அஞ்சலி

தமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயிரம் தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினை சிங்கள இனவாத அரசு கொண்டாடி வருகிறது. போரில் பலியான பல ஆயிரம் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இன்று எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எந்த வகையிலும் அவர்களின் மரணத்தை தடுக்க முடியாத நம்முடைய இயலாமைச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது இந்த அஞ்சலி மட்டுமே.



ஈழ‌த்திற்கான‌ இறுதிப் போரிலே த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னும் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்திருக்கிறார். அவ‌ருக்கும் என்னுடைய‌ அஞ்ச‌லியை செலுத்துகிறேன்.