வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன் புல்லரிக்கிறது என்றால் - Sri Lanka has been ranked as the third most dangerous place for the media in the world என்பது தான்...

சமீபத்தில் வெளியான பி.பி.சி செய்தி
'Drop' in S Lanka press freedom
International media watchdog groups say there has been a marked deterioration in press freedom in Sri Lanka.




பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஊடக அமைப்புகள் Stop the War on Journalists in Sri Lanka என்று போராட்டத்தையும் நடத்தினர்.


TV journalist killed in Sri Lanka




இந்தளவுக்கு ஊடகங்கள் மீது கரிசனமாக இருக்கும் சிறீலங்கா அரசாங்கம், அதனுடைய ஒரு அமைப்பு மூலமாக ஆசியாவின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினை ராமுக்கு அளிக்கிறதாம். புல்லரிக்காதா பின்னே ?

அந்த விருதினை வாங்கிக் கொண்டு ஆற்றோ, ஆற்றோன்னு ஒரு உரையாற்றி இருக்கிறார் பாருங்கோ, அதனை நினைச்சா இன்னும் புல்லரிக்கிறது.

“Time has come for the media in South Asia to seriously introspect on its role on how it could improve its performance in betterment of the welfare of the people and the peace processes in the society,” N. Ram, Editor-in-chief of The Hindu, said here on Tuesday.

அவருடைய ஹிந்து நாளிதழை அவர் முதலில் introspect செய்தால் பரவாயில்லை.

****

ஹிந்து நாளிதழை தொடர்ச்சியாக நான் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் என்னுடைய கடந்த பதிவை சார்ந்து முன்வைக்கப்பட்டது. ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறித்து முன்பு எழுதிய ஒரு பதிவை அவர்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

இந்திய அதிகார மையத்திற்கு, ஈழம் சார்ந்து தாங்கள் முன்வைக்க விரும்புகிற விடயங்களை நேரிடையாக மக்கள் மத்தியில் வைக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் எப்பொழுதுமே ஹிந்து அதனை முன்வைத்து வந்திருக்கிறது. 1980களில் இருந்து 2000ம் வரை இதே நிலை தான். அதனால் தான் ஹிந்துவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. ஹிந்து நாளிதழை எதிர்ப்பது இந்திய அதிகாரமையத்தை எதிர்க்கும் ஒரு செயல் என நான் நம்புகிறேன். மேலும் படிக்க...

ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்

தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.

இன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது.

என்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய "குடும்ப நண்பர்" சந்திரிகா குமாரதுங்கா "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.

இது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.
http://www.hinduonnet.com/2005/11/15/stories/2005111517191400.htm

அந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.

The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general." Mr. Ram is the first Indian recipient of the honour, which is conferred on a restrictive basis.

அதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்பதை அவர் எப்படி சாதித்தார் ?

130 வருட "பாரம்பரியம்" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் "பாரம்பரிய பேனரும்" அவருக்கு வசதியாக இருந்தது.

**********

ஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி "தமிழர்கள்" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.

தமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.

அது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.

காஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் "இந்திய தேசிய உணர்வை" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.

ஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்

Tamil Nadu’s politicians clearly have different standards for India and for Sri Lanka. It would appear that they accept that battling terrorism in India and saving Kashmir from Islamist jihadis are important national tasks but not so in Sri Lanka which has been menaced for more than two decades by the LTTE.


....When Pakistani generals and Islamist militants characterise the separatist uprising in Kashmir as a "freedom struggle," the collective Indian national consciousness is understandably outraged. Politicians in India are rarely exercised over concerns that the human rights of innocent citizens are often trampled upon in police action against terrorists or their perceived accomplices. There is indeed a broad-based political consensus behind the Indian state when it takes strong steps to root out terrorism.

என்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா ?

இந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

**********

சிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா ?

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா ? கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.

பிபிசி போன்ற செய்தி தளங்களில் தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested' ), கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')

இப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


‘I am committed to political solution and ending Tamil civilian hardships’

N. Ram

Chennai: “I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.

மகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை ? மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை ?

இத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ? ஹிந்து ராம் என்ற விசுவாசமான "பிறவி" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.

********

போரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை "காசு கொடுத்து" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.

எனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...

*******

விகடனை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் சமீபத்தில் ஈழப்பிரச்சனை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் கீழே உள்ளது

மேலும் படிக்க...

வெகுஜன செய்தி திரிப்பு

வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு. பத்திரிக்கைகள் தங்களின் கருத்துக்களை தலையங்கத்திலோ, கருத்து பத்தியிலோ வெளியிடுவது தான் ஒரு நல்ல மரபாக கருதப்படுகிறது.

இந்திய வெகுஜன ஊடகங்கள் இதனை பல்வேறு விடயங்களில் சரியாக கடைபிடிக்கின்றன. உதாரணமாக, உள்நாட்டு பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் கோஷ்டி சண்டைகள் போன்றவற்றில் நடுநிலை பத்திரிக்கைகள் என சொல்லப்படும் பத்திரிக்கைகள் செய்திகளை பெரும்பாலும் தணிக்கை செய்வதில்லை.

ஆனால் தேசியம் போன்ற தங்களின் தேவைக்கு உட்பட்ட சித்தாந்தங்களில் அந்த தணிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

நான் அதிகமாக நீட்டி முழங்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருகிறேன்.

இன்று ஹிந்து நாளிதழில் காஷ்மீர் குறித்த ஒரு செய்தியை வாசித்தேன். அதே செய்தியினை Associated press தளத்திலும் வாசித்தேன்.

செய்தியின் சாராம்சம் இது தான்

இந்தியாவின் ஆளுமையில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை கோரி ஆயிரக்கணக்கான காஷ்மீர் முஸ்லீம்கள் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு கூடினர். ஜநாவின் தலையீட்டினை கோரினர்.

இந்த செய்தி Associated pressல் இவ்வாறு வெளியாகிறது

Tens of thousands of Muslims waving green and black protest flags marched through Indian Kashmir's main city on Monday and gathered in front of U.N. offices demanding freedom from India and intervention by the world body.

ஹிந்துவிலே செய்தி எவ்வாறு வெளியாகிறது என பாருங்கள்

Tens of thousands of people from across the Kashmir valley arrived here on Monday to take part in the march organised by the Hurriyat-sponsored Coordination Committee to submit a memorandum to the United Nations office here, seeking its intervention in the resolution of the Kashmir issue.

The processionists, bands tied to their heads and holding black and green flags, asserted that they would not compromise on the basic demand for resolution of the Kashmir issue.


ஹிந்து இந்தச் செய்தியை வெறும் “resolution of the Kashmir issue” என்று மட்டுமே வெளியிடுகிறது.

ஹிந்து செய்திகளில் விடுதலையை குறிக்கும் வார்த்தைகளான Freedom, Independence போன்றவை எங்காவது தென்படுகிறதா என பார்த்தேன். கிடைக்கவேயில்லை. ஆனால் ஆர்ப்பாட்ட படங்கள் “FREEDOM" என்று கூறும் படங்களை தாங்கியே பல தளங்களில் வெளியாகி உள்ளது

ஹிந்துவின் செய்தியில் சுயநிர்ணயம் - self-determination என்ற வார்த்தை மட்டும் இறுதி வரியில் உள்ளது.

self-determination என்பது மேல்பூச்சான வார்த்தையாகவே நான் நினைக்கிறேன்.

Freedom, Independence என்பது காஷ்மீர் மக்களின் போராட்டத்தை குறிக்கும் தெளிவான வார்த்தை. அதனை ஏன் ஹிந்து பயன்படுத்தவில்லை என்பதை படிப்பவர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன் மேலும் படிக்க...

தலாய்லாமாவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன தொடர்பு ?

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எவ்வாறு அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்களோ அது போல தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே சீனா தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

இது என் கருத்து அல்ல. தலாய்லாமா என்கிற அமைதியை விரும்புகிற தலைவருடன் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை நிச்சயம் என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை.

இவ்வாறான கருத்தினை முன்வைத்திருப்பது இந்தியாவின் பாரம்பரிய மிக்க "தேசிய" பத்திரிக்கையான (India's National Newspaper) ஹிந்து. ஹிந்துவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை இவ்வாறு கூறுகிறது.

What those urging China to negotiate with the Dalai Lama fail to recognise is the fact that Beijing’s main constituency is not the international community but its own domestic public. For Beijing to appear ‘soft’ on the Dalai Lama would be as politically unpalatable domestically asit would be in the United States were Washington to decide to engage in dialogue with Osama bin Laden.

ஈழப் பிரச்சனையில் எவ்வாறு சிங்கள மக்களின் சார்பாக இருந்து ஹிந்து, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக பேசுகிறதோ அது போல இந்தக் கட்டுரை சீன மக்களின் பார்வை என்பதாக ஒன்றினை "முன்னிறுத்தி" திபெத் விடுதலைப் போராட்டம் குறித்த சீனாவின் பார்வையை இந்திய வாசகர்களிடம் விளக்க/திணிக்க முனைகிறது. ஈழப் பிரச்சனை குறித்து நிருபமா சுப்ரமணியன் எழுதுவது போன்ற ஒரு தொனியில் இந்தக் கட்டுரையை எழுதுகிறார் பல்லவி ஐயர்.

உண்மையில் இந்தக் கட்டுரைகளை யார் எழுதுகிறார்கள்/யார் மேற்பார்வையில் எழுதப்படுகிறது போன்ற கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கேள்விகளை ஹிந்துவின் பாரம்பரிய வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.

ஹிந்துவின் கட்டுரை - How China sees the Dalai Lama and his cause மேலும் படிக்க...

ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...


ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?

என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?

கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.

"ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை"

இது தொடர்பாக நான் அறிந்த தகவல்களை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது குறித்து மிக விரிவாக எழுத வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் திரைமறைவில் நடந்த இந்த நிகழ்வுகள் ஈழப்பிரச்சனையை கூர்ந்து கவனித்து வரும் பலருக்கும் கூட தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதற்கான ஒரு சிறு அறிமுகம் மட்டுமே. இது குறித்த மிக விரிவான கட்டுரை தொடரை மற்றொரு தருணத்திலே நான் நிச்சயம் எழுதுவேன்.

ஹிந்து என்.ராம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பினை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் ராஜீவ் காந்திக்கு தவறான தகவல்களை அளித்து இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி கொடுத்த குழுவில் ஹிந்து ராம் முக்கியமானவர். இந்தியாவின் Foriegn policy disaster என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை திட்டமிட்டு நடத்திய குழுவில் முக்கியமானவரான ஹிந்து ராம் அவரது தோல்வியை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார் ? நாம் தான் வெளிப்படுத்த வேண்டும்...

Assignment Colombo என்ற தன்னுடைய புத்தகத்திலே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நேரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக இருந்த ஜே.என்.தீக்க்ஷித் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

I distinctly remember Rajiv Gandhi raising the question as to whether the LTTE would really abide by the agreement, which India was bound to implement as a guarantor. Rajiv Gandhi raised this question in the context of the doubts and misgivings Prabhakaran had expressed when Hardeep Puri provided details of the agreement to him on July 19.

Rajiv's question was primarily addressed to the then secretary of the Research and Analysis Wing, S E Joshi, who was cautious in his response. He said the LTTE was not a very trustworthy organisation and the agreement in a manner went against their high-flown demand for Eelam. Joshi was about to retire. His successor Anand Verma's response was that the LTTE owed much to India's support, that it was the LTTE which conveyed the message to N Ram of The Hindu, which initiated the whole process of discussions on the proposed Agreement.

ஒரு முக்கியமான விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புலிகள் எதிர்க்கின்றனர். காரணம் இந்த ஒப்பந்தத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா அல்ல. ஆனால் விடுதலைப் புலிகளை அகற்றி விட்டு இந்தியா அவர்கள் சார்பாக இலங்கையுடன் கையெழுத்திடுகிறது. இதனை புலிகள் எதிர்க்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அது தான் முதல் கோணல். பிறகு அதுவே பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிங்கப்பூரில் ஹிந்து என்.ராமை சந்திக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தங்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்க பிரதிநிதிகள் என்.ராமிடம் தெரிவிக்கிறார்கள்.

LTTE representatives in Singapore met N Ram, the associate editor of The Hindu newspaper, published from Madras, and conveyed a message that, the LTTE would be willing for a political compromise, if the Sri Lankan government agreed to the following proposals:
  • Military operations should stop and Sri Lankan forces should return to the barracks, wherever they are;
  • The Northern and Eastern provinces should be merged and recognized as a Tamil homeland;
  • There should be devolution of powers on the basis of the proposals which had come up since 1983 and up to the end of 1986;
  • Tamil should be recognized as an official language equal in status with Sinhalese.
  • An interim Tamil administration should be put in place in the linked northern and eastern provinces, to negotiate and finalize details of devolution of power etc, and;
  • Tamils should be given proportional representation in the three services of the security forces and in the public service.
(Sri Lanka - The Untold Story)

மேலே உள்ள புலிகளின் கோரிக்கைகளை கவனித்தால் அது தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சாராம்சம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதனை முன்வைத்த புலிகளே, அந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

என்.ராம் விடுதலைப்புலிகளின் இந்த தகவலை இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்காவிடம் கொண்டு செல்கிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கம் - இந்திய அரசாங்கம் இவர்களிடையே பல கடிதப் போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தக் கடிதங்களை பல தரப்புகளிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை என்.ராம் ஏற்கிறார்.

காரணம் என்.ராம் இலங்கை அரசாங்கம், இந்திய அரசு மற்றும் உளவுநிறுவனங்களுக்கும் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கமானவர். எனவே ஹிந்து என்.ராம் இந்த ஒப்பந்தத்திலே ஒரு தூதுவராக இந்த மூன்று தரப்புகளிடையே பணியாற்றுகிறார்.

இந்த நெருக்கம் எப்படி ஏற்பட்டது ?

என்.ராம் இந்திய உளவு நிறுவனமான "ரா (RAW)" உளவு நிறுவனத்தின் உளவாளி என தமிழகத்திலே திராவிடர் கழகம் மேடைகளில் முழுங்குவதை கேட்டிருக்கிறேன். அவர் ராவின் உளவாளியாக பல தரப்புகளிடையேயும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஒரு பத்திரிக்கையாளராக பல தரப்பினரையும் அவர் சந்தித்து இருக்கலாம், தனக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். எது எப்படியாயினும் இலங்கையில் பலரிடம் என்.ராமிற்கு மிக நெருக்கமான நட்பு இருந்தது என்பதை இலங்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கொண்டு அறிய முடிகிறது.

என்.ராம் இலங்கை அரசியலில் தனது பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை இவ்வாறு தெரிவிக்கிறார்..

Let me add, by way of disclosure, that I was in Sri Lanka as a journalist seeking to interview President Jayewardene but with an interest and, as it turned out, a role going beyond journalism...

ஆம்...இலங்கை அரசியலில் என்.ராமின் ஈடுபாடு என்பது வெறும் பத்திரிக்கையாளரின் ஈடுபாடு அல்ல. என்.ராம் பத்திரிக்கையாளர் என்னும் முகமூடி மூலமாக இலங்கை அரசியலில் அவரது ஈடுபாட்டினை பல தளங்களில் முன்னெடுக்க முடிகிறது.

அவரது நட்பின் வட்டம் இலங்கையின் பல்வேறு தரப்புகளிடையேயும் பரந்து விரிந்து இருந்தது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரா கட்சி என இந்த இரண்டு தரப்புகளிடையேயும் அவருக்கு நெருக்கம் இருந்தது. அது போல இலங்கையைச் சார்ந்த சிறீலங்கா அரசு ஆதரவு தமிழ் தலைவர்களையும் அவருக்கு தெரியும். விடுதலைப் புலிகளுடனும் அவருக்கு நெருக்கம் இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான காமினி திசநாயக்கா என்.ராமின் நெருங்கிய நண்பர். சென்னையில் என்.ராம் வீட்டிற்கு விருந்தினர்களாக குடும்பத்துடன் வந்து போகும் அளவிற்கு காமினி திசநாயக்காவுடன் என்.ராமிற்கு நெருங்கிய நட்பு இருந்ததாக ஹிந்து நாளிதமிழில் நிருபராக வேலை பார்த்தவரும், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளருமான இலங்கைச் சார்ந்த DBS.ஜெயராஜ் குறிப்பிடுகிறார். என்.ராம் கூட பல தருணங்களில் அவருக்கும் காமினி திசநாயக்காவுக்கும்மான நட்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்.ராமின் மற்றொரு நெருங்கிய நண்பர் விஜய குமாரதுங்கா. சந்திரிகா குமாரதுங்காவின் கணவர். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு விடுதலைப் புலிகளையும், மிதவாத சிங்கள தலைவர்களையும் சந்திக்க வைக்கும் ஒரு முயற்சியை என்.ராம் மேற்கொள்கிறார். 1986ல் விஜய குமாரதுங்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் சென்னைக்கு வருகிறார்கள். என்.ராம் அவர்களை விடுதலைப் புலிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்தது.

1985ல் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பேட்டி எடுத்து ப்ரெண்ட்லைனில் வெளியிட்டவரும் என்.ராம் தான்.

மறுபடியும் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்திற்கு முன்பாக இருந்த சூழலுக்கு வருவோம்...

விடுதலைப் புலிகள், சிங்கள அரசியல்வாதிகள் என இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமாக என்.ராம் இருந்த காரணத்தாலும், 1986ம் ஆண்டு அவர் சிங்கள மிதவாத தலைவர்கள் எனக்கூறப்படும் விஜய குமாரதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா ஆகியோருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்ததமையாலும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கும், தங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையினை ஏற்படுத்த ஒரு "தூதுவராக" என்.ராமை அணுகுகிறார்கள். சிங்கப்பூரில் என்.ராமிற்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

இங்கு கவனிக்க வேண்டியது இந்த ஒப்பந்தத்தையே புலிகள் தான் முதன் முதலில் முன்வைக்கிறார்கள். அதனை ஜே.என்.தீக்க்ஷ்த் தன் புத்தகத்திலே குறிப்பிடுகிறார். பின்னாட்களில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முன்னெடுத்ததாக திரிக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மீதும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே மீதும் விடுதலைப் புலிகளுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதனால் இந்தியா ஒரு மத்தியஸ்தராக இந்தப் பிரச்சனையில் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மீற முடியாது என புலிகள் நினைக்கிறார்கள். அவ்வாறே என்.ராம் காமினி திசநாயக்கா, ஜெயவர்த்தனே போன்றோரை சந்திக்கிறார். இந்திய தரப்பிலும் இந்திய உளவு நிறுவனத்தையும், இந்திய அரசாங்கத்தையும் சந்திக்கிறார். இம் மூன்று தரப்புகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை கொண்டு வருவதை முன்னெடுக்கிறார்.

ஆனால் இங்கே தான் ஒரு மிகப் பெரிய குழப்பத்தை என்.ராம் உள்ளிட்ட இந்திய தரப்பு செய்து விடுகிறது...

இந்தியாவின் வெளியூறவுக் கொள்கையை கூர்ந்து கவனித்தால் இந்தியா ஏன் இவ்வாறு ஒரு மிகப் பெரிய குழப்பத்தினைச் செய்கிறது என்பது புலப்படும். ஆனால் தமிழகத்திலே மட்டும் இந்த குழப்பத்தினை "தேச நலன்" என்று சப்பை கட்டும் பழக்கம் உள்ளது. ஆனால் தரவுகளை சரியாக பார்த்தால் இந்தியா தனது வெளியூறவுக் கொள்கையில் 1980களில் செய்த தவறுகளை 1990களில் சரி செய்து கொண்ட வரலாறு நமக்கு புரியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு தனது வெளியுறவுக் கொள்கைகளை பல மாற்றங்களுக்கு உட்படுத்தி இருக்கிறது. நேருவின் காலத்தில் அணிசேரா நாடு என்பதாக அனைத்து நாடுகளிடமும் இணக்கமாக இருந்த கொள்கை, இந்திராவின் காலத்தில் அதிரடியான வெளியூறவு கொள்கையாக மாற்றம் பெற்றது. இந்தியாவின் உளவு அமைப்புகள் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தின. அன்றைக்கு பாக்கிஸ்தானை சீர்குலைப்பது இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வாறு தான் பாக்கிஸ்தானில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு பங்களாதேஷ் உருவானது. இன்னும் சொல்லப்போனால் இந்திராவின் காலத்தில் தான் இந்திய உளவு நிறுவனங்கள் விஸ்ரூபம் எடுத்தன (உளவு நிறுவனங்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/12/blog-post_29.html)

இந்திராவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைந்தன. இந்திராவின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளில் உளவுத்துறை மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் இந்தியா தான் மிகப் பெரிய சக்தி என்பதை நிருபிக்கும் வகையிலே இருந்தது. ராஜீவ் காந்தி இதனை அடுத்த நிலைக்கு உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் பேரில் மேற்கொள்கிறார். அதற்கு அப்போதைய பனிப்போர் சூழலும் ஒரு காரணம். ராஜீவ் காந்தி பல நாடுகளில் இந்தியாவின் நேரடியான தலையீட்டினை முன்னெடுக்கிறார். இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபால் என அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் ராஜீவ் மற்றும் உளவு நிறுவனங்களின் Hegemony கொள்கையாக இருந்தது. இதனைச் சார்ந்து தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவின் தலையீடும் அமைகிறது.

ஆனால் இதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு காரணமாக 1989ல் பதவியேற்கும் வி.பி.சிங் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. 1989ல் வெளியூறவுத்துறை அமைச்சரும், பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றவருமான ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல புதிய பரிமாணங்களை கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டு இன்று வரை அமலில் இருக்கும் அந்த வெளியூறவு கொள்கைகளை "Gujral Doctrine" என்று கூறுவார்கள். அண்டை நாடுகளை மதிப்பது, அண்டை நாடுகளுடன் இணக்கமாக, சமநிலையில் பழகுவது போன்றவை இந்த கொள்கையின் முக்கிய அம்சம். இது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் முன்னெடுத்த அதிரடி வெளியூறவு குழப்பத்தை சரி செய்தது மட்டுமில்லாமல் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்தியாவின் இந்த வெளியூறவு கொள்கை குழப்பங்களையும், பின்னடைவுகளையும் மனதில் கொண்டு இந்தக் கட்டுரையினை வாசித்தால், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு குழப்பத்துடன் அமைந்தது என்பது புரியும்.

இந்திரா காந்தி இருந்த வரையிலும் இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களுக்கு இணக்கமான ஒரு கொள்கையினை அவர் வகுத்து இருந்தார். அந்த சமயத்திலே அவர் இவ்வாறான இணக்கமான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் அப்போதைய சுழ்நிலையில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு சென்றிருக்கும். எனவே இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்திராவிற்கு இருந்தது. இந்திராவும் அதைத் தான் செய்தார்.

ஆனால் ராஜீவ் பதவியேற்ற பொழுது அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியின் அருகில் இருந்த உளவு நிறுவ அதிகாரிகளும், ஆலோசகர்களும் இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவது இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கும், மொழி ரீதியாக இலங்கையில் ஒரு தனி நாடு உருவாவது மொழி வாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர். அதனால் இலங்கையில் இந்திரா காந்தி முன்னெடுத்த கொள்கையில் இருந்து ராஜீவ் அரசு தடம் மாறுகிறது.

அவர்கள் தடம் மாற அடிப்படை காரணமாக இருந்த "தமிழகம் தனி நாடாக பிரியும் என்னும் வாதம்" எவ்வளவு முட்டாளதனமான ஒரு வாதம் என்பது இன்றைக்கு நமக்கு புரிகிறது. இதனை முன்னெடுத்துவர்கள் ஒரு சிறு குழுவினர். ஆனால் ஒரு அரசாங்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழுவினரைச் சார்ந்து இந்த வாதத்தை வைத்தது அப்போதைய அதிகாரிகளின் முட்டாள்தனத்தையும், குழுப்பத்தையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதனால் தான் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை India's Foriegn Policy Disaster என கூறுகிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் தெகல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Going back to the Accord, if you were to look at the Letters of Exchange, it seems India was more concerned about its own geopolitical interests. There was absolutely no reference to the Tamil question.

You may be quite right. One of the clauses of the agreement was directly related to the Voice of America broadcasting station in Sri Lanka. Today, the whole geopolitical situation has changed. We are having a nuclear agreement with the US, which had reneged upon its nuclear agreement for supply of fuel to Tarapore atomic power station in 1974. So, it is very difficult to go digging into the past. There is no point in digging up graveyards.

During the Indira Gandhi era, India was perceived to be more sympathetic to the Tamil cause, but there was a sudden shift in approach after Rajiv Gandhi became PM. Was it because of a change in India’s perception of its own geopolitical interests or was it because of his advisers?

You are being slightly unfair to Rajiv. He offered to send Indian forces, as he said, to protect the Tamil people. He did not send the IPKF to fight the LTTE. In the first months there was a lot of bonhomie between the LTTE and the IPKF. Later on, for various reasons, the relationship between the two sides broke down.

இவர் கூறும் various reasons என்ன என்பதை விரிவாக இந்த கட்டுரை தொடரில் நான் அலச இருக்கிறேன்

But don’t you think he should have let the parties to the conflict come to an agreement (instead of India and Sri Lanka signing an agreement)?

It is a very valid point. The agreement should not have been between India and Sri Lanka. It should have been signed between the Sri Lankan government and the LTTE, with India, perhaps as a well-wisher, on the sidelines. On the other hand, the agreement was between the two governments and LTTE was not brought into the agreement directly, which is a pity. But all these are reminiscences in retrospect. Well, since you are asking me, I may say that before the Indo-Sri Lanka agreement was signed, I was still in Delhi after leaving my post as foreign secretary.

One evening, I bumped into N. Ram the present editor of The Hindu. I told him that the Accord, the draft of which was known, was very badly conceived. I felt the LTTE should have been made a party to the agreement, and the Indian government should not have been a direct party with the Lankan government. Ram said it was a bit too late to bring about any change in the agreement, which was happening in the next week or two. He was also travelling with the PM to Colombo for this “historic agreement”. The rest is history.

இரு பூனைகள் அப்பத்தை பங்கு பிரிக்க, குரங்கை அழைத்த கதை போல விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் செய்ய நினைத்த இந்த ஒப்பந்தத்திலே, மத்தியசம் செய்ய உள்ளே நுழைந்த இந்தியா, புலிகளை ஒதுக்கி தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தத்தை முதலில் முன்னெடுத்த புலிகள் ஒதுக்கப்படுகின்றனர். தமிழர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தேச நலன் என சில Theoretical அம்சங்களை, இன்று வரை நிருப்பிக்கப்படாத சில அம்சங்களை முன்னிறுத்தி தமிழர்கள் மீது இந்தியா போர் தொடுக்கிறது.

அந்த குழப்பத்தை முன்னெடுத்த குழுவில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் என்.ராம். ஹிந்து என்.ராம் எவ்வாறு இந்த விவகாரத்தில் பணியாற்றினார் ? விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட என்.ராம் பிறகு ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறினார் ?

என்.ராம் தனது இலங்கை அரசியல் பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

....What followed, between February 1987 and March 24, 1990, when the IPKF completed its `de-induction from Sri Lanka under unhappy circumstances, was akin to a historical adventure, some would say, misadventure.

அந்த misadventure குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

********

என்.ராம் மீது திபெத் மக்களின் குற்றச்சாட்டு : கொழும்பில் இருந்து சிங்கள அரசாங்கம் தரும் செய்திகளை ஹிந்து வெளியிடுவதாக ஈழத்தமிழர்கள் குற்றம்சாட்டுவது போல, சீன அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டு திபெத் சுதந்திர போராட்டத்தை ஹிந்து ராம் திரிப்பதாக திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் " 'Save The Hindu' Campaign " என்ற ஒன்றினை நடத்தி ஹிந்துவின் செய்தி திரிப்பை அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அது குறித்த தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது - http://www.friendsoftibet.org/save/

Friends of Tibet has learned that the editorial board of The Hindu led by N Ram has instructed their centres not to carry any 'Tibet', 'Dalai Lama' and 'Falun Gong' stories criticising the policies of the Chinese government. Instead of depending on reliable news agencies like PTI, UNI, IANS, Reuters, AP and AFP, The Hindu has found a Beijing-based news-agency to fetch stories - The Xinhua - world's biggest propaganda agency belonging to the Chinese Communist Party. Probably The Hindu is the only newspaper in the country to reproduce Xinhua reports. Today The Hindu has virtually become a mouthpiece of the Chinese Communist Party.

திபெத் குறித்த என்னுடைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/11/blog-post_22.html மேலும் படிக்க...