Saturday, March 04, 2006

திமுகவிற்கு தோல்வியா ?

தமிழகத்தில் கூட்டணி குழப்பங்கள் விலகி ஒரு தெளிவான களம் உருவாகி இருக்கிறது. மிக பலமான கூட்டணியாக காணப்பட்ட திமுக இன்று சிதறி, கூட்டணி பலத்தில் ஒரு சமபலம் நிலவுவதாகவே தெரிகிறது. இனி சிறிய உதிறிக் கட்சிகள் இரு கூட்டணிகளிலும் இடம் பிடிக்கலாம். அதனால் கூட்டணியில் கட்சிகளின், தலைவர்களின் எண்ணிக்கை உயருமே தவிர வேறு பலன் இருக்கப்போவதில்லை

தமிழகத்தில் பலமான கட்சிகளை வரிசைப்படுத்தினால், அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என வரிசைப்படுத்தலாம். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், பாஜக போன்ற கட்சிகளை பாராளுமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மட்டுமே பயன்படுத்தலாம். மாநில அரசியலில் அவர்கள் ஒரு பொருட்டு அல்ல. காங்கிரஸ் முதுகில் ஏறினால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஒரளவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட்டணியின் பலத்தை நிர்ணயிக்கும் அளவுக்கோ, சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அளவுக்கு வலிமையான கட்சியாகவோ காங்கிரஸ் இல்லை. பாஜகவிற்கு கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற சில இடங்களில் கணிசமான ஆதரவு உள்ளது. தமிழகத்தில் கம்யுனிஸ்ட்களுக்கு நாகப்பட்டினம், மதுரை போன்ற சில இடங்களிலும், கம்யுனிஸ்ட்களின் தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் இடங்களிலும் ஆதரவு இருந்தாலும் கூட்டணி சமபலத்தை இவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

கூட்டணி கட்சிகள் மூலம் திமுக பலம் வாய்ந்த கூட்டணி போல தெரிந்தாலும், காங்கிரஸ் கம்யுனிஸ்ட்களால் திமுகவிற்கு ஒரளவிற்கு வாக்குகள் சேருமே தவிர, பெரிய பலம் ஏதும் கிடையாது. இதனால் திமுக கூட்டணியை பல கட்சிகளின் கூட்டணி என்பதை விட திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி என்றும், அதிமுகவை அதிமுக-மதிமுக-விடுதலைச்சிறுத்தைகள் என்பதாக மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பார்க்கும் பொழுது இரு கூட்டணிக்கும் இருக்கும் சம்பலம் தெளிவாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்த போதிலும் அதிகபட்ச "பேராசை" காரணமாகவும், சரியான Strategy இல்லாமலும், தனிப்பட்ட ஈகோ காரணமாகவும் திமுக, தேர்தலுக்கு முந்தைய முதல் ரவுண்டில் அதிமுகவிடம் தோல்வி கண்டுள்ளது. கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது. குட்டிக் கட்சிகளுக்கு ஸ்டாலின் மேற்பார்வையில் அதிக இடங்களை கடந்த தேர்தலில் ஒதுக்கிய கலைஞர், மதிமுக, பாமக போன்ற தன் பக்கம் இருக்க கூடிய கட்சிகளை பறிகொடுத்தார்.

இம்முறையும் அது போன்றே நிகழ்ந்துள்ளது.

திமுகவின் கூட்டணி குழப்பங்களை ஆரம்பத்தில் இருந்து கவனிக்கும் பொழுது மதிமுக-திமுக இடையே ஒட்ட முடியாத ஒரு நிலை தான் இருந்து வந்துள்ளது. அதனால் தான் வைகோ குறித்த பதிவினை எழுதும் பொழுது கூட வைகோ அதிமுக பக்கம் செல்வது தான் அவருக்கு நல்லது என்று நான் எழுதினேன். ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணி வைக்கும் பொழுது கடந்த கால நிகழ்வுகள் குறித்த சில சங்கடங்கள் குறிப்பாக பொடா கைதினால் ஏற்பட்ட மனக்கசப்பு இருக்கலாம். ஆனால் அதைத் தவிர பெரிய முரண்பாடோ, உறவுச்சிக்கலோ இந்த இரு கட்சிகளுக்கு ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது வைகோவின் வளர்ச்சி குறித்து திமுக தலைமைக்கு இருக்கும் அச்சம், அதன் காரணமாக அவரை பலவீனப்படுத்தும் முயற்சிகள் போன்றவையெல்லாம் நடக்கும். எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது. வைகோவின் பலத்தை மட்டும் உயயோகித்துக் கொண்டு மதிமுகவிற்கு குறைவான, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கலைஞர் (ஸ்டாலின்) ஒதுக்கக்கூடும் என்றே நான் நினைத்தேன். திமுகவின் கூட்டணி தகராறுகளை பார்க்கும் பொழுது அவ்வாறே தோன்றியது. இன்று வைகோவின் பேட்டி கூட அதனை உறுதிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் ஜெயலலிதா ஏற்படுத்தும் எந்தக் கூட்டணியும் தேர்தலில் அவருக்கு வெற்றியை கொண்டு வருவதற்கான தற்காலிக ஏற்பாடு மட்டுமே. கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதாவும் கைகழுவி விடுவார். பின் அடுத்த தேர்தல் வந்தால் மறுபடியும் அரவணைக்க முயலுவார். ஜெயலலிதா, கலைஞர் இருவருமே எதிரிகள் என்னும் பொழுது இந்த தற்காலிக ஏற்பாடு ஒரு வகையில் வைகோவிற்கு நல்லது. வைகோ பெரிய குழப்பத்திற்குப் பிறகு ஒரு நல்ல முடிவையே எடுத்துள்ளார் என்று சொல்ல வேண்டும்.

மிகப் பெரிய கூட்டணியில் தொகுதி சிக்கல்கள் வரும் என்றாலும் அதனைச் சுமூகமாக தீர்த்து வைக்க திமுக முனைந்ததா என்பதே கேள்வி ? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். கலைஞர் அரசியல் சாணக்கியத்தனத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகவில்லை. சில தனிப்பட்ட விரோதங்கள், ஈகோ காரணமாக தமிழகத்தின் அடுத்த ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

திமுக கூட்டணியில் தொகுதிகளை இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ், மதிமுக, பாமக - 26, விடுதலைச் சிறுத்தைகள் - 10, கம்யுனிஸ்ட்கள் - 16
பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இருவரும் கூட்டாக 30தொகுதிகளுக்கு தயாராக இருந்தனர் என்பதும், மதிமுக 25 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டனர் என்பதையும் வைத்து பார்க்கும் பொழுது கலைஞர் மிகச் சுலபமாக இந்த கூட்டணி பிரச்சனையை தீர்த்து இருக்கலாம். இங்கு குறைவான தொகுதிகள் காங்கிரசுக்கு தான். காங்கிரசுக்கு கொஞ்சம் அதிகமான தொகுதிகளை கொடுக்க நினைத்தால் இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ் - 32 , பாமக - விடுதலைச் சிறுத்தைகள் - 30 மதிமுக - 26 கம்யுனிஸ்ட்கள் (மார்க்ஸ்சிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட்) - 16.
பிற கட்சிகளுக்கு "மனதில் இடத்தை" கொடுத்து கூட்டணிப் பிரச்சனையை முடித்திருக்கலாம்.

இதன் மூலம் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற வலுவான கட்சிகளை கலைஞர் தன்னுடன் தக்க வைத்திருக்க முடியும். இந்த உடன்பாட்டில் காங்கிரசுக்கு சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேற முடியாத கட்சியான காங்கிரசை டெல்லி தலைமை மூலம் எளிதாக சமாதானப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இவ்வாறு எதையும் செய்யாமல் மதிமுகவை குறி வைத்து அவர்களுக்கு குறைவான இடங்களை வழங்கும் போக்கிலேயே கலைஞரின் நிலை இருந்து வந்துள்ளது. மதிமுகவிற்கு குறைவான இடங்களைக் கொடுத்து அவரை ஒரு குட்டி தலைவராக்கி விடலாம் என்றோ, வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளைக் கொடுத்து அவருக்கு பலம் ஏதும் இல்லை என்று நிருபித்து விடலாம் என்பதாகவோத் தான் திமுக தலைமை யோசித்து இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுகவிற்கும் மதிமுகவிற்கும் பிரச்சனை தொடங்கியது இதன் காரணமாகத் தான். 18, 20, 22 என எண்ணிக்கையை அதிகரித்த திமுக பிறகு அத்துடன் நிறுத்திக் கொண்டது. மதிமுக 35ல் தொடங்கி 25வரை தனது தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள முன்வந்தது. மதிமுகவுக்கு மட்டும் தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டிய திமுக தலைமை, ஏன் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தொகுதிகளை குறைப்பதில் முனைந்திருக்க கூடாது ?

கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான். "22க்கு ஒப்புக் கொண்டால் கூட்டணியில் இருக்கலாம்" என்று கூறியதன் மூலம் மதிமுக அணி மாறுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

முதலில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணியை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும். பின் தனித்து ஆட்சியை பிடிக்க முடியுமா, கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இனி கலைஞர் 145தொகுதிகளில் கூட போட்டியிடலாம். ஆனால் எத்தனை இடத்தில் வெற்றி பெறப் போகிறார் ? இந்த தேர்தலில் அதிமுக சார்பான கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம். அல்லது ஒரு குழப்பமான முடிவை தமிழக மக்கள் கொடுக்கலாம். திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.

இன்று தமிழகத்தின் வாக்கு வங்கி பல கட்சிகளிடையே சிதறிக் கிடக்கிறது. இதில் பலமான கட்சியாக இருப்பது அதிமுக. அடுத்த நிலையில் தான் திமுக உள்ளது. இந்த இரு கட்சிகளின் பலத்தை ஆராயும் பொழுது திமுக வடமாவட்டங்களில் பலமாக உள்ளது. அதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள்.

கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் பெரும்பாலும் வடமாவட்டங்களில் இருப்பவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, வடமாவட்டங்களில் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பாமக மூலம் கணிசமான தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதற்கு மதிமுக தனித்து போட்டியிட்டதும் ஒரு காரணம்.

திமுக வடமாவட்டங்களில் கடந்த முறை வெற்றி பெற முக்கிய காரணம் அதனுடைய பலம் மட்டும் என்று சொல்லி விட முடியாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுக கொண்ட கூட்டணியும் முக்கிய காரணம். இதனையும் இம் முறை கலைஞர் கவனிக்க தவறி விட்டார்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். திமுக-பாமக-மதிமுக-காங்கிரஸ் என்ற பலமான கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக, திருமாவளவனை விட சுமார் 80,000 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக சுமார் 1லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. இதனை கவனிக்கும் பொழுது திருமாவளவன் எந்தளவுக்கு வெற்றியை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார் என்பது தெளிவாகும். சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தலித் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.

திமுக-பாமக கூட்டணி வடமாவட்டங்களில் வலுவான கூட்டணி தான் என்ற போதிலும் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குச் சென்றது அதிமுகவிற்கு வலுச் சேர்த்துள்ளது.

தென்மாவட்டங்கள் என்று பார்த்தால் அதிமுக தான் பலமான கட்சி. மதிமுகவின் பலமே தென்மாவட்டங்கள் தான். கடந்த தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்ட பொழுது சுமார் 20தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இம்முறை மதிமுக அதிமுகவுடன் சேரும் பொழுது இந்த தொகுதிகளை நிச்சயமாக திமுக இழக்கும். இவை தவிர மதிமுக தன்னுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறி வருகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் தென்மாவட்டங்களில் பலம் கிடையாது. கிட்டத்தட்ட திமுக தென்மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை தான் உள்ளது.

இவ்வாறு கூட்டணி கணக்குகளை சீர்தூக்கி பார்க்கும் பொழுது வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும், தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டணியும் வலுவாக உள்ளன. சுமாராக 100 தொகுதிகளில் திமுகவும், 100முதல்-130 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் பலமாக உள்ளன. இந் நிலையில் திமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்தளவுக்கு உள்ளன என்பது விவாதத்திற்குரியது. கூட்டணியே இல்லாமல் இருந்த ஜெயலலிதா மிக Aggressive கவும், திமுக குழப்பங்களுடனும் இது வரை களத்தில் உள்ளனர்.

கடந்த சில தேர்தல்களை கவனிக்கும் பொழுது ஜெயலலிதா ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகவே வெளிப்பட்டுள்ளார். அவருக்கு ஆலோசனை சொல்லும் சில "பத்திரிக்கையாளர்கள்", பணமுதலைகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் பொழுது உதவும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என ஒரு வலுவான ஆலோசனைக் குழுவை உருவாக்கியிருக்கிறார். ஆனால் திமுக தலைமை ஸ்டாலினின் மேற்பார்வையில் இருப்பதால் கலைஞருக்கே இருக்கக் கூடிய சாணக்கியத்தனம் இல்லாமல் ஒரு குழப்பான யூனிட்டாகத் தான் வெளிப்பட்டு இருக்கிறது.

திமுகவிற்கு கூட்டணி தவிர கைக்கொடுக்க கூடிய ஒன்று anti-incumbency factor - ஆளும்கட்சிக்கு எதிராக ஒவ்வொரு தேர்தலிலும் உருவாகும் எதிர்ப்பு உணர்வு. திமுக சரியான பிரச்சாரம் மூலமாக இனி வரும் நாட்களை திடமாக எதிர்கொண்டால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். இது வரை திமுக கூட்டணி ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது. கூட்டணியின் பலம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு தெளிவான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்க வேண்டும். ஆளும்கட்சிக்கு எதிராக இயல்பாக இருக்க கூடிய உணர்வுகளை தங்களுக்கு சாதகாமாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும்.

இல்லையேல் அடுத்த ஐந்து ஆண்டுகள் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிக் கொண்டு எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்க முடியும்

25 மறுமொழிகள்:

முகமூடி said...

நல்ல அலசல். ஆனால் உங்கள் கணக்கில் சில ப்ரச்னைகள் இருந்தன.

பாமகவுக்கும்ம் மதிமுகவுக்கும் (26 அ 30) சரிசமமாக தொகுதிகள் வழங்குவதை பாமக விரும்பவில்லை. அதன் மூலம் மூன்றாமிடம் என்ற தனது இமேஜுக்கு பங்கம் வரும் என்றே கருதியது. சில நாட்களுக்கு முன் திருச்சி மாநாட்டில் தான் கலந்து கொள்ள விதிக்கும் நிபந்தனை என்று மதிமுகவை விட இரு சீட்களாவது வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்ததாக வந்த செய்தியை கவனிக்கவும்.

பாமக விடுதலை சிறுத்தை உள் ஒதுக்கீடு கூட்டணி (30) திருமா விரும்பவில்லை. தன்னை நேரில் அழைத்து கருணாநிதி பேச வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இருந்து கேட்டு வருகிறார். நேரில் அழைகப்பட்டால் ஏற்படும் தர்மசங்கடங்களை தவிர்க்கவே கருணாநிதி உள் ஒதுக்கீடு கோஷத்தை முன்னெடுத்தார். அதிமுகவில் கொடுத்த இடத்துக்கு ஓகே சொன்ன திருமா திமுக என்றால் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கலாம்.

மற்றபடி மதிமுக வெளியேறியது திமுக எதிர்பார்த்தே செய்த மூவ்தான். இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை திமுக பதவியில் இருந்து கருணாநிதி ஓய்வு பெறும் நிலை வந்தால் ஸ்டாலினின் எழுச்சிக்கு திமுகவிற்குள் எழும் எதிர்ப்பை வைகோ சுலபமாக அறுவடை செய்வார். அதை கண்டிப்பாக கருணாநிதியோ முக்கியமாக ஸ்டாலினோ விரும்ப முடியாது.

எல்லாவற்றையும் விட திமுக 130 தொகுதிகள் என்பது அதற்கு பாதகமே. அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பலை இல்லாத இந்த நேரத்தில் 130 தொகுதிகள் என்பது அறுதிப்பெரும்பான்மை எடுப்பதற்கு கொஞ்சம் சவால்தான். மெகா கூட்டணி என்பது மத்திய அரசியலுக்கு நன்றாக இருந்தது. ஆனால் மாநில அரசுக்கு? எங்கே இவ்வளவு கட்சியோடு போட்டியிடும் திமுக அறுதி பெரும்பான்மை எடுக்காமல் போனால் கூட்டணி அரசாக ஆகலாம் என்ற எண்ணம் மக்களை அதிமுகவிற்கே ஓட்டு விழ செய்யும். மாநில அரசில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஏகப்பட்ட ப்ளாக்மெயிலுக்கு உட்படும் மெகா கூட்டணி, நிலையான ஆட்சி என்பதாக ஒரு மனநிலை வரும், அது திமுக மெகா கூட்டணிக்கு எதிர்ப்பாகவே அமையும்.

எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே. வைகோ முன்பே பிரிந்து சென்றிருந்தால் திருமா திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கலாம். அப்படியில்லாமல் முன்பே அதிமுக விசியை வளைத்ததுதான் அதன் புத்திசாலித்தனம்.

7:19 PM, March 04, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நான் இங்கு குறிப்பிட்ட தொகுதி எண்ணிக்கையை ஒப்புக் கொள்ள அனைத்து கட்சிகளுமே தயாராக இருந்தன.

திருமாவளவனை திமுக கூட்டணியில் சேர்க்க மறுத்ததால் பாமக நிபந்தனைகளை விதிக்க தொடங்கியதே தவிர மற்றபடி இந்த தேர்தலில் பாமக ஆச்சரியப்படும்படியாக பல்டி அடிக்கும் வேலைகளையோ, நிபந்தனைகளையோ விதிக்க வில்லை. மைய அரசில் அன்புமணியின் காபினெட் அமைச்சர் பதவி அவர்களை மாற்று Option பற்றி யோசிக்க விடாமல் செய்து விட்டன.

திமுக கூட்டணியில் இருந்து விலகக் கூடிய கட்சியாக மதிமுக மட்டுமே இருந்தது.

திமுகவின் கூட்டணி சிதறியதற்கு முக்கிய காரணம்.
-வைகோவிற்கு குறைவான தொகுதிகளையோ தர முனைந்த திமுக தலைமையின் முன்கூட்டியே திட்டமிட்ட முடிவு

-திருமாவளவனை நேரில் சந்திக்காமல், உள் ஒதுக்கீடு என்று பேசி அவரை அவமானப்படுத்தியது.

திருமாவளவனை சந்திப்பதில் சங்கடங்கள் உள்ளன என கலைஞர் நினைத்திருந்தால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை

8:09 PM, March 04, 2006
குழலி / Kuzhali said...

//கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது
//
இந்த சந்தேகம் எனக்கு 1998 பாராளுமன்ற தேர்தலின் போதே ஏற்பட்டது

//எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது.
//
மதிமுகவில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் மதிமுக உருவாவதற்கு முன் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் இருந்த எதிர் கோஷ்டியினர், கடலூர் மதிமுக பொறுப்பாளர்களிலிருந்து அத்தனை மாவட்டங்களிலும் மதிமுக பொறுப்பாளர்கள் திமுகவின் அப்போதைய பொறுப்பாளர்களை எதிர்த்து திமுகவிலேயே இருந்து எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள், இவர்கள் மனமுவந்து இணைந்து செயல்பட முடியாது என்பதும், கடந்த காலத்தில் திமுக-மதிமுக கூட்டணியின் போது இதை நேரிலேயே பார்த்திருக்கின்றேன்...

//கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான்
//
ம்...

//சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார்.
//
மிக எளிதாக 'க்ளீன் ஸ்வீப்' அடிக்க வேண்டிய நிச்சய வெற்றி வட மாவட்ட தொகுதிகளை திருமாவின் கூட்டணியை விட்டதால் கடும் போட்டிக்குள்ளாகியிருக்கிறார்.

//எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே.
//
நானும் இதையே தான் நினைகின்றேன், மதிமுக விலகலை அனைத்து கூட்டணி கட்சிகளும் முன்பே எதிர்பார்த்தது தான், இதனால் தான் திருமா அவசரப்பட்டு விட்டதாக மருத்துவர் இராமதாசு கூறியது.

அதிமுகவிற்கு மதிமுகவின் பலத்தால் 'சைக்காலஜிக்கல் பலம்' கிடைத்துள்ளதை தவிர வேறு பலன் இல்லை என்பது எனது கணிப்பு, தேர்தலுக்கு பின் பார்ப்போம் இது எந்த அளவு உண்மையென்று, ஆனால் திருமாவை வளைத்ததில் ஜெயலலிதா தேர்ந்த அரசியல்வாதியாகியிருப்பது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது.

8:32 PM, March 04, 2006
Anonymous said...

மிக நல்லதொரு அரசியல் பதிவு.உங்கள்
கடந்த பல பதிவுகளைப்போலவே இதுவும் ஆழமான அலசல்.

கொள்கைகளை கைவிட்டாவது பதவிகளை கைப்பற்றவேண்டும் என்ற
நிலைக்கு வைகோ வந்தது வருத்தத்துக்குரியது.ஆனாலும் வைகோ
வுக்கு கட்சியை நிலைநிறுத்த இதை விட
வேறு வழி இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் "சந்தர்ப்பவாத அரசியல்" என்று வைகோவை பா.மா.கா சொல்லியிருப்பதுதான்.

10:33 PM, March 04, 2006
manasu said...

http://nayanam.blogspot.com/2006/03/blog-post.html

10:35 PM, March 04, 2006
Thangamani said...

சசி:

இதை நான் பெரிதும் எதிர்பார்த்தே வந்தேன் (இதற்கு முன் இதை ஒட்டி உங்கள் பதிவிலே எங்கேயோ பின்னுட்டமிட்டதாக நினைவு). மற்ற எந்தக் கட்சிகளைப்பற்றியும், ஜெயலலிதாவின் முனைப்புகளைப்பற்றியும் நான் இங்கிருந்து சரியாகக் கணிக்கமுடியாவிட்டாலும், கலைஞரின் மனநிலை, ஆசை, விருப்பு வெறுப்புகளில் பெரிய மாறுதலை காணமுடியவில்லை. இதை ஊகிக்ககூடிய எவரும் வைகோவும், திருமாவும் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஊகிக்க முடிவது பெரியவிதயமில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொருத்த வரை இந்த நிலைப்பாட்டை நான் நல்லதென்றே நினைக்கிறேன். இதன் மூலம் வைகோவும், திருமாவும் அதிமுக கூட்டனியில் இருப்பதால் அதிக தொகுதிகளில் வெல்லமுடியும் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவரும்+பமகவும் அதிக தொகுதிகளில் வெல்வது வரபோகிற சில வருடங்களுக்கு பல காரணங்களுக்காக நல்லது. இந்தக்கூட்டணிகள் தேர்தலுக்குப் பிறகு நிலைக்கப்போவதில்லை எனும் போது நான் நினைப்பது இன்னும் வலுப்பெறுகிறது. ஈழப்பிரச்சனை போன்ற விதயங்களில் கலைஞர் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே நல்லது என்று எண்ணுகிறேன். அப்படியே கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் திருமா, வைகோ, பாமக போன்றவர்கள் பலமாக இருப்பது நல்லதுதான்.

நல்லபதிவு நன்றி!

11:35 PM, March 04, 2006
அழகப்பன் said...

நல்லதொரு அலசல்.

என்னைப் பொறுத்தவரை வை.கோ. இந்த விதயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. கருணாநிதி வை.கோ.வின் நிலையை அறிந்துதான் 22 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என்பதை பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார்.

வை.கோ.வின் இந்த செயல் அவரது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுமக்களிடையே நிச்சயமாக அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்களிலேயே கட்சி சாராதவர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தவர்களில் முதாலமவர் வை.கோ. ஆனால் இந்த காய்நகர்த்தலின் மூலம் தானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை தெளிவாக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த கூட்டு தன்னுடைய முடிவல்ல; இரண்டாம் கட்ட தலைவர்களின் முடிவு என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அவரது தலைமையின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையைச் சிதறச் செய்திருக்கிறார்.

இவையெல்லாவற்றையும்விட எதிர்க்கட்சியினருக்கு பிரச்சாரத்திற்கு புதிய பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாதிருந்த நேரத்தில் அவர்களின் பிரச்சாரத்திற்கு உதவும் இந்த காரியத்தை செய்துள்ளார்.

வை.கோ. கூட்டணியில் இருந்திருந்தால் கிடைக்க வேண்டிய வாக்குகள் அவர் கூட்டணியில் இல்லாமலேயே கிடைக்கும் என்பதே எனது கருத்து.

12:04 AM, March 05, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

I am afraid your analysis is based on common sense and the comments testify that. But recent elections defied common sense based predictions even close to the election date leave alone two months in advance. According to one estimate (I read this few years back) about 30% of Tamil Nadu voters come in uncommitted category who make decision close to the election date. With growing size of middle class this is even more so now. So using the arithatic sums and differences based on the votes polled by the parties during the previous elections (as aliance partners in most cases) doesn't make sense. There are two more important phases to pass before astrological or aritmatic predictions can be made: (1) allocations of constituencies and (2) nominations of candidates. In the absence of any major public issues, the odds will be against the ruling party if one goes by examples of last assembly elections in Tamil Nadu, Andra Pradesh and Karnataka, not to mention the parliment elections. The only party that defies this classic pattern is Left front in West Bengal but the same front in Kerala succumbs to anti-incumbancy factor when it faces elections as the ruling party.

As for Vaiko's dilly dallying he doesn't seem to have clear idea. On the other hand Thiruma's decision is based on sound reasoning i.e. he waited long enough join one camp but was not accepted. So he decided to go to the other camp at the earnest. He also made it clear that elections are fought for sharing power not based on principles. But Vaiko's lectured on principled politics while giving an impression he is with one camp just few days ago and walked in the opposit direction yesterday. Making U turn once in few years is OK but walking zig zag on daily basis make him look like a joker. In the final analysis, the voter would decide on who (s)he wants to rule next five years. The choice is between JJ and MK. This will be the major deciding factor. Minor allies will make a difference in fews seats here and there and in most cases will decide only the winning margin not the final outcome.

I wrote the following comment in Badri's 'therthal 2006' post but did not appear for whatever reason.

"If he (Vaiko) had taken the same decision before giving emotional speeches on principled politics there would have been some credibility. Now it is open that he was pulled by his family on one side and second rung leaders on the other side. After dilly dallying he decided in favor of the leaders so that they all can get a chance to contest.

Expecting him to provide a third alternative and corruption free administration because he is a "principled politician" will not have substance anymore. What is the guarantee that he will not give in to pressures from family and friends? Political corruption begins with family and friends. Even on the administration front he is yet to prove his skills, not even to the extent M.K. Stalin did as the Mayor of Chennai. Using flowery language and giving fiery speeches are not enough.

If he wins, he will probably play secondary roles in the foreseeable future. Otherwise, this will be the last chapter of his political life. Either way, it is unlikely that he ever is going to occupy the seat of power at Fort St. George"

12:50 AM, March 05, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

சுமூ,

நான் திமுக நிச்சயமாக தோல்வியடையும் என்று கூறவில்லை.

ஆனால் திமுக கூட்டணிக்கு ஒரு பின்னடைவை நிச்சயம் இந்த கூட்டணி சிதறல் ஏற்படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்.

அதைத் தவிர anti-incumbency factor திமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்பதையும் நான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் திமுக அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே திமுகவின் வெற்றி இருக்கும்.

DMK has so far looked as a confused and disorganized unit. Jayalalitha has displayed her excellent crisis management skills

/*

According to one estimate (I read this few years back) about 30% of Tamil Nadu voters come in uncommitted category who make decision close to the election date

*/

I don't agree with this

இது நகரங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் கிராமங்களுக்கு சரி வராது. தமிழகத்தில் சுமாராக 60% பேர் தான் வாக்களிக்கின்றனர். 1996 தேர்தலில் மட்டும் அதிகளவில் வாக்களிப்பு இருந்ததாக ஞாபகம். தமிழகத்தின் சில பெருநகரங்கள் தவிர பிற பகுதிகள் எல்லாமே கிராமமாகவோ, சிறு நகரமாகவோ உள்ளவை தான். இங்கிருக்கும் மக்கள் எல்லாம் மிகத் தெளிவாக தங்கள் ஆதரவு நிலையை பல மாதங்களுக்கு முன்பே நிர்ணயித்து வாக்களிக்க கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

எந்தக் கருத்து கணிப்பும் தமிழகத்தில் எடுபடாமல் போனதன் காரணமாக மக்கள் இறுதி நேரத்தில் முடிவெடுப்பாதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கருத்து கணிப்பிற்கு உபயோகப்படுத்தும் Random Sampling தமிழகத்திற்கு சரி வராது. ஏனெனில் இங்கு ஒரு தொகுதிக்கும் பக்கத்து தொகுதிக்கும் இருக்கும் நிலவரத்தில் கூட நிறைய மாற்றம் இருக்கும்.

முடிவெடுக்காத வாக்காளர்கள் முழுவதுமாக வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது.

சில தேர்தல்களுக்கு முன்பு நிறைய பேர் ஓட்டளிப்பதில்லை, அவர்களுக்கு ஒரு மூன்றாவது அணி தேவைப்படுகிறது, எனவே அவர்களை கவர்வது தான் எங்களது உத்தி எனக் கூறி ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசை தனித்து போட்டியிட வைத்ததும், அந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வைகோவின் தடுமாற்றம் பற்றிய உங்களின் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன்

1:42 AM, March 05, 2006
krishjapan said...

A very talented article( konjam Cho sayal adikkuthu Tamil Sasi!). Some hidden facts: Last time, MK added small parties and lost MDMK and PMK - First PMK moved out, then as it happend this time, the immisibility of DMK and MDMK district secreteries( correctly pointed out by Kuzhali) made Vaiko to come out. Do u remember the reason told by Vaiko - MK didnt even give Sankarankoil since it is alloted to Krishnamsamy). So,MK was left with no alternative and made to align with small parties, as JJ was doing till now. What ever may be the number of seats given to Ramdas, he would have come out as he clearly estimated the antiincumbancy factor. MK beleived at that time that his good deeds will help and just to show that he too has an alliance he aligned with small parties. So, I repeat, it was forced upon him by Ramdas.
Second, MK didnt tell that word which Thiruma says. As rigtly pointed out by Ramdas, simply when a reporter asked MK whether he will object if PMK gives some seats to VC, he told he wont. Thats all he told. He too knew, if Vaiko goes he will have seats in hand to give to VC.

As regadrs Vaiko issue I will post it as seperate comment.

2:49 AM, March 05, 2006
-/சுடலை மாடன்/- said...

Dear Sasi,

I agree with your analysis on the elections compared to any other in the blog. I apologize for the typos as well as for writing my first comment in your blog in English.

About 20 years back when I was still a student, I used to be emotional about the TN elections. Those days I believed sincerely that elections and the new government could bring ideological and useful changes. Moreover, I was in a position to vote as well as to influence my own friends and family.

Ever since I moved to US, I am able to watch these elections with some detachment from my emotions and analyze them with the hard ground realities the parties and the leaders operate.

It is very easy for people like us to make statements about the ideology, but let us think about the realistic. When Thirumavalavan came to the U.S., I had an opportunity to ask him about how the people (I am not talking about all the people, the very people for whose welfare he has been spending his life) vote in the elections. Since then I desist thinking completely about the ideology during the elections.

Only after I understood these ground realities, I was able to tolerate the following, even though I should vomit if analyze them based on their (and my) ideology:

1. DMK, MDMK and PMK joined hands with the brahminical BJP - the party known for its poisonous agenda. I never consider Jayalalitha as dangerous as BJP.

2. DMK threw out Vaiko based on the silliest reason on earth that he conspired with LTTE to kill him and that too based on an intelligence report given by Jayalalitha. The same Vaiko contested the elections joining with DMK.

3. Congress pulled down the government of Inder K. Gujral just based on the fake reason that Jain Commission indicted DMK in the assassination of Rajiv Gandhi. But the same DMK allied with Congress to fight the BJP.

4. PMK contested each election with a different alliance without caring about the compatibility of the principles.

5. Periyar and Dravidian movements worked for the annihilation of caste. In the last elections, DMK formed an alliance with half-a-dozen parties who are nothing but caste associations (they cannot be compared with PMK or DPI which work on the issues of the entire Tamil Nadu)

6. Now, Vaiko contesting the elections with the same Jayalalitha who put him in prison for more than 2 years based on mere speeches given in support of LTTE.

Believe me, there are many more to follow these and please don’t run out of your emotions, save some for future elections.

Now, if we look at the realities, I would have hoped the following options based on the ideology:

1. Ditch both DMK and ADMK based on the ideology (also the congress and BJP as well because they are of no use for any of the Tamils issues and often they act against the interests of the Tamils).

MDMK, PMK, DPI, Puthiya Thamizhagam, CPI, CPM should have joined together and tried a formidable third party alliance. But none of these parties have any self-confidence and respect for other parties.

2. DMK should realize that they are no more singularly powerful to counter ADMK. The small parties MDMK, PMK, DPI and PT came out of the same vote bank that DMK was controlling in the previous decades. If DMK had this realization and willing for a coalition government, all these parties along with the Communists and Congress could have made a strong cohesive alliance to dethrone the anti-everything government of Jayalalitha.

3. It has been increasingly clear that Jayalalitha tried to regain her support by reversing all the anti-people ("Cho-ist") steps she had taken before the parliament elections. It does not mean that she has changed. In fact she may behave worse than before if she wins the elections. But people always have short memory and it is my feeling based on the general mood of the people I talk to in India that she may come back to power.

In that situation, I felt that MDMK and DPI should contest elections exploiting the situation and try to gain some legislative power so that they can make noise in the assembly on the basic issues they believe. Based on their track record, I am 100% sure that MDMK, PMK, DPI, PT, CPI, CPM and BJP would always stand by their principles and whoever rules, they will make noise whether they achieve anything or not. DMK, ADMK and Congress have clear track record that they never stand by their principles and they operate more like family-owned businesses.

With the current situation, now there is a guarantee that there will be significant number of MLAs who will make noise on the core Tamil issues whichever alliance sweeps the elections.

Thanks,

S. Sankarapandi

2:57 AM, March 05, 2006
Gopalan Ramasubbu said...

Sasi,

Very good post.People might think it's more biased towards MDMK.hope they read your recent PMK ,MDMK post as well.

I would say Vaiko saved his image by joining ADMK alliance.If he had stayed with DMK after all the insults, What's the guarantee that Kalaignar would give him winnable seat.I don't think both(DMK,MDMK) party cadres can work together after all these incidents,i even doubt their vote convergence.
Well,May 11 would give us all the answer.

3:58 AM, March 05, 2006
ஜோ/Joe said...

தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொள்வதில் கலைஞரை மிஞ்ச யாருமில்லை .ம.தி.மு.க விடம் அவர் காட்டிய அலட்சியம் ,பா.ம.க விற்கு மதிமுக -வுக்கு மேல் மரியாதை இவற்றுக்கெல்லாம் பலனை தேர்தல் முடிவு அவருக்கு காட்டும் .அதிமுக அணி வெற்றிப்பாதையில் வேகமாக முன்னேறுகிறது.

4:58 AM, March 05, 2006
தருமி said...

ராமதாஸ் மூலமாக வி.சி. இந்தப் பக்கம் தாவும் நிலை வர வாய்ப்புள்ளதா..?

5:02 AM, March 05, 2006
இராதாகிருஷ்ணன் said...

'தொகுதிக் கொள்கை' என்று வந்த பின்பு அதனை வைகோ குழப்பாமல் தெளிவாகக் கையாண்டிருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

வெளிப் பார்வைக்கு 'சமபலமான' போட்டியாகத் தெரிந்தாலும், இத்தேர்தலைப் பொருத்தவரை அதிமுக அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.

மற்றொன்று, கருணாநிதிக்கு கீழிருக்கும் இரண்டாவது மட்டத் தலைவர்கள் ஸ்டாலினுக்கு 'இல்லை'; அங்கிருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் துதிபாடிகளாக இருப்பதாகவே தெரிகிறது. இப்படியே இருந்தாலு வருங்காலத்தில் திமுக தேய்ந்து போக வாய்ப்புகள் உள்ளன. வெற்று வார்த்தைகளாக அம்மாவின் கழகக் கண்மணிகள் சொல்லிவந்த 'நிரந்தர முதல்வர்'-ஐ திமுகவே 'உழைத்து' நிஜமாக்கிவிடும்.

மொத்தத்தில் தமிழகத்தில் எந்த அணி வென்றாலும் மாநிலத்தை நல்ல விதத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் சிந்தித்து செயலாற்றும் தலைவர்கள் இல்லாதது பெரும் துரதிர்ஷ்டம்.

5:51 AM, March 05, 2006
வானம்பாடி said...

//வை.கோ. அ.தி.மு.க அணிக்கு வருவது ஏற்கனவே பேசி முடிக்கப் பட்ட விசயமாகவே தெரிகிறது. திருமாவை இந்த அணியில் கொண்டு இணைப்பதற்காவே ம.தி.மு.க. இணைப்பு காலதாமதப் படுத்தப்பட்டுள்ளது.//

ம்ம். சுவாரஸ்யமான கருத்து

9:54 AM, March 05, 2006
நற்கீரன் said...

As many of you cry about the lack of principle lead politics in TN, I do not see that as a grave concern, as long as there are some democratic mechanism for power sharing. When you have legitimate power, derived from non-violent, democratic mechanisms you are better able to implement your principle than one could otherwise do (ignoring the other non-political mechanisms of change.)

I strongly agree with the observation above:
“As for Vaiko's dilly dallying he doesn't seem to have clear idea. On the other hand Thiruma's decision is based on sound reasoning i.e. he waited long enough join one camp but was not accepted. So he decided to go to the other camp at the earnest. He also made it clear that elections are fought for sharing power not based on principles. But Vaiko's lectured on principled politics while giving an impression he is with one camp just few days ago and walked in the opposite direction yesterday.”

TN politics is at least matured in the sense that political leaders do not get killed for holding alternative visions or asking for representation as in TE or Sri Lanka. Moreover, the election mechanism is trusted by the people, and people do believe that their votes do count. There is no obvious violent threat in the exercise of these basic rights.

Although, ADMK is probably corrupt and probably controlled by self interest groups, DMK is no better. The elites of these parties seek to control the government, media and business for their own benefit. What the people can hope is how bettering of the overall TN economy, and the election promises can provide some spiral down benefit for them. It appears that ADMK has relatively provided better government and has popular policies, and DMK seems to be ignorant or arrogant towards the popular sentiments.

The development of caste politics is troublesome, but it is strongly determined by the economic factor. If TN develops economically, then the caste factor will become irrelevant. However, the ascertation by the higher castes of their superiority is a troubling development.

TN has demonstrated that Eelam is a non-issue, and Tigers have the same view towards TN. However, I think DP, PMK, MDMK draw strength from supporting LTTE, and not the other way around.

We have to wait and see what the TN people think about all this.

10:45 AM, March 05, 2006
G.Ragavan said...

திமுக கூட்டணியில் வைகோ = ஆலமரத்தின் கீழ் பூச்செடி...வளர்வது மிகக் கடினம். மரமும் விடாது.

அதிமுக கூட்டணியில் வைகோ = கல்லோடு கலந்த கடலை. பிரிப்பதும் சுவைப்பதும் எளிது.

எல்லாருமே சந்தர்ப்பக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை மதிமுகவிற்கும் பாமகவிற்கு ஒரே அளவு ஒதுக்கியிருந்தால் கண்டிப்பாக பாமக வெளியேறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

12:45 PM, March 05, 2006
முகமூடி said...

// MDMK, PMK, DPI, Puthiya Thamizhagam, CPI, CPM should have joined together and tried a formidable third party alliance. But none of these parties have any self-confidence and respect for other parties. //

LOL.. and who would they front as Chief Minister candidate ??

1:04 PM, March 05, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

thanks Sankarapandi for your excellent feedback

thanks krishna for your insights

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

1:14 PM, March 05, 2006
krishjapan said...

Kannan raised an important point. until now VK was expected to get DMK alliance votes, becasuse he will get vaikos caste votes ( please vaiko supporters dont scold me saying that Vaiko is not caste based leader, I very well know it). What about now? Any guess?

9:36 PM, March 05, 2006
ஜோ/Joe said...

//நாம விஜய்காந்த் factorஐ மறந்து விட்டோமோ?. //
இதுவே அவரின் நிலைமையைச் சொல்கிறது .வைகோ விவகாரம் விஜயகாந்த் பற்றிய செய்திகளை அமுக்கி விட்டது .அதுவும் வைகோவின் வெற்றி தான்.

9:44 PM, March 05, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு விஜயகாந்த் எல்லாம் ஒரு factor இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆனால் தற்பொழுது இந்தியாவில் இல்லாததால் சரியாக கணிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுகள் தான் சரியான பதிலாக இருக்கும்.

விஜயகாந்த் பற்றி பத்திரிக்கைகள் வழக்கம் போல கதைக் கட்டிக் கொண்டிருக்கின்றன என்று தான் எனக்கு தோன்றுகிறது.

ஜெயலலிதா விஜயகாந்த்திற்கு 25சீட்டுகள் கொடுக்கலாம் என்று எழுதப்படும் நகைச்சுவை எல்லாம் பிரபலமான பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருக்கிறது.

வைகோவிற்கு 35, திருமாவிற்கு 9 என அளந்து படியளக்கும் அம்மா, விஜயகாந்த்திற்கு 25 கொடுப்பாரா ?

10:09 PM, March 05, 2006
Anonymous said...

a well written analysis!!

3:57 AM, April 15, 2006