வெகுஜன செய்தி திரிப்பு

வெகுஜன ஊடகங்களில் செய்திகள் எப்படி வெளியாகிறோ அதையொட்டி தான் வெகுஜன மக்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்ள முடியும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் பொழுது வெகுஜன மக்களுக்கு அந்தச் செய்திகளைச் சார்ந்த பல கோணங்கள் மறுக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடும் பொழுது அந்தச் செய்திகளை அப்படியே வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கை மரபு. பத்திரிக்கைகள் தங்களின் கருத்துக்களை தலையங்கத்திலோ, கருத்து பத்தியிலோ வெளியிடுவது தான் ஒரு நல்ல மரபாக கருதப்படுகிறது.

இந்திய வெகுஜன ஊடகங்கள் இதனை பல்வேறு விடயங்களில் சரியாக கடைபிடிக்கின்றன. உதாரணமாக, உள்நாட்டு பிரச்சனைகள், அரசியல் கட்சிகளின் கோஷ்டி சண்டைகள் போன்றவற்றில் நடுநிலை பத்திரிக்கைகள் என சொல்லப்படும் பத்திரிக்கைகள் செய்திகளை பெரும்பாலும் தணிக்கை செய்வதில்லை.

ஆனால் தேசியம் போன்ற தங்களின் தேவைக்கு உட்பட்ட சித்தாந்தங்களில் அந்த தணிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

நான் அதிகமாக நீட்டி முழங்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருகிறேன்.

இன்று ஹிந்து நாளிதழில் காஷ்மீர் குறித்த ஒரு செய்தியை வாசித்தேன். அதே செய்தியினை Associated press தளத்திலும் வாசித்தேன்.

செய்தியின் சாராம்சம் இது தான்

இந்தியாவின் ஆளுமையில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை கோரி ஆயிரக்கணக்கான காஷ்மீர் முஸ்லீம்கள் இன்று ஸ்ரீநகரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு கூடினர். ஜநாவின் தலையீட்டினை கோரினர்.

இந்த செய்தி Associated pressல் இவ்வாறு வெளியாகிறது

Tens of thousands of Muslims waving green and black protest flags marched through Indian Kashmir's main city on Monday and gathered in front of U.N. offices demanding freedom from India and intervention by the world body.

ஹிந்துவிலே செய்தி எவ்வாறு வெளியாகிறது என பாருங்கள்

Tens of thousands of people from across the Kashmir valley arrived here on Monday to take part in the march organised by the Hurriyat-sponsored Coordination Committee to submit a memorandum to the United Nations office here, seeking its intervention in the resolution of the Kashmir issue.

The processionists, bands tied to their heads and holding black and green flags, asserted that they would not compromise on the basic demand for resolution of the Kashmir issue.


ஹிந்து இந்தச் செய்தியை வெறும் “resolution of the Kashmir issue” என்று மட்டுமே வெளியிடுகிறது.

ஹிந்து செய்திகளில் விடுதலையை குறிக்கும் வார்த்தைகளான Freedom, Independence போன்றவை எங்காவது தென்படுகிறதா என பார்த்தேன். கிடைக்கவேயில்லை. ஆனால் ஆர்ப்பாட்ட படங்கள் “FREEDOM" என்று கூறும் படங்களை தாங்கியே பல தளங்களில் வெளியாகி உள்ளது

ஹிந்துவின் செய்தியில் சுயநிர்ணயம் - self-determination என்ற வார்த்தை மட்டும் இறுதி வரியில் உள்ளது.

self-determination என்பது மேல்பூச்சான வார்த்தையாகவே நான் நினைக்கிறேன்.

Freedom, Independence என்பது காஷ்மீர் மக்களின் போராட்டத்தை குறிக்கும் தெளிவான வார்த்தை. அதனை ஏன் ஹிந்து பயன்படுத்தவில்லை என்பதை படிப்பவர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்