Monday, October 04, 2004

பங்குச்சந்தை ஒளிர்கிறதா ?

இன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 31 புள்ளிகளும் உயர்ந்தது. தொடக்கத்திலேயே BSE குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும், மேலும் ஏறிக் கொண்டே இருந்தது.

மாருதி, ரிலயன்ஸ், விப்ரோ, இன்போசிஸ், சத்யம், ONGC பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி.

சில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும். அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் (Technical corrections) நடக்க கூடும். (அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ?) ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான்.

கொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள். லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள். (சரிந்தால் ? … ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்).

0 மறுமொழிகள்: