Sunday, March 26, 2006

சோனியா பதவி விலகல் தியாகமா ?

சோனியா காந்தி தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிகப் பெரிய தியாகம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சியோ அது ஒரு தியாகமும் அல்ல என்று வலியுறுத்தி கூறி வருகிறது. எது எப்படியாயினும் சோனியா தன்னுடைய அதிரடி முடிவுகளால் மக்களின் மத்தியில் மறுபடியும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி சோனியா காந்திக்கு எதிராக பலமான அஸ்திரம் என்று நினைத்து பிரச்சனையாக்கும் விஷயங்களை தன்னுடைய நடவடிக்கைகளால் சோனியா நிர்மூலமாக்கி விடுகிறார். பிரதமர் பதவியை மறுத்தது முதல் தற்பொழுது எம்.பி பதிவியை ராஜினாமா செய்தது வரை பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அவர் வழங்குவதில்லை.



சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க கூடாது, சோனியா பதவி ஏற்றால் மொட்டை அடித்துக் கொள்வோம் என்று முழங்கிய பாரதீய ஜனதா கட்சியினர், உண்மையில் சோனியா அந்த பதவியை ஏற்க வேண்டும் என்றே நினைத்தனர். சோனியா அவ்வாறு பதவி ஏற்பதன் மூலம் தாங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள், இந்த நாட்டை காப்பாற்ற தகுதியானவர்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சோனியாவை குறி வைத்து பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும். ராமர் கோயில் பிரச்சனை போன்றவற்றுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிப்பதற்கு நல்ல முழக்கமாக இருக்கும் என்று பாஜகவினர் நினைத்தனர்.

சோனியா காந்தி உட்பட வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவின் பிரதமராக கூடாது என்ற சட்டத்தை இயற்றப் போவதாக கூறி வந்த வாஜ்பாய் மற்றும் பாஜகவினர் தங்களுடைய ஐந்து ஆண்டு ஆட்சியில் அதற்கான எந்த "முயற்சியையும்" மேற்கொள்ள வில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சோனியாவை குறிவைத்து அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க இந்தச் சட்டம் பயன்படாது என்று நினைத்தனர். சோனியா பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் தான் அதனை தங்களால் தேர்தல் பிரச்சனையாகவும் ஆக்க முடியும் என்று நினைத்தனர். அந்த வாய்ப்பை தொடர்ந்து அப்படியே பராமரித்து சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து கொள்வோம் என்று பிரச்சாரத்தையும் நடத்தினர்.


பாரதீய ஜனதா கட்சியினருக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் சோனியா பிரதமர் பதவியை மறுத்தார். அவரது இமேஜ் பாரதீய ஜனதா கட்சியின் அனுதாபிகள் தொடங்கி, நடுநிலையாளர்கள் வரை உயரவேச் செய்தது. இதற்குப் பிறகு உட்கட்சிப் பூசல், அத்வானி பிரச்சனை, எம்.பி.களின் லஞ்சம் எனப் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்த பாரதீய ஜனதா கட்சிக்கு சோனியா ஆதாயம் தரும் பதவியை வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. ஆனால் அது மிகப் பெரிய பிரச்சனையாகும் முன்பாக மிகச் சாதுரியமாக சோனியா தனது பதவியை விட்டு விலகி பாஜகவினர் இந்தப் பிரச்சனை மூலம் எந்த ஆதாயத்தையும் அடையாமல் செய்து விட்டார். தன்னுடைய இமேஜையும் உயர்த்திக் கொண்டார்.

ஆனால் காங்கிரசும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் சொல்வது போல இந்தப் பதவி விலகல் தியாகமா ?

சோனியாவின் பதவி விலகல் எப்படி தியாகமாகும் என்பதை இவர்கள் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. சோனியா இந்தப் பதவியை விட்டு விலகி அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து விட்டாரா, அல்லது இனி தேர்தலிலேயே போட்டியிட மாட்டேன் என்று கூறி விட்டாரா ? மிகவும் அழுத்தமாக தான் மறுபடியும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக கூறியிருக்கிறார். தனக்கு ஏற்பட்டச் சிக்கலில் இருந்து தன்னை மிகவும் சாதுரியமாக விடுவித்துக் கொண்ட அதே நேரத்தில் அரசியல் ஆதாயத்தையும் தேடிக் கொண்டார். இது எந்தவிதத்திலும் தியாகமாகி விடாது. மாறாக மக்கள் மீது தேவையில்லாத மற்றொரு இடைத்தேர்தல் திணிக்கப்படுகிறது.

முதலில் இந்தப் பிரச்சனையே அரசியல் காரணங்களுக்காக தான் நடந்ததே தவிர அரசியல் நேர்மையை கட்டிக் காக்க வேண்டிய எண்ணம் இந்தப் பிரச்சனையை முதலில் முன்நிறுத்திய காங்கிரசுக்கும் சரி, பின் இந்த பிரச்சனையை தன் கையில் எடுத்துக் கொண்ட பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்ததில்லை. லஞ்சம் வாங்கிய தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாதாடிய அத்வானி போன்ற தலைவர்கள் சோனியாவுக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க செல்வது எல்லாம் ஒரு பெரிய சீரியசான விஷயமாக எனக்கு தோன்றியதில்லை. அரசியல் நாடகத்தில் ஒரு அத்தியாயம் அவ்வளவு தான். ஜெயா பச்சனுக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய காங்கிரஸ், சோனியாவை காக்க அவசரச் சட்டம் கொண்டு வர முனைந்தது எல்லாம் மறந்து போய் இன்று சோனியாவின் தியாகம் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பதவி மூலம் சோனியா பெரிய ஆதாயங்கள் எதையும் அடைந்து விடப் போவதில்லை. மைய அரசின் ஆட்சியே அவர் கையில் இருக்க ஏதோ ஒரு பதவி மூலம் தான் அவர் ஆதாயம் அடைய வேண்டுமா என்ன ? இந்தப் பிரச்சனையே முதலில் அர்தமற்றது. பாரதீய ஜனதா கட்சிக்கு அரசியலாக்க கிடைத்த ஒரு விஷயம் என்பதை தவிர இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை.

இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே சோனியா பதவி விலகி இருந்தால் அவர் நேர்மையை நாம் சிலாகித்து இருக்கலாம். மாறாக இந்தப் பிரச்சனை தனக்கு அதிக பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரிந்தப் பிறகு தான் அவர் விலகி இருக்கிறார். இதில் எந்த தியாகமோ, நேர்மையோ இல்லை. தானும் இந்தியாவின் பல அரசியல்வாதிகள் போன்ற ஒருவர் தான் என்பதை சோனியா மற்றொரு முறை நிருபித்து இருக்கிறார். பிகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை ஆட்சியில் அமர்த்த கவர்னர் பதவியை தங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எம்.பி.க்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்க வகைச் செய்யும் சட்டத்தை காங்கிரஸ் இப்பொழுது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகிறது. இதற்கு ஆதரவாகவே பாரதீய ஜனதா கட்சியும் வாக்களிக்கும். அல்லது வாக்களிப்பை புறக்கணித்து இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற உதவும். இவ்வாறு இருக்கையில் சோனியாவின் "தியாகம்" எவ்வளவு நகைப்பிற்குரியதோ, அதே அளவுக்கு இந்தப் பிரச்சனையை முன்நிறுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் கோஷங்களும் நகைப்பிற்குரியவையே.

14 மறுமொழிகள்:

Gopalan Ramasubbu said...

சில சட்டதிட்டங்கள் காரனமாக என்னுடைய வேலை நாளையோ நாளைமறு நாளோ பரிக்கப்படும் என்று எனது மேலாளர் சொன்னவுடன் அன்றே நான் ராஜினாமா செய்வது தியாகமா?

8:35 PM, March 26, 2006
சாணக்கியன் said...

Well said, this is not at all a thiagam. The congress men and women shouting in 10, Janpath street were the great examples of fools among the people. Its a great political drama. As Arun Jaitely said, " this is the confession of a culprit got caught redhandedly".

12:25 AM, March 27, 2006
பாபு said...

சோனியா செய்தது நிச்சயமாக தியாகமன்று. அரசியலில் ஒரு சாதுரியமே.
தன்னைப் பாதிக்கும் முடிவுகளாலும் அரசியலில் 'லாபம்' பெற முடியும் என்பதைகற்றுக்கொடுக்கிற 'வெளிநாட்டிலிருந்து' வந்த இந்த அரசியல்வாதியின்அதிரடிகளால் 'நாட்டுப்பற்றின்' போர்வையில் 'அற்ப' ஆதாயங்களை குறிவைக்கிற 'வலது சாரி'களுக்கு நெத்தியடி கிடைப்பது நல்லது தான்.

3:01 AM, March 27, 2006
ஜோ/Joe said...

பாபு,
சும்மா நச்சுண்ணு சொன்னீங்க..இது தியாகம் இல்லை..பா.ஜ.க -வுக்கு தொடரும் பட்டை நாமம்!

4:35 AM, March 27, 2006
அழகப்பன் said...

தியாகம் என்று பிரச்சாரம் செய்தால்தானே செல்வாக்கை மேலும் உயர்த்த முடியும். அந்த உத்தியைத்தான் காங்கிரசார் கையாளுகிறார்களே தவிர உண்மையிலேயே அவர்கள் கூட இதை தியாகம் என்று மனமாற ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் அழிந்துவிடுமோ என்று (ஆசையுடன்) சோ ஆதங்கப்பட்டிருந்தார். ஆனால் இப்பொழுது உண்மையாகவே அவர் பா.ஜ.க. குறித்து ஆதங்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதைத்தான் சமீபத்திய பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஆ.வி.யில் ஜெயகாந்தன் கூறியதுபோல், அய்யாக்களைவிட அம்மாக்கள் நன்றாகவே காய் நகர்த்துகிறார்கள்.

5:40 AM, March 27, 2006
முத்துகுமரன் said...

//சமீபத்தில் ஆ.வி.யில் ஜெயகாந்தன் கூறியதுபோல், அய்யாக்களைவிட அம்மாக்கள் நன்றாகவே காய் நகர்த்துகிறார்கள்.//

:-))))))

6:49 AM, March 27, 2006
Anonymous said...

een ithai bjp,communist n rest all party ithai seyakudathu avrgal seyatha varai sonia thiyagithaan

11:13 AM, March 28, 2006
Anonymous said...

ஜெயலலிதா பதவி துறந்து ஓ.பன்னீரிடம் ஆட்சியைக் கொடுத்தபோது இப்படி பதிவுகள் இடவில்லையே எங்கள் தங்கக்கம்பி தமிழ்சசி???

8:31 PM, March 28, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

வெங்காயம் அண்ணண் அவர்களே,

ஜெயலலிதா பன்னீரிடம் பதவி கொடுத்த பொழுது தமிழ்மணமும், என்னுடைய வலைப்பதிவும் இருந்ததா. நீங்களும் ஒவ்வொரு பதிவிலும் பின்னூட்டம் எழுதினீர்களா :-)))

ஒரு மாதிரியாத் தான் இருக்கீங்க :-)))

8:42 PM, March 28, 2006
Gopalan Ramasubbu said...

/வெங்காயம் அண்ணண் அவர்களே,

ஜெயலலிதா பன்னீரிடம் பதவி கொடுத்த பொழுது தமிழ்மணமும், என்னுடைய வலைப்பதிவும் இருந்ததா. நீங்களும் ஒவ்வொரு பதிவிலும் பின்னூட்டம் எழுதினீர்களா :-)))

ஒரு மாதிரியாத் தான் இருக்கீங்க :-))) /

Couldn't stop laughing after reading this.:))))

6:53 AM, March 30, 2006
Selvakumar said...

சோனியா, ஒவ்வொரு முறையும் பாஜகவின் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை கண்டறிந்து அவற்றை தகர்ப்பது, அவருக்கு அரசியலின் முக்கிய கலையான "காய் நகர்த்துதலை" கற்று, அதில் பழம் தின்று கொட்டை போட்ட அத்வானி போன்றவர்களிக்கு கூட தண்ணி காட்டுகிற விதம் அரசியல் சதுரங்கத்தை இன்னும் சுவாசஸ்யமாக்கியுள்ளது.

பாஜகவுக்கு இந்த முறையும் ஆப்பு !

செல்வகுமார்.

5:58 AM, April 01, 2006
வஜ்ரா said...

//
Sonia thinks Indians are fool. All medias and congressmen all are supporting sonia to make indians fool.Thiyagam means we should never take again which we left.If Rae Bareli peoples again elect sonia as MP, then we have to announce the Rae bareli as "fools constituency" and everyyear we have to celebrate the winning day as "fools day" instead of April 1.
//

St. Sonia maathaa ki jey!!

எம். ஜி. ஆர் ஆண்டிப்பட்டியில் படுத்துக்கோண்டே ஜெயித்தார். ஜெயலலிதாவுக்கும் ஆஸ்தான தொகுதி இப்பொளுது ஆண்டிப்பட்டி தான்.

நேரு மாமாவைத் தவிர இந்திரா காந்தி முதல், சோனியா காந்தி வரை அனைவரையும் ஜெயிக்க வைத்தது ராய் பரேலி தான்.

ஆண்டிபட்டிக்கும் ராய் பரேலிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப் பட்ட ஆஸ்தான தொகுதிகளை நீங்கள் பார்கலாம். அந்த தொகுதிகளில் ஒன்றும் அவர்கள் சிறப்பாக செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தான் வோட்டு விளும்.

மொத்தத்தில்,
கேனையர்கள் இருக்கும் வரை இப்படி பட்ட சோனியா போன்ற ஆங்கிலம் தெரிந்த ரப்ரி தேவிக்கள் அரசியலில் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஷங்கர்.

5:14 AM, April 03, 2006
Selvakumar said...

// கேனையர்கள் இருக்கும் வரை இப்படி பட்ட சோனியா போன்ற ஆங்கிலம் தெரிந்த ரப்ரி தேவிக்கள் அரசியலில் வந்துகொண்டுதான் இருப்பார்கள் //

இருந்தாலும் நீங்கள் சோனியாவை ரப்ரியுடன் ஒப்பிட்டது கொஞ்சம் ஓவர். ரப்ரி போன்ற ஒரு பெண்மணி மட்டும் சோனியா போன்ற அதிகாரத்தில் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். சோனியா பெரும் அரசியல் தலைகளான அத்வானி போன்றவர்களுக்கே தண்ணி காட்டும் போது, தனது கணவரைத்தவிர வெளிவுலகை அறியாத ரப்ரிக்கள் அரசியலில் இடம்பெரும் பரிதாபத்துக்குரிய அரசியல்வாதிகள்

செல்வகுமார்

8:40 AM, April 04, 2006
வஜ்ரா said...

//
சோனியா பெரும் அரசியல் தலைகளான அத்வானி போன்றவர்களுக்கே தண்ணி காட்டும் போது,
//

இத்தாலிய மொழியில் தான் இந்தியயும், ஆங்கிலத்தயும் எழுதிப் படிக்கும் சோனியாவின் மூளை அகமத் படேல் என்ற பழைய காங்கிரஸ் விசுவாசி.

அத்வானிக்கு தண்ணி காட்டுவது அவர்தான். சோனியா வெரும் காங்கிரசின் காய். ஆட்டம் ஆடுபவர் படேல் போன்ற காங்கிரஸ் ஜால்ராக்கள். எந்த காந்தி வந்தாலும் காங்கிரஸில் இவர்கள் தான் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள்.

ஷங்கர்.

4:33 AM, April 05, 2006