வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி
வாசிங்டன் நகரில் கேபிடல் ஹில் (Capitol Hill) கட்டடித்திற்கு எதிரில் "ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆதரவு அமைதி பேரணி" கடந்த திங்களன்று (ஜூலை 23, 2007) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்தும், மனித உரிமைகளை வலியுறித்தியும், சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை சுமார் 11:30 மணிக்கு கேபிடல் ஹில் முன்பாக ஆரம்பித்த இந்த பேரணி மதியம் 3 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வட கரோலினா மாநிலங்களைச் சார்ந்த செனட் உறுப்பினர்கள் இந்தப் பேரணிக்கு அதரவு தெரிவித்து செய்திகள் அனுப்பியிருந்தனர். பேரணியின் இறுதியில் உரையாற்றிய மனித உரிமை சட்டவல்லுனரும் ஈழப் போரட்டத்தில் ஈடுபாடு கொண்டவருமான கேரன் பார்க்கர் தமிழர்கள் ஏற்கனவே சட்டப்படி ஒரு தமிழ் ஈழத்தை ஈழத்தில் அமைத்து விட்டதாக குறிப்பிட்டார். வழக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தமிழ் ஈழப் பகுதிகளை de facto state என்று சொல்வார்கள். ஆனால் அதனை அவ்வாறு அழைப்பது சரியல்ல. அது de jure - சட்டப்படியான தனி நாடு என்பதே சரி என்றார் கேரன் பார்க்கர்.
Ms Parker said: "Because of the right to self- determination, the Tamil areas belong to the Tamils. It is their land. The civilian government and the military force - the LTTE - have a right de jure (by law) to this State. Tamils presence in their own land is not de facto and their government is not a de facto one.
"The Sri Lankan government’s occupation of part of the historic Tamil Eelam is de facto. They are there by the clear facts on the ground but they don’t have the legal right to it," Ms. Parker added.
குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
Tamil American Peace Rally: Speech by Dr. Ellyn Shander M.D



இது குறித்த செய்திகள் :
"Struggle to achieve self-rule will continue"- American Tamils
********
உலக நாடுகளின் அங்கீகாரத்தினை பெறுவது என்பதான ஒரு நிலையில் தான் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் கொள்கை இருந்து வந்தது. ஆனால் உலகநாடுகளின் அங்கீகாரம் என்ற நிலையிலேயே தங்களை அடைத்துக்கொள்ளாமல் அதனைக் கடந்து வேறு வகையில் தங்களின் சுயநிர்ணயத்தை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தற்பொழுது எழுந்துள்ளது. தொடர்ச்சியாக உலகநாடுகளின் ஒரு தலைச்சார்பான நடவடிக்கை இருக்கும் சூழலில் உலகநாடுகளின் அங்கீகாரம் எளிதாக கிடைத்து விடாது. இது தவிர உலகளவில் மேற்கத்திய நாடுகளின் மக்களை அச்சுறுத்தும் மதத்தைச் சார்ந்த அடைப்படைவாத பயங்கரவாத கண்ணாடி மூலமே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பார்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையெல்லாம் கடந்து தமிழீழம் அமைவது என்பது தான் தற்போதைய சவால். அதனை உலக நாடுகளின் அங்கீகாரம் என்ற ஒரே வியூகத்தின் மூலமாக அணுக முடியாது.
ஈழத் தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணயத்தினை தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்று கேரன் பார்க்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும்
Ms Parker said: "Because of the right to self- determination, the Tamil areas belong to the Tamils. It is their land. The civilian government and the military force - the LTTE - have a right de jure (by law) to this State. Tamils presence in their own land is not de facto and their government is not a de facto one.
"The Sri Lankan government’s occupation of part of the historic Tamil Eelam is de facto. They are there by the clear facts on the ground but they don’t have the legal right to it," Ms. Parker added.
குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
Tamil American Peace Rally: Speech by Dr. Ellyn Shander M.D



இது குறித்த செய்திகள் :
"Struggle to achieve self-rule will continue"- American Tamils
********
உலக நாடுகளின் அங்கீகாரத்தினை பெறுவது என்பதான ஒரு நிலையில் தான் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் கொள்கை இருந்து வந்தது. ஆனால் உலகநாடுகளின் அங்கீகாரம் என்ற நிலையிலேயே தங்களை அடைத்துக்கொள்ளாமல் அதனைக் கடந்து வேறு வகையில் தங்களின் சுயநிர்ணயத்தை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தற்பொழுது எழுந்துள்ளது. தொடர்ச்சியாக உலகநாடுகளின் ஒரு தலைச்சார்பான நடவடிக்கை இருக்கும் சூழலில் உலகநாடுகளின் அங்கீகாரம் எளிதாக கிடைத்து விடாது. இது தவிர உலகளவில் மேற்கத்திய நாடுகளின் மக்களை அச்சுறுத்தும் மதத்தைச் சார்ந்த அடைப்படைவாத பயங்கரவாத கண்ணாடி மூலமே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பார்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையெல்லாம் கடந்து தமிழீழம் அமைவது என்பது தான் தற்போதைய சவால். அதனை உலக நாடுகளின் அங்கீகாரம் என்ற ஒரே வியூகத்தின் மூலமாக அணுக முடியாது.
ஈழத் தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணயத்தினை தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்று கேரன் பார்க்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும்