தமிழகமும், தமிழ் ஈழமும்
தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.
ஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.
தன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.
shortly after i was seated, taciturn Tiger guerrillas switched on a color television set ( a rare commodity in those days) and made me watch several video documentaries (even rarer commodities) on the LTTE and its leader. They were beautifully shot. The dance of sunlight and the angle of the camera made pirabhakaran seem larger than life. He looked strong, tough and brave. The film depicted LTTE as the disciplined national army of a proud nation - Tamil Eelam.
தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை "இந்திய" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
இன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.
புலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.
யானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.
இந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய
50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.
இந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.
அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.
இன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)
மாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)
புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் "சார்பு" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.
The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.
மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.
When you meet Pirabhakaran, tell him it's the last time he will be seeing you. Before you get there next time, I will make sure he is a dead man
இத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் ?
எந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "இறந்த" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.
நான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.
ஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.
தன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.
shortly after i was seated, taciturn Tiger guerrillas switched on a color television set ( a rare commodity in those days) and made me watch several video documentaries (even rarer commodities) on the LTTE and its leader. They were beautifully shot. The dance of sunlight and the angle of the camera made pirabhakaran seem larger than life. He looked strong, tough and brave. The film depicted LTTE as the disciplined national army of a proud nation - Tamil Eelam.
தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை "இந்திய" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.
அதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
இன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.
புலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.
யானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.
இந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய
50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.
இந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.
அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.
இன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)
மாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)
புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் "சார்பு" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.
The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.
மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.
When you meet Pirabhakaran, tell him it's the last time he will be seeing you. Before you get there next time, I will make sure he is a dead man
இத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் ?
எந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "இறந்த" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.
நான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.