காஷ்மீர் விடுதலைப் போராட்டமும், மும்பை பயங்கரவாத தாக்குதலும்...
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தினை சிதைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தங்களின் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து சொல்வதன் மூலம் நியாயப்படுத்த பார்க்கின்றனர்.
இங்கே சில உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன.
1. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாக்கிஸ்தானை சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். அல்கொய்தா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட
லக்க்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் விடுதலை என்ற நோக்கத்தை தன்னுடைய முகமூடியாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே முன்னிறுத்துகிறது.
2. இந்த தாக்குதலில் ஒரு காஷ்மீரி கூட ஈடுபடவில்லை. கராச்சியில் இருந்த வந்த பாக்கிஸ்தானியர்கள் என தெரிகிறது. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாக்கிஸ்தானியர்கள் சிலரும் உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
3. காஷ்மீர் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆயுதங்களும் ஏந்தாமல் தான் தங்கள் விடுதலையை முன்னெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தற்பொழுது "மனித நேயம்" கொண்டவர்களாக மாறிவிட்ட ஒரு இந்திய பிரஜையும் கண்டிக்கவில்லை.
4. காஷ்மீரில் செயல்படும் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்தானின் தூண்டுதலில் செயல்பட்டவையே.
5. காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் அமைப்புகளால் தங்கள் பலத்தை இழந்தன. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். (தற்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தில்லி
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்).
உண்மைகள் இவ்வாறு இருக்க ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இணைந்து காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முகத்தை தற்பொழுது சிதைத்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து மிக விரிவாக எழுத தற்பொழுது நேரமில்லை. அதனால் இதே வகையிலான கருத்துக்களைச் சார்ந்து முன்பு நான் எழுதிய கட்டுரைகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்.
காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
இரு மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் முன்வைத்த போராட்டங்களை குறித்த எனது பதிவு
காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?
என்னுடைய காஷ்மீரின் விடுதலை கட்டுரைகள் - 1, 2, 3, 4, 5, 6
தொடர்புள்ள என்னுடைய மற்றொரு பதிவு
இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்
ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும், மத ரீதியிலான அடிப்படைவாதத்தின் வேறுபாட்டினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்சேவுக்கும், பகத்சிங்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவருமே கொலை குற்றவாளிகள் தான். ஆனால் ஒருவர் மத அடிப்படைவாதி, மற்றொருவர் விடுதலைப் போராளி... மேலும் படிக்க...
ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக அமைத்திருப்பதும், காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலை கோரிக்கையை சிதைப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தங்களின் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து சொல்வதன் மூலம் நியாயப்படுத்த பார்க்கின்றனர்.
இங்கே சில உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன.
1. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாக்கிஸ்தானை சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். அல்கொய்தா இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட
லக்க்ஷ்ர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு காஷ்மீர் விடுதலை என்ற நோக்கத்தை தன்னுடைய முகமூடியாக கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே முன்னிறுத்துகிறது.
2. இந்த தாக்குதலில் ஒரு காஷ்மீரி கூட ஈடுபடவில்லை. கராச்சியில் இருந்த வந்த பாக்கிஸ்தானியர்கள் என தெரிகிறது. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாக்கிஸ்தானியர்கள் சிலரும் உள்ளனர் என தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
3. காஷ்மீர் மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த ஆயுதங்களும் ஏந்தாமல் தான் தங்கள் விடுதலையை முன்னெடுத்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தற்பொழுது "மனித நேயம்" கொண்டவர்களாக மாறிவிட்ட ஒரு இந்திய பிரஜையும் கண்டிக்கவில்லை.
4. காஷ்மீரில் செயல்படும் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்தானின் தூண்டுதலில் செயல்பட்டவையே.
5. காஷ்மீரில் இருந்த ஆயுதக்குழுவான காஷ்மீர் விடுதலை முண்ணனி (Jammu and Kashmir Liberation Front - JKLF) போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்த வந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் அமைப்புகளால் தங்கள் பலத்தை இழந்தன. JKLFன் தலைவர் யாசின் மாலிக் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். மதசார்பின்மையை வலியுறுத்திய தலைவர்களில் யாசின் மாலிக் முக்கியமானவர். (தற்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தில்லி
மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்).
உண்மைகள் இவ்வாறு இருக்க ஹிந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இணைந்து காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தின் முகத்தை தற்பொழுது சிதைத்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து மிக விரிவாக எழுத தற்பொழுது நேரமில்லை. அதனால் இதே வகையிலான கருத்துக்களைச் சார்ந்து முன்பு நான் எழுதிய கட்டுரைகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்.
காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
இரு மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் முன்வைத்த போராட்டங்களை குறித்த எனது பதிவு
காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?
என்னுடைய காஷ்மீரின் விடுதலை கட்டுரைகள் - 1, 2, 3, 4, 5, 6
தொடர்புள்ள என்னுடைய மற்றொரு பதிவு
இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்
ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும், மத ரீதியிலான அடிப்படைவாதத்தின் வேறுபாட்டினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்சேவுக்கும், பகத்சிங்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவருமே கொலை குற்றவாளிகள் தான். ஆனால் ஒருவர் மத அடிப்படைவாதி, மற்றொருவர் விடுதலைப் போராளி... மேலும் படிக்க...