மாலனின் அரசியல்
சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.
புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது ? இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும் ? அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா ? அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா ?
நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.
ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.
இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.
எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.
அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.
இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.
இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.
வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.
அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு
*****
தன்னை மார்க்சிஸ்ட் என்பதாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஹிந்து ஆசிரியர் என்.ராம், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் என்.ராம் அவர் மகளை அமெரிக்க முதலாளித்துவ பலகலைக்கழகத்தில் படிக்க வைத்தமை முரண்பாடு தானே ? ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட சமயத்தில் சங்கர மடத்தை கட்டிக்காக்க விஜயேந்திர சரஸ்வதியை முன்னிறுத்திய மார்க்சிஸ்ட் தானே என்.ராம் ? ஒரு மார்க்சிஸ்ட் சங்கர மடத்தை ஏன் கட்டிக்காப்பாற்ற வேண்டும் ?
இப்படிப்பட்ட ஒரு மார்க்ஸ்சிய சிந்தனை வறட்சியில் இருக்கும் இந்திய மார்க்சியவாதிகள் தான் இலங்கையில் சிங்கள இனவெறிப்பிடித்த ஜேவிபியினரிடம் மார்க்சிஸ்ட் என்பதாக தோழமை கொண்டாடுகிறார்கள். ஜேவிபியினர் என்ன இடதுசாரி கொள்கைவாதிகளா? அவர்கள் இனவெறிப்பிடித்தவர்கள் தானே ?
இத்தகைய கருத்துகளை தான் பெயரிலி தன் பின்னூட்டத்தில் முன்வைத்து இருந்தார். இது எப்படி தனி மனித தாக்குதல் ஆகும் ? வலைப்பதிவுகளில் நன்னடத்தை பற்றி பேசும் மாலன், பெயரிலி இல்லாத ஒரு இடத்தில் பெயரிலி பற்றி பேசுவது எப்படி நன்னடத்தையாகும் ?
சமீபத்தில் கொழும்பில் இருந்து வயதான மூதாட்டிகள் வரை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட சூழலில் உலமெங்கும் இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளும் "தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்திகள் வெளியிட்டன. ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை கடுமையாக கண்டித்திருந்தன. ஆனால் ஹிந்து "வேலையற்ற தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்தி வெளியிட்டது (jobless Tamils). அந்த செய்தியைப் படித்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இருக்கும்.
படத்தில் இருக்கின்ற இந்த மூதாட்டியும் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். மூதாட்டியும் இந்த வயதில் கொழும்பில் வேலை தேடிக்கொண்டிருந்தாரா ? பிபிசி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பொய் கூற ஹிந்து மட்டுமே உண்மையான செய்தியை வெளியிடுகிறதா ?
(பிபிசி செய்தி : Police evict Tamils from Colombo)
(ஹிந்து செய்தி : Jobless Tamils evicted from Colombo on grounds of security)
(இந்துவின் இன்னும் பலப் பொய்ச்செய்திகளையும், பிற ஊடகங்களில் வெளியான ஒப்பீடுகளையும் ராம் வாச்சர் பதிவில் படிக்கலாம் - http://ramwatchintamil.blogspot.com, http://ramwatch.blogspot.com/)
உண்மைகள் இவ்வாறு இருக்க "புலிகள் கூறினால் நம்புவார்களா ? ஹிந்து கூறினால் நம்புவார்களா ?" என மாலன் கூறுவது நகைப்பிற்குரியது மட்டுமல்ல. அது பின் இருக்கும் அரசியல்களையும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
ஈழ விவகாரங்களில் மாலன் அவர்களுடைய வாதங்கள் "புலிகள் எதிர்ப்பு, ஈழ தமிழர் எதிர்ப்பு, ஈழ விடுதலை எதிர்ப்பு" என கண்மூடித்தனமாக இருக்கிறது. என்றாலும் அவர் தினமணிக்கதிர், குமுதம் ஆகியவற்றில் பத்திரிக்கையளாராக இருந்த பல சமயங்களில் இதனையே முன்நிறுத்தி இருக்கிறார் என்பதால் அவரது எதிர்ப்பின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அரசியலை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.
*****
வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்து பேசும் ஒரு பேச்சில் ஈழ தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து
பேச வேண்டிய அவசியம் ஏன் நேருகிறது ?
ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
பொருளாதார/இராணுவ வல்லரசான இந்திய நாட்டின் பிரஜைகள் ஏன் பச்சை அட்டைக்காக அமெரிக்காவில் இந்த அலைச்சல் அலைகிறார்கள் ? கடந்த மாதம் அமெரிக்காவில் பச்சை அட்டைகளுக்கான I-485ஐ அமெரிக்க குடியுரிமைத்துறை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும். இதில் இருக்கும் பல படிகளில் ஒரு சில படிகளை கடக்கும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிர்பந்தங்கள் கூட சிலருக்கு உண்டு. என்னுடைய ஒரு நண்பனின் மனைவி பிரசவத்திற்காக இந்தியா சென்று விட்டார். எட்டாவது மாதம். அவருக்கும் சேர்த்து I-485 விண்ணப்பம் செய்தாக வேண்டும். அவர் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும் என்பதால் அவரை உடனடியாக அமெரிக்கா வரும்படி நண்பர் கூறிவிட்டார். சிலர் தங்கள் திருமணங்களை கூட தள்ளி போட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பச்சை அட்டை மோகம் இங்குள்ள இந்தியர்களை பாடாய் படுத்துகிறது. வலைப்பதிவுகளில் இந்திய தேசியத்தை ஓங்கி முழங்கும் பலர் இந்திய பாஸ்போர்ட்டை துறந்து அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பெற்று கொண்டவர்கள் தான். அவர்களின் வாரிசுகள் அமெரிக்கர்கள். இந்தியர்கள் அல்ல.
இது ஏன் ?
இந்தியாவில் வாழ வழி இல்லையா ?
ஏனெனில் பொருளாதாரத்தை மேலும் பெருக்கி கொள்ளும் ஆசை. புலம் பெயரும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்புகள். இது புலம் பெயரும் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.
ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவை பொருந்தாது. இவர்கள் தேடி வருவது பொருளாதாரத்திற்காக அல்ல. தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. தங்களுடைய வாரிசுகள் இராணுவம் மற்றும் புலிகளின் கைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்று பயந்து வெளிவருகிறார்கள். நேற்று வெளியான அமெரிக்க மனித உரிமை அமைப்பின் அறிக்கை சிறீலங்கா அரசை கடுமையாக சாடுகிறது.
A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces. Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.
The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm
உலகிலேயே காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை இராக்கிற்கு பிறகு இலங்கையில் தான் அதிகம். அதனை முன்னின்று நடத்துபவர்கள் அரசு படையினர். இவர்களிடம் இருந்தும், போர் சூழலில் இருந்தும் தங்களை பாதுகாக்க அகதிகளாக வெளியேருகிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சிறீலங்கா பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன லண்டனைச் சுற்றி பார்க்கவும், இலக்கிய கூட்டங்களில் வெற்றிலைப்பாக்கு போடவுமா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் ?
இங்கே பிரச்சனை என்வென்றால் அப்படி சிறீலங்கா பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் இங்கே வந்தோமா, முருகனுக்கு பால் குடம் எடுத்தோமா, ரஜினி படம் பார்த்தோமா என்று இருப்பதில்லை. ஈழப்போராட்டத்திற்கு நிதி தருகிறார்கள். வலைப்பதிவுகளில் ஈழப்பிரச்சனைப் பற்றி எழுதுகிறார்கள், ஈழப்பிரச்சனை குறித்து உளறும் தமிழக எழுத்தாளர்களின் பிம்பங்களை உடைக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. ஆனால் இணைய வரலாற்றை வேறு எழுதுகிறார்கள் பாருங்கள். அது தான் பிரச்சனையே...
எனவே ஈழத்தமிழர்கள் இனி சிறீலங்கா பாஸ்போர்ட் கொண்டு வெளிநாட்டிற்கு வரக்கூடாது. தமிழீழ பாஸ்போர்ட் கிடைக்கும் வரை வெளிநாட்டிற்கே வரக்கூடாது. அப்பொழுது தான் ஈழப்போராட்டத்திற்க்கும் நிதி கிடைக்காது. ஈழ போராட்டமும் வெகுவிரைவில் நிதி இல்லாமல் சிங்கள படைகளுக்கு இரையாகி விடும்.
மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.
புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது ? இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும் ? அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா ? அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா ?
நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.
ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.
இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.
எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.
அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.
இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.
இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.
வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.
அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு
*****
தன்னை மார்க்சிஸ்ட் என்பதாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஹிந்து ஆசிரியர் என்.ராம், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் என்.ராம் அவர் மகளை அமெரிக்க முதலாளித்துவ பலகலைக்கழகத்தில் படிக்க வைத்தமை முரண்பாடு தானே ? ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட சமயத்தில் சங்கர மடத்தை கட்டிக்காக்க விஜயேந்திர சரஸ்வதியை முன்னிறுத்திய மார்க்சிஸ்ட் தானே என்.ராம் ? ஒரு மார்க்சிஸ்ட் சங்கர மடத்தை ஏன் கட்டிக்காப்பாற்ற வேண்டும் ?
இப்படிப்பட்ட ஒரு மார்க்ஸ்சிய சிந்தனை வறட்சியில் இருக்கும் இந்திய மார்க்சியவாதிகள் தான் இலங்கையில் சிங்கள இனவெறிப்பிடித்த ஜேவிபியினரிடம் மார்க்சிஸ்ட் என்பதாக தோழமை கொண்டாடுகிறார்கள். ஜேவிபியினர் என்ன இடதுசாரி கொள்கைவாதிகளா? அவர்கள் இனவெறிப்பிடித்தவர்கள் தானே ?
இத்தகைய கருத்துகளை தான் பெயரிலி தன் பின்னூட்டத்தில் முன்வைத்து இருந்தார். இது எப்படி தனி மனித தாக்குதல் ஆகும் ? வலைப்பதிவுகளில் நன்னடத்தை பற்றி பேசும் மாலன், பெயரிலி இல்லாத ஒரு இடத்தில் பெயரிலி பற்றி பேசுவது எப்படி நன்னடத்தையாகும் ?
சமீபத்தில் கொழும்பில் இருந்து வயதான மூதாட்டிகள் வரை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட சூழலில் உலமெங்கும் இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளும் "தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்திகள் வெளியிட்டன. ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை கடுமையாக கண்டித்திருந்தன. ஆனால் ஹிந்து "வேலையற்ற தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்தி வெளியிட்டது (jobless Tamils). அந்த செய்தியைப் படித்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இருக்கும்.

(பிபிசி செய்தி : Police evict Tamils from Colombo)
(ஹிந்து செய்தி : Jobless Tamils evicted from Colombo on grounds of security)
(இந்துவின் இன்னும் பலப் பொய்ச்செய்திகளையும், பிற ஊடகங்களில் வெளியான ஒப்பீடுகளையும் ராம் வாச்சர் பதிவில் படிக்கலாம் - http://ramwatchintamil.blogspot.com, http://ramwatch.blogspot.com/)
உண்மைகள் இவ்வாறு இருக்க "புலிகள் கூறினால் நம்புவார்களா ? ஹிந்து கூறினால் நம்புவார்களா ?" என மாலன் கூறுவது நகைப்பிற்குரியது மட்டுமல்ல. அது பின் இருக்கும் அரசியல்களையும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
ஈழ விவகாரங்களில் மாலன் அவர்களுடைய வாதங்கள் "புலிகள் எதிர்ப்பு, ஈழ தமிழர் எதிர்ப்பு, ஈழ விடுதலை எதிர்ப்பு" என கண்மூடித்தனமாக இருக்கிறது. என்றாலும் அவர் தினமணிக்கதிர், குமுதம் ஆகியவற்றில் பத்திரிக்கையளாராக இருந்த பல சமயங்களில் இதனையே முன்நிறுத்தி இருக்கிறார் என்பதால் அவரது எதிர்ப்பின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அரசியலை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.
*****
வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்து பேசும் ஒரு பேச்சில் ஈழ தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து
பேச வேண்டிய அவசியம் ஏன் நேருகிறது ?
ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
பொருளாதார/இராணுவ வல்லரசான இந்திய நாட்டின் பிரஜைகள் ஏன் பச்சை அட்டைக்காக அமெரிக்காவில் இந்த அலைச்சல் அலைகிறார்கள் ? கடந்த மாதம் அமெரிக்காவில் பச்சை அட்டைகளுக்கான I-485ஐ அமெரிக்க குடியுரிமைத்துறை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும். இதில் இருக்கும் பல படிகளில் ஒரு சில படிகளை கடக்கும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிர்பந்தங்கள் கூட சிலருக்கு உண்டு. என்னுடைய ஒரு நண்பனின் மனைவி பிரசவத்திற்காக இந்தியா சென்று விட்டார். எட்டாவது மாதம். அவருக்கும் சேர்த்து I-485 விண்ணப்பம் செய்தாக வேண்டும். அவர் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும் என்பதால் அவரை உடனடியாக அமெரிக்கா வரும்படி நண்பர் கூறிவிட்டார். சிலர் தங்கள் திருமணங்களை கூட தள்ளி போட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பச்சை அட்டை மோகம் இங்குள்ள இந்தியர்களை பாடாய் படுத்துகிறது. வலைப்பதிவுகளில் இந்திய தேசியத்தை ஓங்கி முழங்கும் பலர் இந்திய பாஸ்போர்ட்டை துறந்து அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பெற்று கொண்டவர்கள் தான். அவர்களின் வாரிசுகள் அமெரிக்கர்கள். இந்தியர்கள் அல்ல.
இது ஏன் ?
இந்தியாவில் வாழ வழி இல்லையா ?
ஏனெனில் பொருளாதாரத்தை மேலும் பெருக்கி கொள்ளும் ஆசை. புலம் பெயரும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்புகள். இது புலம் பெயரும் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.
ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவை பொருந்தாது. இவர்கள் தேடி வருவது பொருளாதாரத்திற்காக அல்ல. தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. தங்களுடைய வாரிசுகள் இராணுவம் மற்றும் புலிகளின் கைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்று பயந்து வெளிவருகிறார்கள். நேற்று வெளியான அமெரிக்க மனித உரிமை அமைப்பின் அறிக்கை சிறீலங்கா அரசை கடுமையாக சாடுகிறது.
A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces. Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.
The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm
உலகிலேயே காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை இராக்கிற்கு பிறகு இலங்கையில் தான் அதிகம். அதனை முன்னின்று நடத்துபவர்கள் அரசு படையினர். இவர்களிடம் இருந்தும், போர் சூழலில் இருந்தும் தங்களை பாதுகாக்க அகதிகளாக வெளியேருகிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சிறீலங்கா பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன லண்டனைச் சுற்றி பார்க்கவும், இலக்கிய கூட்டங்களில் வெற்றிலைப்பாக்கு போடவுமா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் ?
இங்கே பிரச்சனை என்வென்றால் அப்படி சிறீலங்கா பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் இங்கே வந்தோமா, முருகனுக்கு பால் குடம் எடுத்தோமா, ரஜினி படம் பார்த்தோமா என்று இருப்பதில்லை. ஈழப்போராட்டத்திற்கு நிதி தருகிறார்கள். வலைப்பதிவுகளில் ஈழப்பிரச்சனைப் பற்றி எழுதுகிறார்கள், ஈழப்பிரச்சனை குறித்து உளறும் தமிழக எழுத்தாளர்களின் பிம்பங்களை உடைக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. ஆனால் இணைய வரலாற்றை வேறு எழுதுகிறார்கள் பாருங்கள். அது தான் பிரச்சனையே...
எனவே ஈழத்தமிழர்கள் இனி சிறீலங்கா பாஸ்போர்ட் கொண்டு வெளிநாட்டிற்கு வரக்கூடாது. தமிழீழ பாஸ்போர்ட் கிடைக்கும் வரை வெளிநாட்டிற்கே வரக்கூடாது. அப்பொழுது தான் ஈழப்போராட்டத்திற்க்கும் நிதி கிடைக்காது. ஈழ போராட்டமும் வெகுவிரைவில் நிதி இல்லாமல் சிங்கள படைகளுக்கு இரையாகி விடும்.