br />உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தும் பொறுப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே உள்ளது. முதலில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை அணுகிய கருணாநிதிக்கு பரவலான எதிர்ப்பே எழுந்தது. ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழியில் மேதையுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா மாநாடு நடத்த போதிய அவகாசம் இல்லை என்று கூறி மாநாட்டை உடனே நடத்த மறுத்தார். அவர் மாநாட்டினை நிராகரிக்க வில்லை. ஆனால் கூடுதலான அவகாசத்தையே கேட்டார். ஆனால் கருணாநிதிக்கு உடனடியாக மாநாடு நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். சில மாதங்களில் செம்மொழி மாநாட்டினை நடத்தியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழுக்கு நேர்ந்தது அசாதாரணமானது தான்.<br /><br />சில மாதங்களில் ஒரு மாநாட்டினை நடத்த வேண்டும் என்றால், ஒரு புதிய தமிழ் அமைப்பினை உருவாக்க வேண்டும். அதைத் தான் கருணாநிதி செய்தார். உலக செம்மொழி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி அந்த நிறுவனம் மூலமாக மாநாடு நடத்த முனைகிறார் கருணாநிதி. எப்பாடு பட்டாவது இழந்த தன்னுடைய பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது நிலை. செம்மொழி மாநாட்டை நடத்தும் சூழ்நிலையிலும் கருணாநிதியின் தமிழின எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வரவில்லை. செங்கற்பட்டில் இருந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது போலீஸ் அராஜகம் ஏவப்பட்டது. சென்னைக்கு வந்த 80 வயது மூதாட்டியான பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டார். பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு இந்திய அரசு மட்டுமே காரணம் என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா அனுப்பிய அறிக்கையை தனக்குச் சாதகமாக கருணாநிதி இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மையாக இருக்க முடியும். செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் வைகோவின் பராமரிப்பில் இருப்பதை கருணாநிதியால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? விமான நிலையம் வரைக்கும் வந்த பார்வதியம்மாள் கருணாநிதிக்கு தெரியாமல் திருப்பி அனுப்பபட்டிருப்பார் என்பதை திமுக உடன்பிறப்புகள் வேண்டுமானால் நம்பலாம். அதிகாலையிலேயே விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசார் கூட கருணாநிதிக்கு தெரியாமலேயே குவிந்து விட்டார்கள் போலும். தமிழக காவல்துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மன்மோகன் சிங் கட்டுப்பாட்டிலா உள்ளது ?<br /><br />இப்பொழுது தமிழக அரசின் பாதுகாப்பில், தமிழக அரசின் செலவில், தமிழக அரசு சொல்லும் மருத்துவமனையில் பார்வதியம்மாள் சிகிச்சை பெற ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற இருக்கிறார். அதாவது கருணாநிதியின் கருணையால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இருக்கிறார். தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் அனாதைகளாக சுற்றித் திரியும் வயதான தமிழர்களுக்கும் இன்னமும் நாதி இல்லாத சூழ்நிலையில் ஒரு பார்வதியம்மாளுக்காவது இப்படி ஏதேனும் ஒரு வழியில் சிகிச்சை கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியே.<br /><br />இப்படி தொடர்ச்சியான தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் விளக்க தேவையில்லை. தமிழறிஞர்கள் என்பவர்கள் தங்களின் சுயநலத்தை அடிப்படையாக கொண்டே இம் மாநாட்டினை ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.<br /><br />**************<br /><br />அதே நேரத்தில் நான் யாரையும் செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை. எண்ணற்றப் புறக்கணிப்பு முழக்கங்களையும், எண்ணற்ற மனுக்களையும், தொலைபேசி அழைப்புகளையும், மின்னஞ்சல்களையும் அனுப்பி அலுத்தும் போய் விட்டது. நான் இங்கு முன்வைப்பது இவர்களின் அரசியலையே ஆகும். தமிழர்களின் அரசியல் அலங்கோலமே இன்றைய தமிழர்களின் வாழ்வியல் அலங்கோலத்திற்கும் முக்கியக் காரணம். எனவே இங்கே நான் பேசிக் கொண்டிருப்பது, செம்மொழி மாநாட்டின் அரசியலையும், தமிழறிஞர்களின் நுண்ணரசியலையுமே ஆகும்.<br /><br />தவிரவும் இன்று தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? ஈழத்தில் இராணுவத் தடுப்பு முகாம்களில் இருப்பவர்களா? தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் தங்களின் மொத்த குடும்பத்தையும் போரில் இழந்து யாரும் இல்லாத அனாதைகளாக நடைபிணமாக திரிபவர்களா? தங்களுடைய தந்தையையும், தாயையும் இழந்து யாருமற்ற அனாதைகளாக இருக்கும் குழந்தைகளா? போராளிகளாக இருந்து சிறைப் பிடிக்கப்பட்டு தங்களின் இந்த வாழ் நாளில் சிறைக்கூடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் இளைஞர்களா? யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், கொழும்பிலும் இந்தப் பிரச்சனைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களா? வெளிநாடுகளில் கூக்குரலிட்டு விட்டு இன்று அமைதியாக இருக்கின்ற வெளிநாட்டு தமிழர்களா ? ஈழம் ஒரு பொருட்டல்ல, பணமே பிரதானம் என நிருபித்த தமிழக மக்களா? எதையும் செய்ய இயலாமல் உலகமயமாக்கத்தின் சுகத்தையும் இழக்க முடியால் இயலாமையுடன் திரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களா? யார் தமிழர்கள்? எந்தத் தமிழர்களை நோக்கி நான் தமிழர்களே செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் எனக் கூற முடியும் ? அதனால் நான் யரையும் செம்மொழி மாநாட்டைப் புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை.<br /><br />********<br /><br />செம்மொழி மாநாடு மிகப் பெரிய விழாவாக, பல நூறு கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதை நடந்து வரும் ஏற்பாடுகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. கோவையில் புதிய சாலைகளும், அழகான பூங்காக்களும் இந்த மாநாட்டினையொட்டி அமைக்கப்படுகின்றன. அரசின் இலவச பேருந்துகள் பல லட்சக்கணக்கான மக்களை கோவைக்கு கொண்டு வந்து குவிக்கும். அது தவிர உலகெங்கிலும் இருந்து கோவை வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விமானப் பயணம், தங்குமிடம் என அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் இருந்தும், கனடாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் இலவச பயணமாக கோவை செல்கிறார்கள். இவ்வாறு பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி குவிக்கப்படும் தமிழர்களை கொண்டு தான் மட்டுமே தமிழினத் தலைவர் என கோவையில் கருணாநிதி சூளுரைக்க இருக்கிறார்.<br /><br />அதற்காக கோவை செல்லவிருக்கும் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், உடன்பிறப்புகள், கதர் வேட்டிகள் அனைவருக்கும் என்னுடைய bon voyage wishes.<br /><br />Dudes, Have a nice, memorable and historic trip to Coimbatore. May your name gets mentioned in the history.<br /><br />bye for now...தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-6148241.post-49634934551644756612010-05-09T23:55:00.016-04:002010-05-27T16:46:44.827-04:00தமிழ்மணம் நட்சத்திரம், எழுத்து அரசியல், ஈழம்<p>தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு மாதமும் வலைப்பதிவில் நுழைந்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகி விட்டது. இன்றைக்குச் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. எழுதப்படும் அனைத்தையும் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதெல்லாம் சிறந்த படைப்புகளாக இருப்பதும் இல்லை. தினந்தோறும் எழுதப்படும் எண்ணற்றக் கட்டுரைகளில் எத்தனையோ நல்லப் படைப்புகள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஒளிந்து கொள்கின்றன.</p><p>வலைப்பதிவுகள் குழு மனப்பான்மை உடையது. நம்முடையப் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு குழுவுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களை ஏதேனும் குழுவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்கள் வேகமாக பிரபலமாகிறார்கள். திரட்டிகளின் ஓட்டுகளை பெறுவதற்கும் அது ஒரு முக்கிய தேவையாகவும் இருக்கிறது. நான் முதலில் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வலைப்பதிவுகள் இருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் குழு மனப்பான்மையை உணர்ந்து இருக்கிறேன். சில மாதங்கள் வலைப்பதிவுகளை வாசித்தப் பிறகு நாமும் எழுத வேண்டும் என யோசித்த பொழுது பங்குச்சந்தைக் குறித்த வலைப்பதிவை தொடங்கினேன். அப்பொழுது பங்குச்சந்தைக்கு என்று ஒரு தனி வலைப்பதிவை தமிழில் யாரும் வைத்திருக்கவில்லை. நான் பங்குச்சந்தை குறித்து எழுதத்தொடங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். அது தான் எந்தக் குழுவிலும் சேராமல் என்னை ஒரளவுக்கு அடையளப்படுத்தியது. அதனை தொடர்ந்து என்னுடைய காஷ்மீர் குறித்தக் கட்டுரைகளும், பல்வேறு அரசியல் கட்டுரைகளும் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தன.<br /></p><p>***************************<br /></p><p>தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு தரம் கூட வில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரளவுக்கு உண்மை தான். என்றாலும் இன்று இருக்கின்ற வெகுஜனப் பத்திரிக்கைகளை விட தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.</p><p>ஒரு பிரச்சனைக் குறித்த பல்வேறு கோணங்களை வலைப்பதிவுகள் நமக்கு வழங்குகின்றன. தமிழ் எழுத்து உலகில் ஒரு சில எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில் இது மிகப் பெரிய கருத்தாக்க வெளியை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்று நோக்கினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைப்பட விமர்சனம் போன்றவற்றில் ஒரு திரைப்படம் குறித்து பலக் கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் முக்கிய சமூகப் பிரச்சனைகளில் பல வேறுபட்ட கோணங்கள் கிடைப்பதில்லை. சினிமாவை மாறுபட்டு உள்வாங்கும் நமது சமூகம், சமூக வாழ்வியல் பிரச்சனைகளை ”பெரும்பாலும்” ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்க்கிறதோ என்ற கருத்து எனக்குள்ளது.</p><p>*************************** </p><p>தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியும், இணையத்தின் வளர்ச்சியும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்றைக்குப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு உடனுக்குடன் வாசகர்கள் கிடைக்கிறார்கள். அவ்வாறு கிடைப்பதால் அவர்கள் எழுதும் எழுத்துக்கு "ரசிகர்களும்" பெருகி இணைய வாசகர் உலகம் பல ரசிக குழுக்களால் சினிமா ரசிகர் மன்றங்கள் போன்ற குழும மன்றங்களாக மாறி விட்டது. சாருவுக்கு ஒரு கோஷ்டி, ஜெயமோகனுக்கு ஒரு கோஷ்டி என சினிமா ரசிகர் மன்றங்களை ஒத்த ரசிகர் குழுக்கள் இங்கே உருவாகி விட்டது.</p><p>இந்தக் குழுக்களை தொடர்ச்சியாக கட்டமைக்க எழுத்தாளர்கள் முனைகின்றனர். இந்தக் குழுக்களை தக்கவைக்க இவர்களும் அவ்வப்பொழுது தங்களுக்குள் சண்டைகளை உருவாக்கி, நல்ல சுவாரசியமான மோதலை அவ்வப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமும் கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் எழுத்தும் கார்ப்பரேட் யுகத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் ரசிகர் மன்றங்களாகவும் பிறகு வாடிக்கையாளர்களாகவும் மாறும் பரிணாம வளர்ச்சியில் தான் சாமியார்களுக்கு விளம்பர சேவைகளையும் இந்த எழுத்தாளர்கள் புரிந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ச்சியான குப்பைகளை தங்கள் வலைத்தளத்தில் ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும்.<br /></p><p>இவர்கள் எழுதுவது பெரும்பாலும் சுவாரசியமான குப்பைகள் தான் என்றாலும் சாரு கொட்டும் குப்பைகளை கூட கலகம் என புளகாங்கிதம் அடைய ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியக் காலத்திலும், போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தக் காலத்திலும் ஈழத்தைப் பற்றி எழுதவே சாரு தொடை நடுங்குவார். மே2009க்குப் பிறகு பிரபாகரன் சேவ் செய்து சரணடைந்து விட்டார் எனப் பல மாதங்களுக்குப் பிறகு யோசித்து எந்தப் பிரச்சனையும் தனக்கு ஏற்படாது என உறுதிப் படுத்திக் கொண்டு எழுதினார் சாரு. உடனே அவர் ரசிக சிகாமணிகள் எல்லாம் சாருவுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள், பெரிய கலகத்தையே புரிந்து விட்டார் என புல்லரித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்த எழுத்துலகக் கலகப் புல்லரிப்பின் மிகை உணர்ச்சியைப் பார்த்தால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை விட அசத்தலான நகைச்சுவையாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ”நொஞ்சான்” தமிழ்மணத்தை நாலு சாத்து சாத்தினால் பெரும் கலகத்தை ஏற்படுத்தியவர் என்ற பட்டம் கிடைக்கும். யோனி என்ற வார்த்தையை எழுதினாலே கலகம். காமக்கதை என்ற தலைப்பு வைத்தாலே பெரும் கலகம். இதுவெல்லாம் கொஞ்சம் ”ஓவர்” என்று இந்த கலக எழுத்தாளர்களுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் தெரியாதது தான் அதை விட நகைச்சுவையானது.</p><p>ஜி.நாகராஜன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே போன்ற நாவல்கள் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலியல் தொழிலாளர்களும், தன் மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவனும் இவர் நாவலின் கதாநயகர்கள். தான் கலகம் புரிவதாக இவர் சொல்லிக் கொண்டதில்லை. அதன் பிறகு எத்தனையோ பேர் தமிழில் பாலியல் கலகத்தைப் புரிந்து விட்டனர். பாலியல் வெகுஜன ஊடகங்களிலும் பரவலாக பலரால் அலசப்பட்டது. பல வெகுஜன பத்திரிக்கைகள் மிக விலாவாரியாக கட்டுரைகள் எழுதி பாலியல் மூடு மந்திரங்களை அவிழ்த்தன. விஜய் டிவியில் வந்த புதிரா, புனிதமா அந்தக் காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண் பாலியல் கேள்வி கேட்பதா எனக் கூக்குரல் எழுந்தது. இன்றைய நவீன இணையக் காலத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பாலியல் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறான நிலையில் காமக்கதை என்று எழுதுவதே கலகம் என்று எண்ணும் காமெடி எல்லாம் தமிழ் வலைப்பதிவுலகில் மட்டுமே நிகழ்க்கூடியது. இதனால் என்ன பயன் என்றால் தமிழ்மணம் வலைப்பதிவுக்கு வரும் தேடலில் பெரும்பாலும் காமக்கதையை தேடிய கூகுள் தேடல்கள் தான் அதிகமாக வருகின்றன. இனி என்னுடைய இந்தக் கட்டுரைக்கும் அதிக தேடல் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் இது ஒரு தேடல் கலகம் தான்.</p><p>இன்னொரு நகைச்சுவையை உதாரணமாக கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வலைப்பதிவில் நடந்த லீனா மணிமேகலைச் சார்ந்த விடயத்தை கூறலாம். லீனா ஒரு கவிதையை எழுத அதனை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. கலகம், கட்டுடைப்பு என்று கூறும் லீனா மணிமேகலை போன்றவர்கள் விமர்சனம் என்று வரும் பொழுது மட்டும் பெண் என்ற கேடயத்தை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களும், விமர்சனம் செய்பவர்களை ஆணாதிக்கம் மிக்கவர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். இது ஒரு அலுப்பூட்டும் வாதம். பெண்ணியவாதிகளை விமர்சிக்கவே பல நேரங்களில் தயக்கமாக உள்ள காரணங்களில் இந்த ஆணாதிக்க முத்திரையும் ஒரு முக்கியக் காரணம். இங்கே விமர்சனம் செய்த வினவுக்கு ஆணாதிக்கவாதி என்ற பட்டமே கிடைத்தது. லீனா மணிமேகலைக்கு எதிராக ஒரு விமர்சனக் கட்டுரை முன்வைக்கப்பட்டவுடன் தமிழ் அறிவுஜீவிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்தனர். ஈழப் போராட்டம் நடந்தக் காலத்தில் ஒரு கூட்டம் கூட நடத்த துப்பில்லாத தமிழ் நாட்டின் அறிவுஜீவிகள் எல்லாம் கொதித்து எழுந்து இல்லாத எதிர்ப்புக்கு கண்டன கூட்டம் நடத்த தொடங்கி விட்டனர். லீனா மணிமேகலை எழுதுவதை யார் தடை செய்தார்கள்? லீனா மணிமேகலைக்கு அப்படி என்ன தான் எதிர்ப்பு எழுந்தது ? அவர் எழுதியக் கவிதைக்கு ஒரு விமர்சனக் கட்டுரை. அவ்வளவு தான். இல்லாத எதிர்ப்புக்கு ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் போலி அறிவுஜீவிகளுக்கு அ.மார்க்சின் தலைமை ஆச்சரியப்படுத்த வில்லை. இதில் இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் லீனா மணிமேகலையின் கவிதை, தமிழ்க் கவிதையை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறதாம். இது வேறையா...அடங் கொய்யால...நல்ல வேளையாக இதைப் பார்க்க அடுத்த நூற்றாண்டில் நான் இருக்கப் போவதில்லை.</p><p>இப்படி நாம் கூறினால் உடனே யோனி என்ற புரட்சி வார்த்தைக்கு நாம் எதிரானவர்கள், கலாச்சாரக் காவலர்கள், ஆணாதிக்கவாதிகள் என பட்டம் கிடைக்கும். ஆனால் <a href="http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html">கோணேஸ்வரிகள்...என்ற இந்தக் கவிதை</a> தரும் உணர்வுகளையும், கருத்தின் ஆழத்தையும் லீனா மணிமேகலை போன்ற கவிஞர்களின் புரட்சிக்(?) கவிதைகள் நமக்குத் தருவதில்லை.<br /></p><p>*************************** </p><p>2005ல் முதலில் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். இன்றைக்குத் திரும்பி பார்த்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்னுடைய எழுத்து பெரும்பாலும் அரசியல் சார்ந்தாகவே இருந்து வந்திருப்பதால் நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு. அதே நேரத்தில் தற்போதைய சமுதாய முறையையும், அநீதியான சூழலையும், அராஜகமான அதிகாரமையப் போக்கினையும், தற்போதைய உலக ஒழுங்கினையும் எப்பொழுதும் நிராகரித்து வந்திருக்கிறேன் என்ற வகையில் ஒரு வகையான திருப்தியும் எனக்குள்ளது.</p><p>*************************** </p><p>மே 2010, தமிழினப் பேரவலத்தின் ஒரு வருடத்தை குறிக்கும் நினைவு மாதம். புலிகளின் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 மாதங்கள் முடிந்து விட்டன. சுமார் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைவாய்க்கால் கடற்க்கரை மணலில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் விட்டனர். ஒரு மனிதப் பேரவலத்தை உலகமே கண்டுகொள்ளாத உலக ஒழுங்கிலும், சக தமிழர்கள் கூட முழுமையாக இந்த அவலத்தை உள்வாங்காத சூழ்நிலையிலும் வாழ நேர்ந்ததன் துக்கத்தை மறுபடியும் நினைவு கூறும் மாதமாக மே 2010 மாறியுள்ளது.</p><p>இந்த ஒரு வருடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மீள் அமைக்கவே அராஜகச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கான அரசியல் என்பது இன்றைக்கு ஏதும் இல்லை என்பதான சூழ்நிலையே உள்ளது. இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மட்டுமல்ல அவர்களின் அரசியல் பாதையை செப்பனிட வேண்டிய தமிழ் அரசியல் சூழலும் அந்த அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுஜீவி சூழலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் புலிகளே காரணம் என முடிவு செய்து விட்ட தமிழ் அறிவுஜீவி உலகம் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்து கொண்டிருந்ததிலேயே கடந்த 12 மாதங்கள் கழிந்து போய் விட்டன. சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கியே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கேட்க வேண்டி உள்ளதாக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் எல்லாம் இன்று தமிழ் திரையுலகில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பள்ளிக் காலத்தில் என்னை அதிகம் பாதித்தவர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தியாகு போன்றோர்களே. ஆனால் இன்றைக்கு சுப.வீரபாண்டியனை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.<br /></p><p>கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது. தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy). </p><p>*************************** </p><p>அடுத்த ஒரு வாரத்திற்கு இத்தகைய பல்வேறு விடயங்களை தொட்டுச் செல்வதான எண்ணத்தில் இருக்கிறேன். விரிவாக எழுத முடியா விட்டாலும் தொட்டுச் செல்ல முடியும் என நம்புகிறேன்.<br /><br />தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நண்பர் சங்கரபாண்டிக்கு என்னுடைய நன்றி...</p><p></p>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-6148241.post-722601704654861382010-04-11T17:15:00.003-04:002010-04-11T21:46:36.200-04:00பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thechronicleherald.ca/photos/xlarge/04-05-10_8390056.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 400px; CURSOR: pointer; HEIGHT: 267px" alt="" src="http://thechronicleherald.ca/photos/xlarge/04-05-10_8390056.jpg" border="0" /></a>ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பலக் கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் என்றும், அதில் ஈடுபட்ட பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் தற்பொழுது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.<br /><br />போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்தீமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.<br /><br />அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.<br /><br />கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S8FyNwO-6jI/AAAAAAAAC-w/itxyA-adMZI/s1600/pope.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5458769803961362994" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 250px; CURSOR: pointer; HEIGHT: 300px" alt="" src="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S8FyNwO-6jI/AAAAAAAAC-w/itxyA-adMZI/s320/pope.jpg" border="0" /></a>வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.<br /><br /><strong>எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?</strong><br /><br />கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்தக் காலங்களில் நடந்தக் குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.<br /><br />அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.<br /><br /><strong>ஏன் தண்டனை இல்லை ? கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?</strong><br /><br />கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.<br /><br />1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர் <a href="http://en.wikipedia.org/wiki/Crimen_sollicitationis" target="_blank">Crimen Sollicitationis</a>. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றது தான். இது குறித்த ஒரு <a href="http://news.bbc.co.uk/player/nol/newsid_5400000/newsid_5403100/5403158.stm?bw=nb&mp=wm&news=1&ms3=6&ms_javascript=true&bbcws=2" target="_blank">பிபிசி ஆவணப்படத்தில் </a>தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.<br /><br />பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை. <a href="http://www.youtube.com/watch?v=2iQGczIx6Sg" target="_blank">பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர்</a>. இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.<br /><br />பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.<br /><br />இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. <a href="http://news.bbc.co.uk/player/nol/newsid_5400000/newsid_5403100/5403158.stm?bw=nb&mp=wm&news=1&ms3=6&ms_javascript=true&bbcws=2" target="_blank">2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது</a>. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் எழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியில் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.<br /><br /><strong>பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?</strong><br /><br />தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.<br /><br />இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.<br /><br />அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பெறுப்பேற்க வேண்டியவராகிறார்.<br /><br />போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதற்கான ஆதாரங்களைக் <a href="http://www.nytimes.com/2010/03/25/world/europe/25vatican.html" target="_blank">கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்</a> வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையெடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.<br /><br /><a href="http://www.bbc.co.uk/tamil/news/story/2010/03/100326_popeaccused.shtml" target="_blank">அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது. </a><br /><br /><br /><em><span style="COLOR: rgb(153,0,0)"><blockquote><em><span style="COLOR: rgb(153,0,0)">அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200<br />சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.<br /><br />அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல்<br />துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.<br /><br /><strong>போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு<br /></strong><br />பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய<br />நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமர்சகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்<br />போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். </span></em></blockquote></span></em><a href="http://www.nytimes.com/2010/03/25/world/europe/25vatican.html" target="_blank">பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல்</a> - பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார். <a href="http://www.nytimes.com/2010/03/25/world/europe/25vatican.html" target="_blank">இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.<br /></a><br />அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.<br /><br />இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.<br /><br /><strong>போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?<br /></strong><br />போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடிமறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.<br /><br /><strong>போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?</strong><br /><br />போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். <a href="http://www.google.com/hostednews/ukpress/article/ALeqM5g3QhPEMcG5_tSxzeXeEqlGhm8rmg" target="_blank">போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது</a>. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.<br /><br />ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">************<br /></span><br />மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6148241.post-70225889295166386502010-04-04T20:35:00.002-04:002010-04-05T00:13:40.242-04:00காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் <a href="http://beta.thehindu.com/opinion/editorial/article347128.ece" target="_blank">ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம்</a> வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. <a href="http://thatstamil.oneindia.in/news/2010/04/04/1-4-cr-families-included-%20kalaignar.html">இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார்</a>. அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.<br /><br />ஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jr0GRanTI/AAAAAAAAC-Q/CvL7HTiEDS8/s1600/obama-health-care.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456370228828740914" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 202px;" alt="" src="http://1.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jr0GRanTI/AAAAAAAAC-Q/CvL7HTiEDS8/s320/obama-health-care.jpg" border="0" /></a>இது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.<br />ஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.<br /><br />தமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வைத்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.<br /><br />இது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.<br /><br />இந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.<br /><br /><strong>ஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா</strong><br /><br />அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.<br /><br /><a href="http://4.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jsO3uK4KI/AAAAAAAAC-Y/Kfu7gxgdkM0/s1600/obama-speech-765496.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456370688779280546" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 239px;" alt="" src="http://4.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jsO3uK4KI/AAAAAAAAC-Y/Kfu7gxgdkM0/s320/obama-speech-765496.jpg" border="0" /></a>இந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jpk_IMjkI/AAAAAAAAC-I/Q9Th9usk5tM/s1600/Obama-socialism_0.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456367770189729346" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 219px; height: 320px;" alt="" src="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jpk_IMjkI/AAAAAAAAC-I/Q9Th9usk5tM/s320/Obama-socialism_0.jpg" border="0" /></a>உண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன ? பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.<br /><br />இவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (<a href="http://blog.tamilsasi.com/2009/04/american-gunculture-violence-guns.html">அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்</a>). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.<br /><br />இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.<br /><br /><span style="font-weight: bold;">ஏன் இத்தனைக் கூச்சல் ? ஆர்ப்பாட்டம் ?</span><br /><br /><a href="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jo_uqhfVI/AAAAAAAAC-A/gynShrSFk88/s1600/t1larg_protest_afp_gi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456367130115145042" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 180px;" alt="" src="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jo_uqhfVI/AAAAAAAAC-A/gynShrSFk88/s320/t1larg_protest_afp_gi.jpg" border="0" /></a>ஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.<br /><br /><span style="font-weight: bold;">அப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ? ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு ?</span><br /><br />முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.<br /><br />ஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.<br /><br />இத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்கலாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.<br /><br />ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.<br /><br />ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.<br /><br />எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.<br /><br />இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.<br /><br /><span style="font-weight: bold;">காப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை ?</span><br /><br />அமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.<br /><br /><span style="font-weight: bold;">அப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா ?</span><br /><br />அரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.<br /><br />காப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.<br /><br />காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).<br /><br />இது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.<br /><br />இவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.<br /><br /><br />இவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.<br /><br />***************************<br /><br /><a href="http://4.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jsg1CCBgI/AAAAAAAAC-g/YoYPufbms0o/s1600/public_option_now.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456370997294925314" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 240px;" alt="" src="http://4.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jsg1CCBgI/AAAAAAAAC-g/YoYPufbms0o/s320/public_option_now.jpg" border="0" /></a>இவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.<br /><br />இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன் தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.<br /><br />பல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.<br /><br />- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.<br /><br />- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.<br /><br />- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.<br /><br />- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது<br /><br />- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.<br /><br />- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.<br /><br />ஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jszXoOqlI/AAAAAAAAC-o/wMs9gw71xic/s1600/public_option.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5456371315819588178" style="float: left; margin: 0px 10px 10px 0px; width: 320px; height: 180px;" alt="" src="http://2.bp.blogspot.com/_Jo4QwBFH_qg/S7jszXoOqlI/AAAAAAAAC-o/wMs9gw71xic/s320/public_option.jpg" border="0" /></a> அரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வாதம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.<br /><br />இந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-6148241.post-87800393767520317782009-05-19T22:37:00.004-04:002009-05-20T00:53:11.058-04:00வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.sangam.org/taraki/articles/2006/images/national_leader_heres_day.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://www.sangam.org/taraki/articles/2006/images/national_leader_heres_day.jpg" alt="" border="0" /></a>தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.<br /><br />பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.<br /><br />இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.<br /><br />வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.<br /><br />முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.<br /><br />கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.<br /><br />மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-6148241.post-44072442281564534422009-05-12T22:32:00.008-04:002011-12-09T21:45:12.047-05:00ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்னுடைய <a href="http://blog.tamilsasi.com/2009/05/tamil-genocide-tamil-eelam.html">கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள்</a>, தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. <br />
<br />
கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். <a href="http://twitter.com/thamizhsasi">என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். </a><br />
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது. <br />
<br />
வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன். <br />
<br />
நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.<br />
<br />
<span style="font-weight: bold;">புலிகள் மீதான குற்றச்சாட்டு </span><br />
<br />
1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.<br />
<br />
அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை. <br />
<br />
<br />
<span style="font-weight: bold;">தமிழ் ஈழம்</span><br />
<br />
ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.<br />
<br />
<blockquote>
இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்</blockquote>
<br />
<br />
தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது<br />
<br />
தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?<br />
<br />
சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை. <br />
<br />
சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.<br />
<br />
மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.<br />
<br />
நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும். <br />
<br />
நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...</div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-6148241.post-28566848923711113702009-05-10T15:34:00.009-04:002009-05-10T18:46:51.923-04:00போதுமடா இந்த ஈழப் போராட்டம்நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை. <br /><br />கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான். <br /><br />இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.<br /><br />அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.<br /><br />2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது. <br /><br />எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.<br /><br />போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம். <br /><br />புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை. <br /><br />தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது. <br /><br />அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.<br /><br />இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com84tag:blogger.com,1999:blog-6148241.post-87189511481594052552009-04-29T14:23:00.005-04:002009-04-29T14:32:42.735-04:00ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.<br /><br />ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது.<br /><br />இப்படியான சோகங்களையும், வேதனைகளையும் நமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மனங்களில் தெரியும் இந்த வேதனையை பிற மொழி பேசுவோரிடம் கொண்டு செல்ல வேண்டும். இனி இந்தியாவையும், தமிழகத்தையும் நம்பாமல் மேற்குலக நாடுகளையே அணுக வேண்டும். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் வகையில் அமெரிக்க அரசியலை புரிந்து கொண்டிருக்கிறேன். எங்கோ நடக்கும் பிரச்சனை இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தெரியவரும் பொழுது தங்களை அந்தப் பிரச்சனையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் 40 எம்பிக்களும் புண்ணாக்கு மூட்டைகளாக டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே உள்ள ஒரு செனட் உறுப்பினருக்கு எழுதும் மின்னஞ்சலுக்கு கூட கரிசனையுடம் பதில் வருகிறது. சில நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள்.<br /><br />மின்னஞ்சல் மூலமே அமெரிக்க வெளிவிவகார குழு தலைவரும், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளாரான ஜான் கெரியை சென்றடைய முடிந்திருக்கிறது. அவருடன் இந்தப் பிரச்சனையை குறித்து பேச முடிந்திருக்கிறது.<br /><br />நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும். தமிழில் ஈழம் குறித்து எழுதப்பட்ட அதே அளவுக்கு கடந்த 20 வருடங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நாம் நம் நிலையை உலகுக்கு தெரியப்படுத்தியிருக்க் முடியும். ஒரு சின்ன கருத்தையாவது ஆங்கிலத்தில் எழுதி வைக்க வேண்டும். அந்த நோக்கத்துடனே சமீப நாட்களில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி இருக்கிறேன்.<br /><br />கடந்த சில மாத மனதின் ரணங்களை ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன். அந்தக் கட்டுரையை "<span style="font-weight: bold;"><a href="http://kalugu.com/2009/04/29/eelam-crisis-the-unsettling-conflict-of-mind/">Eelam crisis - The unsettling conflict of mind</a></span>" கழுகு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.<br /><br /><span style="font-weight: bold;"><a href="http://kalugu.com/2009/04/29/eelam-crisis-the-unsettling-conflict-of-mind/">Eelam crisis - The unsettling conflict of mind</a><br /><br /><br /></span>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-6148241.post-12187713691069283492009-04-26T16:29:00.008-04:002009-04-26T19:01:09.139-04:00திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற <a href="http://rozavasanth.blogspot.com/2009/04/blog-post.html">ரோசாவசந்த்தின் பதிவும்</a>, அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட <a href="http://valaipadhivan.blogspot.com/2009/04/blog-post.html">ரவியின் (Voice on Wings) பதிவையும்</a> சார்ந்ததே இந்தக் கட்டுரை.<br /><br />இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.<br /><br />இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.<br /><br />அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.<br /><br />இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.<br /><br />1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.<br /><br />இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.<br /><br />இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.<br /><br />திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.<br /><br />இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.<br /><br />நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.<br /><br />இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.<br /><br />1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.<br />எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.<br /><br />1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br />ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?<br /><br />திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.<br /><br />ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?<br /><br />ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.<br /><br />இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.<br /><br />ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.<br /><br />இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.<br /><br />இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.<br /><br />ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..<br /><br />இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.<br /><br />தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.<br /><br />பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.<br /><br />இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?<div><br /></div><div>கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.<br /><br />திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.<br /><br />அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.</div>தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.com58