கம்யுனிச காதல் - 1
இந்தியாவில் கம்யுனிசம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அல்ல. ஒரு மாநிலத்தின் பெயர் தான் நம் நினைவுக்கு வரும். அந்த மாநிலம் தான் மேற்கு வங்காளம். இங்கு ஆட்சி மாற்றம் நிகழந்தால் அது உலகெங்கிலும் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்படும். ஆனால் ஏனோ அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இம் முறையும் ஆட்சி மாற்றம் நிகழப்போவதில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. புத்ததேவ் பட்டாச்சாரியாவின் தலைமையில், இழந்திருந்த தன் வாக்கு வங்கியை இடதுசாரிகள் மீண்டும் பலப்படுத்திக் கொண்டுள்ளனர் என CNN-IBN கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 30வருடங்களாக இடதுசாரிகளின் ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. உலகில் ஜனநாயக முறைப் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையில் 30 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஒரே கம்யுனிச அரசாங்கம் மேற்கு வங்காளம் தான். இது உலகெங்கிலும் விமர்சனப் பார்வையுடனும், ஆச்சரியத்துடனுமே பார்க்கப்பட்டுள்ளது. எனக்கும் இந்த ஆச்சரியம் உண்டு. கம்யுனிசத்திற்கும் மேற்கு வங்காளத்திற்கும் அப்படி என்ன காதல் ?
இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் நேரத்தில் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களாக மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்படும் கம்யுனிஸ்ட்களை நான் நினைக்கிறேன். அந்த வகையிலும் மேற்கு வங்காளம் ஏன் தொடர்ந்து கம்யுனிச மாநிலமாக இருந்து வருகிறது என்ற எனது ஆர்வத்தின் விளைவும் தான் இந்தப் பதிவு. வங்காளிகள் பொதுவாக இந்தியாவில் படித்தவர்களாகவும், அறிவுஞானம் உள்ளவர்களாகவும், தங்கள் மொழி மீது அதீத பற்று கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். அது உண்மையும் கூட. அப்படிப்பட்ட படித்தவர்கள் இருக்கும் ஒரு மாநிலம் இந்த நவீன பொருளாதார யுகத்திலும் ஏன் கம்யுனிசத்தை பின்பற்ற வேண்டும் ?

கம்யுனிசம் என்பது ஒரு theoretical சித்தாந்தம். இந்த "theoretical" சித்தாந்தம் இது வரையில் எந்த நாட்டிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. லெனினின் ரஷ்ய புரட்சியால் அமைந்த அரசாங்கம் கூட கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை. ஆனாலும் கம்யுனிசம் மீது உலகெங்கும் பல நாடுகள் கொண்ட காதல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சித்தாந்தம், யதார்த்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத நிலையை என்றைக்கோ எட்டி விட்டது. ரஷ்யாவை லெனின் உருவாக்கிய பொழுது கூட கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளை முழுமையாக லெனினால் கைக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளில் இருந்து "நழுவி" அவர் நிலைநிறுத்திய கொள்கைகள் தான் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. அது போலவே கம்யுனிசத்தில் பல கூறுகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின. பல புதிய பெயர்களும் அதற்குச் சூட்டப்பட்டன. லியான் ட்ராட்ஸ்கி, மாவோ போன்றவர்களின் சிந்தனைகள் கம்யுனிசத்தின் பல்வேறு வடிவங்களாக தோன்றின. ஆனால் கம்யுனிச சிந்தனையையே மாற்றி எழுதிய ஸ்டாலினின் "ஸ்டாலினிசம்", கம்யுனிசமாக ஒப்புக்கொள்ளப்பட்டதில்லை. (ஸ்டாலினிசம், லெனினிசம் போன்றவையெல்லாம் அவர்கள் எழுதி வைத்த சிந்தனைகள் அல்ல. அவர்கள் செயல்பட்ட விதம் தான் பின்னர் அவ்வாறு அழைக்கப்பட்டது). ஆனால் அந்த "ஸ்டாலினிசம்" தான் உலகெங்கிலும் கம்யுனிசத்திற்கு கவர்ச்சியையும் கொடுத்தது. அந்த கவர்ச்சியால் இந்தியா உட்பட பல காலனியாதிக்க நாடுகள் கம்யுனிசம் தான் நாடு முன்னேற அனைத்து மக்களும் நலம் பெற சிறந்த வழி என முடிவு செய்தன. பல நாடுகள் கம்யுனிசத்தை பின்பற்ற தொடங்கின.
இந்தியா முழுமையான கம்யுனிசத்தை கைக்கொள்ளவில்லை. இதற்கு ஸ்டாலினின் சர்வாதிகாரம் ஒரு முக்கிய காரணம். இந்தியா சோஷலிச முறைப்படி செல்ல வேண்டிய அதே நேரத்தில் முழு கம்யுனிஸ்ட் நாடாகவும் மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் பலருக்கு இருந்தது. குறிப்பாக நேருவுக்கு இருந்தது. அதன் விளைவு தான் ஒரு கதம்பமான அமைப்பாக, ஆனால் சோஷலிசம் மேல் கொண்ட அதீத காதலுடன் இந்திய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்தது.
கம்யுனிசம் சிதைந்து போனதற்கு கம்யுனிசம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுப்பியிருந்த பிம்பம் தான் முக்கிய காரணம். ஸ்டாலினின் சர்வாதிகார முறைகளை பல நாடுகளால் பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே கம்யுனிசம் மீதான கவர்ச்சி படிப்படியாக குறைந்து விட்டது. தனி மனித சுதந்திரம் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்த நேருவால் ஸ்டாலினின் சர்வாதிகார முறையை பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே ஸ்டாலின் பெற்ற வெற்றியை நேருவால் பெற முடியவில்லை.
மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, மாவோ என பல்வேறு பரிமாணங்களில் வர்க்க பேதமில்லா சமுதாயத்தை "உலகெங்கிலும்" அமைக்க உருவாகிய கம்யுனிசம் தான் இன்று குறுகிய பிராந்திய உணர்வுகளுடன் பல நாடுகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது. வர்க்க பேதமில்லா சமுதாயம் அமைக்க குரல் கொடுத்த மாவோ தான் திபெத் மீது தாக்குதல் தொடுத்து திபெத்தை சீனாவுடன் இணைத்தார். மனித உரிமை மீறல்களும் அங்கு அரங்கேறின. மக்களின் விடுதலை பற்றி பேசும் சில கம்யுனிச குழுக்கள் தான் திபெத், ஈழம் போன்ற மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கின்றன. இனவெறி பிடித்த சிங்கள ஜேவிபியுடன் கம்யுனிச ரீதியில் உறவாட முடிகிற இந்திய மார்க்ஸ்சிட்ஸ்களால் அதே கம்யுனிசத்தை தங்களுடைய சித்தாந்தமாக கொண்டிருக்கிற புலிகளுடன் உறவாட முடிவதில்லை என்பதும் ஆச்சரியம் தான். கம்யுனிச நாடு என்று கூறிக்கொள்ளும் சீனா தான் இன்று உலகில் முதலாளித்துவ ரீதியிலான பொருளாதார முறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை "தில்லியில்" எதிர்க்கும் மார்க்ஸ்சிஸ்ட்கள் தான் "கல்கத்தாவில்" அந்நிய முதலீட்டை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி பலவிதங்களில் இன்று கம்யுனிசம் சிதைந்து, உருமாறி போய் விட்டது. கம்யுனிசத்தை பின்பற்றக் கூடிய நாடுகள் கூட தனியார் பொருளாதார மயமாக்கம் தொடங்கி முதலாளித்துவ ஆதரவு நிலை வரை தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. அப்படி மாற்றிக் கொண்டதன் காரணமாகவே சரிந்து கொண்டிருந்த கம்யுனிச செல்வாக்கினை மேற்கு வங்காளத்தில் மீண்டும் வலுவாக்க புத்ததேவ் பட்டாச்சாரியாவால் முடிந்திருக்கிறது.
இன்று "மே தினம்" என்பதால் மற்றொரு முறை முதலாளித்துவத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு கார்ப்ரேட் நிர்வாக முறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இன்னும் "சுரண்டும் முதலாளித்துவம்" என்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா ?
இந்தியா, இலங்கை, நேபாளம் என தொடங்கி பல காலனி ஆதிக்க நாடுகளில் உள்ள பல இயக்கங்கள் கம்யுனிசம் மீது கொண்ட காதல் ஆச்சரியமானது அல்ல. காலனி ஆதிக்கத்தில் நிலவிய வறுமை, ஏற்றத்தாழ்வுகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த சாதி ரீதியான அடக்குமுறை இவற்றால் "சமதர்ம" சமுதாயத்தை அமைக்க கம்யுனிசம் ஒரு சரியான வழியாக பலருக்கு தோன்றியது. நில உரிமை இல்லாத பலருக்கு பொதுவுடமை சிறந்த சித்தாந்தமாக தோன்றியது. ஆனால் ரஷ்யாவிலேயே இதனை நிறைவேற்ற முடியவில்லை. ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back). அதன் பிறகு ஸ்டாலின் கொண்டு வந்த முறைகள் வெற்றி பெற்றன என்றாலும், அது கம்யுனிசத்தைச் சார்ந்தது அல்ல என்று தான் லியான் ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினுக்கு பிறகு வந்த ரஷ்ய தலைவர்கள் வாதிட்டனர்.
ஸ்டாலினின் வெற்றியை தான் ரஷ்யாவில் கம்யுனிசத்தின் வெற்றியாக கூற முடியும் என்னும் பொழுது, ரஷ்யா எப்படி கம்யுனிச சிந்தனைகளால் முன்னேறியது என்று கூற முடியும் ?
(மேற்கு வங்காளத்தில் ஏன் கம்யுனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி கொண்டு இருக்கிறார்கள் என எழுத தொடங்கினேன். நீண்ட நாட்களாக கம்யுனிசம் குறித்த எழுத நினைத்த விடயங்களும் சேர்ந்து கொண்டன. அடுத்தப் பதிவில் அது குறித்து எழுதுகிறேன்)
என்னுடைய "பில்லியன் டாலர் கனவுகள்" பதிவில் லெனின், ஸ்டாலின் குறித்து எழுதிய சில பதிவுகள்
http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=2
http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=3
இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் நேரத்தில் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களாக மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்படும் கம்யுனிஸ்ட்களை நான் நினைக்கிறேன். அந்த வகையிலும் மேற்கு வங்காளம் ஏன் தொடர்ந்து கம்யுனிச மாநிலமாக இருந்து வருகிறது என்ற எனது ஆர்வத்தின் விளைவும் தான் இந்தப் பதிவு. வங்காளிகள் பொதுவாக இந்தியாவில் படித்தவர்களாகவும், அறிவுஞானம் உள்ளவர்களாகவும், தங்கள் மொழி மீது அதீத பற்று கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். அது உண்மையும் கூட. அப்படிப்பட்ட படித்தவர்கள் இருக்கும் ஒரு மாநிலம் இந்த நவீன பொருளாதார யுகத்திலும் ஏன் கம்யுனிசத்தை பின்பற்ற வேண்டும் ?

கம்யுனிசம் என்பது ஒரு theoretical சித்தாந்தம். இந்த "theoretical" சித்தாந்தம் இது வரையில் எந்த நாட்டிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. லெனினின் ரஷ்ய புரட்சியால் அமைந்த அரசாங்கம் கூட கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை. ஆனாலும் கம்யுனிசம் மீது உலகெங்கும் பல நாடுகள் கொண்ட காதல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சித்தாந்தம், யதார்த்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத நிலையை என்றைக்கோ எட்டி விட்டது. ரஷ்யாவை லெனின் உருவாக்கிய பொழுது கூட கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளை முழுமையாக லெனினால் கைக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளில் இருந்து "நழுவி" அவர் நிலைநிறுத்திய கொள்கைகள் தான் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. அது போலவே கம்யுனிசத்தில் பல கூறுகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின. பல புதிய பெயர்களும் அதற்குச் சூட்டப்பட்டன. லியான் ட்ராட்ஸ்கி, மாவோ போன்றவர்களின் சிந்தனைகள் கம்யுனிசத்தின் பல்வேறு வடிவங்களாக தோன்றின. ஆனால் கம்யுனிச சிந்தனையையே மாற்றி எழுதிய ஸ்டாலினின் "ஸ்டாலினிசம்", கம்யுனிசமாக ஒப்புக்கொள்ளப்பட்டதில்லை. (ஸ்டாலினிசம், லெனினிசம் போன்றவையெல்லாம் அவர்கள் எழுதி வைத்த சிந்தனைகள் அல்ல. அவர்கள் செயல்பட்ட விதம் தான் பின்னர் அவ்வாறு அழைக்கப்பட்டது). ஆனால் அந்த "ஸ்டாலினிசம்" தான் உலகெங்கிலும் கம்யுனிசத்திற்கு கவர்ச்சியையும் கொடுத்தது. அந்த கவர்ச்சியால் இந்தியா உட்பட பல காலனியாதிக்க நாடுகள் கம்யுனிசம் தான் நாடு முன்னேற அனைத்து மக்களும் நலம் பெற சிறந்த வழி என முடிவு செய்தன. பல நாடுகள் கம்யுனிசத்தை பின்பற்ற தொடங்கின.
இந்தியா முழுமையான கம்யுனிசத்தை கைக்கொள்ளவில்லை. இதற்கு ஸ்டாலினின் சர்வாதிகாரம் ஒரு முக்கிய காரணம். இந்தியா சோஷலிச முறைப்படி செல்ல வேண்டிய அதே நேரத்தில் முழு கம்யுனிஸ்ட் நாடாகவும் மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் பலருக்கு இருந்தது. குறிப்பாக நேருவுக்கு இருந்தது. அதன் விளைவு தான் ஒரு கதம்பமான அமைப்பாக, ஆனால் சோஷலிசம் மேல் கொண்ட அதீத காதலுடன் இந்திய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்தது.
கம்யுனிசம் சிதைந்து போனதற்கு கம்யுனிசம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுப்பியிருந்த பிம்பம் தான் முக்கிய காரணம். ஸ்டாலினின் சர்வாதிகார முறைகளை பல நாடுகளால் பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே கம்யுனிசம் மீதான கவர்ச்சி படிப்படியாக குறைந்து விட்டது. தனி மனித சுதந்திரம் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்த நேருவால் ஸ்டாலினின் சர்வாதிகார முறையை பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே ஸ்டாலின் பெற்ற வெற்றியை நேருவால் பெற முடியவில்லை.
மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, மாவோ என பல்வேறு பரிமாணங்களில் வர்க்க பேதமில்லா சமுதாயத்தை "உலகெங்கிலும்" அமைக்க உருவாகிய கம்யுனிசம் தான் இன்று குறுகிய பிராந்திய உணர்வுகளுடன் பல நாடுகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது. வர்க்க பேதமில்லா சமுதாயம் அமைக்க குரல் கொடுத்த மாவோ தான் திபெத் மீது தாக்குதல் தொடுத்து திபெத்தை சீனாவுடன் இணைத்தார். மனித உரிமை மீறல்களும் அங்கு அரங்கேறின. மக்களின் விடுதலை பற்றி பேசும் சில கம்யுனிச குழுக்கள் தான் திபெத், ஈழம் போன்ற மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கின்றன. இனவெறி பிடித்த சிங்கள ஜேவிபியுடன் கம்யுனிச ரீதியில் உறவாட முடிகிற இந்திய மார்க்ஸ்சிட்ஸ்களால் அதே கம்யுனிசத்தை தங்களுடைய சித்தாந்தமாக கொண்டிருக்கிற புலிகளுடன் உறவாட முடிவதில்லை என்பதும் ஆச்சரியம் தான். கம்யுனிச நாடு என்று கூறிக்கொள்ளும் சீனா தான் இன்று உலகில் முதலாளித்துவ ரீதியிலான பொருளாதார முறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை "தில்லியில்" எதிர்க்கும் மார்க்ஸ்சிஸ்ட்கள் தான் "கல்கத்தாவில்" அந்நிய முதலீட்டை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி பலவிதங்களில் இன்று கம்யுனிசம் சிதைந்து, உருமாறி போய் விட்டது. கம்யுனிசத்தை பின்பற்றக் கூடிய நாடுகள் கூட தனியார் பொருளாதார மயமாக்கம் தொடங்கி முதலாளித்துவ ஆதரவு நிலை வரை தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. அப்படி மாற்றிக் கொண்டதன் காரணமாகவே சரிந்து கொண்டிருந்த கம்யுனிச செல்வாக்கினை மேற்கு வங்காளத்தில் மீண்டும் வலுவாக்க புத்ததேவ் பட்டாச்சாரியாவால் முடிந்திருக்கிறது.
இன்று "மே தினம்" என்பதால் மற்றொரு முறை முதலாளித்துவத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு கார்ப்ரேட் நிர்வாக முறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இன்னும் "சுரண்டும் முதலாளித்துவம்" என்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா ?
இந்தியா, இலங்கை, நேபாளம் என தொடங்கி பல காலனி ஆதிக்க நாடுகளில் உள்ள பல இயக்கங்கள் கம்யுனிசம் மீது கொண்ட காதல் ஆச்சரியமானது அல்ல. காலனி ஆதிக்கத்தில் நிலவிய வறுமை, ஏற்றத்தாழ்வுகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த சாதி ரீதியான அடக்குமுறை இவற்றால் "சமதர்ம" சமுதாயத்தை அமைக்க கம்யுனிசம் ஒரு சரியான வழியாக பலருக்கு தோன்றியது. நில உரிமை இல்லாத பலருக்கு பொதுவுடமை சிறந்த சித்தாந்தமாக தோன்றியது. ஆனால் ரஷ்யாவிலேயே இதனை நிறைவேற்ற முடியவில்லை. ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back). அதன் பிறகு ஸ்டாலின் கொண்டு வந்த முறைகள் வெற்றி பெற்றன என்றாலும், அது கம்யுனிசத்தைச் சார்ந்தது அல்ல என்று தான் லியான் ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினுக்கு பிறகு வந்த ரஷ்ய தலைவர்கள் வாதிட்டனர்.
ஸ்டாலினின் வெற்றியை தான் ரஷ்யாவில் கம்யுனிசத்தின் வெற்றியாக கூற முடியும் என்னும் பொழுது, ரஷ்யா எப்படி கம்யுனிச சிந்தனைகளால் முன்னேறியது என்று கூற முடியும் ?
(மேற்கு வங்காளத்தில் ஏன் கம்யுனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி கொண்டு இருக்கிறார்கள் என எழுத தொடங்கினேன். நீண்ட நாட்களாக கம்யுனிசம் குறித்த எழுத நினைத்த விடயங்களும் சேர்ந்து கொண்டன. அடுத்தப் பதிவில் அது குறித்து எழுதுகிறேன்)
என்னுடைய "பில்லியன் டாலர் கனவுகள்" பதிவில் லெனின், ஸ்டாலின் குறித்து எழுதிய சில பதிவுகள்
http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=2
http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=3