கருத்துக் கணிப்புகள்

தமிழகத்தில் ஊடகங்கள் பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பான CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு, இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிற கருத்துக் கணிப்புகளில் குறிப்பாக குமுதத்தில் ஏதோ போனால் போகட்டும் என்று மாவட்டத்திற்கு சில தொகுதிகள் மட்டும் திமுகவிற்கு பெரிய மனதுடன் வழங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு குமுதம் வாரி வழங்கியுள்ளது, அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த்திற்கு 10%-20% வாக்குகள் என ஓரே ஆச்சரியம் தான்

இந்தக் கணிப்புகள் யாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலானோர் இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்றாலும் கொஞ்சம் குழம்பித் தான் போயினர். அத்தகைய குழப்பத்தை விளைவிக்கத் தான் இந்த கருத்துக்கணிப்புகள் திணிக்கப்படுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.

CNN-IBN மிகுந்த உஷாருடன் தன்னுடைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளின் தோல்விகளால் எவ்வளவு தொகுதிகளை யார் பிடிப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக 46% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும், திமுக 44% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும் தெரிவிக்கிறது. ஆனாலும் இது சரியான கணிப்பாக இருக்காது எனவும் அதிமுகவின் 2%கூடுதல் வாக்குகள் என்பது கருத்துக்கணிப்புகளில் இருக்கும் standard errorல் கழிந்து போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியிருக்கிறது.

பெரும்பாலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கருத்துக்கணிப்புகளை விஞ்ஞானப் பூர்வமாக அணுகுவதாக கூறப்படும் முறைகளில் பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதில்லை. கடந்த காலங்களில் இவை சரியாக முடிவுகளை கணிக்க முடியவில்லை என்பது தவிர, தங்கள் தவறுகளை அடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் திருத்திக் கொண்டதாகவும் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக் கணிப்புகள் எந்த வகையில் தோல்வி அடைந்தன என்பதையும் இவர்கள் வெளியிட்டதில்லை. தமிழகத்தில் இவர்களுடைய கருத்துக் கணிப்புகள் எப்பொழுதுமே சரியாக இருந்ததில்லை.

இந்தியா மற்றும் தமிழகத்தில் பல பிரிவு மக்கள், பல வித கட்சிகள், சாதியைச் சார்ந்த பல விதமான ஓட்டுப் பிளவுகள் இருக்கும் சூழலில் இந்தக் கருத்துக்கணிப்புகளை சரியாக அணுகும் முறை இன்னும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். IBN-HINDU கருத்து கணிப்பில் கூட Random Sampling முறையில் 4,781 பேரிடம் 232 இடங்களில் இருந்து 58 தொகுதிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த வகையில் இந்த சாம்ப்பிள் கொண்டு வரப்பட்டது என்பதை பொறுத்தே இதன் சரியான கணிப்பு இருக்க முடியும்.

பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை எல்லாம் கொண்டு செய்வது அவ்வளவு எளிதல்ல. கருத்துக் கணிப்பில் அவர்கள் உண்மையை கூறுகிறார்களா என்பதும் கணிக்க முடியாதவை. அந்த வகையில் பார்க்கும் பொழுதும கருத்துக் கணிப்பின் Error 1% இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அதிகமாகவே இருக்கும்.


அது போல Random Samplingக்கிறகு கொண்டு வரப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்தக் கருத்து கணிப்பு முறை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும் பிற கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் இந்தக் கருத்து கணிப்பு பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞான முறைப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் நினைத்தது போலவே கடும்போட்டி இருப்பதாகவே கருத்துக் கணிப்பு பிரதிபலித்து இருக்கிறது.

ஆனால் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்களே தேர்தலின் வெற்றி தோல்விகளில் முக்கிய காரணிகளாக இருக்கப் போகிறது. உதாரணமாக தேர்தலின் வெற்றி தோல்வி பெரும்பாலும் கடைசி சில 5 தினங்களில் ஏற்படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். தலைவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவையெல்லாம் தணிந்து ஒரு முடிவை நோக்கி மக்கள் செல்வது இந்த தினங்களில் தான். அது போல தேர்தல் இறுதி நேரத்தில் பல தொகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் மாறி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முடிவெடுக்காத வாக்காளர்கள் 30% அளவிற்கு இருக்கின்றனர் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. வாக்காளர்களின் மனநிலையும் தேர்தலின் இறுதி நேரத்தில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Secondly, the survey revealed that about 30 per cent of the respondents were either unwilling to disclose their voting preferences or were unsure who they would eventually vote for. About 13 per cent did not reveal a preference; six per cent gave a preference but were unsure whether it would remain the same until election day; and another 11 per cent were more or less sure but not absolutely confident of the way they were going to vote a month from the

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் "இந்து" தெரிவித்துள்ளது

Thirdly, the advantage of two percentage points for the AIADMK alliance may not result in an advantage in terms of seats. The votes of the DMK and the PMK are concentrated in areas of strength and, as a result, the seat yield from these areas of strength could compensate for a modest disadvantage in terms of share of-the-overall-vote disadvantage. So, despite a difference in vote share, it could be a virtual tie in terms of seats.

பாமகவின் concentrated ஓட்டுவங்கி குறித்து என்னுடைய பதிவில் ஒரு முறை விவாதம் நடந்தது. என்னுடைய வாதத்தை இந்த கருத்துக் கணிப்பு உறுதி செய்வது போல உள்ளது. இந்த தேர்தலில் வடமாவட்டம் திமுக கூட்டணி கைகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு "Advantage" நிச்சயம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை IBN-HINDU மிகுந்த எச்சரிக்கையுடனே வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று கூறி எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய Credibility பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளது. கடந்த கால கருத்துக்கணிப்பு தோல்விகள் அவர்களை இந்த முடிவினை எடுக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலின் பொழுது ராஜ்தீப் NDTVயில் வெளிப்படையாகவே இதனை கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழ்நாடு எங்கள் கருத்துக்கணிப்பிற்கு மாறாக வாக்களித்தால் அந்தப் பக்கம் போகவே போவதில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

போட்டி மிகக் கடுமையாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கருத்து கணிப்பில், தொங்கு சட்டசபை அமையாது என்றும் கூறுகிறார்கள். மிகுந்த குழப்பத்துடனே கருத்துக் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்

தமிழக மக்கள் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்களா என்ன ?