In the Line of Fire - Pervez Musharraf

இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஹிந்துவில் வெளியான கட்டுரையும், இந்த புத்தகத்தை படிக்காமலேயே ஆசிரியருக்கு கடிதம் எழுதி குவித்து கொண்டிருக்கும் ஹிந்து வாசகர் கடிதங்களையும் பார்த்தப் பிறகு முஷ்ரப் கார்கில் குறித்து என்ன தான் சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கார்கில் குறித்த கட்டுரை நல்ல நடையில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது.
முதலில் முஷ்ரப் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் பார்த்து விட்டு அது குறித்த எனது விமர்சனங்களை இறுதியில் எழுதுகிறேன்.
முஷ்ரப் கார்கில் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்
The year 1999 may have been the most momentous of my life.. The events of 1999 and the fall of 1998, dramatically catapulated me from solidiering to leading the destiny of the nation என்று தொடங்கும் முஷ்ரப் It is time to lay bare what has been shrouded in mystery என்று கார்கில் குறித்த புதிர்களை அவிழ்க்க முற்படுகிறார்.
கார்கில் மற்றும் Dras பகுதியில் இருக்கும் சிலப் பகுதிகளை பாக்கிஸ்தான் 1999ல் ஆக்கிரமித்தது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அது முதன் முறையாக நடந்த ஒரு ஆக்கிரமிப்பு இல்லை என்றும் முஷ்ரப் கூறுகிறார். பாக்கிஸ்தான் அதிக வலுவுடன் இல்லாத பனிப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பதும், இந்தியா வலுவுடன் இல்லாத இடங்களை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பதும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு என்றும் இவ்வாறு தான் சியாசின் பகுதி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார் முஷ்ரப்.
இந்தியா, பாக்கிஸ்தான் பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க முயற்சி செய்வதாக தங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையிலே தான் கார்கிலை பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியது என்கிறார் முஷ்ரப். குளிர் காலங்களில் மிகவும் குளிர் மிகுந்த இந்தப் பகுதிகளை விட்டு இரு நாட்டின் படையினரும் விலகிக் கொள்வதும், குளிர் காலம் முடிந்தவுடன் இந்தப் பகுதிக்கு மீண்டும் வருவதும் வழக்கம். 1999ல் குளிர் காலத்தில் இந்தப் பகுதியை விட்டு இந்திய இராணுவம் விலகிய நிலையில் தான் பாக்கிஸ்தான் கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது
There was specific information of a possible Indian attack in the Shaqma sector; it was aimed at positions we had used to shell the road between Dras and Kargil in early summer 1998, in response to continuous artillery shelling by the Indians...
There were large gaps between our defensive positions in the Kargil and Dras sectors, making it possible for Indian troops to cross the line too easily. India also brought in and tested special bunker-busting equipment in the autumn of 1998 ...
இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் இந்த முயற்சியை தடுக்கும் வகையிலும் மிக ரகசியமாக கார்கில் பகுதி பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார். இது பாக்கிஸ்தான் இராணுவத்தின் செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முஷ்ரப் கூறுகிறார்
Our maneuver was conducted flawlessly, a tactical marvel of military professionalism. By the end of April the unoccupied gaps along 75miles (120KM) of the LOC had been secured by over 100 new posts of ten to twenty persons each.
பாக்கிஸ்தான் படைகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் இருக்கும் பகுதியில் தங்கள் பலத்தை அதிகரித்தப் பிறகு முஜாஹீதின் குழுக்கள் இந்தியாவின் பகுதிக்குள் சுமார் 800 சதுர கி.மீ பகுதிகளை ஆக்கிரமித்து இருந்ததாகவும், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளை நோக்கி இந்தியா நெருங்க முடியாதவண்ணம் இவர்கள் அரண் அமைக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்குள் பாக்கிஸ்தான் படைகள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து இருந்ததாகவும் முஷ்ரப் கூறுகிறார். இது எதுவுமே இந்தியாவிற்கு 1999 மே மாதம் வரை தெரியாது என்கிறார் முஷ்ரப்.
முஷ்ரப் கூறியதன் சாராம்சம் இது தான் - "பாக்கிஸ்தான் மீது இந்தியா கார்கில் பகுதியில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்தது. இதனை முறியடிக்க கார்கில் பகுதியில் எங்கள் பாதுகாப்பை அதிகரித்தோம். முஜாஹீதின் குழுக்கள் மூலமாக இந்தியப் பகுதியையும் ஆக்கிரமித்தோம். இதற்கு காரணம் இந்தியா தானே தவிர நாங்கள் இல்லை"
இது உண்மையா ? பிறகு கவனிப்போம்.
முஷ்ரப் கூறும் மேலும் சில விடயங்கள் இந்திய இராணுவத்தின் திட்டமிடல் குறித்தும், செயல்பாடு குறித்தும், கார்கில் போரில் இந்தியாவின் வெற்றி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது போல கார்கில் போர் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என முஷ்ரப் கூறுகிறார்
India moved in artillery and infantry formations even at the cost of significantly depleting its offensive capability elsewhere along the international border. Evaluating this buildup at headquarters we realized that India had created a serious strategic imbalance in its system of forces. It had bottled up major formations inside Kashmir, leaving itself co capability to attack us elsewhere....
By july 4 they (இந்தியா) did achieve some success, which i would call insignificant
Our Nation remains proud of its commanders and troops, whose grit and determination I observed during my frequent vists to the forward areas
Pakistan was in a strategically advantegous position in case of an all-out war, in view of the massive Indian troop indications inside Kashmir, resulting in a stragtegic imbalance in India's system of forces
The indians, by their own admission, suffered over 600 killed and over 1500 wounded. Our information suggests that the real numbers are at least twice what India has publicly admitted. The Indians actually ran short of coffins, owing to an unexpectedly high number of casualties;
The number of Indian casualties proves the fighting prowess and professionalism of the officers and men of the Pakistan Army
our army, outnumbered and outgunned, fought this conflict with great valor
கார்கில் போர் இராணுவ ரீதியில் பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறும் முஷ்ரப் அரசியல் ரீதியாக இந்தப் போர் தங்களுக்கு கிடைத்த தோல்வி என்கிறார். அதற்கு காரணம் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் என முஷ்ரப் குற்றம்சாட்டுகிறார்.
கார்கில் போர் திட்டமிடல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நவாஸ் ஷெரீப் அப்பொழுது கூறியது பொய் எனக்கூறும் முஷ்ரப் அவருடன் இது குறித்து விவாதித்த தேதிகளையும் குறிப்பிடுகிறார். பாக்கிஸ்தான் இராணுவத்தின் இந்த மிகப் பெரிய வெற்றியை கூட தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அப்போதைய அரசியல் தலைமை இருந்ததாக நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டுகிறார். அது போலவே இந்தியா சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சனையை சாதுரியமாக கையாண்டு தங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என ஒப்புக்கொள்கிறார்.
இந்திய ஊடகங்கள் இந்தியாவின் கார்கில் வெற்றி குறித்து மிகைப்படுத்தியே செய்தி வெளியிட்டது என்று முஷ்ரப் கூறுகிறார். ஆனால் பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை பாக்கிஸ்தானின் அரசியல் தலைமை உருவாக்க தவறி விட்டதாக முஷ்ரப் சாடுகிறார்.
முஷ்ரப் இந்த புத்தகத்தில் கூறுவது உண்மையா ? இந்தக் கேள்வியை பல ஊடகங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
தான் கூறும் அனைத்தும் உண்மை என வாதிடுகிறார் முஷ்ரப்
whatever I have said in the book is the truth, the whole truth and nothing but the truth, and I stand by it."
பாக்கிஸ்தானின் கார்கில் திட்டம் முழுவதும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு மேற்க்கொண்ட பஸ் பயணத்திற்கு பின்பாக பாக்கிஸ்தானுடன் ஒரு சுமூக உறவை உருவாக்க இந்தியா முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் நடைபெற்றது என்பதை இந்த அத்தியாயத்தின் எந்த இடத்திலும் முஷ்ரப் கூறவேயில்லை. அது தவிர கார்கில் பிரச்சனை காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதாக தான் இது வரை இந்திய ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் கூறிவந்தன. ஆனால் தங்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுக்க திட்டமிட்டதன் எதிர் நடவடிக்கை தான் இந்த தாக்குதல் என்றும் தங்களின் கார்கில் நடவடிக்கை அதை முறியடித்து விட்டதாகவும் முஷ்ரப் கூறுகிறார்.
Indian's planned offensive was preempted
முஷ்ரப்பின் இந்தக் கருத்து இதுவரையில் வெளிவராத ஒரு புதிய நிலைப்பாடு. முஷ்ரப் சொல்வது உண்மையா ? தெரியவில்லை
பாக்கிஸ்தான் இராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றும் முஷ்ரப், இந்த போர் நடந்த சமயத்தில் இந்தப் பிரச்சனைக்கும், பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கூறி வந்தனர்.
இன்னும் சொல்லப் போனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட பல பாக்கிஸ்தான் வீரர்களின் சடலங்களை பாக்கிஸ்தான் ஏற்க மறுத்தது. அவர்களுக்கு இந்திய இராணுவமே ஒரு போர் வீரனுக்கு கொடுக்க வேண்டிய இறுதிமரியாதையை முஸ்லீம் முறைப்படி கொடுத்தாக அப்பொழுது ஹிந்துவில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் தொடர்ச்சியாக இந்தப் போரில் தங்கள் இராணுவம் ஈடுபடவில்லை என்று பாக்கிஸ்தான் கூறிவந்ததை இந்தப் புத்தகம் நிராகரிக்கிறது. ஆனால் இதற்கு தான் காரணமில்லை என்றும் அரசியல் தலைமை தான் காரணம் என்று கூறி முஷ்ரப் தப்பித்து கொள்கிறார். ஒரு இராணுவ தளபதியாக தன் படையின் வெற்றியை தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்ததாக முஷ்ரப் கூறுகிறார்.
இந்தப் புத்தகம் இந்திய இராணுவத்தின் வெற்றி குறித்து எழுப்பியிருக்கும் சில கேள்விகள் சரியானவை அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியப் படைகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையில் தான் இந்தப் போர் நடைபெற்றது. பாக்கிஸ்தான் இராணுவமும், அவர்களின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் இந்திய இராணுவத்தை வலுவாக தாக்கக்கூடிய சாதகமானப் பகுதிகளை தான் ஆக்கிரமித்து இருந்தனர். முதலில் விமானப்படை மூலமான தாக்குதல் தொடங்கி அது பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தான் இந்தியா தனது அடுத்த தாக்குதலை தொடுத்தது. பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து இருந்த சில நிலைகள் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே ஆக்கிரமித்து இருந்தனர். அந்த கடுமையான மலைப்பகுதியில், குளிரில் இந்திய இராணுவத்தினர் கடும் சவாலுடன் தான் இந்தப் போரினை எதிர்கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றே இருந்தனர்.
ஆனால் முஷ்ரப் கூறுவது போல அது பெரிய வெற்றி இல்லையா ? - did achieve some success, which i would call insignificant...
தெரியவில்லை
இந்தப் போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்து முஷ்ரப் எழுதவேயில்லை. பாக்கிஸ்தான் இந்தப் போருக்கு பின்பு அரசியல் குழப்பத்திற்குள்ளானது. நவாஸ் ஷெரீப், முஷ்ரப் இடையேயான பிரச்சனை வலுத்து, மோதல் ஏற்பட்டு இராணுவப் புரட்சி மூலம் முஷ்ரப் அதிபரானார். பாக்கிஸ்தான் மீது கடுமையான நிர்பந்தம் உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இந்தியாவில் இந்தப் போருக்கு பின், ஊசலாடிக் கொண்டிருந்த கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து வாஜ்பாய் தலைமையில் ஒரு வலுவான அரசு உருவானது. பொருளாதார ரீதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.
இவ்வாறான நிலையில் தான் முஷ்ரப் இராணுவ ரீதியில் மட்டும் இந்தப் போர் பாக்கிஸ்தானுக்கு வெற்றி என்கிறார். கார்கில் போர் பாக்கிஸ்தான் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் முஷ்ரப்
Considered purely on military terms, the Kargil operations were a landmark in the history of Pakistan Army. As few as few batallions in support of the freedom fighter groups, were able to compel the Indians to employ four divisions....
இந்தப் போரின் பலன் என்ன ? முஷ்ரப்பே கூறுகிறார்
I would like to state emphatically that whatever movement has taken place so far in the direction of finding a solution to Kashmir is due considerably to the Kargil conflict
இந்த புத்தகத்தின் மற்றொரு முக்கிய விடயம் காஷ்மீர் குறித்து முஷ்ரப் முன்வைத்த out-of-box solution. இது குறித்து முன்பே நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பத்ரியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
கார்கில் குறித்து முஷ்ரப் கூறிய கருத்துக்களை என்னால் முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், காஷ்மீர் குறித்த முஷ்ரப்பின் கருத்து இது வரை இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த எவரும் முன்வைக்காத உருப்படியான திட்டம் என்றே நினைக்கிறேன். அவரின் இந்த திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால் அது காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையக்கூடும்.
அது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்
கட்டுரையின் அடுத்தப் பகுதி - In the Line of Fire - Nuclear Proliferation
Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf