ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.

இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் - தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.

1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.

உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் - நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.

ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.

******

விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.

இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
http://www.tamilnation.org/indictment/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf

இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.

That is why when in the early days of India's military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day's good deeds, particularly for damsels in distress.

Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back".

இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.

ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

******

விகடன் நடத்திய இந்த சர்வே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட விதம் என்னை எரிச்சல் படுத்தியது என்பது தான் உண்மை.

“நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!” என்பது விகடனின் சர்வே முடிவை ஒட்டிய தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.

சரி விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள் என்ன புள்ளிவிபரங்களை தருகிறது என பார்ப்போம்.

பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என கூறியவர்கள் 43.02%,
குற்றமற்றவர் என கூறியவர்கள் - 16.90%
குற்றத்தை மன்னித்து விடலாம் என கூறியவர்கள் 40.07%. (மன்னித்து விட வேண்டும் என்றால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கைது செய்ய வேண்டாம் என்பது தான் பொருள் என நினைக்கிறேன்)

அதாவது 56.97% பேர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பிரபாகரன் கைதாக வேண்டும் என தமிழக மக்கள் கூறியுள்ளதாக விகடன் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது ? என்ன கொடுமை சார் இது ?

மும்முனைப் போட்டியில் 43.02% பெற்ற கட்சி வெற்றி பெற்றது, மற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல இது என்ன தேர்தல் கருத்து கணிப்பா ? ஒரு கருத்தினை ஒட்டிய கேள்வி என்னும் பொழுது அந்தக் கருத்தினை சார்ந்த அனைத்து விடயங்களையும் அலசி தான் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும். ஆனால் விகடன் அதனைச் செய்ய வில்லை.

இந்தக் கருத்து கணிப்பின் முடிவுகளை ”உண்மையாக” அப்படியே வெளியிடுவதில் விகடனுக்கு உள்ள நிர்பந்தம் எனக்கு புரிகிறது.

இதே சர்வே “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் குற்றமற்றவர்!” என்றோ “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரனை மன்னித்து விடலாம்” என்றோ வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இந்தியாவின் மேல்தட்டு ஊடகங்களும், தமிழகத்தில் உள்ள விகடனின் ”சொந்தக்கார” ஊடகங்களும் விகடனை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். விகடனின் நாட்டுப்பற்று குறித்து கேள்விகள் எழுந்திருக்கும். 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க விகடன் எப்படி தேச விரோத பாதையில் செல்கிறது என்பது குறித்த கவலைகள் எழுந்திருக்கும். விகடனுக்கு புலிகள் வழங்கிய வெளியே தெரியாத தொகை குறித்த வேள்விகள் எழுந்திருக்கும்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விகடன் ஒரு உண்மையை மட்டும் வெளியிட்டு விட்டு மற்றொரு உண்மையை புள்ளிவிபரங்களுடன் சேர்த்து மறைத்து விட்டது.

40 comments:

said...

நண்பர் பிரகாஷ் பத்ரியின் பதிவில் இந்த பின்னூட்டத்தை எழுதியிருந்தார்.



ஆனால்,எதிர்ப்பதற்கோ ஆதரவளிப்பதற்கோ தேவையான ஈழப்போராட்டம் குறித்த புரிதல் தமிழகத்தில் இருக்கிறதா என்பதுதான் நான் வைத்த கேள்வி.

இருக்குன்னு நீங்க சொல்றீங்க. இல்லைன்னு நான் சொல்றேன். அவ்வளவு எதுக்கு? தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க. தமிழ்மணம் சேவையை உபயோகிப்பவர்கள் எல்லாம் கலந்து கொள்ளணும் வேண்டுகோள் வைங்க...முடிவிலே நான் தான் விவரம் தெரியாமப் பேசுகிறேன் என்று தெரிய வந்தால், வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன்.



தமிழ்மணம் சர்வே வைத்திருந்தாலே ஒத்துக் கொள்கிறேன் என்றவர், விகடனின் சர்வேயை நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன் :)

Anonymous said...

தமிழகத்தின் பெருவாரியான மக்களுக்கு ஈழப்பிரச்சினை எதனை முன்னிட்டு ஏற்பட்டது? அதன் காரண காரியங்கள் குறித்த விவரங்கள் தெரியாது.. ஈழத்தமிழர்கள் என்றாலே ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களென்று நினைக்கிறார்கள்.. ஆகவே இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக அதுகுறித்து தெளிவாக விவரித்து பின்னர் வாக்கெடுத்திருப்பார்களேயானால் ஆதரவான வாக்குவிகிதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்..

said...

சசி வித்தியாசமான கோணத்தில் விகடனின் கருத்துக்கணிப்பை அணுகியிருக்கின்றீர்கள். முக்கியமாய் இது...
/ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை./

நன்றி.

said...

நல்ல பதிவு சசி
நானும் விகடன் எழுப்பியிருந்த தலைப்பு கண்டு கொதித்துப் போய்தான் இருந்தேன்.ஆனால், இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு சோ ராமசாமிகளின் செவ்விட்டில் அறைந்ததற்காகவேனும் விகடனைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை

said...

//தமிழ்மணம் சர்வே வைத்திருந்தாலே ஒத்துக் கொள்கிறேன் என்றவர், விகடனின் சர்வேயை நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன் :)
//
கொள்வார் கொள்வார் :-)))))))) விகடன் சர்வேயில் இணைய வாக்குகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50%, இணைய வாக்குகள் 50%ற்கு பதில் இன்னும் குறைவாக அதாவது 10%மாகவோ அதையும் விட குறைவாகவோ இருந்திருந்தால் முடிவு தமிழீழத்திற்கும் இன்னும் ஆதரவு அதிகமாக இருந்திருக்கும்.... இணைய வாக்குகள் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ அப்படி இருந்தும் இவ்வளவென்றால் :-))))))))))))

said...

நல்ல பதிவு சசி.
விகடன் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட போது நான் ஒரு பதிவிட்டிருந்தேன் http://maraneri.blogspot.com/2008/07/blog-post_25.html. ஆனால் விகடனில் முடிவுகளைப் பார்த்த உடன் ஆசிப் அண்ணண் சொல்லியிருப்பது போல் எனக்கும் கோபம் வந்தாலும், இந்த முயற்சியையாவது அவர்கள் செய்தார்களே, அதற்காகவாவது அவர்களை திட்டாமல் விடுவோம் என்று விட்டுவிட்டேன்.

said...

ஈழத்துப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரவேண்டும்,மனித நேயம் மீண்டும் மலரவேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.இந்திய ராணுவ செயல்களின் விமர்சனங்களை நீங்கள் முன்வைத்தாலும் அதில் நியாயங்கள் இருப்பது உண்மையெனினும் போர்க்கால சூழலில் எந்த ஒரு ராணுவமும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றன.அதற்கு இந்திய ராணுவமும் விதிவிலக்கல்ல.பின் நாட்களில் பத்துக்கட்டளைகளெல்லாம் பிறந்தன.கட்டளைகள் இன்னொரு போர் அழுத்தத்தில் கடைப்பிடிக்கப்படுமா?

இந்திரா காந்தியை சுட்டதைக் கூட இந்தியர்கள் மன்னித்தோ மறந்தோ கூட விட்டார்கள்.ஆனால் ராஜிவ் காந்தியின் மரணம் மட்டும் ஏன் ஒருவராலும் மறக்க இயலவில்லை?காரணம் மரணிக்கப்பட்ட நிலை.வருடங்கள் கடந்தும் அந்த வன்முறைச் செயல் மனதை விட்டு அகல மறுக்கிறது.திசை மாறியோ அல்லது இவ்வளவு காலம் ஈழத்துப்பிரச்சினை நீண்டும் விடாமலிருந்திருக்கும் அந்த துயரச் சம்பவம் மட்டும் தமிழ் மண்ணில் நடக்காமலிருந்திருந்தால்.இந்த துக்கத்தையும் மீறி மனிதாபிமானக் காரணம் கொண்டும், Dependency on the west is bypassed என ராஜபக்சேவும் இந்தியாவைச் சார்ந்து இருப்பதாலும்,தனது சுய நலன்களுக்காக வேண்டியும் ஈழத்துப் பிரச்சினை முடிவுறவேண்டும்.சுனாமியால் கூட சாதிக்க இயலாத போரை,நார்வேயின் நியாயமான மத்தியஸ்துக்கும் வளைந்து கொடுக்காத துப்பாக்கிச் சூட்டை - தமிழர்களுக்கும்,சிங்களத்து மக்களுக்கும் நலன் விளைவிக்கும் வகையில் இந்தியா செயல்படுமா? என்ற கேள்வியில் பிராந்திய நாடுகளின் எதிர்காலம் உள்ளது.

said...

சசி

இது ஓர் மாறுப்பட்ட பார்வை! நல்ல அலசல்! அதே சமயத்தில் விகடனின் இந்த சர்வேயையும் ஓரளவு பாராட்ட வேண்டும்!

தமிழ்நாட்டில் ஓர் தரமான பத்திரிக்கை தைரியமாக தமிழர்கள் ஈழம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தலைப்பு செய்தியாக போட்டமைக்கு ஓரளவு பாராட்டதான் வேண்டியுள்ளது!

உங்கள் உட்கருத்தோடும் ஒத்துப் போகிறேன்!

மயிலாடுதுறை சிவா...

said...

இந்திய ராணுவ செயல்களின் விமர்சனங்களை நீங்கள் முன்வைத்தாலும் அதில் நியாயங்கள் இருப்பது உண்மையெனினும் போர்க்கால சூழலில் எந்த ஒரு ராணுவமும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றன.அதற்கு இந்திய ராணுவமும் விதிவிலக்கல்ல.

****

ராஜ நடராஜன்,

சாமானிய மக்கள் மீதும், பெண்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களை எப்படி இவ்வாறு சுலபமாக உங்களால் கடந்து செல்ல முடிகிறது ?

போர்க்கால சூழலில் ஒரு ஜனநாயக, அகிம்சை நாட்டின் இராணுவம் இப்படி தான் நடந்து கொள்ளும் என்றால் ”ஒரு பயங்கரவாத அமைப்பு” குண்டுகளை வைக்கத் தான் செய்யும், தலைவர்களை கொல்ல தான் செய்யும், என நாங்கள் சொல்லலாமா ?

ஒரு பயங்கரவாத அமைப்பு இவ்வாறு செய்ததை நீங்கள் ஏன் 17 ஆண்டு காலமாக பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள் ? இராணுவத்தின் குற்றங்களை கடந்து சென்றது போல ராஜீவ் காந்தியின் கொலையையும் இவ்வாறு சுலபமாக கடந்து சென்று விடலாமே, என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பலாமா ?

said...

//சாமானிய மக்கள் மீதும், பெண்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களை எப்படி இவ்வாறு சுலபமாக உங்களால் கடந்து செல்ல முடிகிறது ?

போர்க்கால சூழலில் ஒரு ஜனநாயக, அகிம்சை நாட்டின் இராணுவம் இப்படி தான் நடந்து கொள்ளும் என்றால் ”ஒரு பயங்கரவாத அமைப்பு” குண்டுகளை வைக்கத் தான் செய்யும், தலைவர்களை கொல்ல தான் செய்யும், என நாங்கள் சொல்லலாமா ?

ஒரு பயங்கரவாத அமைப்பு இவ்வாறு செய்ததை நீங்கள் ஏன் 17 ஆண்டு காலமாக பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள் ? இராணுவத்தின் குற்றங்களை கடந்து சென்றது போல ராஜீவ் காந்தியின் கொலையையும் இவ்வாறு சுலபமாக கடந்து சென்று விடலாமே, என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பலாமா ?//

மனித உரிமை மீறல்கள் ராணுவத்தில் நடக்கும் நடைமுறையை நான் வெளிப்படுத்தினேன்.இந்த மனவியல் எல்லா இராணுவத்திற்கும் பொதுவானது.

நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.நான் இந்த தவறு தமிழ்மண்ணில் நிகழாமல் இருந்திருந்தால் இந்தப்பிரச்சினை எப்படி திசைமாறியிருக்கும் என சொல்கிறேன்.

said...

நான் இந்த தவறு தமிழ்மண்ணில் நிகழாமல் இருந்திருந்தால் இந்தப்பிரச்சினை எப்படி திசைமாறியிருக்கும் என சொல்கிறேன்.

***

நானும் ஈழ தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கா விட்டால், ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றிருக்காது என்று தான் சொல்கிறேன்.

ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து கேள்வி எழுப்பும் விகடன் ஏன் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை என்று தான் நான் கேட்கிறேன்.

ராஜீவ் காந்தியின் கொலையும், ஈழ மக்களின் மீது தொடுக்கப்பட்ட போர் குற்றங்களும் ஒரே தராசில் வைத்து எடை போட பட வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

ஒன்றினை நியாயப்படுத்தும் சிலர் மற்றொன்றினை தவறு என சொல்லும் விந்தையை தான் வியந்து பார்க்கிறேன்.

***
நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.
***

ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்த விடயங்களை பேசினால் இறுதியில் இந்த முடிச்சியில் வந்து தான் விவாதங்கள் எப்பொழுதும் முடியும் :)

நான் வக்கலாத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்ளுங்களேன். ஒன்றும் பிரச்சனையில்லை :))

Anonymous said...

காஷ்மீர் பிரச்சனைக்கி தீர்வு கண்ட கையோட இலங்கைப் பிரச்சனைக்கி தீர்வு காண ஆரம்பிச்சிட்டீங்களே!

கலக்குறீங்க போங்க!

said...

//ஆனால் ராஜிவ் காந்தியின் மரணம் மட்டும் ஏன் ஒருவராலும் மறக்க இயலவில்லை?காரணம் மரணிக்கப்பட்ட நிலை.வருடங்கள் கடந்தும் அந்த வன்முறைச் செயல் மனதை விட்டு அகல மறுக்கிறது.//

அதென்னங்க மரணிக்கப்பட்ட நிலை? எனக்குப் புரியவில்லை.

ஒரு வேளை நேரு குடும்பமே மனிதருள் மாணிக்கங்கள் என்று சாமியடிக்கபடாமல் இருந்திருந்தாலோ இல்ல, புனிதர்கள் உயிர்தியாகம் செய்தார்கள் என்ற கருத்து உருவாகியிருக்காவிட்டாலோ, ஈழத்தமிழர்கள் அடைந்த கொடுமைகளின் சான்றுகளை நீங்கள் கண்டிருந்தாலோ, உங்களின் எண்ணம் மாறியிருக்குமோ?

தங்களின் பிரதமரைக் கொன்ற சீக்கியர்களை மன்னித்து பிரதமராக்க முடிகிறது, ஆனால் தமிழனென்றால் இன்னும் மறக்க முடியவில்லையா?

அது ஒண்ணுமில்ல, எங்கே தமிழனை/தன்னை தேசத்துரோகி என்று (சோ, பிராமண லாபி, பத்திரிகை லாபி, அதிகாரிகள் லாபி, கருத்தாக்கம் உருவாக்கும் லாபி) கூறி விடுவார்களோ என்ற பயம்தான்.

Anonymous said...

//இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?//

ராஜீவ் காந்தி மட்டுமா? அப்போதைய "முப்படைத் தளபதி"யான ஆர். வெங்கட்ராமன் என்கிற 'ஆமாம் சாமி'யும் பொறுப்பு. இந்திய ராணுவப் போர்க்குற்றங்களுக்காக அந்த ஆளையும் நீதி விசாரனைக்குட்படுத்த வேண்டும்.


//தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க ..... .... முடிவிலே நான் தான் விவரம் தெரியாமப் பேசுகிறேன் என்று தெரிய வந்தால், வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன்.
//

கில்லியில் இந்த மாதிரி ஒரு சர்வே வைத்தால் நீங்க விவரமானவர் தான் என்று நிரூபணமானாலும் ஆகலாம்.

Anonymous said...

தமிழ் சசி,

நீங்கள் மாங்கு மாங்கென்று இவ்வளவு தரவுகள் தேடி எழுத வேண்டியதே இல்லை.

//***
நீங்கள் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத் தெரிகிறது.
***

நான் வக்கலாத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்ளுங்களேன். ஒன்றும் பிரச்சனையில்லை
//

இதை மட்டுமே நீங்கள் எழுதியிருந்தாலும், குழலி, ஆசீப் போன்ற ஜால்ராக்கள் வீரத்தோடு கும்மி அடித்திருப்பார்கள்.

ஒரே ஒரு விண்ணப்பம். நீங்கள் தயவுசெய்து உங்கள் இந்தியக் குடியுரிமையை, கடவுச் சீட்டை விட்டொழித்துவிட்டு சுதந்திரமாக இருக்கும் நாளை தெரிந்து கொள்ள ஆசை.

உடனே தேசப்பற்று என்னும் கருத்தாக்கத்தைப் பற்றி காதுகிழிய பிரச்சாரம் செய்யும் அட்டைக் கத்தி அவதாரம் வேண்டாம். தேசியம் ஒரு கருத்தாக்கம் என்றால், மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான். வன்னியர் என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்.

உங்கள் பதிவுகளிலே மேலே குறித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்தான் சிறந்தது.

said...

டிசே, ஆசிப், குழலி, சிவா, ஜோசப் பால்ராஜ்,

நன்றி...

அனானி நண்பருக்கும் நன்றி :)

Anonymous said...

//தேசியம் ஒரு கருத்தாக்கம் என்றால், மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான். வன்னியர் என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்.//

சாமி, கொண்டை தான் நல்லா தெரியுதே. பின் ஏன் அனானியாய் பின்னூட்டம் :) :)

உங்களுக்கான பதில்

....(உங்கள்) மொழிப்பற்றும் ஒரு கருத்தாக்கமேதான்

......... என்று உங்கள் அடிமனதில் ஆறாமல் இருக்கும் (உங்கள்) சாதிப் பற்றும் ஒரு கருத்தாக்கம்தான்

--

வேண்டுமென்றால் உங்களின் ஊர்பற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :) :)

said...

சசி,

முதலில் இரண்டு பாராட்டுக்கள்…
ஒன்று, உங்களுக்கு - சற்றுத் தாமதமாக எழுதினாலும் சரியான தரவுகளொடு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
இரண்டாவது பாராட்டு விகடனுக்கு – நீங்கள் சொல்லியிருக்கும் குறைகளை நானும் உணர்ந்தாலும், இன்றுள்ள தமிழ்நாட்டுச் சூழலில் வெகுஜன இதழொன்று ஈழப்பிரச்னை தொடர்பாக ஒரு பொதுக் கருத்துக்கணிப்பைச் செய்ய முன்வந்ததே பெரிய காரியம். நீங்களும் குறிப்பிட்டிருப்பது போல் பிரபாகரன் கைது பற்றிய கருத்துக் கணிப்பை விகடன் வலிந்து மாற்றி வெளியிட்டிருப்பது தன் நிறுவனத்தை பார்ப்பனியத் தேசிய வல்லூறுகளின் அடக்குமுறையிலிருந்தோ அல்லது விமர்சனத்திலிருந்தோ காப்பாற்றிக் கொள்ளத்தான்.

பத்து மாதங்களுக்கு முன்பு பத்ரியின் பதிவில் நடந்த விவாதத்தை இங்கு உங்கள் பின்னூட்டத்தில் தொட்டிருந்தீர்கள். அப்பதிவில் நான் எழுதிய கருத்துக்களின் சாரம்சம்தான் இன்று விகடனின் கருத்துக்கணிப்பிலும் பிரதிபலித்திருக்கிறது. உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர். ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை அல்லாத சிறுநகரங்களில் பரவலான ஆதரவு இருக்கிறது என்பதும், இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்களின் கருத்துக்களை மக்கள் கருத்தாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.


“விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர்” என்று பத்ரியின் பதிவில் முன்பு சொல்லியிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சுற்றிவர வாய்க்கும் பொழுது முன்பின் அறியாதவர்களிடமும், சகபயணிகளிடமும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக் காண்பித்துப் பேசுவதுண்டு. பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் இந்தப் பிரச்னை பற்றி எதுவுமே தெரியாதவன் போல் கருத்துக் கேட்கும் பொழுது நான் அறிந்த உண்மை இது. குறிப்பாக கிராமங்களில் விடுதலைப்புலிகள் பற்றி பயங்கரவாதிகள் என்ற அபிப்ராயமே இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பயணம் செய்தபொழுது எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவத்தை இங்கு விரிவாகக் குறிப்பிடவேண்டும். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு நானும் என் மனைவியும் வாடகைக்காரில் சென்று கொண்டிருந்தோம். வழக்கம் போல் முன்பின் தெரியாத கார் ஓட்டுனரிடம் அரசியல் கருத்தறியும் நோக்கில் பேச்சை ஆரம்பித்தேன். தமிழகமெங்கும் இடப்பட்டு வரும் நால்வழிச்சாலையைப் பற்றிக் குறிப்பிட்டு டி.ஆர்.பாலுதான் இத்திட்டப்பணி மும்முரமாகச் செல்லக் காரணமென்கிறார்களே என்று குறிப்பிட்டதுதான் தாமதம். எல்லாத் திட்டத்திலும் திருடுவதுதான் அவருக்குத் தெரியுமென்று கூறியபடி, டி.ஆர்.பாலுவையும், தி.மு.க.வையும் கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார். வாஜ்பேயி அரசுதான் இத்திட்டம் நிறைவேறக் காரணமென்று கூறினது மட்டுமல்லாமல் பா.ஜ.க. ஆட்சிதான் மீண்டும் வரவேண்டுமென்றார். இந்த அரசாங்கத்தால் விலைவாசியெல்லாம் ஏறி வாழ்க்கையை ஒட்டுவதற்கே சிரமமாயிருக்குன்னு கோபமடைந்தார். அப்பொழுது நான் பா.ஜ.க.வின் மதவாதத்தைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்ட பொழுது அதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு பிரச்னையேயில்லை, திராவிடக் கட்சிகள் வேண்டுமென்றே தங்களுடைய கூட்டணியில் இல்லாவிட்டால் மதவாதத்தையும், பிராமணர்களையும் விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறார்களென்றார். மீண்டும் நான் பாரதிய ஜனதா கட்சியின் இந்துமதவெறியைப் பற்றி விளக்கிச் சொன்ன பொழுது அவர் பெரியாரையும் விமர்சிக்க ஆரம்பித்தார். சுயநலத்துக்காகத்தான் பெரியார் இந்துமதத்தை எதிர்த்தார் என்று அவர் சொன்ன பொழுது அவருடன் மேலும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன்.

பின் என் மனைவி தலையிட்டு சமாதானமாகப் பேசியபின் ஓரளவுக்கு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிற பொதுவான விசயங்களைப் பேசிக் கொண்டு வந்த பொழுது ஒரு சுவர் விளம்பரத்தை சுட்டிக் காட்டி ஈழப்பிரச்னையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவன் போல் கேட்டேன். அப்பொழுது மிகத்தெளிவாக எந்தவிதத் தயக்கமுமில்லாமல் அவர் கூறிய பதில் எனக்கு வியப்பாக இருந்தது. இந்தியா புலிகளுக்கு உதவவேண்டும், இலங்கை அரசாங்கம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபட தனி நாடுதான் சரியான தீர்வு என்றார். இராஜீவ் கொலையை முன்னிட்டு புலிகளைத் தடைசெய்திருப்பதைக் குறிப்பிட்ட பொழுது ”அது எப்பவோ முடிந்த காரியம், இந்தியப் படையை அனுப்பி புலிகளை இராஜீவ் அழித்திருக்கக் கூடாது, அதனால்தான் அவரைப் பழிவாங்கி விட்டார்கள்” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். அப்பொழுது இந்திய இராணுவம் சாதாரணத் தமிழ் மக்களைக் கொடுமைப் படுத்தியது அல்லது தற்பொழுது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவது போன்ற தகவல்களெல்லாம் அவருக்குத் தெரியவுமில்லை, அதைப் பற்றிய அக்கறையோ, அதன் அடிப்படையில் விவாதிப்பதையோ கூட அவர் செய்யவில்லை. இராஜீவ் புலிகளை அழித்தார், பதிலுக்கு அவர் கொல்லப் பட்டார் என்று ஒரு சாதாரணமான கருத்தைக் கூறினார். நம்மைப் போன்ற கற்றவர்கள் சமூகத்தில் உலவுபவர்கள்தான் இந்திய இராணுவம் அப்பாவி மக்களைக் கொடுமைப் படுத்தியதால்தான் இராஜீவ் பழி வாங்கப் பட்டார் என்று (நாம் தவறாகப் புரிந்து கொள்ளப் படக் கூடாது என்று) மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுகிறோம். அவர் தமிழ் தேசிய அடிப்படையில் புலிகளை ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது, ஏனெனில் அவருக்கு தமிழ்தேசியத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படக்கூடிய அளவில் வாழ்க்கை அமைய வில்லை.

நான் இதை விரிவாகச் சொல்ல வேண்டிய காரணம், இதன் பின்னாலுள்ள யதார்த்த நிலையும், சூழ்ச்சி அரசியலும்தான். அவருடைய கருத்துக்களில் அரசியல் அறிவு ஆழ அகலம் இல்லாமலிருக்கலாம். அவருடைய கருத்துக்கள் படித்தவர்களுடைய கருத்துக்களைப் போல் எல்லாப் பிரச்னைகளிலும் ஒரே கொள்கையடிப்படையில் இருக்கவில்லை. ஆனால் தன்னுடைய அறிவுக்கெட்டிய அளவில் மிக எளிமையான நிலையில் வெளிப்படுகின்றன. அவர் கருத்துக்களில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அவரைப் போன்ற சாதாரண மக்கள் புலிகளை மிகத்தெளிவாக ஆதரித்த போதிலும், ”தமிழக மக்கள் புலிகளை எதிர்க்கிறார்கள் அல்லது எந்த கருத்துமில்லாமல் இருக்கிறார்கள்” என்று இந்திய ஊடகங்களும், சென்னையை மட்டுமே அறிந்த அறிவுஜீவிகளும் எழுதி வருகிறார்களென்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சசி, பிரகாஷ் பிரதிபலித்த கருத்துக்களை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். பிரகாஷைப் போன்ற எத்தனையோ சென்னை மாநகரத் தமிழர்கள் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளைப் பற்றி அதிகம் அறியாதவர்கள் அல்லது தம்முடைய கருத்துக்கள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பதே என்னுடைய அனுமானம். சென்னையிலோ அல்லது இந்தியாவின் பெருநகரங்களில் வாழ நேர்ந்தால் நம்மைப் போன்றவர்களும் கற்ற-சமூகத்தின் பாதுகாப்பான கருத்துக்களை வெளியிடுவோமோ என்னவோ. இவ்வளவு ஏன், சாதி, பொதுவுடைமை போன்ற தலைப்புகளில் புரட்சிகரக் கருத்துக்களைத் தைரியமாக அள்ளி வீசும் நண்பர்களே தான் புலிகளை எதிர்ப்பவன் என்று கூறிவிட்டு நெடுமாறன் போன்றவர்களைத் திட்டி விட்டுத்தான் ஈழப்பிரச்னையைப் பற்றிய கருத்துக்களை உதிர்க்கிறார்கள். இது சாதாரண மக்களின் கருத்தல்ல, பாதுகாப்பானவர்களின் கருத்துக்கள். இல்லையென்றால் இப்பொழுது தமிழர்களை அழித்தொழிப்பதில் இலங்கை அரசுக்கு மன்மோகன் சிங்கின் கேடுகெட்ட இந்திய அரசாங்கம் மிக வெளிப்படையாக உதவ&