தேர்தல் - சன் டிவி - தினகரன்
இன்று தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்றால், மற்றொரு புறம் சன் டிவி-தினகரன் குழுமத்திற்கு எதிராக தமிழகத்தின் மொத்த ஊடகங்களும் கூட்டணி அமைத்தோ அமைக்காமலோ அணி திரண்டிருக்கின்றன. திமுக இந்த தேர்தலில் தோற்பது தங்களின் எதிர்கால "பிசினஸ்" வாய்ப்புகளுக்கு அவசியமாக இந்த ஊடகங்களுக்கு தெரிவதால் திமுகவிற்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை மிக தீவிரமாக்கியிருக்கின்றன. கருத்துக் கணிப்புகள், திரிக்கப்பட்டச் செய்திகள் என இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிராக பலமான அஸ்திரங்கள் இந்த ஊடகங்களால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஊடகங்களின் போக்கு "கன்றாவியாக" மாறியிருக்கிறது. இனி எந்த ஊடகங்களும் நாங்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்றோ, எங்களுக்கு தனிச் சலுகை வேண்டும் என்றோ கேட்க முடியாது. இந்த ஊடகங்களை அரசியல் கட்சிகளின் மற்றொரு பரிமாணமாகத் தான் நான் பார்க்கிறேன். அரசியல்வாதிகளை குறைச் சொல்லவோ, நக்கலடிக்கவோ இந்த ஊகங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்று தமிழகத்தில் ஒரு பெரும் ஊடக சக்தியாக, தங்களுடைய சாதூரியத்தால் மாறன் அண்ட் கோ உருவாகி இருக்கின்றனர். தினமலர், தினத்தந்தி என பலப் பத்திரிக்கைகள் பல காலமாக முயன்று உருவாக்கி இருந்த வாசகர் எண்ணிக்கையை தங்களுடைய புரொபஷனல் பிசினஸ் உத்திகளால் சில மாதங்களிலேயே உருவாக்கி விட்டனர். இன்று தினகரன் 10லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக உருவாகி இருக்கிறது. குங்குமம் குறுகிய காலத்தில் குமுதம், விகடன் என பாரம்பரிய பத்திரிக்கைகளின் விற்பனையை கடந்து விட்டது. குங்குமம் கையாண்ட முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற கலாநிதி மாறனின் வியபார நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அது ஒரு மகத்தான சாதனை என்றே நான் நினைக்கிறேன்.
நான் தினகரனை சிறிய வயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா "தினகரன் - தினத்தந்தி - தினமணி" ஏஜெண்டாக இருந்தார். தினகரன் ஏஜென்சியை என்னுடைய பெயரில் தான் என்னுடைய அப்பா நடத்தி வந்தார். தினகரனை நடத்த நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். சுமாராக 25பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டதாக நினைக்கிறேன். தினத்தந்தி சில நூறு பிரதிகள் விற்கப்பட்டன. ராணி, ராணி முத்து போன்றவையும் அதிக அளவில் விற்கப்பட்டன. தினமணிக்கென்று ஒரு தனி வாசகர் வட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தினகரனை அதிகமாக விற்கச் சொல்லி அதிக Pressure கூட கொடுக்கப்பட்டது. ஆனால் வாங்குவதற்கு தான் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து இதனை வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் மிகத் தீவிரமான திமுக அனுதாபிகள் தான். அதுவும் சலூன் கடைகள், டீக் கடை, டைலர் கடைகள் போன்ற இடங்களில் தான் தினகரன் வாங்கப்பட்டது. அவர்கள் நிச்சயம் திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். வீடுகளில் தினகரன் அதிகம் வாங்கப்பட வில்லை. வைகோ சார்பாக தினகரன் மாறிய காலங்களில் (கே.பி.கந்தசாமி இருந்த பொழுது) பலர் பத்திரிக்கையை நிறுத்தி விட்டார்கள்.
இந்த நிலையில் தினமலர் மிக Aggressiveக தன்னுடைய மார்க்கெட்டிங்கை செய்தது. தினத்தந்தி குழுமத்தின் பத்திரிக்கைளை நடத்துபவர்கள் தினமலரை நடத்தக் கூடாது என்பது எழுத்தில் இல்லாத உத்தரவு. தினத்தந்தியை நடத்துபவர்கள் அத்தனை பேரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே சாதி ரீதியாகவும் தினமலரை எதிரியாக பார்க்கும் நிலை தான் இருந்தது. ஆனால் தினமலர் எங்களை அணுகிய பொழுது நாங்கள் அதனை ஒப்புக் கொண்டோம். என்னுடைய அப்பா எதையும் பிசினஸ் நோக்குடன் அணுகும் குணம் உடையவர். மளிகைக் கடை நடத்துவதில் தொடங்கி நியுஸ் ஏஜென்சி வரை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமலரை தினத்தந்திக்கு தெரியாமல் தான் நடந்த வேண்டும் என்னும் நிலை. நாங்கள் தினமலரை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தினகரனுக்கு தெரிந்த நேரத்தில், தினகரனின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று கூறி எங்களிடம் இருந்து ஏஜென்சியை மாற்றி விட்டார்கள். மற்றொரு ஏஜென்சியிடம் மாறிய பொழுதும் தினகரன் பெரிதாக விற்க வில்லை. அந்தளவுக்கு தான் தினகரனின் தரம் இருந்தது. திமுக அனுதாபிகள் தவிர யாரும் அந்தப் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள். பெண்கள் ராணி, ராணிமுத்து போன்றவற்றை அதிகம் வாங்குவார்கள்.
தினமலரை நாங்கள் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தான் நடத்தினோம். ஆனாலும் அந்தப் பத்திரிக்கையை மார்க்கெட்டிங் செய்வதில் தொடங்கி, ஏஜெண்டுகளுக்கு சலுகைகள், ஊக்குவிப்பு செய்வது வரை தினமலர் மிகவும் புரொபஷனலாக இதனை எதிர்கொண்டது. தினமலரின் விற்பனையை உயர்த்துவதற்காக தினமலர் விற்பனையாளர்கள் எங்களுடன் எங்கள் பகுதியில் சந்தா உயர்த்துவதற்கும் முயற்சிகள், ஆலோசனைகள் வழங்கினர்கள். இதனால் தினமலரை சிறிது சிறிதாக தினதந்திக்கு நிகராக எங்களால் விற்பனையில் உயர்த்த முடிந்தது.
தினமலர், தினத்தந்தி இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே நிறைய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். தினத்தந்தியின் அலுவலகத்தில் இருந்து சில நேரங்களில் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் வியபாரத்தை வளர்க்கும் எந்த நோக்கமும் இல்லாமல் ஏதோ அரசு Inspection ஏஜெண்ட் போல நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உணவு போன்றவையும் நாம் வழங்க வேண்டும் (லஞ்சம்... கூட உண்டு). சில பரபரப்பான சமயங்களில் எங்களைக் கேட்காமலேயே நிறைய பிரதிகளை எங்களுக்கு தள்ளி விட்டு விடுவார்கள். இதனை விற்றாக வேண்டும் என உத்தரவு கூட வரும். பல நேரங்களில் இவ்வளவு பிரதிகளை விற்க முடியாது. விற்காத பிரதிகளை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் வற்புறுத்தினால் நஷ்டத்தில் உங்களுக்கு கொஞ்சம், எங்களுக்கு கொஞ்சம் என்று கூறுவார்கள். கொஞ்சம் கூட Business ethics என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் தினமலரில் இவ்வாறு இருக்காது. அதனாலேயே தினமலர் ஏஜெண்ட்கள் மத்தியில் அபிமானம் பெற்றது. அதன் விற்பனையை உயர்த்துவதற்கும் முயற்சி எடுத்தனர். இதைத் தவிர தினமலர், உள்ளூர் செய்திகள், இலவச இணைப்புகள் போன்றவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. தினத்தந்தி இதனை காப்பி அடித்ததே தவிர சுயமாக எதனையும் செய்ததில்லை. ஒரு நேரத்தில் சுமார் 500 பிரதிகளுக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ராணி வார இதழ் சுமார் 100பிரதிகளுக்கும் குறைவாக வந்து விட்டது. அதனை மாற்ற எந்த முயற்சியையும் தினத்தந்தி நிர்வாகிகள் எடுக்க வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் தினமலர் மிக வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து கொண்டிருந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் எண்ணிக்கை பிற நாட்களை விட அதிகமாக இருக்கும். அந் நாட்களில் வெளியாகும் இலவச இணைப்பான சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இதற்கு காரணம். தினத்தந்தியும் பிறகு இதனை பின்பற்ற தொடங்கியது.
சரியான மாற்று பத்திரிக்கைகள் இல்லாமையாலேயே தினத்தந்தி இன்னமும் தாக்கு பிடித்து கொண்டு இருந்தது என்று சொல்லலாம். அதுவும் தவிர தினமலர் தன்னுடைய செய்திகளில் சார்பு நிலையை அதிகம் பின்பற்றியதால் எல்லா வாசகர்களையும் அது சென்றடையவில்லை. தன்னுடைய சார்பு நிலைகளை ஒரம் கட்டி வைத்து விட்டு இதனை ஒரு இதழியலாக தினமலர் அணுகியிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்க முடியும். தினத்தந்தியை விட விற்பனையை அதிகரித்திருக்க முடியும். அதுவும் தவிர ஆரம்ப காலங்களில் சந்தா பிடிப்பதில் ஏஜெண்களுடன் களத்தில் இறங்கி உத்துழைத்த தினமலர் பின் அதனையும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தினமலரின் உத்திகள் மாறாத வரை அதன் எண்ணிக்கை இதற்கு மேலும் உயரும் என்று நான் நினைக்கவில்லை.
தினத்தந்தி வளர்ச்சியை அதிகரிக்க தினத்தந்தி குழுமத்தினர் சரியான உத்திகளை கொண்டிருக்கவில்லை. பாரம்பரியமாக இருக்கும் பத்திரிக்கை என்பதாலும், தினமலரை வாங்கக் கூடாது என்று நினைப்பவர்களும் தான் தொடர்ந்து தினத்தந்தியை வாங்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கைகளை விட தன்னுடைய சமூகம், அரசியல் போன்றவற்றில் சிவந்தி ஆதித்தன் கவனம் செலுத்த தொடங்கினார். "சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்" என்ற பெயரில் நெல்லையில் சிவந்தி ஆதித்தன் ஒரு அமைப்பை தொடங்கினார். நல்ல கூட்டமும் அந்த தொடக்க விழாவிற்கு வந்திருந்தது. அவர் நாடார் சமூக இயக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அவர் அதனைச் செய்ய வில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு இருந்தது. அவர் நாடார் சமூகம் மத்தியில் மதிக்கப்படும் பிரமுகர். தன்னை அந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள முனைந்தார் என நினைக்கிறேன். இப்பொழுது ஆதித்தனாரின் குடும்பத்தைச் சார்ந்த சரத்குமாரை திமுகவில் இருந்து பிரித்து இருப்பதும் சிவந்தி ஆதித்தன் தான் என்பது என் சந்தேகம். இதற்கு காரணம் தினகரனை மாறன் கைப்பற்றிய எரிச்சல் + தன்னுடைய தினத்தந்தி மார்க்கெட்டை தினகரன் கைப்பற்றும் என்ற அச்சம் + நாடார் சமூகம் சார்பில் தன் குடும்பத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவரை உருவாக்கும் அவரது எண்ணம். அதற்கு தன்னை விட சரத்குமார் சரியான நபர் என்று அவர் முடிவு செய்திருக்க கூடும். சரத்குமாரும் வழக்கம் போல "கலைஞர் குடும்பம்" மீது பழியைப் போட்டு திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். வைகோ ஆரம்பித்து வைத்த குடும்பம் மீதான பழி போடும் பழக்கம் திமுகவில் இருந்து வெளியேற அனைவரும் பயன்படுத்தும் சாக்காக மாறியிருக்கிறது. கலைஞர் குடும்பத்தின் தயவால் தான் ராதிகா "ராடன்" என்ற நிறுவனத்தையே நடத்த முடிந்தது என்பது இவருக்கு மறந்து விட்டது போலும்
கே.பி.கந்தசாமிக்கு பிறகு தினகரனின் நிர்வாகம் அவரது மகன் குமரன் வசம் வந்தது. இவர் தினத்தந்தி குழுமத்தின் குடும்பத்தினர் தான். கே.பி.கந்தசாமி அதித்தனாரின் மருமகன். அடுத்த தலைமுறையில் கூட திருமணம் மூலம் இவர்களிடையே நெருங்கிய உறவு உள்ளது. இவர்கள் இந்தப் பத்திரிக்கையை நடத்த சரியான உத்தியை வகுக்காமல் மறுபடியும் ஒரு தவறைச் செய்தனர். வைகோ ஆதரவு நிலையில் இருந்து மறுபடியும் திமுக ஆதரவு நிலைக்கு பத்திரிக்கைச் சென்றது. இதனால் தங்களுடைய பழைய வாசகர் வட்டத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்தனர் என்பதை தவிர பெரிய நன்மை விளையவில்லை. கே.பி.கந்தசாமியின் மகன் குமரன் தினகரன் பத்திரிக்கையை மாற்றுவார் என்றே நான் நினைத்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கலாநிதி மாறனிடம் தங்கள் பத்திரிக்கையை விற்று விட்டார்.
நிர்வாக அமைப்புடன், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தினசரியாக சுமார் 3லட்சம் பிரதிகளை விற்றுக் கொண்டிருந்த தினகரனை Acquisition மூலம் தனக்கு உரிமையாக்கிய கலாநிதி மாறன் தினகரனில் ஏற்படுத்திய மாற்றம் பிரமாண்டமானது. நான் இன்னும் இதன் அச்சுப் பிரதியை பார்க்க வில்லை. ஆனால் இதன் இ-பேப்பர் பார்க்கும் பொழுது தினகரனின் லேஅவுட் வேறு எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இல்லை என்று சொல்லலாம். இந்து வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆலோசகர்களை வரவழைத்து பத்திரிக்கையின் வடிவமைப்பை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, "ஆதி காலத்தில்" நாம் எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப் பத்திரிக்கைகளை பார்த்து வந்திருக்கிறோம். பெரிய வடிவமைப்பு மாற்றங்களை இந்தப் பத்திரிக்கைகள் செய்ததே இல்லை. ஆனால் தினகரன் அதிலும் முயற்சி எடுத்திருக்கிறது. வண்ண மயமான வடிவமைப்பு, செய்திகள்-படங்கள் போன்றவற்றை தொகுத்திருக்கும் முறை போன்றவை வழக்கமான தமிழ் பத்திரிக்கைகளில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவமைப்புடன் இருக்கிறது.
பத்திரிக்கைகளின் விலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மாத சந்தா தொகை படிப்படியாக உயர்ந்து செல்ல, விற்பனை குறைந்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதனையெல்லாம் பத்திரிக்கைகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காகிதம் விலை அதிகமானால் பத்திரிக்கையின் விலை அதிகமாக்கப்பட வேண்டும் என்ற நியதியை எந்தப் பத்திரிக்கையும் மாற்றியதில்லை. ஆனால் தினகரனின் அதிரடி விலைக் குறைப்பு பலரை பத்திரிக்கை வாங்க தூண்டியிருக்கிறது என நான் அறிகிறேன். பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனாலும் "ஓசி" பத்திரிக்கை தான் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தினகரனின் விலை 1ரூபாய் என்பது பலரையும் தினகரன் வாங்க தூண்டியிருக்கிறது.
இது எல்லாவற்றையும் விட தினகரனின் விற்பனை பெருக முக்கிய காரணம் - சன் டிவி.
சன் டிவி என்ற பவர்புல் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கலாநிதி மாறனால் Consumer சார்ந்த எந்தத் துறையிலும் எளிதாக இறங்கி வெற்றி பெற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய வீச்சு அவ்வளவு பலமாக இருக்கிறது. பத்திரிக்கையின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எடுத்த Traditional வகையான முயற்சிகளை நோக்கும் பொழுது, தினகரனின் 10லட்சம் பிரதிகள் ஒரு இமாலய சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில மாதங்களில் சுமார் 7லட்சம் பிரதிகள் அதிகமாகி இருக்கிறது. இதற்கு சன் டிவி, கே டிவி மற்றும் சூரியன் எப்.எம். மூலம் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட விளம்பரமும் ஒரு காரணம. இந்த வசதி பிற தினசரிகளுக்கு இல்லை. சந்தா உயர்த்த வேண்டுமானால் ஏஜெண்ட்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உத்தியாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அதனை தினகரன் மாற்றி எழுதியிருக்கிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளாமையும், தினகரன் அதனை மாற்றியதும் தான் தினகரனின் வெற்றிக்கும் பிற தினசரிகளின் தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.
தினகரன் புதிய வாசகர்களை கவர்ந்திருப்பது மட்டுமல்லாமல் பிற பத்திரிக்கைகளின் விற்பனையும் கண்டிப்பாக குறைத்திருக்கும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கையின் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய லாபம் குறையும் பொழுது, வியபாரத்தில் திடீர் சவால்கள் எழும் பொழுது அதற்கு காரணமானவர்களை நோக்கி கோபம் திரும்புவது இயற்கை தான்.
தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு நிலையுடன் இந்த புதிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள, இன்று தினமலர் மிக மோசமான ஊடக வன்முறையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக நாடார் சமூகத்தை திருப்பும் முயற்சியை சிவந்தி ஆதித்தன் மேற்கொண்டிருக்கிறார். சரத்குமாரை திமுகவில் இருந்து விலக்குவது அதன் முதல் கட்டம். இது நாடார் சமூக ஓட்டுக்களை அதிமுகவிற்கு ஆதரவாக கொண்டு வரும் என்பது அவரது கணக்கு. ஒரு காலத்தில் தினமலரை கண்டாலே எரிச்சல் அடையும் தினத்தந்தி குழுமம் கலாநிதி மாறனை எதிர்க்க கூட்டணி அமைக்காமலேயே தினமலருடன் சேர்ந்து கொண்டுள்ளது.
பத்திரிக்கையின் பிரதிகளை விற்க இதற்கு மேல் முடியாது என தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முடிவு செய்திருந்தன. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை சரியாக கண்டு கொண்ட கலாநிதி மாறனின் வியபார உத்திகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அது போலவே தான் குங்குமத்தின் வளர்ச்சியும். குமுதம், ஆனந்த விகடன் என தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப பத்திரிக்கைகளின் ஆதிக்கத்தை தன்னுடைய "புதுசு கண்ணா புதுசு" விளம்பரம் மூலமே கலாநிதி மாறன் மாற்றிக் காட்டினார். இன்று குங்குமம் தமிழகத்தில் சுமார் 55லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1, இந்தியாவிலேயே நம்பர் 2 என்பது குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை.
இதற்கு காரணம் தினகரன், குங்குமம் போன்றவற்றின் தரம் என்பதை விட சன் டிவி விளம்பரங்கள் தான் என்பது மாறனுக்கு கடும் எதிர்ப்பை அவரின் போட்டி பத்திரிக்கை குழுமங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இப்பொழுது சன் டிவி மீதும், திமுக மீதும் திரும்பி இருக்கிறது. குடும்ப அரசியல் மறுபடியும் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. இது வரை திமுகவிற்கு பலமாக இருந்த சன் டிவி இப்பொழுது இந்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தொடுக்க நிறையவே சிரமப்படுகிறது.
சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிற ஊடகங்கள் எதிர்த்தாக்குதலை தொடுத்து இருக்கின்றன. செயற்கையாக அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் எழுப்பி கொண்டிருக்கின்றன. நான் அதிமுக தேர்தலில் தோற்று விடும் என்று சொல்லவில்லை. போட்டி கடுமையாகவே இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக கருத்துக் கணிப்பை அணுகிய IBN-HINDU கூட குழப்பத்துடன் தான் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை எப்படி எழுப்புகின்றன ?
விஜயகாந்த்திற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஆதரவையும் இங்கு கவனிக்க வேண்டும். தினமலர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அதில் ஒரு "லாஜிக்" இருக்கிறது. ரஜினிகாந்த் கடவுள் பக்தர். இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் என்பதால் இவருக்கு கடந்த காலத்தில் தினமலர் கொடுத்த ஆதரவினை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் விஜயகாந்த்தை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ?
விஜயகாந்த் கொள்கைகளிலோ, பிற கட்சிகளைக் காட்டிலும் தன்னிடம் ஒரு தனித் தன்மை இருப்பதாகவோ இது வரையில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பிற கட்சிகள் செய்யும் அனைத்து ஸ்டண்களையும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே செய்து இருக்கிறார். என்றாலும் "தமில்", "தமில்" என்று முழுங்குபவர். அரசியலில் அவர் நுழைவது என்ற முடிவினை எடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே "விடுதலைப் புலிகள்" மற்றும் தமிழீழத்தின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் நடிகர்களில் இவர் தான் நிதி வழங்குதல், நிதி திரட்டுதல் போன்றவற்றைச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இவர் கொண்ட அபிமானத்தால் தான் தன்னுடைய படத்திற்கு "கேப்டன் பிரபாகரன்" என்று பெயர் வைத்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இவர் வீடு, கார், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் போன்றவையெல்லாம் தாக்கப்பட்டன என அப்பொழுது கேள்விப் பட்டிருக்கின்றேன்.
அப்படி பட்டவர் மீது தினமலருக்கோ, "கேப்டன்" என்று இப்பொழுது புகழ்ந்து கொண்டிருக்கும் "சிலருக்கோ" எப்படி திடீர் அபிமானம் ஏற்பட்டது என்பது எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது. விஜயகாந்த், திமுக-பாமக ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பார் என இவை நம்புகின்றன. அப்படி வேட்டு வைத்தால் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தினமலர், குமுதம் போன்ற ஊடகங்கள் விஜயகாந்த்தை தூக்கிப் பிடிக்கின்றன. வைகோ திமுகவை பிளவு படுத்திய காலங்களில் இவ்வாறு தான் தினமலர் வைகோவிற்கு நிறைய விளம்பரம் கொடுத்தது. அதன் பிறகு திமுக பிளவு பட்டப் பிறகு வைகோ தினமலரில் இருந்து காணாமல் போய் விட்டார். விஜயகாந்த்திற்கும் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை தான் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் டாப் 10 வார இதழ்களில் குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் போன்றவை வந்து விடுகின்றன. ஆனால் எண்ணிக்கையில் தெரியும் ஆரோக்கியம், இந்தப் பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகளில் இல்லை. இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. ஆனால் இந்தியாவின் ஊடக உத்திகளை தன்னுடைய விற்பனை உத்திகளால் சன் குழுமம் மாற்றி எழுதி இருக்கிறது. சன் டிவி மீதான பொறாமையும் அதிகரித்து இருக்கிறது.
அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல. சன் டிவி தொடங்கப்பட்ட பொழுது அரசியல் செல்வாக்கு காரணமாக "ஜெஜெ டிவி" என்று ஒன்று தொடங்கப்பட்டதே ஞாபகமிருக்கிறதா ? அரசியல் செல்வாக்கு சரிந்தவுடன் அந்த தொலைக்காட்சியும் காணாமல் போய் பின் தவறுகளை திருத்திக் கொண்டு "ஜெயா டிவியாக" வந்தது. ஆனால் அது போன்ற எதுவும் சன் டிவிக்கு ஏற்பட்டதில்லை. சன் டிவி செய்யும் அனைத்தனையும் யாரும் சரி என்று சொல்ல முடியாது. சன் டிவி குறித்து என்னுடைய பலப் பதிவுகளில் நான் விமர்சித்து இருக்கிறேன். அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்.
இன்று தமிழகத்தில் ஒரு பெரும் ஊடக சக்தியாக, தங்களுடைய சாதூரியத்தால் மாறன் அண்ட் கோ உருவாகி இருக்கின்றனர். தினமலர், தினத்தந்தி என பலப் பத்திரிக்கைகள் பல காலமாக முயன்று உருவாக்கி இருந்த வாசகர் எண்ணிக்கையை தங்களுடைய புரொபஷனல் பிசினஸ் உத்திகளால் சில மாதங்களிலேயே உருவாக்கி விட்டனர். இன்று தினகரன் 10லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக உருவாகி இருக்கிறது. குங்குமம் குறுகிய காலத்தில் குமுதம், விகடன் என பாரம்பரிய பத்திரிக்கைகளின் விற்பனையை கடந்து விட்டது. குங்குமம் கையாண்ட முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற கலாநிதி மாறனின் வியபார நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அது ஒரு மகத்தான சாதனை என்றே நான் நினைக்கிறேன்.
நான் தினகரனை சிறிய வயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா "தினகரன் - தினத்தந்தி - தினமணி" ஏஜெண்டாக இருந்தார். தினகரன் ஏஜென்சியை என்னுடைய பெயரில் தான் என்னுடைய அப்பா நடத்தி வந்தார். தினகரனை நடத்த நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். சுமாராக 25பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டதாக நினைக்கிறேன். தினத்தந்தி சில நூறு பிரதிகள் விற்கப்பட்டன. ராணி, ராணி முத்து போன்றவையும் அதிக அளவில் விற்கப்பட்டன. தினமணிக்கென்று ஒரு தனி வாசகர் வட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தினகரனை அதிகமாக விற்கச் சொல்லி அதிக Pressure கூட கொடுக்கப்பட்டது. ஆனால் வாங்குவதற்கு தான் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து இதனை வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் மிகத் தீவிரமான திமுக அனுதாபிகள் தான். அதுவும் சலூன் கடைகள், டீக் கடை, டைலர் கடைகள் போன்ற இடங்களில் தான் தினகரன் வாங்கப்பட்டது. அவர்கள் நிச்சயம் திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். வீடுகளில் தினகரன் அதிகம் வாங்கப்பட வில்லை. வைகோ சார்பாக தினகரன் மாறிய காலங்களில் (கே.பி.கந்தசாமி இருந்த பொழுது) பலர் பத்திரிக்கையை நிறுத்தி விட்டார்கள்.
இந்த நிலையில் தினமலர் மிக Aggressiveக தன்னுடைய மார்க்கெட்டிங்கை செய்தது. தினத்தந்தி குழுமத்தின் பத்திரிக்கைளை நடத்துபவர்கள் தினமலரை நடத்தக் கூடாது என்பது எழுத்தில் இல்லாத உத்தரவு. தினத்தந்தியை நடத்துபவர்கள் அத்தனை பேரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே சாதி ரீதியாகவும் தினமலரை எதிரியாக பார்க்கும் நிலை தான் இருந்தது. ஆனால் தினமலர் எங்களை அணுகிய பொழுது நாங்கள் அதனை ஒப்புக் கொண்டோம். என்னுடைய அப்பா எதையும் பிசினஸ் நோக்குடன் அணுகும் குணம் உடையவர். மளிகைக் கடை நடத்துவதில் தொடங்கி நியுஸ் ஏஜென்சி வரை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமலரை தினத்தந்திக்கு தெரியாமல் தான் நடந்த வேண்டும் என்னும் நிலை. நாங்கள் தினமலரை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தினகரனுக்கு தெரிந்த நேரத்தில், தினகரனின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று கூறி எங்களிடம் இருந்து ஏஜென்சியை மாற்றி விட்டார்கள். மற்றொரு ஏஜென்சியிடம் மாறிய பொழுதும் தினகரன் பெரிதாக விற்க வில்லை. அந்தளவுக்கு தான் தினகரனின் தரம் இருந்தது. திமுக அனுதாபிகள் தவிர யாரும் அந்தப் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள். பெண்கள் ராணி, ராணிமுத்து போன்றவற்றை அதிகம் வாங்குவார்கள்.
தினமலரை நாங்கள் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தான் நடத்தினோம். ஆனாலும் அந்தப் பத்திரிக்கையை மார்க்கெட்டிங் செய்வதில் தொடங்கி, ஏஜெண்டுகளுக்கு சலுகைகள், ஊக்குவிப்பு செய்வது வரை தினமலர் மிகவும் புரொபஷனலாக இதனை எதிர்கொண்டது. தினமலரின் விற்பனையை உயர்த்துவதற்காக தினமலர் விற்பனையாளர்கள் எங்களுடன் எங்கள் பகுதியில் சந்தா உயர்த்துவதற்கும் முயற்சிகள், ஆலோசனைகள் வழங்கினர்கள். இதனால் தினமலரை சிறிது சிறிதாக தினதந்திக்கு நிகராக எங்களால் விற்பனையில் உயர்த்த முடிந்தது.
தினமலர், தினத்தந்தி இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே நிறைய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். தினத்தந்தியின் அலுவலகத்தில் இருந்து சில நேரங்களில் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் வியபாரத்தை வளர்க்கும் எந்த நோக்கமும் இல்லாமல் ஏதோ அரசு Inspection ஏஜெண்ட் போல நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உணவு போன்றவையும் நாம் வழங்க வேண்டும் (லஞ்சம்... கூட உண்டு). சில பரபரப்பான சமயங்களில் எங்களைக் கேட்காமலேயே நிறைய பிரதிகளை எங்களுக்கு தள்ளி விட்டு விடுவார்கள். இதனை விற்றாக வேண்டும் என உத்தரவு கூட வரும். பல நேரங்களில் இவ்வளவு பிரதிகளை விற்க முடியாது. விற்காத பிரதிகளை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் வற்புறுத்தினால் நஷ்டத்தில் உங்களுக்கு கொஞ்சம், எங்களுக்கு கொஞ்சம் என்று கூறுவார்கள். கொஞ்சம் கூட Business ethics என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் தினமலரில் இவ்வாறு இருக்காது. அதனாலேயே தினமலர் ஏஜெண்ட்கள் மத்தியில் அபிமானம் பெற்றது. அதன் விற்பனையை உயர்த்துவதற்கும் முயற்சி எடுத்தனர். இதைத் தவிர தினமலர், உள்ளூர் செய்திகள், இலவச இணைப்புகள் போன்றவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. தினத்தந்தி இதனை காப்பி அடித்ததே தவிர சுயமாக எதனையும் செய்ததில்லை. ஒரு நேரத்தில் சுமார் 500 பிரதிகளுக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ராணி வார இதழ் சுமார் 100பிரதிகளுக்கும் குறைவாக வந்து விட்டது. அதனை மாற்ற எந்த முயற்சியையும் தினத்தந்தி நிர்வாகிகள் எடுக்க வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் தினமலர் மிக வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து கொண்டிருந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் எண்ணிக்கை பிற நாட்களை விட அதிகமாக இருக்கும். அந் நாட்களில் வெளியாகும் இலவச இணைப்பான சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இதற்கு காரணம். தினத்தந்தியும் பிறகு இதனை பின்பற்ற தொடங்கியது.
சரியான மாற்று பத்திரிக்கைகள் இல்லாமையாலேயே தினத்தந்தி இன்னமும் தாக்கு பிடித்து கொண்டு இருந்தது என்று சொல்லலாம். அதுவும் தவிர தினமலர் தன்னுடைய செய்திகளில் சார்பு நிலையை அதிகம் பின்பற்றியதால் எல்லா வாசகர்களையும் அது சென்றடையவில்லை. தன்னுடைய சார்பு நிலைகளை ஒரம் கட்டி வைத்து விட்டு இதனை ஒரு இதழியலாக தினமலர் அணுகியிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்க முடியும். தினத்தந்தியை விட விற்பனையை அதிகரித்திருக்க முடியும். அதுவும் தவிர ஆரம்ப காலங்களில் சந்தா பிடிப்பதில் ஏஜெண்களுடன் களத்தில் இறங்கி உத்துழைத்த தினமலர் பின் அதனையும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தினமலரின் உத்திகள் மாறாத வரை அதன் எண்ணிக்கை இதற்கு மேலும் உயரும் என்று நான் நினைக்கவில்லை.
தினத்தந்தி வளர்ச்சியை அதிகரிக்க தினத்தந்தி குழுமத்தினர் சரியான உத்திகளை கொண்டிருக்கவில்லை. பாரம்பரியமாக இருக்கும் பத்திரிக்கை என்பதாலும், தினமலரை வாங்கக் கூடாது என்று நினைப்பவர்களும் தான் தொடர்ந்து தினத்தந்தியை வாங்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கைகளை விட தன்னுடைய சமூகம், அரசியல் போன்றவற்றில் சிவந்தி ஆதித்தன் கவனம் செலுத்த தொடங்கினார். "சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்" என்ற பெயரில் நெல்லையில் சிவந்தி ஆதித்தன் ஒரு அமைப்பை தொடங்கினார். நல்ல கூட்டமும் அந்த தொடக்க விழாவிற்கு வந்திருந்தது. அவர் நாடார் சமூக இயக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அவர் அதனைச் செய்ய வில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு இருந்தது. அவர் நாடார் சமூகம் மத்தியில் மதிக்கப்படும் பிரமுகர். தன்னை அந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள முனைந்தார் என நினைக்கிறேன். இப்பொழுது ஆதித்தனாரின் குடும்பத்தைச் சார்ந்த சரத்குமாரை திமுகவில் இருந்து பிரித்து இருப்பதும் சிவந்தி ஆதித்தன் தான் என்பது என் சந்தேகம். இதற்கு காரணம் தினகரனை மாறன் கைப்பற்றிய எரிச்சல் + தன்னுடைய தினத்தந்தி மார்க்கெட்டை தினகரன் கைப்பற்றும் என்ற அச்சம் + நாடார் சமூகம் சார்பில் தன் குடும்பத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவரை உருவாக்கும் அவரது எண்ணம். அதற்கு தன்னை விட சரத்குமார் சரியான நபர் என்று அவர் முடிவு செய்திருக்க கூடும். சரத்குமாரும் வழக்கம் போல "கலைஞர் குடும்பம்" மீது பழியைப் போட்டு திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். வைகோ ஆரம்பித்து வைத்த குடும்பம் மீதான பழி போடும் பழக்கம் திமுகவில் இருந்து வெளியேற அனைவரும் பயன்படுத்தும் சாக்காக மாறியிருக்கிறது. கலைஞர் குடும்பத்தின் தயவால் தான் ராதிகா "ராடன்" என்ற நிறுவனத்தையே நடத்த முடிந்தது என்பது இவருக்கு மறந்து விட்டது போலும்
கே.பி.கந்தசாமிக்கு பிறகு தினகரனின் நிர்வாகம் அவரது மகன் குமரன் வசம் வந்தது. இவர் தினத்தந்தி குழுமத்தின் குடும்பத்தினர் தான். கே.பி.கந்தசாமி அதித்தனாரின் மருமகன். அடுத்த தலைமுறையில் கூட திருமணம் மூலம் இவர்களிடையே நெருங்கிய உறவு உள்ளது. இவர்கள் இந்தப் பத்திரிக்கையை நடத்த சரியான உத்தியை வகுக்காமல் மறுபடியும் ஒரு தவறைச் செய்தனர். வைகோ ஆதரவு நிலையில் இருந்து மறுபடியும் திமுக ஆதரவு நிலைக்கு பத்திரிக்கைச் சென்றது. இதனால் தங்களுடைய பழைய வாசகர் வட்டத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்தனர் என்பதை தவிர பெரிய நன்மை விளையவில்லை. கே.பி.கந்தசாமியின் மகன் குமரன் தினகரன் பத்திரிக்கையை மாற்றுவார் என்றே நான் நினைத்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கலாநிதி மாறனிடம் தங்கள் பத்திரிக்கையை விற்று விட்டார்.
நிர்வாக அமைப்புடன், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தினசரியாக சுமார் 3லட்சம் பிரதிகளை விற்றுக் கொண்டிருந்த தினகரனை Acquisition மூலம் தனக்கு உரிமையாக்கிய கலாநிதி மாறன் தினகரனில் ஏற்படுத்திய மாற்றம் பிரமாண்டமானது. நான் இன்னும் இதன் அச்சுப் பிரதியை பார்க்க வில்லை. ஆனால் இதன் இ-பேப்பர் பார்க்கும் பொழுது தினகரனின் லேஅவுட் வேறு எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இல்லை என்று சொல்லலாம். இந்து வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆலோசகர்களை வரவழைத்து பத்திரிக்கையின் வடிவமைப்பை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, "ஆதி காலத்தில்" நாம் எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப் பத்திரிக்கைகளை பார்த்து வந்திருக்கிறோம். பெரிய வடிவமைப்பு மாற்றங்களை இந்தப் பத்திரிக்கைகள் செய்ததே இல்லை. ஆனால் தினகரன் அதிலும் முயற்சி எடுத்திருக்கிறது. வண்ண மயமான வடிவமைப்பு, செய்திகள்-படங்கள் போன்றவற்றை தொகுத்திருக்கும் முறை போன்றவை வழக்கமான தமிழ் பத்திரிக்கைகளில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவமைப்புடன் இருக்கிறது.
பத்திரிக்கைகளின் விலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மாத சந்தா தொகை படிப்படியாக உயர்ந்து செல்ல, விற்பனை குறைந்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதனையெல்லாம் பத்திரிக்கைகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காகிதம் விலை அதிகமானால் பத்திரிக்கையின் விலை அதிகமாக்கப்பட வேண்டும் என்ற நியதியை எந்தப் பத்திரிக்கையும் மாற்றியதில்லை. ஆனால் தினகரனின் அதிரடி விலைக் குறைப்பு பலரை பத்திரிக்கை வாங்க தூண்டியிருக்கிறது என நான் அறிகிறேன். பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனாலும் "ஓசி" பத்திரிக்கை தான் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தினகரனின் விலை 1ரூபாய் என்பது பலரையும் தினகரன் வாங்க தூண்டியிருக்கிறது.
இது எல்லாவற்றையும் விட தினகரனின் விற்பனை பெருக முக்கிய காரணம் - சன் டிவி.
சன் டிவி என்ற பவர்புல் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கலாநிதி மாறனால் Consumer சார்ந்த எந்தத் துறையிலும் எளிதாக இறங்கி வெற்றி பெற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய வீச்சு அவ்வளவு பலமாக இருக்கிறது. பத்திரிக்கையின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எடுத்த Traditional வகையான முயற்சிகளை நோக்கும் பொழுது, தினகரனின் 10லட்சம் பிரதிகள் ஒரு இமாலய சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில மாதங்களில் சுமார் 7லட்சம் பிரதிகள் அதிகமாகி இருக்கிறது. இதற்கு சன் டிவி, கே டிவி மற்றும் சூரியன் எப்.எம். மூலம் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட விளம்பரமும் ஒரு காரணம. இந்த வசதி பிற தினசரிகளுக்கு இல்லை. சந்தா உயர்த்த வேண்டுமானால் ஏஜெண்ட்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உத்தியாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அதனை தினகரன் மாற்றி எழுதியிருக்கிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளாமையும், தினகரன் அதனை மாற்றியதும் தான் தினகரனின் வெற்றிக்கும் பிற தினசரிகளின் தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.
தினகரன் புதிய வாசகர்களை கவர்ந்திருப்பது மட்டுமல்லாமல் பிற பத்திரிக்கைகளின் விற்பனையும் கண்டிப்பாக குறைத்திருக்கும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கையின் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய லாபம் குறையும் பொழுது, வியபாரத்தில் திடீர் சவால்கள் எழும் பொழுது அதற்கு காரணமானவர்களை நோக்கி கோபம் திரும்புவது இயற்கை தான்.
தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு நிலையுடன் இந்த புதிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள, இன்று தினமலர் மிக மோசமான ஊடக வன்முறையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக நாடார் சமூகத்தை திருப்பும் முயற்சியை சிவந்தி ஆதித்தன் மேற்கொண்டிருக்கிறார். சரத்குமாரை திமுகவில் இருந்து விலக்குவது அதன் முதல் கட்டம். இது நாடார் சமூக ஓட்டுக்களை அதிமுகவிற்கு ஆதரவாக கொண்டு வரும் என்பது அவரது கணக்கு. ஒரு காலத்தில் தினமலரை கண்டாலே எரிச்சல் அடையும் தினத்தந்தி குழுமம் கலாநிதி மாறனை எதிர்க்க கூட்டணி அமைக்காமலேயே தினமலருடன் சேர்ந்து கொண்டுள்ளது.
பத்திரிக்கையின் பிரதிகளை விற்க இதற்கு மேல் முடியாது என தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முடிவு செய்திருந்தன. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை சரியாக கண்டு கொண்ட கலாநிதி மாறனின் வியபார உத்திகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அது போலவே தான் குங்குமத்தின் வளர்ச்சியும். குமுதம், ஆனந்த விகடன் என தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப பத்திரிக்கைகளின் ஆதிக்கத்தை தன்னுடைய "புதுசு கண்ணா புதுசு" விளம்பரம் மூலமே கலாநிதி மாறன் மாற்றிக் காட்டினார். இன்று குங்குமம் தமிழகத்தில் சுமார் 55லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1, இந்தியாவிலேயே நம்பர் 2 என்பது குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை.
இதற்கு காரணம் தினகரன், குங்குமம் போன்றவற்றின் தரம் என்பதை விட சன் டிவி விளம்பரங்கள் தான் என்பது மாறனுக்கு கடும் எதிர்ப்பை அவரின் போட்டி பத்திரிக்கை குழுமங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இப்பொழுது சன் டிவி மீதும், திமுக மீதும் திரும்பி இருக்கிறது. குடும்ப அரசியல் மறுபடியும் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. இது வரை திமுகவிற்கு பலமாக இருந்த சன் டிவி இப்பொழுது இந்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தொடுக்க நிறையவே சிரமப்படுகிறது.
சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிற ஊடகங்கள் எதிர்த்தாக்குதலை தொடுத்து இருக்கின்றன. செயற்கையாக அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் எழுப்பி கொண்டிருக்கின்றன. நான் அதிமுக தேர்தலில் தோற்று விடும் என்று சொல்லவில்லை. போட்டி கடுமையாகவே இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக கருத்துக் கணிப்பை அணுகிய IBN-HINDU கூட குழப்பத்துடன் தான் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை எப்படி எழுப்புகின்றன ?
விஜயகாந்த்திற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஆதரவையும் இங்கு கவனிக்க வேண்டும். தினமலர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அதில் ஒரு "லாஜிக்" இருக்கிறது. ரஜினிகாந்த் கடவுள் பக்தர். இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் என்பதால் இவருக்கு கடந்த காலத்தில் தினமலர் கொடுத்த ஆதரவினை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் விஜயகாந்த்தை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ?
விஜயகாந்த் கொள்கைகளிலோ, பிற கட்சிகளைக் காட்டிலும் தன்னிடம் ஒரு தனித் தன்மை இருப்பதாகவோ இது வரையில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பிற கட்சிகள் செய்யும் அனைத்து ஸ்டண்களையும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே செய்து இருக்கிறார். என்றாலும் "தமில்", "தமில்" என்று முழுங்குபவர். அரசியலில் அவர் நுழைவது என்ற முடிவினை எடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே "விடுதலைப் புலிகள்" மற்றும் தமிழீழத்தின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் நடிகர்களில் இவர் தான் நிதி வழங்குதல், நிதி திரட்டுதல் போன்றவற்றைச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இவர் கொண்ட அபிமானத்தால் தான் தன்னுடைய படத்திற்கு "கேப்டன் பிரபாகரன்" என்று பெயர் வைத்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இவர் வீடு, கார், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் போன்றவையெல்லாம் தாக்கப்பட்டன என அப்பொழுது கேள்விப் பட்டிருக்கின்றேன்.
அப்படி பட்டவர் மீது தினமலருக்கோ, "கேப்டன்" என்று இப்பொழுது புகழ்ந்து கொண்டிருக்கும் "சிலருக்கோ" எப்படி திடீர் அபிமானம் ஏற்பட்டது என்பது எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது. விஜயகாந்த், திமுக-பாமக ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பார் என இவை நம்புகின்றன. அப்படி வேட்டு வைத்தால் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தினமலர், குமுதம் போன்ற ஊடகங்கள் விஜயகாந்த்தை தூக்கிப் பிடிக்கின்றன. வைகோ திமுகவை பிளவு படுத்திய காலங்களில் இவ்வாறு தான் தினமலர் வைகோவிற்கு நிறைய விளம்பரம் கொடுத்தது. அதன் பிறகு திமுக பிளவு பட்டப் பிறகு வைகோ தினமலரில் இருந்து காணாமல் போய் விட்டார். விஜயகாந்த்திற்கும் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை தான் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் டாப் 10 வார இதழ்களில் குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் போன்றவை வந்து விடுகின்றன. ஆனால் எண்ணிக்கையில் தெரியும் ஆரோக்கியம், இந்தப் பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகளில் இல்லை. இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. ஆனால் இந்தியாவின் ஊடக உத்திகளை தன்னுடைய விற்பனை உத்திகளால் சன் குழுமம் மாற்றி எழுதி இருக்கிறது. சன் டிவி மீதான பொறாமையும் அதிகரித்து இருக்கிறது.
அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல. சன் டிவி தொடங்கப்பட்ட பொழுது அரசியல் செல்வாக்கு காரணமாக "ஜெஜெ டிவி" என்று ஒன்று தொடங்கப்பட்டதே ஞாபகமிருக்கிறதா ? அரசியல் செல்வாக்கு சரிந்தவுடன் அந்த தொலைக்காட்சியும் காணாமல் போய் பின் தவறுகளை திருத்திக் கொண்டு "ஜெயா டிவியாக" வந்தது. ஆனால் அது போன்ற எதுவும் சன் டிவிக்கு ஏற்பட்டதில்லை. சன் டிவி செய்யும் அனைத்தனையும் யாரும் சரி என்று சொல்ல முடியாது. சன் டிவி குறித்து என்னுடைய பலப் பதிவுகளில் நான் விமர்சித்து இருக்கிறேன். அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்.