வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, August 19, 2007

ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...


ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?

என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?

கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.

"ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீவ் மற்றும் ரா உளவு அமைப்புடன் இந்த விவகாரத்தில் பணியாற்றியது போன்ற விவகாரங்களை சமீபத்தில் வாசித்தேன்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள் என்ன ? அவர் என்ன நோக்கத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் பணியாற்றினார் போன்ற விவகாரங்கள் அலசப்பட வேண்டியவை"

இது தொடர்பாக நான் அறிந்த தகவல்களை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது குறித்து மிக விரிவாக எழுத வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் திரைமறைவில் நடந்த இந்த நிகழ்வுகள் ஈழப்பிரச்சனையை கூர்ந்து கவனித்து வரும் பலருக்கும் கூட தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதற்கான ஒரு சிறு அறிமுகம் மட்டுமே. இது குறித்த மிக விரிவான கட்டுரை தொடரை மற்றொரு தருணத்திலே நான் நிச்சயம் எழுதுவேன்.

ஹிந்து என்.ராம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பினை அதிகம் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் ராஜீவ் காந்திக்கு தவறான தகவல்களை அளித்து இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தி கொடுத்த குழுவில் ஹிந்து ராம் முக்கியமானவர். இந்தியாவின் Foriegn policy disaster என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை திட்டமிட்டு நடத்திய குழுவில் முக்கியமானவரான ஹிந்து ராம் அவரது தோல்வியை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார் ? நாம் தான் வெளிப்படுத்த வேண்டும்...

Assignment Colombo என்ற தன்னுடைய புத்தகத்திலே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நேரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக இருந்த ஜே.என்.தீக்க்ஷித் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

I distinctly remember Rajiv Gandhi raising the question as to whether the LTTE would really abide by the agreement, which India was bound to implement as a guarantor. Rajiv Gandhi raised this question in the context of the doubts and misgivings Prabhakaran had expressed when Hardeep Puri provided details of the agreement to him on July 19.

Rajiv's question was primarily addressed to the then secretary of the Research and Analysis Wing, S E Joshi, who was cautious in his response. He said the LTTE was not a very trustworthy organisation and the agreement in a manner went against their high-flown demand for Eelam. Joshi was about to retire. His successor Anand Verma's response was that the LTTE owed much to India's support, that it was the LTTE which conveyed the message to N Ram of The Hindu, which initiated the whole process of discussions on the proposed Agreement.

ஒரு முக்கியமான விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புலிகள் எதிர்க்கின்றனர். காரணம் இந்த ஒப்பந்தத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா அல்ல. ஆனால் விடுதலைப் புலிகளை அகற்றி விட்டு இந்தியா அவர்கள் சார்பாக இலங்கையுடன் கையெழுத்திடுகிறது. இதனை புலிகள் எதிர்க்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அது தான் முதல் கோணல். பிறகு அதுவே பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிங்கப்பூரில் ஹிந்து என்.ராமை சந்திக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தங்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்க பிரதிநிதிகள் என்.ராமிடம் தெரிவிக்கிறார்கள்.

LTTE representatives in Singapore met N Ram, the associate editor of The Hindu newspaper, published from Madras, and conveyed a message that, the LTTE would be willing for a political compromise, if the Sri Lankan government agreed to the following proposals:

  • Military operations should stop and Sri Lankan forces should return to the barracks, wherever they are;
  • The Northern and Eastern provinces should be merged and recognized as a Tamil homeland;
  • There should be devolution of powers on the basis of the proposals which had come up since 1983 and up to the end of 1986;
  • Tamil should be recognized as an official language equal in status with Sinhalese.
  • An interim Tamil administration should be put in place in the linked northern and eastern provinces, to negotiate and finalize details of devolution of power etc, and;
  • Tamils should be given proportional representation in the three services of the security forces and in the public service.
(Sri Lanka - The Untold Story)

மேலே உள்ள புலிகளின் கோரிக்கைகளை கவனித்தால் அது தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சாராம்சம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதனை முன்வைத்த புலிகளே, அந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

என்.ராம் விடுதலைப்புலிகளின் இந்த தகவலை இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்காவிடம் கொண்டு செல்கிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கம் - இந்திய அரசாங்கம் இவர்களிடையே பல கடிதப் போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தக் கடிதங்களை பல தரப்புகளிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை என்.ராம் ஏற்கிறார்.

காரணம் என்.ராம் இலங்கை அரசாங்கம், இந்திய அரசு மற்றும் உளவுநிறுவனங்களுக்கும் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கமானவர். எனவே ஹிந்து என்.ராம் இந்த ஒப்பந்தத்திலே ஒரு தூதுவராக இந்த மூன்று தரப்புகளிடையே பணியாற்றுகிறார்.

இந்த நெருக்கம் எப்படி ஏற்பட்டது ?

என்.ராம் இந்திய உளவு நிறுவனமான "ரா (RAW)" உளவு நிறுவனத்தின் உளவாளி என தமிழகத்திலே திராவிடர் கழகம் மேடைகளில் முழுங்குவதை கேட்டிருக்கிறேன். அவர் ராவின் உளவாளியாக பல தரப்புகளிடையேயும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஒரு பத்திரிக்கையாளராக பல தரப்பினரையும் அவர் சந்தித்து இருக்கலாம், தனக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். எது எப்படியாயினும் இலங்கையில் பலரிடம் என்.ராமிற்கு மிக நெருக்கமான நட்பு இருந்தது என்பதை இலங்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கொண்டு அறிய முடிகிறது.

என்.ராம் இலங்கை அரசியலில் தனது பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை இவ்வாறு தெரிவிக்கிறார்..

Let me add, by way of disclosure, that I was in Sri Lanka as a journalist seeking to interview President Jayewardene but with an interest and, as it turned out, a role going beyond journalism...

ஆம்...இலங்கை அரசியலில் என்.ராமின் ஈடுபாடு என்பது வெறும் பத்திரிக்கையாளரின் ஈடுபாடு அல்ல. என்.ராம் பத்திரிக்கையாளர் என்னும் முகமூடி மூலமாக இலங்கை அரசியலில் அவரது ஈடுபாட்டினை பல தளங்களில் முன்னெடுக்க முடிகிறது.

அவரது நட்பின் வட்டம் இலங்கையின் பல்வேறு தரப்புகளிடையேயும் பரந்து விரிந்து இருந்தது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரா கட்சி என இந்த இரண்டு தரப்புகளிடையேயும் அவருக்கு நெருக்கம் இருந்தது. அது போல இலங்கையைச் சார்ந்த சிறீலங்கா அரசு ஆதரவு தமிழ் தலைவர்களையும் அவருக்கு தெரியும். விடுதலைப் புலிகளுடனும் அவருக்கு நெருக்கம் இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான காமினி திசநாயக்கா என்.ராமின் நெருங்கிய நண்பர். சென்னையில் என்.ராம் வீட்டிற்கு விருந்தினர்களாக குடும்பத்துடன் வந்து போகும் அளவிற்கு காமினி திசநாயக்காவுடன் என்.ராமிற்கு நெருங்கிய நட்பு இருந்ததாக ஹிந்து நாளிதமிழில் நிருபராக வேலை பார்த்தவரும், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளருமான இலங்கைச் சார்ந்த DBS.ஜெயராஜ் குறிப்பிடுகிறார். என்.ராம் கூட பல தருணங்களில் அவருக்கும் காமினி திசநாயக்காவுக்கும்மான நட்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்.ராமின் மற்றொரு நெருங்கிய நண்பர் விஜய குமாரதுங்கா. சந்திரிகா குமாரதுங்காவின் கணவர். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு விடுதலைப் புலிகளையும், மிதவாத சிங்கள தலைவர்களையும் சந்திக்க வைக்கும் ஒரு முயற்சியை என்.ராம் மேற்கொள்கிறார். 1986ல் விஜய குமாரதுங்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் சென்னைக்கு வருகிறார்கள். என்.ராம் அவர்களை விடுதலைப் புலிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்தது.

1985ல் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனை பேட்டி எடுத்து ப்ரெண்ட்லைனில் வெளியிட்டவரும் என்.ராம் தான்.

மறுபடியும் இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தத்திற்கு முன்பாக இருந்த சூழலுக்கு வருவோம்...

விடுதலைப் புலிகள், சிங்கள அரசியல்வாதிகள் என இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமாக என்.ராம் இருந்த காரணத்தாலும், 1986ம் ஆண்டு அவர் சிங்கள மிதவாத தலைவர்கள் எனக்கூறப்படும் விஜய குமாரதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா ஆகியோருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்ததமையாலும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கும், தங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையினை ஏற்படுத்த ஒரு "தூதுவராக" என்.ராமை அணுகுகிறார்கள். சிங்கப்பூரில் என்.ராமிற்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

இங்கு கவனிக்க வேண்டியது இந்த ஒப்பந்தத்தையே புலிகள் தான் முதன் முதலில் முன்வைக்கிறார்கள். அதனை ஜே.என்.தீக்க்ஷ்த் தன் புத்தகத்திலே குறிப்பிடுகிறார். பின்னாட்களில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முன்னெடுத்ததாக திரிக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மீதும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே மீதும் விடுதலைப் புலிகளுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதனால் இந்தியா ஒரு மத்தியஸ்தராக இந்தப் பிரச்சனையில் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மீற முடியாது என புலிகள் நினைக்கிறார்கள். அவ்வாறே என்.ராம் காமினி திசநாயக்கா, ஜெயவர்த்தனே போன்றோரை சந்திக்கிறார். இந்திய தரப்பிலும் இந்திய உளவு நிறுவனத்தையும், இந்திய அரசாங்கத்தையும் சந்திக்கிறார். இம் மூன்று தரப்புகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை கொண்டு வருவதை முன்னெடுக்கிறார்.

ஆனால் இங்கே தான் ஒரு மிகப் பெரிய குழப்பத்தை என்.ராம் உள்ளிட்ட இந்திய தரப்பு செய்து விடுகிறது...

இந்தியாவின் வெளியூறவுக் கொள்கையை கூர்ந்து கவனித்தால் இந்தியா ஏன் இவ்வாறு ஒரு மிகப் பெரிய குழப்பத்தினைச் செய்கிறது என்பது புலப்படும். ஆனால் தமிழகத்திலே மட்டும் இந்த குழப்பத்தினை "தேச நலன்" என்று சப்பை கட்டும் பழக்கம் உள்ளது. ஆனால் தரவுகளை சரியாக பார்த்தால் இந்தியா தனது வெளியூறவுக் கொள்கையில் 1980களில் செய்த தவறுகளை 1990களில் சரி செய்து கொண்ட வரலாறு நமக்கு புரியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பிறகு தனது வெளியுறவுக் கொள்கைகளை பல மாற்றங்களுக்கு உட்படுத்தி இருக்கிறது. நேருவின் காலத்தில் அணிசேரா நாடு என்பதாக அனைத்து நாடுகளிடமும் இணக்கமாக இருந்த கொள்கை, இந்திராவின் காலத்தில் அதிரடியான வெளியூறவு கொள்கையாக மாற்றம் பெற்றது. இந்தியாவின் உளவு அமைப்புகள் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தின. அன்றைக்கு பாக்கிஸ்தானை சீர்குலைப்பது இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வாறு தான் பாக்கிஸ்தானில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு பங்களாதேஷ் உருவானது. இன்னும் சொல்லப்போனால் இந்திராவின் காலத்தில் தான் இந்திய உளவு நிறுவனங்கள் விஸ்ரூபம் எடுத்தன (உளவு நிறுவனங்கள் குறித்த என்னுடைய முந்தைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/12/blog-post_29.html)

இந்திராவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைந்தன. இந்திராவின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளில் உளவுத்துறை மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் இந்தியா தான் மிகப் பெரிய சக்தி என்பதை நிருபிக்கும் வகையிலே இருந்தது. ராஜீவ் காந்தி இதனை அடுத்த நிலைக்கு உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் பேரில் மேற்கொள்கிறார். அதற்கு அப்போதைய பனிப்போர் சூழலும் ஒரு காரணம். ராஜீவ் காந்தி பல நாடுகளில் இந்தியாவின் நேரடியான தலையீட்டினை முன்னெடுக்கிறார். இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, நேபால் என அனைத்து சிறிய நாடுகளும் இந்தியாவைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் ராஜீவ் மற்றும் உளவு நிறுவனங்களின் Hegemony கொள்கையாக இருந்தது. இதனைச் சார்ந்து தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவின் தலையீடும் அமைகிறது.

ஆனால் இதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு காரணமாக 1989ல் பதவியேற்கும் வி.பி.சிங் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. 1989ல் வெளியூறவுத்துறை அமைச்சரும், பிறகு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றவருமான ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் வெளியூறவு கொள்கைகளில் பல புதிய பரிமாணங்களை கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டு இன்று வரை அமலில் இருக்கும் அந்த வெளியூறவு கொள்கைகளை "Gujral Doctrine" என்று கூறுவார்கள். அண்டை நாடுகளை மதிப்பது, அண்டை நாடுகளுடன் இணக்கமாக, சமநிலையில் பழகுவது போன்றவை இந்த கொள்கையின் முக்கிய அம்சம். இது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் முன்னெடுத்த அதிரடி வெளியூறவு குழப்பத்தை சரி செய்தது மட்டுமில்லாமல் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்தியாவின் இந்த வெளியூறவு கொள்கை குழப்பங்களையும், பின்னடைவுகளையும் மனதில் கொண்டு இந்தக் கட்டுரையினை வாசித்தால், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு குழப்பத்துடன் அமைந்தது என்பது புரியும்.

இந்திரா காந்தி இருந்த வரையிலும் இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களுக்கு இணக்கமான ஒரு கொள்கையினை அவர் வகுத்து இருந்தார். அந்த சமயத்திலே அவர் இவ்வாறான இணக்கமான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் அப்போதைய சுழ்நிலையில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு சென்றிருக்கும். எனவே இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்திராவிற்கு இருந்தது. இந்திராவும் அதைத் தான் செய்தார்.

ஆனால் ராஜீவ் பதவியேற்ற பொழுது அந் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியின் அருகில் இருந்த உளவு நிறுவ அதிகாரிகளும், ஆலோசகர்களும் இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவது இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கும், மொழி ரீதியாக இலங்கையில் ஒரு தனி நாடு உருவாவது மொழி வாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர். அதனால் இலங்கையில் இந்திரா காந்தி முன்னெடுத்த கொள்கையில் இருந்து ராஜீவ் அரசு தடம் மாறுகிறது.

அவர்கள் தடம் மாற அடிப்படை காரணமாக இருந்த "தமிழகம் தனி நாடாக பிரியும் என்னும் வாதம்" எவ்வளவு முட்டாளதனமான ஒரு வாதம் என்பது இன்றைக்கு நமக்கு புரிகிறது. இதனை முன்னெடுத்துவர்கள் ஒரு சிறு குழுவினர். ஆனால் ஒரு அரசாங்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழுவினரைச் சார்ந்து இந்த வாதத்தை வைத்தது அப்போதைய அதிகாரிகளின் முட்டாள்தனத்தையும், குழுப்பத்தையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதனால் தான் இந்தியாவின் இலங்கை தலையீட்டினை India's Foriegn Policy Disaster என கூறுகிறார்கள்.

இந்தியாவின் முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் தெகல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Going back to the Accord, if you were to look at the Letters of Exchange, it seems India was more concerned about its own geopolitical interests. There was absolutely no reference to the Tamil question.

You may be quite right. One of the clauses of the agreement was directly related to the Voice of America broadcasting station in Sri Lanka. Today, the whole geopolitical situation has changed. We are having a nuclear agreement with the US, which had reneged upon its nuclear agreement for supply of fuel to Tarapore atomic power station in 1974. So, it is very difficult to go digging into the past. There is no point in digging up graveyards.

During the Indira Gandhi era, India was perceived to be more sympathetic to the Tamil cause, but there was a sudden shift in approach after Rajiv Gandhi became PM. Was it because of a change in India’s perception of its own geopolitical interests or was it because of his advisers?

You are being slightly unfair to Rajiv. He offered to send Indian forces, as he said, to protect the Tamil people. He did not send the IPKF to fight the LTTE. In the first months there was a lot of bonhomie between the LTTE and the IPKF. Later on, for various reasons, the relationship between the two sides broke down.

இவர் கூறும் various reasons என்ன என்பதை விரிவாக இந்த கட்டுரை தொடரில் நான் அலச இருக்கிறேன்

But don’t you think he should have let the parties to the conflict come to an agreement (instead of India and Sri Lanka signing an agreement)?

It is a very valid point. The agreement should not have been between India and Sri Lanka. It should have been signed between the Sri Lankan government and the LTTE, with India, perhaps as a well-wisher, on the sidelines. On the other hand, the agreement was between the two governments and LTTE was not brought into the agreement directly, which is a pity. But all these are reminiscences in retrospect. Well, since you are asking me, I may say that before the Indo-Sri Lanka agreement was signed, I was still in Delhi after leaving my post as foreign secretary.

One evening, I bumped into N. Ram the present editor of The Hindu. I told him that the Accord, the draft of which was known, was very badly conceived. I felt the LTTE should have been made a party to the agreement, and the Indian government should not have been a direct party with the Lankan government. Ram said it was a bit too late to bring about any change in the agreement, which was happening in the next week or two. He was also travelling with the PM to Colombo for this “historic agreement”. The rest is history.

இரு பூனைகள் அப்பத்தை பங்கு பிரிக்க, குரங்கை அழைத்த கதை போல விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் செய்ய நினைத்த இந்த ஒப்பந்தத்திலே, மத்தியசம் செய்ய உள்ளே நுழைந்த இந்தியா, புலிகளை ஒதுக்கி தானே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தத்தை முதலில் முன்னெடுத்த புலிகள் ஒதுக்கப்படுகின்றனர். தமிழர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தேச நலன் என சில Theoretical அம்சங்களை, இன்று வரை நிருப்பிக்கப்படாத சில அம்சங்களை முன்னிறுத்தி தமிழர்கள் மீது இந்தியா போர் தொடுக்கிறது.

அந்த குழப்பத்தை முன்னெடுத்த குழுவில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் என்ற முகமூடியை அணிந்திருக்கும் என்.ராம். ஹிந்து என்.ராம் எவ்வாறு இந்த விவகாரத்தில் பணியாற்றினார் ? விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட என்.ராம் பிறகு ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறினார் ?

என்.ராம் தனது இலங்கை அரசியல் பங்கெடுப்பு குறித்து கொழும்பில் ஒரு முறை பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறார்.

....What followed, between February 1987 and March 24, 1990, when the IPKF completed its `de-induction from Sri Lanka under unhappy circumstances, was akin to a historical adventure, some would say, misadventure.

அந்த misadventure குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

********

என்.ராம் மீது திபெத் மக்களின் குற்றச்சாட்டு : கொழும்பில் இருந்து சிங்கள அரசாங்கம் தரும் செய்திகளை ஹிந்து வெளியிடுவதாக ஈழத்தமிழர்கள் குற்றம்சாட்டுவது போல, சீன அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டு திபெத் சுதந்திர போராட்டத்தை ஹிந்து ராம் திரிப்பதாக திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் " 'Save The Hindu' Campaign " என்ற ஒன்றினை நடத்தி ஹிந்துவின் செய்தி திரிப்பை அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அது குறித்த தகவல்கள் இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது - http://www.friendsoftibet.org/save/

Friends of Tibet has learned that the editorial board of The Hindu led by N Ram has instructed their centres not to carry any 'Tibet', 'Dalai Lama' and 'Falun Gong' stories criticising the policies of the Chinese government. Instead of depending on reliable news agencies like PTI, UNI, IANS, Reuters, AP and AFP, The Hindu has found a Beijing-based news-agency to fetch stories - The Xinhua - world's biggest propaganda agency belonging to the Chinese Communist Party. Probably The Hindu is the only newspaper in the country to reproduce Xinhua reports. Today The Hindu has virtually become a mouthpiece of the Chinese Communist Party.

திபெத் குறித்த என்னுடைய பதிவு - http://blog.tamilsasi.com/2005/11/blog-post_22.html

Leia Mais…
Sunday, August 12, 2007

காணாமல் போகும் தமிழர்கள்...

இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனை கடந்த பல ஆண்டுகளை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை பலமாக தாக்கி வருகிறது. ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் "தமிழர்களை" கடத்திச் சென்று பிறகு கொல்லும் பயங்கரவாதத்தை சிறீலங்கா அரசாங்கம் செய்து வருகிறது. இது சிறீலங்கா "அரசு பயங்கரவாதம்" ஆகும்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 2000 தமிழர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காணாமல் போகும் தமிழர்கள் அனைவருமே அதிபாதுகாப்புமிக்க கொழும்பு மற்றும் பிற அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தான் கடத்தப்பட்டிருக்கின்றனர். இவை தவிர கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் துணை இராணுவப்படையினர் பெரும்மளவில் பணப்பறிப்பு, ஆட்களை கடத்தி பணம் வசூலிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர்.

தமிழர்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் கூட அரசாங்கத்தின் இந்த தாக்குதலுக்கு பலியாகி கொண்டு தான் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உலகிலேயே மனித உரிமை மிக மோசமாக இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தினை சிறீலங்கா பெற்றுள்ளது. முதல் இடம் இராக்கிற்கு. அது போலவே இராக்கிற்கு அடுத்த படியாக அதிகளவில் காணாமல் போகும் மக்களை கொண்ட இடமாக சிறீலங்கா உள்ளது. காணாமல் போகும் மக்கள் அனைவருமே தமிழர்கள்.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திப்படத்தினை சமீபத்தில் பார்த்தேன். அந்த செய்திப்படத்தை இங்கே தருகிறேன். இந்த செய்திப்படம் 13 நிமிடங்கள் செல்லக்கூடியது. ஒரு வெளிநாட்டு நிருபரால் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவினை இங்கே பார்க்கலாம் - http://www.youtube.com/watch?v=poYN8ikai60

இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன ? அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே முன்பு ஒரு முறை கூறிய பதில் - "காணாமல் போனவர்கள் ஜெர்மனியில், லண்டனில் இருப்பதாக" கூறியிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கம் கடவுச்சீட்டு கொடுத்தால் தான் அவர்கள் வெளிநாடு செல்ல முடியும். அரசாங்கம் அவர்களின் கடவுச்சீட்டு எண்களை கொடுக்குமா ?


ராஜபக்ஷவின் பேட்டியின் முதல் பகுதி இங்கே - http://www.youtube.com/watch?v=SvuDaiVlOyc

கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் Human Rights Watch அமைப்பு சிறீலங்கா அரசாங்கத்தை கடுமையாக சாடி இருக்கிறது. சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுக்க மனித உரிமை மீறல்களை அங்கீகரித்து இருப்பதாக அந்த அமைப்பு சாடி உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் குறித்த விபரங்கள் பிபிசி இணையத்தளத்தில் உள்ளது

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm

A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces.
Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.

The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.

The report said the Tamil Tiger rebels stood accused of targeting civilians, extortion and the use of child soldiers.

But Mr Adams said that was no excuse for what he described as the government's campaign of killings, disappearances and the forced returns of the displaced.

According to Human Rights Watch, from January 2006 until June this year, more than 1,000 abductions had been reported in Sri Lanka.

***************

சிறீலங்கா கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பது தொடர்பான விவாதம் வலைப்பதிவுகளிலே சென்று கொண்டிருக்கும் இவ் வேளையில் இங்கிலாந்தில் முக்கியமான தீர்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் சிறீலங்காவிற்கு திரும்பி செல்வது தங்களின் உயிருக்கு பாதுகாப்பற்றது என்ற வாதத்தை முன்வைத்தது தொடர்பான தீர்ப்பிலே, தமிழர்கள் சிறீலங்கா திரும்பி செல்வது அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்றது தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

UK in landmark Sri Lanka ruling -
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6937471.stm


Sri Lankan Tamil asylum seekers in the UK are at risk of torture if returned to Sri Lanka, according to a landmark ruling by a British tribunal.

An asylum and immigration tribunal on Monday upheld an appeal by a Sri Lankan refugee known only as Mr LP.

The ruling is also intended to offer guidance for similar cases in the UK.

Mr LP's lawyers argued that he was at risk of torture if he returned home because of his perceived support for Tamil Tiger separatists.

புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அந் நாடு "மனித நேய" அடிப்படையில் அடைக்கலம் தருகிறது என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.

Leia Mais…
Tuesday, August 07, 2007

மாலனின் அரசியல்

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது ? இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும் ? அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா ? அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா ?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

*****

தன்னை மார்க்சிஸ்ட் என்பதாக வெளிப்படுத்திக்கொள்ளும் ஹிந்து ஆசிரியர் என்.ராம், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் என்.ராம் அவர் மகளை அமெரிக்க முதலாளித்துவ பலகலைக்கழகத்தில் படிக்க வைத்தமை முரண்பாடு தானே ? ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட சமயத்தில் சங்கர மடத்தை கட்டிக்காக்க விஜயேந்திர சரஸ்வதியை முன்னிறுத்திய மார்க்சிஸ்ட் தானே என்.ராம் ? ஒரு மார்க்சிஸ்ட் சங்கர மடத்தை ஏன் கட்டிக்காப்பாற்ற வேண்டும் ?

இப்படிப்பட்ட ஒரு மார்க்ஸ்சிய சிந்தனை வறட்சியில் இருக்கும் இந்திய மார்க்சியவாதிகள் தான் இலங்கையில் சிங்கள இனவெறிப்பிடித்த ஜேவிபியினரிடம் மார்க்சிஸ்ட் என்பதாக தோழமை கொண்டாடுகிறார்கள். ஜேவிபியினர் என்ன இடதுசாரி கொள்கைவாதிகளா? அவர்கள் இனவெறிப்பிடித்தவர்கள் தானே ?

இத்தகைய கருத்துகளை தான் பெயரிலி தன் பின்னூட்டத்தில் முன்வைத்து இருந்தார். இது எப்படி தனி மனித தாக்குதல் ஆகும் ? வலைப்பதிவுகளில் நன்னடத்தை பற்றி பேசும் மாலன், பெயரிலி இல்லாத ஒரு இடத்தில் பெயரிலி பற்றி பேசுவது எப்படி நன்னடத்தையாகும் ?

சமீபத்தில் கொழும்பில் இருந்து வயதான மூதாட்டிகள் வரை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட சூழலில் உலமெங்கும் இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளும் "தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்திகள் வெளியிட்டன. ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை கடுமையாக கண்டித்திருந்தன. ஆனால் ஹிந்து "வேலையற்ற தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக" செய்தி வெளியிட்டது (jobless Tamils). அந்த செய்தியைப் படித்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இருக்கும்.

படத்தில் இருக்கின்ற இந்த மூதாட்டியும் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். மூதாட்டியும் இந்த வயதில் கொழும்பில் வேலை தேடிக்கொண்டிருந்தாரா ? பிபிசி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பொய் கூற ஹிந்து மட்டுமே உண்மையான செய்தியை வெளியிடுகிறதா ?

(பிபிசி செய்தி : Police evict Tamils from Colombo)
(ஹிந்து செய்தி : Jobless Tamils evicted from Colombo on grounds of security)

(இந்துவின் இன்னும் பலப் பொய்ச்செய்திகளையும், பிற ஊடகங்களில் வெளியான ஒப்பீடுகளையும் ராம் வாச்சர் பதிவில் படிக்கலாம் - http://ramwatchintamil.blogspot.com, http://ramwatch.blogspot.com/)

உண்மைகள் இவ்வாறு இருக்க "புலிகள் கூறினால் நம்புவார்களா ? ஹிந்து கூறினால் நம்புவார்களா ?" என மாலன் கூறுவது நகைப்பிற்குரியது மட்டுமல்ல. அது பின் இருக்கும் அரசியல்களையும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

ஈழ விவகாரங்களில் மாலன் அவர்களுடைய வாதங்கள் "புலிகள் எதிர்ப்பு, ஈழ தமிழர் எதிர்ப்பு, ஈழ விடுதலை எதிர்ப்பு" என கண்மூடித்தனமாக இருக்கிறது. என்றாலும் அவர் தினமணிக்கதிர், குமுதம் ஆகியவற்றில் பத்திரிக்கையளாராக இருந்த பல சமயங்களில் இதனையே முன்நிறுத்தி இருக்கிறார் என்பதால் அவரது எதிர்ப்பின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அரசியலை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.

*****

வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்து பேசும் ஒரு பேச்சில் ஈழ தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து
பேச வேண்டிய அவசியம் ஏன் நேருகிறது ?

ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

பொருளாதார/இராணுவ வல்லரசான இந்திய நாட்டின் பிரஜைகள் ஏன் பச்சை அட்டைக்காக அமெரிக்காவில் இந்த அலைச்சல் அலைகிறார்கள் ? கடந்த மாதம் அமெரிக்காவில் பச்சை அட்டைகளுக்கான I-485ஐ அமெரிக்க குடியுரிமைத்துறை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும். இதில் இருக்கும் பல படிகளில் ஒரு சில படிகளை கடக்கும் வரை அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிர்பந்தங்கள் கூட சிலருக்கு உண்டு. என்னுடைய ஒரு நண்பனின் மனைவி பிரசவத்திற்காக இந்தியா சென்று விட்டார். எட்டாவது மாதம். அவருக்கும் சேர்த்து I-485 விண்ணப்பம் செய்தாக வேண்டும். அவர் அமெரிக்காவில் இருந்தாக வேண்டும் என்பதால் அவரை உடனடியாக அமெரிக்கா வரும்படி நண்பர் கூறிவிட்டார். சிலர் தங்கள் திருமணங்களை கூட தள்ளி போட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பச்சை அட்டை மோகம் இங்குள்ள இந்தியர்களை பாடாய் படுத்துகிறது. வலைப்பதிவுகளில் இந்திய தேசியத்தை ஓங்கி முழங்கும் பலர் இந்திய பாஸ்போர்ட்டை துறந்து அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பெற்று கொண்டவர்கள் தான். அவர்களின் வாரிசுகள் அமெரிக்கர்கள். இந்தியர்கள் அல்ல.
இது ஏன் ?

இந்தியாவில் வாழ வழி இல்லையா ?

ஏனெனில் பொருளாதாரத்தை மேலும் பெருக்கி கொள்ளும் ஆசை. புலம் பெயரும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்புகள். இது புலம் பெயரும் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவை பொருந்தாது. இவர்கள் தேடி வருவது பொருளாதாரத்திற்காக அல்ல. தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக. தங்களுடைய வாரிசுகள் இராணுவம் மற்றும் புலிகளின் கைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்று பயந்து வெளிவருகிறார்கள். நேற்று வெளியான அமெரிக்க மனித உரிமை அமைப்பின் அறிக்கை சிறீலங்கா அரசை கடுமையாக சாடுகிறது.

A US-based human rights group has accused the Sri Lankan government of what it calls a shocking rise in abuses by its security forces. Human Rights Watch said there had been an increase in unlawful killings, enforced disappearances and other abuses over the past 18 months.

The group's Asia director, Brad Adams, said the government had apparently given the green light to its security forces to use the tactics of dirty war.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6932772.stm

உலகிலேயே காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை இராக்கிற்கு பிறகு இலங்கையில் தான் அதிகம். அதனை முன்னின்று நடத்துபவர்கள் அரசு படையினர். இவர்களிடம் இருந்தும், போர் சூழலில் இருந்தும் தங்களை பாதுகாக்க அகதிகளாக வெளியேருகிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சிறீலங்கா பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன லண்டனைச் சுற்றி பார்க்கவும், இலக்கிய கூட்டங்களில் வெற்றிலைப்பாக்கு போடவுமா பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் ?

இங்கே பிரச்சனை என்வென்றால் அப்படி சிறீலங்கா பாஸ்போர்ட்டுடன் வருபவர்கள் இங்கே வந்தோமா, முருகனுக்கு பால் குடம் எடுத்தோமா, ரஜினி படம் பார்த்தோமா என்று இருப்பதில்லை. ஈழப்போராட்டத்திற்கு நிதி தருகிறார்கள். வலைப்பதிவுகளில் ஈழப்பிரச்சனைப் பற்றி எழுதுகிறார்கள், ஈழப்பிரச்சனை குறித்து உளறும் தமிழக எழுத்தாளர்களின் பிம்பங்களை உடைக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. ஆனால் இணைய வரலாற்றை வேறு எழுதுகிறார்கள் பாருங்கள். அது தான் பிரச்சனையே...

எனவே ஈழத்தமிழர்கள் இனி சிறீலங்கா பாஸ்போர்ட் கொண்டு வெளிநாட்டிற்கு வரக்கூடாது. தமிழீழ பாஸ்போர்ட் கிடைக்கும் வரை வெளிநாட்டிற்கே வரக்கூடாது. அப்பொழுது தான் ஈழப்போராட்டத்திற்க்கும் நிதி கிடைக்காது. ஈழ போராட்டமும் வெகுவிரைவில் நிதி இல்லாமல் சிங்கள படைகளுக்கு இரையாகி விடும்.

Leia Mais…