வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

அஞ்சலி

தமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயிரம் தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினை சிங்கள இனவாத அரசு கொண்டாடி வருகிறது. போரில் பலியான பல ஆயிரம் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இன்று எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எந்த வகையிலும் அவர்களின் மரணத்தை தடுக்க முடியாத நம்முடைய இயலாமைச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது இந்த அஞ்சலி மட்டுமே.



ஈழ‌த்திற்கான‌ இறுதிப் போரிலே த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னும் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்திருக்கிறார். அவ‌ருக்கும் என்னுடைய‌ அஞ்ச‌லியை செலுத்துகிறேன்.



மேலும் படிக்க...