மனிதாபிமான அரசியல்
ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது.
அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்கு கொல்லப்படும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் உயிர்களை விட மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே நான் கருதுகிறேன். இத்தகைய செயல்களை புலிகள் செய்தாலும், வேறு எந்த அமைப்பு செய்தாலும் அது படு பயங்கரமான "பயங்கரவாத", "மனித உரிமை" மீறலாகவே நான் பார்க்கிறேன்.
அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.
இதனைச் செய்யும் இனவாதிகளின் வெறியை விட அதனை மூடிமறைக்கும் ஊடகங்களை அதனை விட வெறிப் பிடித்த இனவெறியர்களாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட "தனி செய்தியாளரை" கொண்டிருக்கும் ஹிந்து இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது ஹிந்து எந்தளவுக்கு ஒரு "இனவெறிப்" பத்திரிக்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. புலிகள் ஆளுமையில் இருக்கும் பகுதிகள் மீது இலங்கை அரசு குண்டு வீசிய பொழுது எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டதையும், இடம்பெயர நேரிட்டதையும் குறித்து BBC போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலைமையில், Sri Lanka defends air strikes என்று அந்த குண்டு வீசுதலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஹிந்து, தற்பொழுது எந்தச் செய்தியையும் வெளியிடாமலேயே இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. ஹிந்து என்றில்லாமல் இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்துமே "வெள்ளைத் தோல்" அல்லாத ஆப்ரிக்க, ஆசிய சாமானிய மக்களுக்கு வழங்கும் மதிப்பு இவ்வாறு தான் உள்ளது.
புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கூறும் சர்வதேச நாடுகள், இலங்கை அரசின் இத்தகைய தொடர் வன்முறைகளை, Amnesty போன்ற மனித உரிமை அமைப்புகள் கூட வெளிப்படையாக கண்டித்த மனித உரிமை மீறல்களை எந்தக் கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த சர்வதேச நாடுகள் தான் தங்களை மனித உரிமை காவலர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றன. புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசின் "பயங்கரவாத செயல்களுக்கு" இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.
ஈழத்தில் சமீபகாலங்களில் நடந்து வரும் படுகொலைகள் மிக மோசமான இனவாதம் என்பது மட்டுமல்ல. ஊடகங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுவது மிக மோசமான இனவாத வன்முறையாக, பேதமாக நான் கருதுகிறேன். அங்கு நடத்தப்படும் சாமானிய மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரூ பீதியை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியை சிறீலங்கா இராணுவம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.
இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையை, தான் தமிழன் என்றோ, சிங்களன் என்றோ அல்லது ஏதோ ஒரு எழவு பிடித்த இனம் என்றோ கூட அறியாத ஒரு குழந்தையை குத்தி கொடூரமாய் கொலை செய்யும் படுமோசமான இனவாத வெறிக்கு ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலக்காகி கொண்டிருக்கின்றனர். நேற்று நடந்த படுகொலை படங்களை பார்க்க முடியாமல் வேகமாக அந்தப் பக்கங்களில் இருந்து வெளியேறி விட்டேன். இதனை பார்க்கும் மனவலிமை கூட எனக்கு இல்லை. ஆனால் இத்தகைய பல நிகழ்வுகளுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பல ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
வேதனை என்பதே ஒரு சுயவிளம்பரம் தான். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது.
தெருவொன்றில் பயணித்தபோதோ
தூங்கும்போதோ
கனிந்து பொழியும் கனவுகளில்
முழுகும் போதோ
காணாமற் போனீர்கள்.
உறவுகளின் இழைகள் ஈய்ந்து
அறுபட்ட புண்களிடை
துயரொழுகத் துயரொழுக
சிறகுகள் கிழியுற்ற வலுவீனராய்
கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு
கடத்தப்பட்டீர்கள்.
உங்களுடைய ஆண்குறிகள்
பிதுக்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம்
திறக்க மறுத்த பெண்குறிகள்
திரண்ட முனைகளின்
மூர்க்கத் துளாவல்களால்
பிளக்கப்பட்டிருக்கலாம்
வித வித வதைகளால் விகாரித்து
சிறையிருளில் நெரியுண்டு
மரித்திருக்கலாம் நீங்கள்.
பெருவெட்டையொன்றின் ஆழமோ
மலக்குழிகளோ
பாழடைந்த கிணறுகளோ
இன்னும் என்னவென்னவோ
உங்களை விழுங்கி
மெளனித்திருக்கலாம்.
உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள்
இனி யாரால் நிரப்பப்பட முடியும்
அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில்
உங்களை இழந்தோரின்
புண்களை ஆற்றும் தகமை
யாருக்குண்டு
துயர்களின் உராய்வுகள் பெருக
அவர்களிடையே மூளும்
மையத்தழல்களைத் தணிக்கும் வலு
யாருக்கு வரக்கூடும்?
-அமரதாஸ்
(நன்றி: செம்மணி, http://elanko.net/pathivu/?p=185)
அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்கு கொல்லப்படும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் உயிர்களை விட மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே நான் கருதுகிறேன். இத்தகைய செயல்களை புலிகள் செய்தாலும், வேறு எந்த அமைப்பு செய்தாலும் அது படு பயங்கரமான "பயங்கரவாத", "மனித உரிமை" மீறலாகவே நான் பார்க்கிறேன்.
அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.
இதனைச் செய்யும் இனவாதிகளின் வெறியை விட அதனை மூடிமறைக்கும் ஊடகங்களை அதனை விட வெறிப் பிடித்த இனவெறியர்களாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட "தனி செய்தியாளரை" கொண்டிருக்கும் ஹிந்து இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது ஹிந்து எந்தளவுக்கு ஒரு "இனவெறிப்" பத்திரிக்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. புலிகள் ஆளுமையில் இருக்கும் பகுதிகள் மீது இலங்கை அரசு குண்டு வீசிய பொழுது எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டதையும், இடம்பெயர நேரிட்டதையும் குறித்து BBC போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலைமையில், Sri Lanka defends air strikes என்று அந்த குண்டு வீசுதலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஹிந்து, தற்பொழுது எந்தச் செய்தியையும் வெளியிடாமலேயே இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. ஹிந்து என்றில்லாமல் இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்துமே "வெள்ளைத் தோல்" அல்லாத ஆப்ரிக்க, ஆசிய சாமானிய மக்களுக்கு வழங்கும் மதிப்பு இவ்வாறு தான் உள்ளது.
புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கூறும் சர்வதேச நாடுகள், இலங்கை அரசின் இத்தகைய தொடர் வன்முறைகளை, Amnesty போன்ற மனித உரிமை அமைப்புகள் கூட வெளிப்படையாக கண்டித்த மனித உரிமை மீறல்களை எந்தக் கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த சர்வதேச நாடுகள் தான் தங்களை மனித உரிமை காவலர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றன. புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசின் "பயங்கரவாத செயல்களுக்கு" இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.
ஈழத்தில் சமீபகாலங்களில் நடந்து வரும் படுகொலைகள் மிக மோசமான இனவாதம் என்பது மட்டுமல்ல. ஊடகங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுவது மிக மோசமான இனவாத வன்முறையாக, பேதமாக நான் கருதுகிறேன். அங்கு நடத்தப்படும் சாமானிய மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரூ பீதியை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியை சிறீலங்கா இராணுவம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.
இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையை, தான் தமிழன் என்றோ, சிங்களன் என்றோ அல்லது ஏதோ ஒரு எழவு பிடித்த இனம் என்றோ கூட அறியாத ஒரு குழந்தையை குத்தி கொடூரமாய் கொலை செய்யும் படுமோசமான இனவாத வெறிக்கு ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலக்காகி கொண்டிருக்கின்றனர். நேற்று நடந்த படுகொலை படங்களை பார்க்க முடியாமல் வேகமாக அந்தப் பக்கங்களில் இருந்து வெளியேறி விட்டேன். இதனை பார்க்கும் மனவலிமை கூட எனக்கு இல்லை. ஆனால் இத்தகைய பல நிகழ்வுகளுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பல ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
வேதனை என்பதே ஒரு சுயவிளம்பரம் தான். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது.
தெருவொன்றில் பயணித்தபோதோ
தூங்கும்போதோ
கனிந்து பொழியும் கனவுகளில்
முழுகும் போதோ
காணாமற் போனீர்கள்.
உறவுகளின் இழைகள் ஈய்ந்து
அறுபட்ட புண்களிடை
துயரொழுகத் துயரொழுக
சிறகுகள் கிழியுற்ற வலுவீனராய்
கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு
கடத்தப்பட்டீர்கள்.
உங்களுடைய ஆண்குறிகள்
பிதுக்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம்
திறக்க மறுத்த பெண்குறிகள்
திரண்ட முனைகளின்
மூர்க்கத் துளாவல்களால்
பிளக்கப்பட்டிருக்கலாம்
வித வித வதைகளால் விகாரித்து
சிறையிருளில் நெரியுண்டு
மரித்திருக்கலாம் நீங்கள்.
பெருவெட்டையொன்றின் ஆழமோ
மலக்குழிகளோ
பாழடைந்த கிணறுகளோ
இன்னும் என்னவென்னவோ
உங்களை விழுங்கி
மெளனித்திருக்கலாம்.
உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள்
இனி யாரால் நிரப்பப்பட முடியும்
அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில்
உங்களை இழந்தோரின்
புண்களை ஆற்றும் தகமை
யாருக்குண்டு
துயர்களின் உராய்வுகள் பெருக
அவர்களிடையே மூளும்
மையத்தழல்களைத் தணிக்கும் வலு
யாருக்கு வரக்கூடும்?
-அமரதாஸ்
(நன்றி: செம்மணி, http://elanko.net/pathivu/?p=185)