Saturday, December 18, 2004

உலக அதிசயங்களுக்கான தேர்தல்

இதைப் பற்றி கேள்விபட்டவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி "தஞ்சாவூர் பெரிய கோயில்" ஏன் இந்தப் பட்டியலில் இல்லை ? மதுரை மீனாட்சியம்மன் கோயில் எந்தவிதத்தில் அதிசயமானது ?

இப்பொழுது ஒரு புதுப்பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து எழு இடங்கள் இடம்பெற்றுள்ளன.

  1. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
  2. தஞ்சாவூர் பெரிய கோயில்
  3. மகாபலிபுரம்
  4. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை
  5. கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு மண்டபம்
  6. திருவண்ணாமலை கோயில்
  7. சென்னை அண்ணாநகர் டவர்

இந்தப் பட்டியலில் அண்ணா நகர் டவரைப் பார்த்தவுடன் சிரிப்பு தான் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய அளவுக்கு அண்ணாநகர் டவர் எந்த வகையில் அதிசயமானது என்பது தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய கட்டடங்களை யார் தேர்வு செய்கிறார்கள் ? மற்ற நாடுகளில் உள்ள கட்டிடங்களும் இந்த லட்சனத்தில் தான் இருக்குமோ ?

இதற்கு ஒரு தேர்தலாம் ? ஓட்டெடுப்பாம் ?

3 மறுமொழிகள்:

Anonymous said...

அதொன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு ஏழு பேர் சேர்ந்து ஒரு இடத்தை பரிந்துரை செய்தால் அந்த இடமும் போட்டிப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும். இப்படியெல்லாம் விளையாட்டுத்தனமான விதிமுறைகளைக் கொண்டு நடத்தப்படும் வாக்கெடுப்பு முழுமையான ஒன்றாக அங்கீகரிக்கப்படும் என்பதை நம்ப முடியவில்லை.

New7wonedrs நோக்கம் உயர்வானதாக இருக்கிறது. ஆனால் அதற்கான செயல்முறைகளும். போட்டிகளுக்கான விதிமுறைகளும் உலக அதிசயத்தை தேர்ந்தெடுக்கத்தக்க தரத்துடன் இல்லை.

By: ராஜா

12:58 PM, December 18, 2004
Kasi Arumugam said...

எனக்கு முதல்கோணல் முற்றும்கோணல் என்பதுபோல ஆரம்பத்திலிருந்தே இதன்மேல் ஒரு அவநம்பிக்கை. இதிலெல்லாம் நம் பத்திரிகைகளும் (தினமலர் மட்டுமல்ல, ஆனால் தினமலர் அதிகம் கூவி வியாபாரம் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது) மற்ற ஊடகங்களும் தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பிள்ளையார் பால்குடிப்பதையே அத்தனை சூடாகப் பரப்பௌம் ஊடகங்கள், இதைவைத்து விளையாடி வருகின்றன. வெட்டி வேலை.

4:17 PM, December 18, 2004
Anonymous said...

நம்ம தமிழகத்தில் இந்தளவுக்கான அறிவாளிகளும் இருக்கிறார்களா??

அய்யோ! அய்யோ!!

3:05 AM, December 05, 2008